மதம்

This entry is part [part not set] of 9 in the series 20001022_Issue

ராமசிங் சாகல்


எத்தனையோ முறை அறைகூவிச் சொல்லிவிட்டான்

எனக்கு எந்த மதமும் கிடையாதென்று

கிராமத்து மக்கள் யாவரும்

நியமம் தவறாதவன் அவன் என்றனர்

ஆனால் எப்பொழுது அவன்

தலைப்பாகை கட்டிக்கொண்டு சென்றாலும்

அதை அவிழ்த்துவிட்டுப் போனாலும்

அவன் ஏதாவது ஒரு மதத்துடன்

இணைக்கப்பட்டுவிடுகிறான்

அக்கணமே அவன் நினைக்கிறான்

இனித் தலையே இல்லாமல் செல்வதுதான் சரி

**

இந்தியிலிருந்து மொழிபெயர்ப்பு: சரஸ்வதி ராம்நாத்

Series Navigation

ராமசிங் சாகல்

ராமசிங் சாகல்