ஆயினும்…

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

எஸ். வைதேஹி.


நீ சொன்ன இடத்தில் எல்லாம்
பூத்துக் கொண்டிருந்தது
எனக்கு பிடித்ததாய்
நான் சொன்ன பூ.

நீ பேசிய போதெல்லாம்
அழகாய் வீசிக்காட்டியது
நம் ஊரில்
மாலையில் மட்டும்
வரும் காற்று.

நீ சிரிப்பதாய் எனக்கு
தோன்றும் முன்பே
என் கனவுகள்
உருவம் பெற்றுப் போயின.

நீ எனக்கு
எல்லாமாய் ஆகிவிட்டதாய்
உணர்த்தும் போது,
நான் சொல்லியே ஆக
வேண்டியிருக்கிறது…
உனக்கும்
எனக்குமிடையில்
ஓடிக்கொண்டிருக்கிறது
நமக்கு முன்பிருந்தே ஆறு!

***

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.