பொங்கல்
தேன்சிட்டு
விரலை மடக்கித் தட்ட,
குரல் கொடுக்கும் பொங்கல் பானை.
தொழுவத்து பக்கமிருந்து அசை போட்டு,
அண்ணாந்து பார்க்கும் வெள்ளைப் பசு!
ஊரெல்லாம் உறங்கிக் கிடக்க
கதிரவன் மெதுவாய் கண்திறந்த நேரம்
செம்மண் பூமியெங்கும்,
செவ்வானம் போலாகும்.
கரும்பும் மஞ்சளும் வீடுகளில் குவிந்திருக்க
வாசம் மட்டும் உலகமெல்லாம்..
வண்ணப் பொடிகள் கலந்து சேர்ந்து
விரல்களும் சுற்றித் திரிந்து,
கரும்புகள் காவல் காக்க,
புதுப்பானை அவதாரம்!
மகிழ்ச்சியால் துள்ளிய கன்று
தன் வாலைச் சுழற்றியே வீசும்!
அழகிய கிராம வீட்டில்
பாட்டி மட்டும் ஓவியமாய் தெரிய,
நெய்யரிசிப் பொங்கல்
பொங்கி விழுந்து தரை சேரும்.
உழவு மண்ணில் உருண்டு பார்த்து
இந்த ஒரு நாளேனும்
தொலைந்து போன முகவரியைத் தேடி
அலை பாயும் மனசு ….
***
-தேன்சிட்டு-
thenchittu@yahoo.com
- இனி, அவள்…
- பொங்கல்
- ஒரு சந்திப்பு
- மகள்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை
- எண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா ?
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)
- அ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8
- கடிதங்கள்
- இளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி
- அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு
- வாசனை
- வேர்கள்
- கொழுத்தாடு பிடிப்பேன்
- எங்கள் ஊர் பொங்கல்!
- இரண்டு கவிதைகள்
- பரிணாமம்
- பொங்கல்
- பொங்க லோ பொங்கல்!
- பொலிரட்டும் பொங்கல்!!!
- பொங்கல் கவிதைகள்
- மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)
- எனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- அறிவியல் துளிகள்-8
- க(னவு)விதை
- ஜன்னலினூடு பார்த்தல்!
- பசுமையான பொங்கல் நினைவுகள்
- திருப்பிக்கொடு