பரிசு
ஆ. மணவழகன்
புதிதாய்,
புதுமையாய்,
அவள்
புன்னகைக்கு ஒன்று…
கருத்தாய்,
காதலாய்,
அவள்
கவிதைக்கு ஒன்று…
கன்னத்து மென்மையில்
பொசுப் பொசுப்பாய் – அவள்
பூனை முடிக்கு ஒன்று…
கால் தடுக்கி விழுத்தேனோ ? – அவள்
கண்ணின்
கருவிழிக்கு ஒன்று…
காத்திருந்து,
கரைந்தேனோ! – அவள்
கன்னக் கதுப்பிற்கு ஒன்று…
உள்ளுக்குள்,
வியர்த்தேனோ! – அவள்
விவேகத்திற்கு ஒன்று..
உறங்காமல்
தவித்தேனோ – அவள்
பெண்மைக்கு ஒன்று..
உரசிப் பார்க்க
நினைத்தேனோ! -அவள்
உதட்டுச் சுளிப்பிற்கு ஒன்று…
எனக்கு மட்டும்
இருக்கும் இடம் சொன்ன
அவள் மச்சத்திற்கு ஒன்று…
முகம் இருந்தும்
முகவரியை இழந்தேனோ ?
அவள் முழுமைக்கும்
ஒன்று…
எல்லாவற்றிற்கும் சேர்த்து
எங்கெங்கோ தேடினேன்…
எப்பொருளும் ஈடு இல்லை என்பதால்,
முடிவில்,
என்னையே….!!!
*******
a_manavazhahan@hotmail.com
- அவள்
- அவதார புருசன்!!!
- சுற்றம்..
- நில் …. கவனி …. செல் ….
- வல்லூறு
- மானுடம் வெல்லும்!
- பாலன் பிறந்தார்
- விளக்கு – ஹெப்சிபா ஜேசுதாசன் பாராட்டு விழா அழைப்பிதழ்
- நன்றி
- ஒற்றுமை
- கிரகணம்
- பரிசு
- அநேகமாக
- மாறிவிடு!
- செலவுகள்
- அட்டைகள்
- அண்டங்காக்கைகளும் எலும்பு கூடுகளும் (பாபா பாீதின் சிந்தனைகள் குறித்து)
- மறத்தலும் மன்னித்தலும் (எனக்குப் பிடித்த கதைகள் – 41- மாப்பஸானின் ‘மன்னிப்பு ‘)
- நகுலன் படைப்புலகம்
- ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு
- அறிவியல் துளிகள்
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ [Galileo] (1564-1642)
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை