அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
மலர்மன்னன்

திருலோக சீதாராம் தேர்த்லிலும் போட்டியிட்டதுண்டு. அப்போதெல்லாம் தெருவில் பாரதி பாடல்களைப் பாடிக்கொண்டே செல்வதுதான் வாக்காளர்களிடம் ஆதரவு கோரி அவர் மேற்கொண்ட நூதன பிரசாரமுறை!
திருலோக சீதாராமின் இலக்கியத் தேர்ச்சிக்கு ஓர் அததாட்சியாக நிற்கிறது, இலக்கியப் படகு என்கிற அவரது தொகுப்பு. சென்னை கலைஞன் பதிப்பகம் பல ஆண்டுகளுக்கு இதனை வெளியிட்டது. தேர்ந்த இலக்கிய ரசிககரான கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, ஒரு வியாபாரியாக இல்லாமல் ரசிகராக இருந்து புத்தகங்களை வெளியிட்டவர். அவரது அலுவலகம் பல படைப்பாளிகள் கூடிப்பேசும் கூடமாகவே திகழும். அங்கு பல்முறை திருலோக சீதாராமுடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவர் பாரதி பாடல்களைப் பாடியும் கேட்டிருக்கிறேன்.
கவிதைகள் பல இயற்றியுள்ள சீதாராம், அண்ணாவைப் பாராட்டியும் ஒரு நீண்ட கவிதை பாடியிருக்கிறார். ‘சிவாஜி’யில் அவர் எழுதிய அக்கவிதை, பின்னர் 1948-ல் அண்ணாவைப் பாராட்டுவதற்கென்று வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பிலும் இடம் பெற்றது.
அண்ணா 1948-ல் திராவிடர் கழகத்தில்தான், அதன் பொதுச் செயலாளராக, 39 வயது முதிர் இளைஞராக இருந்தார். எனினும் அப்போதே அவர் எந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினரின் அபிமானத்திற்கும் உரியவராய் இருந்தார் என்பதற்கு திருலோக சீதாராம் எழுதிய இக்கவிதையே சாட்சி:
பேச்சுக்கு ஒரு கலைஞன்
-திருலோக சீதாராம்-
எந்தாய் நறு நாட்டின்
இன்னருமைச் சோதரர்கள்
நொந்தே யழிந்திருக்கும்
நோவிதனுக்கா யிரங்கிச்
சிந்தாத தேன் வார்க்கும்
சிந்தனைகள் செந்தமிழின்
கந்த மடை தான் திறந்து
சாய்த்திடுவான் காணீரோ!
பேச்சுக்கு ஒருகலைஞன்
பேசுங்கால் அதிரவரும்
ஏச்சுக்குப் பணிவறியா
எண்ணத்து ஒரு சிற்பி
விந்தையவன் உள்ளத்தே
விளைந்துவரும் எண்ணங்கள்
வந்தணையச் சொற்களெலாம்
வழிபார்த்து நின்றிருக்கும்
சொல்லின் சிலம்பசைத்தாற்
சோதி மணிப்பரல் சிதறும்
சொல்லிற்கருவுயிர்க்கும்
செம்பொருளிற் சொல்சிறக்கும்
பேச்சிற் கனலடிக்கும்
பெய்யுமழை காலிரங்கும்
வீச்சொன்றில் அறியாமை
விழும் அலறித்துடிக்கும்
கூச்சத்தாற் புது நினைவு
கோணலெனக் காண்பாரும்
பேச்சுக் குழலிசையிற்
பேதுறுவார் அரவெனவே
காணுகின்ற காட்சிகளில்
கருதும் பொருள்களிலே
பேறமுயர் சிந்தனைகள்
பேசவரும் சித்திரங்கள்
அளந்து வரும் சொற்கள்
ஆழ்ந்த பொருள், இருளூடே
பிளந்துவரும் மின்வெட்டுப்
பேச்சுக் கொரு புலவன்
அண்ணாவென்றே இளைஞர்
அன்போடரு கணைவார்
பண்புடைய சொல் ஒன்றாற்
பச்சையன்பு பாய்ச்சிடுவார்
சிந்தனையே மாந்தர்க்குச்
சிறப்பருள்வ தாதலினால்
சிந்தனையும் சொல்திறனும்
சேர்க்குமவர்ப் போற்றுகிறோம்.
இக்கவிதையில் குறிப்பாகப் பின் வரும் வரிகளைக் கவனிக்க வேண்டும்:
‘கூச்சத்தாற் புது நினைவு
கோணலெனக் காண்பாரும்
பேச்சுக் குழலிசையிற்
பேதுறுவார் அரவெனவே.’
அண்ணாவின் கொள்கைகளை ஏற்காதவர்களும் அவரது இனிய பேச்சாற்றலைக் கேட்கையில் மகுடிக்குக் கட்டுப்படும் நாகமென மயங்குவர் என்கிறார், கவிஞர்!
+++++
மலர் மன்னன்
- இசட் பிளஸ்
- எரியாத முலைகள்
- மறுபடியும் அண்ணா
- கோகெய்ன்
- உவமையும் பொருளும் – 1
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- காதுள்ளோர் கேட்கட்டும்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- வனச்சிறுவனின் அந்தகன்
- கடிவாளம்
- சும்மாக் கிடந்த சங்கு
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- குற்றமிழைத்தவனொருவன்
- மேட்ரிக்ஸ் தமிழில்
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- பார்சலோனா -3
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- தந்தையும் தாயுமான அதிபர்.
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)