இன்றைய மது
வ.ஐ.ச.ஜெயபாலன்
உலகம்
விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு.
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.
அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.
நிச்சயம் இல்லை நமக்கு
நாளைய மது அல்லது நாளை.
எனக்காக இன்று சூரியனை
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில்
நிலாவுக்காக
ஓரம்போகிற சூரியனே
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.
கள்ளு நிலா வெறிக்கின்ற
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும்
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.
நனைந்த நிலத்தில்
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.
காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.
***
visjayapalan@hotmail.com
- பொறுப்புடன் எழுதுவோம்
- அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பது தவறு.
- இந்த வாரம் இப்படி – சூன் 14 2002
- திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002
- தொலைவு
- சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)
- வாழ்க்கைக் கல்லூாி
- திறவாத தாழ்கள்
- கெட்ட மானுடம்
- ஆயினும்…
- இன்றைய மது
- ஆசிரியர்
- அரிப்பு
- கயிலாயக் குடும்பம்
- ஆட்டுக்கறி குருமா
- மாங்காய் சட்னி
- மூட்டுவாதத்துக்கு Arthritis அட்டைக்கடிLeeches மருந்து
- பங்களாதேஷ் நாட்டை பசுமை மயமாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது
- வில்வமரமும் கனத்த தலையும்
- வியாழன் பூதக்கோள் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்
- தயிர்ப்பச்சடி
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வெயிலை கொண்டு வாருங்கள் ‘ ஒரு மதிப்பீடு
- திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002
- ? ? ?
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)
- விரிவடையும் பாவண்ணனின் எழுத்துத்தளம் (ஏழு லட்சம் வரிகள் -தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு)
- மரணம் என்னும் நெருப்பு (எனக்குப் பிடித்தக் கதைகள் – 15 – தாஸ்தாவெஸ்கியின் ‘நாணயமான திருடன் ‘ )
- வசியம்