மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
(எங்க ஊர் செய்தித்தாளில் வந்த விஷயம். இதைத் தாத்தா காலத்துப் பழைய ரிப்போர்ட்டிங் ஸ்டைலில் எழுதிப்பார்க்கலாம் ..)
உபயகுசலோபரி.
இவ்வ்ிடம் மேற்கு யார்க்ஷயர் பேட்டை ஒன்றில் வெகு விநோதமாக ஒரு கிளி வந்து சேர்ந்திருக்கிறது. யாரோ வார்த்தை சொல்லிக் கொடுத்துப்
பழக்கிய கிளி. வாயைத் திறந்தால் ஒரே வசவும் திட்டும் தான் பாஷ்பமாகப் பொழிகிறது.
மேற்படிக் கிளியானது பிராந்தியத்திலேயே உயரமான மாதா கோவில் மணிக்கூண்டுக் கோபுரத்துக்குக் குடி பெயர்ந்திருப்பது சான்றோர்களளயும் சாது
ஜனங்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அந்த வசதியான உயரத்தில் உட்கார்ந்தபடி, கோவிலில் பூசை வைக்கப் பாதிரியார் நடந்து வரும்போது துரைத்தனத்தார் பாஷையில் ‘F ‘ என்று
தொடங்கி ‘K ‘ என்ற எழுத்தில் முடியும் ஆபாசமான சொல்லை உரக்கச் சொல்லி அவருக்கு முகமன் கூறுகிறதாம் ஷெ கிளி.
மேலும் அது, மாதாகோவிலில் பிரார்த்தனை நடக்கும்போது அங்கே கூடி இருக்கும் பக்த ஜனங்கள் எல்லோரையும் வீட்டுக்குச் சடுதியில்
புறப்பட்டுப் போய் சிற்றின்ப நுகர்வில் ஈடுபடும்படி வலியுறுத்தியபடி கோவ்ிலுக்குள் குறுக்கும் நெடுக்கும் பறக்கிறதாகவும் ப்ரஸ்தாபம்.
‘கோவிலில் பிரார்த்தனையோ, கல்யாணமோ நடக்கும்போது இந்த ஜந்து இப்படியான துர்ச்செயல்களில் ஈடுபட்டால் தாழ்வில்லை தான். இந்தக்
கூத்துக்குச் சிரிப்பாய்ச் சிரிக்கிற யுவன்களும் யுவதிகளும் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அந்தோ, சாவுச்சடங்கு நடக்கும்போதும் கிளி
பறந்து வந்து வசவு மழை பொழிகிறதே . என் செய்வோம் ? ‘ என்று ஊர்ப் பிரமுகர்களும் வெகுஜனங்களும் பிரலாபிக்கிறார்களாம். ராஜாங்கப்
பிரதிநிதிகளும் உத்தியோகஸ்தர்களும் வழக்கம்போல் இதை எல்லாம் காதில் வாங்காமல் அவரவருக்கு ஸ்வபாவமான காரியங்களில் மூழ்கிக்
கிடக்கிறார்களாம்.
இதைப் படிக்கும் கனவான்களும் நற்பெண்டிரும் ஸ்ரீரங்கத்தாராகிய சுஜாதா என்ற ப்ரக்யாதி பெற்ற பண்டிதர் இயற்றிய விநோதரச வேடிக்கைக் கதை
ஒன்றில் இங்ஙனம் கெட்ட வார்த்தை சொல்லும் ஒரு கிளியை மையமாக வைத்து எழுதியிருப்பதை அறிவீர்கள் அல்லவோ!.
அது நிற்க.
மேற்கு யார்க்ஷயர் கிளி குறித்து யான் யாத்த வெண்பா ஒன்றினை இங்கே இட உத்தரவு வேண்டுகிறேன். சொற்குற்றம், பொருட்குற்றம் காண்கில்
ஐயன்மீர் மன்னிப்பீராக.
கோயில் மணியின் குரலும் ஒடுங்கிட
வாயில் அழுகை உயர்ந்திடும் – சாவில்
அசைவு மறந்த சடலம் சிரிக்க
வசவு மொழியும் கிளி.
தாசன்,
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
eramurug@yahoo.com
- எங்கேயோ கேட்ட லொல்லு
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)
- அறிவியல் துளிகள்-12
- இந்த வார அறிவியல் செய்திகள்
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)
- காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்
- சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்
- தினகப்ஸா
- புதிய தானியம்
- புரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )
- கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)
- பைமடந்தை
- தூக்கம்
- மழை வரும் போது…
- அரபிய நாட்டினிலே..
- முடிந்த தொடக்கம்…
- ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை
- இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003
- சனநாயக நாடென்னும் போதினிலே….
- பதினோராம் அவதாரம்
- இளமை
- கலைமன்றம் வழங்கிய காணிக்கை
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- ஐரோப்பிய குறும்பட விழா
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்
- கடிதங்கள்
- என் தாய் பண்டரிபாய்
- இட்லி
- ‘படைத்தவனைத் தேடுகிறேன் ‘
- அமைதி
- இரண்டு கவிதைகள்
- சின்னவரே! சின்னவரே!
- இன்னொரு உயிர்…
- அவனுக்கென்று ஒரு வானம்…
- காத்திருப்பாயா…