சில நாட்களில்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

மதுரபாரதி


சில நாட்களில்
மனம்
மிக நொய்தாய் இருக்கிறது

ஏதோ ஒரு அநாதை சுவரத்திற்கும்
இனங்காணாத பரிமளத்திற்கும்
கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிட்டு
வேடிக்கை பார்க்கிறது

பார்க்கமுடியாத அஸ்தமனத்தில்
மேக விளிம்பை நெருப்பேற்றிவிட்டு
சீறிப்பிரியும் கிரணங்களுக்கு
தேக மயிர்களாலே
அஞ்சலிக்க வைக்கிறது.

வயிறொட்டிய தெருநாய்
எதேச்சையாய்ப் பார்க்கும்
பொறிவிழிகளிலே
சகோதரம் விரியும்
சமிக்ஞை படிக்கிறது.

மனம் நொய்தான
இந்த நாட்கள்தாம்
இதர நாட்களின் பளுவை
சல்லிசாய்ச் சுமக்க
தோளுக்கு உரமூட்டுவன.

—-

Series Navigation

மதுரபாரதி

மதுரபாரதி