நிழல்களில் வாழுகின்றோம்
திலகபாமா – சிவகாசி
மாறி வரும்
நகரத்து வயல் வெளியில்
மரங்களெல்லாம்
களைகளாய்,
வீடு கட்டி வாழ்வை
விாித்து கொள்ள எண்ணி
கூடுகட்டி குடும்பம் நடத்தும்
கூட்டுப் பறவைகளை மறந்தபடி
வெட்டிய மரத்துண்டுகளில்
காலை நேரக்கணங்களிலிவை
கூட்டிய காணங்களும்
துண்டாடப்பட்டபடி
கானக் குயில்களின் இசையில்
கண்விழித்ததை விட்டு
கனரக வாகனங்களின் இரைச்சலில்
கனவு தொலைந்தபடி
அழைப்பு மணியோசையிலும்
அதிகாலை எழுப்பும் மணியோசையிலும்
குயிலின் கீதத்தை
கானப்பறவைகளின் இன்னிசையை
உயிரற்ற ‘செல் ‘களினால்
உயிர்ப்பித்தபடி
நிஜங்களைத் தொலத்து விட்டு
நிழல்களில் வாழ்ந்தபடி ? ?
- நதிக்கரையில்
- கணினிக்கட்டுரைகள் 13 – இணையத்தில் இயங்குபக்கங்களை(Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Progra
- Rest in Peace
- நிழல்களில் வாழுகின்றோம்
- நான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல
- இந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடாத கரம்:
- மார்க்ஸீயம், முதலாளித்துவம் இந்தியாவின் எதிர்காலம் (1941)
- பிரம்மாண்டம்
- தமிழும் மென்கலனும் – ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது-8