சொன்னால் விரோதம் அம்மே!

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

கவியோகி வேதம்


பார்த்ததனைப் பார்த்ததுபோல் சொல்வதுமே உண்மையில்லை
..பலதடவை அதுபொய்-ஆம் அம்மா!
..பள்ளியாசான் பலகையிலே ‘நரி ‘வரைந்தே இதுநரிதான்
….பார்-என்றால் அதுநரியா கும்மா ?
பார்ப்பதுவும் ஒருதோற்றம்! கதைகளில்பொய் பரிமாற்றம்!
….பகுத்தறிவும் ஏமாற்றும் அம்மா!
..பலர்முன்னே சிலர்குணத்தை அப்படியே சொல்லிநின்றால்,
….பலமான விரோதி-நான் அம்மா!
சேர்த்துவெண்ணெய் உருண்டைக்குள் மருந்துவைத்து வெண்ணையென்று
..சேய்க்குத்தாய் பொய்சொல்வாள் அம்மா!
..செகம்முழுதும் காமம்வைத்து சென்மத்தை நிலைநிறுத்த
…..தேவிநீயும் ‘மாயை ‘செய்தாய் அம்மா!
வேர்த்திருக்கும் மேனியுடன் உழைப்பவர்க்கு வறுமையையும்,
..வேதனையும் ஏன்தந்தாய் அம்மா!
… வெய்யிலிலே வேகாதோர் பணம்சேர்ப்பார்; இதுசொன்னால்,
..விரோதம்தான் வந்திடுமே அம்மா!–(1)-

சொல்மாறிப் பேசிவிட்டார் ‘மெய் ‘காக்கும் ராமனுமே;
..சொன்னாலே விரோதமாம் அம்மா!
…சுக்கிரீவன் வாலியுடன் சண்டையிட்ட முதல்போரில்
..சொன்னசொல்லைக் காத்தாரோ அம்மா ?
சொல்வெடிக்கும் இலக்குவன்கண் மாலைபெற்ற பின்னர்தான்
..சுக்ரீவனைக் ‘கண்டு ‘கொண்டார் அம்மா!
…சொல்கவிதைத் திறனாலே ‘பலர் ‘கதையைக் கிளறிநின்றால்,
..சூடாகும் கவிஅரங்கம் அம்மா!
நல்லூராம் நாங்கூரில் பிறந்ததிரு ‘மங்கையாழ்வார் ‘
..நன்றாகக் கொள்ளைசெய்தார் அம்மா!
..நல்லசெயல் ‘திருட்டு ‘என்(று)அப் பணத்தைவைத்தே கைங்கர்யம்,
.. நாயகனும் ஏற்றது-ஏன் அம்மா ?
வல்லவர்கள் வாதத்தைச் செகப்புரட்டாய்ப் புரட்டிநின்று
..வக்கணையாய்ப் பேசுகின்றார் சும்மா!
… வயதாக,வயதாகச்,சொற்களிலே ‘உன்ேfாதி ‘
… ‘மண் ‘அளவும் தெரியலையே அம்மா!
***

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்