மதிப்பு

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

புஷ்பா கிறிஷ்ரி


வருபவர் அனைவரும்
உன் வாசலில் தான்
வந்தாலும் போனாலும்
உன் அன்புதான்
யார் மனம், யார் குணம்
உன் சிந்தனை
அனைவர்க்கும் பொதுவானது

நீ செய்யும் நன்மைகள்
உன்னை வாழவைக்கும்
உள்ளம் அழும் தவறாகச்
செய்தால்..
ஏன் செய்தாய் என்று கேட்டு
கண்கள் பனிக்கும்
தவறான தீர்ப்பு வந்ததென்று
நெஞ்சு படபடக்கும்
இனி என்ன செய்வதென்று ?
கால்கள் நடக்க மறுக்கும்
பாதை தவறானதென்று

ஆனாலும் உன் மதிப்பு
உன் கையில்
அது எப்படி வருமென்று
உன் மனம் சொல்லும்

***
Pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி