கேள்வி

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

முத்துக்குமார் பொன்னம்பலம்


கூர்கொம்பு நீள்தலையை
மருளவைக்க மிகவுலுக்கி
வால்சுழற்றி சுள்ளென்று
அயர்ந்திடாது விரட்டியும்
எருமையின் கொம்பமர்ந்த
மருளாத சிறுகுருவி
அண்டையில் நான்செல்ல
பதறிச் சிறகடித்து
நெஞ்சுக்குள் கேள்வியிட்டு
சட்டென்று பறந்துபோச்சு.

புவியதிர மண்சிதற
புகையாய் புழுதிகிளப்பி
பாய்ந்தோடும் காட்டெருது
தினந்தோறும் நடந்தேக
குளம்பிடுக்கில் சிரிப்போடு
தலைநீட்டும் பசும்புற்கள்
நாலுநாள் நான்நடக்க
மரணித்துப் பாதையாச்சு;
மனசெல்லாந் துக்கமாச்சு;

Series Navigation

முத்துக்குமார் பொன்னம்பலம்

முத்துக்குமார் பொன்னம்பலம்