முக்கோணத்தின் மூன்று முனைகள்

This entry is part [part not set] of 14 in the series 20010318_Issue

விக்ரமாதித்யன்


பேசிக்கொள்ள
ஆசைப்படுகின்றன

கண்களில்
கசிகிறது உப்புநீர்

மனசில் கனக்கிறது
மாயச்சுமை

வார்த்தைகள்
நாவின் நுனியிலேயே தங்கிவிடுகின்றன

உதடுகள்
ஒழுங்கற்று நெரிபடுகின்றன

ஒன்றையொன்று
நின்று நினைத்துப்பார்க்க

என்றேனும் ஒருநாள்
எல்லாமும் சொல்லிவிட

முடிவெடுத்திருக்கின்றன முக்கோணத்தின்
மூன்று முனைகள்

***

கிரகயுத்தம் கவிதைத்தொகுப்பிலிருந்து

Series Navigation

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்