ஓட்டம்
சித்தார்த் வெங்கட்
ஓடுவதை பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா ?
ஓடுவது தெய்வீகமானது,
மனதை லேசாக்குவது,
என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு.
எனக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை.
என் வரையில்,
ஓடுதல் அச்சம் சார்ந்தது.
கோழைதனத்தின் வெளிப்பாடு.
எதற்கெல்லாமோ பயந்து ஓடி இருக்கிறேன்.
நாய், இருட்டு,
கூட்டம், பெண்கள்,
பணம், புகழ்
என உடலும் மனதுமாய் ஓடியது ஏராளம்.
இத்தனை கால ஓட்டத்திற்கு பிறகு
இப்போது தான் புரிகிறது,
ஓட்டமே கோழைதனம் அல்ல,
அது ஓடும் திசையை பொருத்தது
என்று.
**
siddhu_venkat@yahoo.com
- நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..
- சீனம் கற்க தமிழில் முதல் நூல்
- எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து)
- வேஷம்
- சீன மொழி – ஒரு அறிமுகம் புத்தகம் பற்றி
- இந்த வாரம் இப்படி – சூலை 28 2002
- ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி ?
- ஜனனம்
- ஓட்டம்
- காவிரி ஆறு – ஒரு சோகக் கதை
- எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள்
- சமயவேல் கவிதைகள்
- காசநோய்க்கு எதிராக அதிகப்படியான வேலை
- பாரத அணுகுண்டைப் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா
- நள பாகம்
- கவலையில்லா மனிதன்
- கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்
- சமோசா
- நம்பிக்கை
- தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)
- மருதம் – புதிய இணைய இதழ்
- மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் (எனக்குப் பிடித்த கதைகள் -30 அந்தோன் செகாவின் ‘வான்கா ‘)
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)