இரு கவிதைகள்
எஸ். ரமேஷ்
மெல்லத் தொடரும் மணியோசை
காலத்தை உடைத்து கனியுண்டு
ஒளி மழையில் சிறகு உலர்த்தி
அன்பை அருந்திக் களிப்பாறும்
சிறு பறவை தன் கூடு விட்டு
மெல்லப் பரவும் மணியோசை
விசும்பின் வரையறை உள்ளொடுங்க
மீராவைத் தேடிய கானம் வீடடையும்.
% % % %
பெரிசுகளுடன் பிரச்சனையில்லை என்றும்
வீசிப்போட வார்த்தைகளுண்டு
தர்க்கச் சகதியில் தள்ளி விட்டு
தத்துவச்சாரலில் தலை முழுகி
தாண்டிப் போவேன் எப்போதைக்குமாக
பொடிசுகளுடன் போராட முடியவில்லை என்னால்
கும்பி நிறைக்க குருமா கோழி
அம்பி அருகே நின்று கேட்பான்
அப்பா நம் செல்லக் கோழி ஆனதென்ன யிப்படி ?
அதன் அப்பா அம்மா தேடாதா அதை தினப்படி ?
வலிமையான உண்மைகளை
எளிமையான வார்த்தைகளால்
எதிர்கொள்ள நேரிட்டால்
அதிராமல் இருப்பதெப்படி ?
% % % %
subramesh@hotmail.co
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- காவிரி நீர் போர்
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- குப்ஜாவின் பாட்டு
- வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்
- அதுவரை காத்திருப்போம்.
- புதிய பாலை
- நடிகர்கள்!
- கலாச்சாரக் கதகளி
- கவலையுள்ள மனிதன்!
- இரு கவிதைகள்
- யார்தான் துறவி ?
- பயணங்கள் முடிவதில்லை
- எழுத / படிக்க
- ஒரு கடிதம்…
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- காவிரி நீர் போர்
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- கவிதாசரண் பத்திரிக்கை
- இதுவும் உன் லீலை தானா ?
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- தோழியரே! தோழியரே!
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
- நாய் வாங்கும் முன்பாக
- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)