டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

ருத்ரா


‘இறந்து போன பூமியா இது ?
கல்லறைத்தோட்டங்களில்
என்ன முளைத்துவிடப்போகிறது ?
எங்கு பார்த்தாலும்
ஆளுயரக் க்கள்ளிகள்.
போலீஸ்காரன் கையைக்காட்டி
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்துவது போல..
சவமாகி விழுவதில் கூட
நொிசல்கள்..தள்ளு முள்ளுகள்.
நினைவுச் சடலங்களின்
நீள் வாிசையில்..
இங்கு ‘ட்ராஃபிக் ஜாம் ‘.
அந்தக் கைகளில்
ரோமங்களுக்குப் பதில்
முட்கள் .
தினவுகொண்ட
இந்த கூாியமுட்கள்
அந்த நீலவானத்தை
காயப்படுத்தி
வானம் எங்கும் மெளன ரத்தம்.
சிவப்பில் நனைந்த சூாியன். ‘

‘அங்கும் இங்கும்
கல்லின் உருவங்கள்.
கும்பிடுவதற்கு
உயர்ந்த கைகளில் எல்லாம்
புடைப்பதற்கு நரம்புகள் இல்லை.
செத்துப்போன முகங்களை
புதைத்துக்கொண்டு
கைகள் மட்டும் எப்படி இங்கு…. ?
விடைகள் தொிந்துகொள்ள
விரும்பாத வினாக்கள்
எப்படி இங்கு முளத்தன ? ‘
‘சாக்ரடாஸ் ஏந்திய
நஞ்சுக்கோப்பைகளின்
நிழல்கள் பூக்கும்
இந்த கள்ளிக்காட்டுக் கிளைகள்…!
அந்த குச்சியெலும்புகளின்
கூழைக்கும்பிடுகளில்
மயான சாயம்பூசிய
மலைப்பிரசங்கங்கள்.
மண்டையோடுகளைக் குவிக்க
சங்கு ஒலிக்கும்
‘பாஞ்ச ஜன்யங்கள் ‘.
கரப்பான் பூச்சிகளின்
குருட்சேத்திரத்தில்
பல்லிகளின் வியூகங்கள்.. ‘

‘ வழிபாட்டின்
கூப்பாடுகள்..கூவல்கள்..
அவை எல்லாம்
அண்டவெளியில்
கேளா ஒலிக்குப்பைகளின்
ஆயிரம் பின்னல்கள்.
தொலைவில்
கண்சிமிட்டி கண்சிமிட்டி
கரைந்துபோகும்
நட்சத்திரங்களின் கண்காணிப்பில்
இந்த கூக்குரல்கள் எல்லாம்
வானத்தில்
தங்கள் சவக்குழியை
தோண்டிக்கொள்கின்றன. ‘

‘ மரணத்தின் முகத்திற்கும்
மறுபக்கம் உண்டா ?
எல்லைகளை எல்லாம்
தாண்டிய ராஜ்யம்
அந்த ராஜ்யம்.
கனவு விளிம்புகளில்
தினம் தினம்
நனவுகளின் கொடியேற்றம்.
நம்மைச் சுற்றிக்கிடக்கும்
தொப்பூள் கொடியின்
இந்த முனைக்கும்
அந்த முனைக்கும்
நடுவே
உயிாியல் விஞ்ஞானத்தின்
கணித சமன்பாடுகள் நடத்தும்
கயிற்று இழுப்பு போராட்டம்.
அச்சம் எனும் முரசு
நடு நடுங்க ஒலியெழுப்ப
ஆத்மாவின் கீதம்
அங்கு தேசீயகீதம். ‘

‘ திடாரென்று
விழித்துக்கொள்கிறோம்
அந்த நடுநிசியில் கடிகார முட்கள்
ஒன்றோடொன்று விலகிக்கொண்டே
தழுவிக்கொள்கின்றன.
விலுக் விலுக்கென்று
சிலிர்த்துக்கொள்கிறோம்.
பூக்களின் சொட்டு சொட்டாய்
மணித்துளிகள்
நடுங்கிக் கொண்டே உதிர்கின்றன.
முத்தமிட குவியும் உதடுகள்
முணு முணுப்புகளாய்
கரைந்து போகின்றன.
நொறுங்கிக் கிடக்கும்
கல்லுருவங்களை நோக்கி
தொழுதிட
கைகள் குவிகின்றன.
* * * * * * * * * * * * * *
மானுடத்தின்
உள்விசை தேடி
உடுக்கை அடித்துக்கொண்டு
உலா புறப்பட்டவன் டி.எஸ்.எலியட்.
இரண்டாம் உலக யுத்தம்
மனித முகத்தைக்
கிழித்துப்போட்டுவிட்டது.
வறட்டுத்தனமான ஒரு எந்திரத்தனம்
மனிதநேயத்தை
கசாப்பு செய்துவிட்டது.
மனத்தின் பாழ்வெளியில்(waste-land)
உள்ளீடு அற்ற எலும்புக்கூடுகளாய்
இற்றுவிழும்
வெற்றுமனிதர்களை(hollow men)க்கண்டு
உள்ளம் வெதும்பி…
அந்த அவஸ்தைகளின்
ரசம் பிழிந்து
பருகத் தந்தவன் டி.எஸ்.எலியட் !

அவஸ்தைகள் மூன்றுவகை.
அந்த அவஸ்தைகளின் முக்கூட்டுச் சந்திப்பு
எங்கு நிகழ்கிறது ?
உயிாின் முற்றுப்புள்ளியைக்
குறிப்பது அல்ல மரணம்.
உயிரும் உடலும்
நசுக்கிக்கொண்டேயிருக்கிற
அவஸ்தைநிலைகளில்
கடைந்து கடைந்து
கிடைக்கும் அமுதநிலை யை
உங்கள் ‘சுரைக்கூடுகளில் ‘
அடைத்துக்கொள்ளுங்கள்.
அதிலிருந்து ஒரு ஆகாய கங்கையை
சுரக்கச் செய்யுங்கள்.

விழிப்பு எனும் ஜாக்ரதம்
உயிர்-உடம்பிலிருந்து
ஆத்மாவை உாித்துவைத்து
உற்று நோக்குகிறது.
கஞ்சிக்கவலைகளையும்
இன்ப துன்பங்களையும்
தராசு தட்டுகளில் வைத்து
வியாபாரம் செய்கிறது.
இது முதல் அவஸ்தை.

அத்மா எனும் அடி நாதத்தோடு
ஆணி அடித்துக்கொண்டு
கனவு பலூன்களை
உள்மனத்தில் நங்கூரம் பாய்ச்சிக்
கிடக்கும் நிலையே
ஸ்வப்னம் எனும்
இரண்டாவது அவஸ்தை.

கனவையும் நனவையும்
கலந்து கதம்பமாக்கி..அதில்
ஆத்மாவைக்குழைத்து
ஐஸ் க்ாீம் சாப்பிட முயல்வது
ஷுஷுப்தி எனும்
மூன்றாவது அவஸ்தை.

உங்களுக்கு புாியவில்லையா
இந்த மூன்றுஅவஸ்தைகளூம் ?
ஒரே அவஸ்தையில்
அந்த மூன்றுவர்ணக் கலவைகளின்
அவஸ்தையே…காதல்..
இறந்து கொண்டே பிறப்பது..
இறந்துகொண்டே வாழ்வது..
இறந்து கொண்டே ..
மீண்டும் பிறப்பது…என்றால்
என்னவென்று புாிந்துகொண்டிருக்கிறீர்களா.. ?
காதலித்துப்பாருங்கள் !

துாீயம் எனும்
நான்காவது அவஸ்தை
இங்கு ஒரு ‘பாய்ச்சலை ‘க்குறிக்கிறது.
காதல் வழியே பாயும்
உயிாின் மின்சாரம் அது.
கூடு விட்டு கூடு பாயும்
கூடுகளின் பாய்ச்சல் அது.
உள்ளீடு அற்று கூடுகளாகிப்போன
மானிடர்களே !
வாழ்வின் உந்துவிசையாய்
இந்த அவஸ்தைகளைக் கொண்டு
உங்களைத்திணித்துக்கொள்ளுங்கள்.

கற்றாளைக்காட்டின்
அந்த ‘பாலைத்திணையிலும் ‘
வானவில்லே முட்களாகி
வசந்தம் காட்டுவது
உங்களுக்கு புலப்படவில்லையா ?
என்கிறார் எலியட்.
அந்த கற்பாளத்திலிருந்து
ஒரு பெண்ணை செதுக்குங்கள்.
அங்கே
இருக்கின்ற பெண்ணிடம்
இல்லாத காதல்..அல்லது
இல்லாத பெண்ணிடம்
இருக்கின்ற காதல்..
எதுவானாலும்
அதுவே உங்களூக்கு
அர்த்தங்கள் துளிர்க்கின்ற விடியல் !

கள்ளிப்பூக்களிடையேயும்…
காதல் எனும்
கள்ளின் பூக்களும்
மகரந்தம் தூவக்காத்திருக்கின்றன.
புலம்பல்களிடையேயும்
புளகாங்கிதம் கொள்ளும்
தருணங்கள்
இறைந்துகிடக்கின்றன..என்று
காட்டும் சொற்சித்திரம்
எலியட்டின் எழுத்துச்சித்திரம்.
(தொடரும்)
=====================================================ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா

டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (2)

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue

ருத்ரா.


‘ என் கண்களைக்

கண்டு அஞ்சுகிறேன்.

மூடிக்கொண்டே

அவை ஏற்படுத்தும் கனவுகளின்

வலி தாங்கமுடியவில்லை.

இதற்கெல்லாம் தீர்வு

இறப்புகளின்

அந்த சாம்ராஜ்யம் தானா ? ‘

‘ஆனால் அங்கோ

கண்களும் இல்லை.

காட்சிகளும் இல்லை.

இடிந்த தூண்களின்

சிதிலங்களில்

நசுங்கிக்கிடக்கும்

சூாியஒளியில்

சூனியத்தின் விழிகள்.

மரங்களின் இலைக்கூந்தல்

இங்கும் அங்குமாய்

ஆடும் ஊஞ்சல் ஆட்டங்களில்

பேயோட்டும் சூறாவளிகள்.

கானம் முழக்கும்

காற்றுக்குள்

ஏதேதோ குரல்கள்…

எங்கிருந்தோ..எதிலிருந்தோ

கனத்த அமைதியின்

அடிவயிற்றுக்குள்ளிருந்து…

அந்த குரல்கள்…

ஆனால்

அவை யாவும்

உதிர்ந்து கரைந்து

தொலைந்து போகும்

தொலைதூரத்து

விண்மீன்களைப்போல…. ‘

‘அந்த மரண ராஜ்யத்தின்

கனவு பள்ளங்களுக்கு

மண்வெட்டி பிடிக்கும் தூரத்துக்கு

இன்னும்

சமீபிக்கவில்லை நான்.

நானும் இங்கு

முகங்களுக்கு மேல்

முகங்களாய்

வர்ண வர்ண

முகமூடிகள்

மாட்டிக்கொண்டுவிட்டேன்.

எலித்தோல் உடுத்தினேன்.

காக்கை உடம்புக்குள்

கூடு பாய்ந்தேன்.

வயல்வெளியில்

வைக்கோல் பொம்மையாய்

மரச்சிம்புகளில் பின்னப்பட்ட

உருவங்களாய்…

காற்றின் அசைவு

நட்டுவாங்கம் செய்ய

நர்த்தனம் ஆடுகின்றேன்.

இருப்பினும்

நெருங்கவில்லை நான்…

அந்த இறுதி சந்திப்பை நோக்கி.

அந்திவான ராஜ்யம்

அழைக்கிறது…

இன்னும் நான் நெருங்கவில்லை… ‘

‘ இந்த பக்கமா ?

அந்த பக்கமா ?

எந்த பக்கம் நான் ?

ஜனனத்துக்கும்

மரணத்துக்கும்

நடுவே

ஒரு ‘சவ்வூடு பரவல் ‘ இது.

கனவு கசிந்து

நனவுக்குள் நுழைகிறது.

நனவுச்சல்லடையின்

ஆயிரம் கண்களில்

கனவு வடிகின்றது.

துன்பங்களுக்குள்

இன்பம் பூக்கிறது… ‘

* * * * * * * *

மரணத்தை முன்வைத்து

ஒரு ‘மாயா வாதத்தை ‘

இங்கு

பூச்சாண்டி காட்டவில்லை

டி.எஸ்.எலியட்.

சுழலும் கடிகாரமுட்களில்

மண்டிக்கிடக்கும்

அந்த ‘கள்ளி முட்களை ‘

அப்புறப்படுத்துவதற்கே

இந்த அழுகைப்பாட்டு.

ஆனாலும் அங்கொரு பொந்திடை

‘அக்கினிக்குஞ்சொன்று ‘

புதைத்து வைத்தார்.

வெந்து தணியட்டும் காடு.

அப்போது புாியும்

அந்த சூடு

காதலின் சூடு என்று.

அப்போது புாியும்

அந்த வெப்பம்

உலகத்து எாிமலைகளையெல்லாம்

குத்தகைக்கு எடுத்துக்கொண்ட

காதலின் வெப்பம் என்று.

ஏனெனில்

வாழ்வதற்கு ஒரு தாகம் வேண்டும்.

காதல் எனும்

அந்த கானல் நீரை

பருகுவதற்கு ஓடுங்கள்.

அப்போது புாியும்

இந்த சப்பாத்திப்பூக்கள் கூட

உங்கள்

சட்டைப்பையில்

பூக்கும் ரோஜாக்கள் என்று.

மரண சாம்ராஜ்யம் என்று

ஒரு பரமண்டலத்தை

அவர் சுட்டிக்காட்டவில்லை.

நம் முதுகுக்குப் பின்னே

ஒட்டிக்கொண்டு

கூர்தீட்டும் பயங்களின்

அந்த அம்புக்கூட்டை

கழற்றி எறியவே

அந்த கற்பனை தந்தார்.

அன்பே..

எனக்கொரு கேடயம் நீ.

யுத்தமும் நீ.

ஒரு சோளத்தட்டைப்பொம்மையாய்

வாழ்க்கையை

வாழமுடியாத

ஒரு சொக்கப்பனைக்குள்

எாிந்துபோக

நான் பிறக்கவில்லை.

அன்றொரு நாள்

நீ சிந்திய

ஒரு சிாிப்பின் திவலைக்குள்

சமுத்திரங்களை

நிரப்பிக்கொண்டிருப்பவன் நான்.

உன் மின்னல்

சுவாசங்களைக்கொண்டு

இந்த வெறுங்கூட்டை

நிரப்பிக்கொள்கிறேன்.

எலியட்டின்

எழுத்துக்குள்ளிருந்து

எந்திரத்துப்பாக்கி ஒன்று

எழுந்து வந்து

உங்களை மிரட்டுகின்றதா ?

இந்த சாவுக்குருவிக்குள்ளும்

காதலின்

ஒரு குயில் பாட்டு

கேட்கவில்லையா உங்களுக்கு ?

உங்கள் சவங்களை

நீங்களே

எப்பொதும்

சுமந்து கொண்டிருக்கவேண்டும்

என்றா இத்தனை வழிபாடுகள் ?

அவலங்களை

அசைபோடும்

மாடுகள் அல்ல நீங்கள்.

அந்த வசந்த தீவுகளிலிருந்து

என் காதலியின் புன்னகை

என் மனத்துக்குள்

மகரயாழ் மீட்டுகிறது.

மரணத்தையே வாழ்க்கையென

வாழ்ந்து வாழ்ந்து

மரத்துப்போனவர்களே!

உங்கள் மறுபக்கமே

அந்த ‘சாம் ராஜ்யம் ‘.

குவிந்துகிடக்கும்

அந்த கபாலங்களிலிருந்து

உங்கள் மதுக்கோப்பைகளை

தேடி எடுத்துக்கொள்ளுங்கள்.

பழைய ஏற்பாடானாலும் சாி.

அதன் முதுகு மீது

சவாாி செய்ய வந்த

புதிய ஏற்பாடானாலும் சாி.

கடவுளை சைத்தானும்

சைத்தானை கடவுளும்

‘கார்ட்டூன் வரைந்து ‘

விளையாடிக்கெண்டிருக்கிறார்கள்.

இந்த விளையாட்டுக்கு

நீங்களும்

உங்கள் தூாிகைகளைக்

கொண்டு வாருங்கள்.

கணிப்பொறிக்குள்ளும் கூட

ஈடன் தோட்டத்து

‘எலிப் ‘பொறி

இன்னும் புதைந்து கிடக்கிறது.

உள்ளீடு அற்ற மனிதர்களே!

உங்களுக்குள்ளே..நீங்கள்

உலா வந்து

உவகை கொள்ள

உற்சாகமூட்டும் பிருந்தாவனங்களை

பதியம் போட்டுக்கொள்ளுங்கள்.

வெறும் பொதிமாடுகளிலிருந்து

அர்த்தம் பொதிந்த மானிடனாய்

பாிணாமம் கொள்ளுங்கள்.

(தொடரும்)

Series Navigation

ருத்ரா

ருத்ரா

‘டி.எஸ். எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும்……. ‘ (1)

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue

ருத்ரா


‘ நாம் எல்லாம் வெறுங்கூடுகள்.
எதைக் கொண்டோ
திணிக்கப்பட்டவர்கள்.
எல்லாமாய் வீழ்ந்து
சாிந்து கிடக்கிறோம்.
அந்தோ !
தலைக்குள் எல்லாம்
வைக்கோல் கூளங்கள்.
நமது பேச்சுகள்
பட்டிமன்றங்கள்,கவியரங்கங்கள்…
எல்லாம் ஒருமித்து ஒலிக்கும்
முணகல்கள் கிசு கிசுக்கள்.
காய்ந்தபோன புல்வெளிமீது
மலட்டு சுவாசம் போல்..
நொறுங்கி சிதறிக்கிடக்கும்
கண்ணாடித்துண்டுகள் மீது
அங்குமிங்கும் ஓடும்
எலிகளைப் போல்…
புழுங்கிப்போன அறைக்குள்
பூட்டும் கதவுமாய்….நாம். ‘

‘ உருவம் உண்டு வடிவம் இல்லை..
பூச்சு உண்டு..வர்ணம் இல்லை…
வாதம் வந்தவனின் அசைவுகளைப்போல
வீச்சும் விசையும் இழந்த
அவன் நடையைப்போல
இங்கும் அங்குமாய் …நாம். ‘

‘ ஜனனம் மரணம் என்ற
மாமிசக்கயிற்றை
அறுத்து எறிந்தவர்கள்
அங்கே நின்றுகொண்டு
அப்பட்டமாய்
நம்மை பார்க்கிறார்கள்.
உள்ளே முறுக்கிய
ஆத்மா எனும்
காக்காய் வலிப்புகளைப்
பார்க்கிறார்கள்.
நிர்வாணமே
சட்டையாய்
ஜ ‘ன்ஸ் பேண்ட்ஸாய்
ஒரு நிர்வாணம் காட்டும்
இன்னொரு
நிர்வாணத்தைப் பார்க்கிறார்கள்.
சூன்யமே
ஆடையுடுத்திய
சூன்யத்தைப் பார்க்கிறார்கள்.
துடிப்பான ஆவிகளுக்குள்ளும்
வெந்துகிடக்கும்
வெறும் உணர்ச்சிப் பணியாரங்களாய்
நம்மைப் பார்க்கிறார்கள்.
வெறுங்கூடுகளாய்
கூளங்கள் அடைத்த
கூடுகளாய்
நம்மைப் பார்க்கிறார்கள்… ‘

* * * * * * *

எலியட்டின் ஏக்கம்
எங்கும் நெருப்புக்குழம்பாய்..
திடாரென்று
விழித்துக்கொண்ட
‘ எட்னா ‘ வாய்…
எங்கிருந்தோ
அந்த குழிவிழுந்த
கண்களிலிருந்து வரும்
அக்கினிக் கண்ணீராய்…
அனல் வீசுகிறது.
கனவு ‘லாவா ‘
ஊர்ந்து வருகின்றது.
மானிடர்களே !
உங்கள் வெறுங்கூடுகளுக்குள்
நிரப்பிக்கொள்ள
ஒன்றுமா கிடைக்கவில்லை ?
காதலின்
வானவில் கீற்றுகளைக் கொண்டு
அவற்றை மிடையுங்கள்.
காதல் எனும்
பொங்குமாங்கடலை
அங்கு
பொதிந்து வையுங்கள்.
அந்த வெற்றுக்கூடுகளை
காதல் துடிக்கும்
இதயங்களின்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
ஆக்குங்கள்.
மனிதா ! நீ வெறுமை அல்ல.
விரக்தியும் வேதனையும் கொண்டு
விருந்து படைக்கும்
பந்திக்கு காத்திருப்பதே
வாழ்க்கை..என்று
ஒடிந்து போய் விடாதே.
காதலிக்கே வாழ்க்கை என்று
கண்மூடி தவம்கிடந்த பின்
வாழ்க்கையைக் காதலி என்று
கண்களைத் திறக்கிறாய் நீ.
வாழ்க்கையே
உன் காதலி ஆன பிறகு
நீ சுமந்து கொண்டிருப்பது
வெறும் கூடு அல்ல.
அப்போது
வசந்தமே உன் தோள் மீதுதான்.
சம்பிரதாயங்களும்
சடங்குகளும்
வைத்து தைக்கப்பட்ட
சோளக்காட்டு பொம்மையல்ல நீ.
ஒரு இருட்டை நோக்கி
தொழுது
கூப்புவதற்காக மட்டுமே
படைக்கப்பட்டது அல்ல
உன் கைகள்.
வெளிச்சங்களால்
இந்த கூட்டை நிரப்பி வைத்திடு.
வேதனைகள் எல்லாம்
வர்ணங்களாய்
பிய்த்துக் கொண்டு
வெளிப்படும் வரை
மூடியிரு இந்தக் கூட்டுக்குள்.
வானத்து மூளியான
உச்சிகளைப் பார்த்து
உரக்க குரலெடுத்து
ஓங்காரம் செய்ய
நீவிக்கொண்டிரூக்கும்
பாம்பு நாக்குகள் அல்ல
உன் நாக்குகள்.
காதல் எனும் ஆவேசம்
கனல் மூட்டட்டும்.
இந்த கல்லோடு காதல் செய்.
பச்சைப் புல்லோடும் காதல் கொள்.
அருவியின்
நீர்த்துகிலோடு காதல் செய்.
இந்த வைரத்திவலைகளோடு
இரண்டறக் கலந்து விடு.
அவள்
எங்கோ
எப்பொழுதோ
உன்னைப்பார்த்து
சிாித்தது…
உன் கண்முன் வருகிறது.
நட்சத்திரங்களையெல்லாம்
பொடி செய்து
தூவுகிறது.
சிாிப்பலை தந்த ஓசையின்
அந்தப் பரல்களோடு
படுத்துக்கொள்.
சிலம்பு நினைவுகள்
உடைந்து சிதறட்டும்.
இப்போது…நீ
வெறுங்கூடு அல்ல.
அவள் சிாிப்போசையின்
குமிழிகள் தோறும்
பிரபஞ்சங்களின்
கருப்பை கிழிந்து வரும்
நெருப்பின் பிரவாகம் இது.
கனவுகள் விறைத்து
கெட்டித்த
கனபாிமானங்களின்
கூடு நீ.
வீறு கொள்..மனிதா !
வெறுங்கூடு அல்ல நீ.

(தொடரும்)

Series Navigation

ருத்ரா

ருத்ரா