சொப்பன வாழ்வினில் மயங்கி…..

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

வ.ந.கிாிதரன்


இரவில் மட்டும் பூத்திடும்
தாமரைகளா!

யார் சொன்னது
வருடத்தில் ஒரு முறைதான்
கார்த்திகைத் திருவிழா
வருமென்று ? இங்கு ஒவ்வொரு
இரவும்
திருவிழாதானே ?

யார் சொன்னது நட்சத்திரங்கள்
கொட்டிக் கிடப்பது
விண்ணில் மட்டும் தானென்று ?
இந்த
மண்ணிலும் தான்.

சுடர்களை மறைத்தன
நகரத்துச்
சுடர்களே. மரங்களை
மறைத்தன நகரத்து
மரங்களே.

சுடாிழந்த விண்ணை
ஈடு செய்யவா
சுடர் கொடுத்ததிந்த
மண். நகரத்து மண்.
மரமிழந்த மண்ணை
ஈடு செய்யவா
மரம் தந்ததிந்த
விண். நகரத்து விண்.

மண்ணில் வேரறுத்ததாலோ
விண்ணில் வேர் பதிக்கவெழுந்தன
இந்த மரங்கள்!அடைய வந்த
புட்கள் புல்லாகிப் போன
விந்தையென்னே!

விரையும் பேராறுகளை,
கணமேனும் ஆறுதலற்றோடும்
பெரு நதிகளை நீங்கள்
வேறெங்காவது கண்டதுண்டா ?

உங்கள் வேகத்தைக் கண்டு
வெட்கப்பட்டுத தானோ
இருக்கும் ஒன்றிரண்டும்
ஓடையாகி ஓரத்தில்
ஒதுங்கினவோ ?

சொப்பன வாழ்வினில் மயங்கி
நகரத்துச்
சொப்பன வாழ்வினில் மயங்கி
உனை மறந்தோம் ? இயற்கை
உனை மறந்தோம். நாம்
உனை மறந்தோம்.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்