சில கேள்விகள்

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

ஸ்ரீனி.


மனங்களின் சங்கமம்
திருமணம்
என்னும் விளக்கவுரை
தந்தவன் யார் ?

கயிற்றின் முடிச்சில்
கட்டுப்பட்டு நிற்கும்
அகலிகைகள்
இங்கே ஏராளம்.

நெருப்புக்கும் நீருக்கும்
இல்லாத சக்தி
நிலத்தில் கிழித்த கோட்டிற்கு !
கர்வத்தில் எவனோ எழுதிய
கட்டுக்கதைக்கு
காலப்போக்கில் ‘காவிய ‘ அந்தஸ்து !

தென்றலின் வருடலிலும்
வண்டின் முத்தத்திலும்
இதழ் சிவந்து சிாிக்கும் பூவிற்கு
கொண்டையில் சொருகப்பட்டு
சிறைமுகம் இங்கே !

வண்டுகளையும் பூக்களையும்
பசை கொண்டு ஒட்டும் சமுதாயம் !
சுமப்பதற்காக பூக்களும்
சுவைப்பதற்காக வண்டுகளுமாய்
சுதந்திரம் இழக்கும் காலங்கள் ..

***

Ramachandran_Srinivasan@eFunds.Com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி