தெளிந்த நீரோடை

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

முத்துக்குமார்


தெளிந்த ஓர் நீரோடை அது
நிறத்தைக் கண்களால் காண்
பூதக்கண்ணாடி கொண்டல்ல
ஓசையைக் காதுகளாலேயே கேள்
அதிர்வலைக் கருவி கொண்டல்ல
குளிர்ச்சியைத் தொட்டே உணர்ந்து கொள்
வெப்பமானியைக் கொண்டல்ல
ஆழத்தைக் கால்களாலேயே அள
ஆனால் சேற்றுக் கால்களுடன் மட்டும் இறங்கி விடாதே
ஏனெனில் என் மனம்
தெளிந்த ஓர் நீரோடை!

***
thanearuvi@yahoo.com

Series Navigation

முத்துக்குமார்

முத்துக்குமார்