தெரு

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

மாம்பலம் கவிராயன்


தகப்பனே மெளலி புனைந்திடத் தாயார்
முகத்தில் பவுடர் தடவ – நகத்தைக்
கடித்துக் ‘கடவுளும் ‘ யாசிக்கும் வீதி.
அடித்து நகருது கார்.

தாருருகும் வெய்யில் தெருவில் பகல்நேரம்
கார்நிறுத்தி நான்போகக் காஷ்மீரம் – மா(.)நிறை
ஊபிமும்பை வேணுமாசார் கூப்பிடும் குட்டனவன்
ஊதும் பலூனுமெது கூறு.

சந்திப்பு

காப்பி வரவழச்சார் கண்ணகிய ணிக்காகக்
கூப்பிடு பேசறேன்னார் ‘ஓட்டலில் சாப்பாடு
சுத்தமோ சம் ‘பேனா ஒப்பிடப் தேடினார்
மெத்தைக்குக் கீழே உறய்.

Series Navigation

மாம்பலம் கவிராயன்

மாம்பலம் கவிராயன்