வரம்
திலகபாமா,சிவகாசி
நமக்கான உணவுக்காய்
சந்தையில் பசி தவிர்த்தெல்லாம் வாங்கி
நமக்கான பிள்ளைக்காய்
பள்ளி கட்டணமாகி
நமக்கான சேமிப்புக்காய்
வங்கி வரிசையாகி
நமக்கான வீட்டுக்காய்
செங்குருதி கல்லாகி
நமக்கான மானத்துக்காய்
உடையின் நூலாகிகுத்தும்
ஊசிக்கிடையிலும் கிழிசல்கள்
மறைக்கும் தையலாகி
நமக்கான வெளிச்சத்துக்கென
விளக்கும் எண்ணையுமாகி பின்
விடியலுக்கான இருளுமாகி
எனக்கான பயணத்துக்காய்
உனக்கான அலுவல் நேரம்
ஒதுக்க முடியாது
இரயில் கூவலோடு என்
மனக்கூவல் யார் காதிலும் விழாது
கரைகையில்
உனக்கு எனக்காய் நான்
கணக்கு பார்க்காது நீ
கணக்கு பார்க்கையில்
கழுத்தை அலங்கரித்த
சவரன்தாலி சாபம் பெற்ற
சந்திரமதி தாலியாய்
எல்லார் கண்ணுக்குத் தெரிந்தாலும்
எனக்கு மட்டும் தெரியாது
மண்ணோடு மணந்திருக்கும் வேரின் வாசம்
தேனோடு நிறைந்திருக்கும் பூவின் மனங்களுக்கு
புரிய ஆரம்பிக்கையில்
உனக்கும் எனக்குமிடையில் மட்டும்
உயிர்க்கும் சந்திரமதி தாலியாய்
என் தாலியும் வரம் வாங்கி வரலாம்
***
- Carnage in Gujarat
- உரிமை கொண்டாடுகிற ஆளுமை
- வாழ்க்கையின் கேள்விகள் ,பதில்கள், பதில்களுக்கு அப்பால்…
- அகதி மண்
- புலம் பெயர்ந்த காட்சிகள்
- இந்தியாவில் வறுமையின் முடிவு, நிலைமையும் காரணங்களும்.
- ரஸ் கான் – ஒரு கிருஷ்ண பக்தர் சூஃபி
- மகிழ்ச்சி என்பது ஒருமை..
- எங்களின் கதை
- மன்னனாய் என் வாழ்க்கை..
- சின்னப் புறா ஒன்று
- தொடர்ந்துவரும் பாரம்பரியம்: ஆனந்த குமாரஸ்வாமிக்கு ஒரு அஞ்சலி
- அந்த நாளும் அண்டாதோ ?
- உருவமற்ற நான்.
- அமெரிக்காவின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி
- கோழிகளுக்கும் தேவை குடும்பம். அம்மா அப்பா சண்டையிட்டால் குஞ்சுகள் அசிங்கமாய் இருக்கும்
- அறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)
- வரம்
- ரமேஷின் மூன்று கவிதைகள்
- சீயம்
- இடியாப்பம்
- மணிரத்னத்தின் நாயகன் – ஒரு மறுபார்வை
- எனக்குப் பிடித்த கதைகள் -10- பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்
- Lutesong and Lament :Tamil Writing from Srilanka புத்தக விமர்சனம் : புதிய புற நானூறு, அக நானூறு
- பார்வை–கொங்கு மண்டல கூத்துக் கலை
- நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி)