செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்…

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

மா. சிவஞானம்,


செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்…

என் மனங்கோர்த்திழுத்துப் போவதெங்கே ?

உணர்ந்ததில்லை இவ்விதம் எப்போதும் !

உயரம் ஒரு பொருட்டல்ல, இiழுத்து மூடிய

இரும்புக் கதவும் ஒரு தடையல்ல

மேகத்துக்கு மேலே ஆர்த்தெழுந்து போகும்

அதன் வயிற்றுக்குள் அடுத்தடுத்து நாங்கள்

வெடித்துச் சிதறி நகரெரிக்கும் அரக்கன்(ஐ)

விரும்பா காற்றுக் கசிந்திடா கதவிடுக்கு

ஊடுருவிக் கவர்ந்திழுத்துப் போகுமிடம் ?

எழில் மண்டும் எந்த ஊர் ஏரித்தோட்டம் ?

பயமற்றுப் பறத்தலும் திரிதலும் பயில்வித்து

அலைந்தலைந்து கண்மூடிக் கரைந்துருகி

செவ்விளம் வாய்க்குள் அமுதூட்டும் கலை

வெடித்த சிரிப்புக்காய் கன்னங்கள் பூக்கக்

காத்துக் கிடக்குமுன் பூமென் தழுவலில்

தடையின்றிக் கலந்திருக்குமிக் கணம்.

Series Navigation

மா. சிவஞானம்,

மா. சிவஞானம்,