காலை
கே ஆர் விஜய்

சிறுவயதில்
உணர்ந்ததில்லை இதன் மகத்துவத்தை….
கல்லூரி நாட்களில்
இதன் பரிச்சயமே
கண்ணில் பட்டதில்லை.
காதலியின் கட்டாயத்திற்காக
சில நாட்கள்
காலைப் பொழுதிலே காத்திருந்ததுண்டு.
பிறந்த நாட்களின் பொழுது
நண்பர்களின் கூவலால்
மிரண்டும் எழுந்ததுண்டு.
விடுமுறை நாட்களில்
வீடு சென்றாலும்
தினமும் அம்மா கத்துவாளே தவிர
ஒரு நாளும் எழுந்ததில்லை….
சின்ன வயதில்
அப்பாவோடு காலை எழுந்து
ஆற்றுக்குப் போய் குளிப்பேனாம்.
நண்பர்களோடு
மாரியம்மனுக்கு நீர் ஊற்றுவதற்காக
சிலமுறை எழுந்ததாக ஞாபகம்.
நீண்ட நாட்கள் கழித்து
இன்று எழுகிறேன்.
காலையில்..
பறவைகளின் சத்தம்…
தூய வானம்…
சுத்தமான காற்று
இரைச்சலில்லாத சாலை.
கதிரவனின் உதயம்.
சீராகிறது சுவாசம்
தெளிவாகிறது மனம்
குழப்பமாக இருந்ததனால்
காலை விரைவாக எழுந்தேன்…
இப்போது தெளிவோடு…
கவிதை வருகிறது..
கற்பனை வளர்கிறது…
கவிதை எழுத
தினம் காலையில் எழவேண்டும் என நினைக்கிறேன்
உறங்கிக் கொண்டே…..
***
கே ஆர் விஜய்
28/12/01
கே ஆர் விஜய்
- இந்த வாரம் இப்படி – டிசம்பர் 31, 2001
- இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் மதவாதம் உருவான விதமும்
- இடை- வெளி
- ஒரு ராத்திரி – ஒரு பயணம் – ஒரு மணி நேரம் – நாலு கோவில்
- அர்ஜெண்டைனாவின் பிரச்னைகள்
- கண்ணகி சிலை, திருவள்ளுவர் சிலை, சங்கராசாரியார் சிலை , தமிழன்னை சிலை
- SAMANE- An appeal
- விடியல்
- ஒரு ராத்திரி – ஒரு பயணம் – ஒரு மணி நேரம் – நாலு கோவில்
- தேவன் அவதாரம்
- அன்பை விதை,வன்முறை புதை!
- சும்மா ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலைப் பாட்டு
- புதிய பலம்
- பிக்காசோ: அசைவற்ற வாழ்வும் அணிலும்
- காலை
- ஐஸ்லாந்து எரிபொருள் புரட்சியை ஆரம்பிக்கிறது
- ஜீரகத் தண்ணீர்
- ஆள வந்தான்
- சினுவா அச்சேபே எழுதிய ‘விஷயங்கள் உதிர்ந்து விழுகின்றன ‘ நாவல்
- பாவண்ணனின் ஏழு லட்சம் வரிகள்: காலத்தின் இருப்பும் இயக்கமும்
- சாவித்திாி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!