கடற்கரை

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

ஆதி


அழகிய அச்சமும்
தோள்களில் முகம்
சாய்த்தும்
கைகள் கோர்த்து அலைகளில்
நாம் கால் நனைக்கும்
அந்த நெருங்கிய அவகாசங்கள்
மிக மெல்லியவை..

நம்மை அளவளாவி செல்லும்
அலைகள் அள்ளி சென்றது
பயம் மிகுந்த
உனது நாணத்தையும்
சிரிப்பையும்..

உனதந்த சிரிப்பு
எங்காவது சிப்பிகளில்
முத்துக்களாகி
இருக்கலாம்..
நாணம்பட முத்துக்கள்
சிவந்தும் இருக்கலாம்..

வருடல்களின் வர்ணங்களாய்
அலைகள் வரையும் ஈரங்களில்
மோதும் காற்றில்
முற்றி வெடிக்கிறது நமது
வரையரை மீறல்கள்..

அலையாய்
என் கைகளில் நீ
வளைந்து நெளிகளையில்
கரையாய் நான்
தாகம் கொள்கிறேன்
உன் ஈரங்களில்..

மலர் குவியலாய்
முகம் அள்ளி இதழ்களை
முகர விழைகையில்
கவிந்த உன் இமைகளில்
இருந்தும் குதித்தன
சில மீன்கள் மையல்களாய்
அலைகளில்..


அன்புடன் ஆதி
adhidin@gmail.com

Series Navigation

ஆதி

ஆதி

கடற்கரை

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

ஆன் ரணசிங்கே


(தமிழில் இரா.மதுவந்தி)

காலையின் அலைகள்
இடிப்பதுவும் சரி
காற்றின் வெளிச்சமான பாடலும் சரி

அவனது குரைத்தல்களை
மூழ்கடிக்க முடியாது
மூன்று சிறுவர்கள், ஒரு நாய்க்குட்டி
கடற்கரையில் சித்திரவதை

அவனது துன்பம்
உன் கண்களில் இருண்ட ஓட்டையை கிழிக்கிறது

கயிறு இறுக்குகிறது
சின்னக்குச்சி வலிமையாக அடிக்கிறது
பிறகு அவர்கள் மணலை வீசுகிறார்கள்
அதைப்பார்த்து
அனாதரவான கோபம்
உன் கைகளை முறுக்குகிறது

மணல் அவன் கண்களை நிரப்புகிறது
மணல் அவன் மூக்குகளை நிரப்புகிறது
மணல் அவன் காதுகளை நிரப்புகிறது

உன் கண்ணீரின் வழியே
உப்பு உன் வாயில் இறங்குகிறது
அந்நியப்பட்ட வருடங்களில்
என் நாக்கு அழுகி
நகர்த்தமுடியாததாகி விட்டது

சூரிய வெளிச்சமடிக்கும் கடலில்
மக்கள் குளிக்கிறார்கள்
அது ஒரு சாதாரண நாள்

அவர்கள் கத்துகிறார்கள் ‘வா விளையாடலாம் ‘
அவனை புதைப்பதைப் பற்றி

பிறகு
அவர்கள் அவனைப்புதைக்கிறார்கள்.

Series Navigation

ஆன் ரணசிங்கே

ஆன் ரணசிங்கே