வெளி
சுந்தர் பசுபதி
முடிவற்ற விழிப்புணர்வே விடுதலையின் விலையாமென்ற *
மூத்தோரின் வாக்கினை எண்ணும் போழ்தில்
சுதந்திரமென்றெதனைச் சொன்னார் எனும்
கேள்வி முளைக்கும்….
***
வாழுகின்ற வாழ்க்கை நிலை பற்றி பெருமிதம் கொள்ளுகையில்
அதன் நிலையாமயின் நினைவு வந்து சுரீரென்று தைக்கும்
நன்று செய்தாய் நம்பி என பணியிடத்தில் புகழப்படுகையில்
என்னிலும் கூர்மையானோர் நினைவு வரும்
தோற்றப்பொலிவு கண்முண் தெரிகையில் இதனால்
தோற்றோர் பட்டியல் நினைவு வரும்
சுயநலமற்று விட்டு கொடுத்தோமே என இறுமாந்திருக்கையில்
தனைப் பெற்ற தாயவளின் நினைவு வரும்
நாள் முழுக்க வேலை செய்தும் கூலிக்கே அல்லாடும்
ஏழையொருவனின் சாயந்திர நேரத்து சதிராட்டத்தை
விளைவுகளை யோசியாமல் அவன் வீசி வீசி பேசுவதை
மனத்துள் கனம் கொள்ளாது அக் கணத்துக்காய் அவன் வாழ்வதை
சிந்தனைக்குள் குறுகாமல் அவன் குதியாட்டம் போடுவதை
அன்றைய நாளில் அவன் வெற்றியை மனதார ருசிப்பதை
காணுகையில்…………
புலம்பலில் இறங்கும் மனது, பொருமலில் தொடர்ந்து
கேள்வியில் திணறும்
*******************
சுதந்திரமென்றெதனைச் சொன்னார்…. ? ?
பிரச்சினைகளினின்றும் சுதந்திரமா…
சூழல்களின் சுழல்களினின்றும் சுதந்திரமா…
சிந்தனையற்று சும்மா இருக்கும் சுதந்திரமா…
எனில் இதுவே துறவோ… ? ?
* eternal vigilence is the price of liberty
***
sundar23@yahoo.com
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : ஐந்து)
- எனக்கு வேண்டியது…
- அன்பில் சிக்கும் கண்ணன்
- கானம், கனவு, கல்யாணம்
- குறும்பாக்கள்
- கரடி பொம்மை
- வழி (ஒரு குறும்பா அந்தாதி)
- ஆரிய இனவாதம் – ஒரு ‘பில்ட்-டவுண் ‘ மேற்கோள் ?
- உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 2 2002
- தவறு செய்யாத மனிதன்
- அறிமுகம்
- மிச்சம்.
- தேவதேவன் கவிதைகள் —4 : கடவுள்
- பூக்கள் வாங்கும் நாட்கள்
- வெளி
- இன்னமும் இருக்கும் வினோதமான சட்டங்கள்
- பிறவழிப் பாதைகள் – அன்னம் மீரா
- குரூரமும் குற்ற உணர்வும் (எனக்குப் பிடித்த கதைகள் – 25 -கு.ப.ரா.வின் ‘ஆற்றாமை ‘)
- உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]
- காய்கறி சவ்டர்
- அறிவியல் மேதைகள் சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming)
- இறப்பில்லாத வாழ்க்கை: ஒரு அறிவியற்பூர்வமான உண்மையா ?
- பாரதத்தின் அணுவியல்துறை ஆக்கமேதை -டாக்டர் ஹோமி. ஜெ. பாபா
- பிரிவுகள்