நலமுற
வை.ஈ. மணி
காலை வானில் கருமுகில்கள்
காணாது மனம் களிப்புற்று
காலை வீசி உடற்பயிற்சிக்
கெனச் சிறிது நடக்கக்கற்
சாலை ஓரப் பாதையினில்
சென்ற என்னைக் கண்டவுடன்
‘மாலை ‘* வலம் வருவோர்கள்
மகிழ்ந் துடன் வந்தனரே (1)
வருத்த முற்ற என்மனதில்
வடிவு பெற்ற குறையொன்று
பருத்த உடல் என்றறிந்தும்
படுத்தும் ஆசை தள்ளநான்
மருத்து வர்சொல் மீறியுண்டு
மகிழத் தின் பண்டங்கள்
இருக்கு மிடம் கண்டணுகி
இனிப் புண்ணக் காத்திருந்தேன் (2)
வலம் வரும் மனிதர்களில்
மனம் நொந்து காணப்படும்
சிலர் காலில் ஊனமுற்றும்
சிலர் உடல் மிகமெலிந்தும்
பலர் பெருத்த வயிற்சுமந்தும்
பலம் குறைந்து நடைதளர்ந்தும்
சொலர்க் கரிய துயிரமேற்றுச்
செல்லும் காட்சி உறுத்தினதே (3)
நலம் குன்றி நோயடுக்கும்
நம் மனதில் அடங்காத
புலன் ஆசை வேரூன்றிப்
பெரும் தீயன செய்வதனால்
பலன் இல்லை ஐயமில்லை
புலன் ஆட்சி நிலைத்திடில்
நலம் பெற்று இன்புறுவார்
புலன் அடக்கி வாழ்பவர் (4)
* ‘MALL ‘
- கறுப்பு வெளிச்சங்கள்
- கடிகாரம்..
- இன்னொரு ஜனனம்
- நினைவுகள்
- பனி மழை
- இயல்பு
- தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்
- ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது
- ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)
- சூஃபி இஸ்லாம் : அமைதிப்புறா
- சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகளே!
- கோவில்களில் அன்னதானம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் தவறானது
- இந்த வாரம் இப்படி – மார்ச் 31 2002 (சங்கரலிங்கபுர கலவரம், ஜெயலலிதா ஆறுதல், கோத்ரா மற்றும் ஜம்மு, மீண்டும் மூன்றாம் அணி)
- இரக்கம்
- ஓட்டப் போட்டி
- உன்னுள் நான்
- சொன்னால் விரோதம்
- முந்தைப் பெருநகர்
- நலமுற
- வளர்ச்சி
- அனிச்சமடி சிறு இதயம்
- நீல பத்மநாபன் விமரிசனத்தொகுப்பு
- நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
- ‘Amores Perros ‘ அமோரஸ் பெர்ரோஸ்- நாய் போல அன்பு மெக்ஸிகோ சினிமா (விமர்சனம் அல்ல)
- நூல் விமர்சனம் – நகரம் – 90 (சுப்ரபாரதிமணியன்) -போராட்ட வாழ்க்கை
- திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம்- விமரிசனக் கூட்டம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 7 – கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை ‘ – எதிர்பார்ப்பும் ஏக்கமும்
- நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி
- அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்
- இன்னும் கொஞ்சம் வெண்பா
- ப்ரியமுள்ள தொலைபேசிக்கு