ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் – தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்


22. வேத வழி ஹிந்து தத்வங்களைப்பற்றி, எல்லாவித கேள்விகளையும் வேத வழி தெரிந்தவர்களிடம் எழுப்பலாம், அக்கேள்வி கேட்பவரை “கடவுள் நிந்தனை செய்பவர்” (BLASPHEMER) எனக் கொள்வதில்லை மேலாக, அப்படிக் கேள்விகளை எழுப்புபவர் நோக்கத்திலும் சந்தேகம் கொள்வதும் கிடையாது.
வேத இலக்கியங்களில், இறைவனைப் பற்றிய உண்மைகளும், பலதரப்பட்ட, பல்லாயிரக் கணக்கான ஆன்மீகக் கேள்விகளும், அவைகளுக்கான விளக்கங்களுடன் பதில்களும், (வியாக்யானங்கள்) அடங்கியுள்ளன. அதில் உள்ளவைகளை நிரந்தரமாக, மனதில் இறுத்தி, வைத்துக் கொள்ள மாணவர்கள் விழையும் போது, இயற்கையாகவே, கணக்கற்ற கேள்விகள் மனதில் நிச்சயமாக எழும். அக்கேள்விகளின் ஆழம், தரம், ஆகியவைகளை சீர்தூக்கிப் பார்க்கும்போது, எவ்வளவு தூரம் மாணவர்கள் உண்மையாக ஆன்மீகச் சிந்தனையில் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளனர் என, ஆசிரியருக்கும் புலனாகிறது. ஆகவே, கேள்வி கேட்பது மூலமாகத்தான் மாணவர்களுக்கு, ஆன்மீகத்தில் நல்லறிவு பெறுவதற்கும், அவ்வப்போது மனதில் எழும் ஐயப்பாடுகளை ஆங்கங்கே களைந்து கொள்ளவும் மிக எளிதாகிறது. வேத வழியில், முன்னரே, எழுப்பப் பட்ட கேள்விகளைவிட புதிதாக கேள்விகள், இனி கேட்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், கணக்கற்ற கேள்விகள் முன்னரே எழுப்பப் பட்டு, அதற்கான விடைகளும் தயாராகவே இருக்கின்றன. எனினும், ஏதாவது ஒரு சீடன் வித்தியாசமான கேள்வி ஒன்றை கேட்டுவிட்டால், ஆசிரியர், அச் சீடனை புறக்கணிக்காமல், மிக மெச்சி, அதற்கான பதிலை விளக்கிக் கூறுவது வழக்கம். கேள்வி கேட்டதற்காக அம்மாணவர்கள் மெச்சப்பட வேண்டுமே தவிர, ஏனைய ஒரு மதம் போல, அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்துவது நல்ல தரமுமல்ல, ஆகையால் இது வேத வழியும் அல்ல..
இஸ்லாமியத்தில், அம்மதத்தைப் பற்றி கேள்வி கேட்பதே புறக்கணிக்கப் பட வேண்டிய செயல் (taboo or improper) என கொள்ளப் படுகிறது. ஏனெனில், அச் சமயத்தில் கேள்வி கேட்பதென்பது, சமய தத்துவங்களை நம்பாது, அச்சமயத்தையே, சவாலுக்கு அறைகூவுவதாக இஸ்லாமிய நூல்களே கூறுகின்றன. ஆகவே கேள்வி கேட்கபதையே இச்சமயம் தடை செய்கிறது. மேலும் அச்சமயத்தைப் பற்றி எவ்விதத்திலும், கேள்வி எழுப்பினாலும், ’அல்லாஹ்’க்கும் முகம்மதுவுக்கும் செய்யப்பட்ட அவமரியாதை, அதாவது, தெய்வ நிந்தனை*** (blasphemy) எனக் கொள்ளப்பட்டு, கடுந்தண்டனைக்கு உட்பட வேண்டும்.
[[[ “You are always correct, so long you agree with me” எனும் முகத்திலடிற்போலக் கொள்கைதான். அதிகம் சொல்வானேன். முகம்மதுவின் உருவப்படத்தை ’குரானில் சித்தரிக்கப் பட்ட விவரங்களைக் கொண்டு’ ஓவியத்தில் நேர்வழியாகக் கற்பனையில், நல்ல முறையில், (அதாவது, அசிங்கமாகவோ அல்லது அம்மணமாகவே அல்லாமல்) வரைவதற்குக் கூட முஸ்லிம்கள் இஸ்லாமிய புனித நூல்களில் கூறியவாறு ஒப்பமாட்டார்கள். அப்படி மீறினால், கொலை விழும். மேலை நாட்டில் கொலையும் நடந்திருக்கிறது. இது ஏன்? ஆனால் இந்தியாவில் மக்பூல் பிஃதா ஹுஸ்ஸைன் (MF Hussein), ஹிந்துக்கள் தொழும் கடவுள்களை, அம்மணமாக கேலி உருவத்தில் வரைந்ததற்கு, இம்மதத்தினர்களோடு, மதசார்பற்றவர் எனும் ’சாய்ந்தால் சாயும் செம்மறியாட்டுக் கூட்டம்’, ’ஹூஸ்ஸைன் சாகேபு’க்காகப் பரிந்து ”ஒ” என்று கண்ணீர் விடுகின்றனர். முகம்மதுவின் உருவப்படத்தை ஏன் வரையக்கூடாது என்ற காரணத்தை, கூறத்தான் நினைந்தேன். ஆனால், இங்கு நான் கூறவில்லை;………..]]].
இந்த நிலை ஏன் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது என ஆராயும் போது, இதற்குக் காரணம், அவர்களுக்கு இஸ்லாமயத்தில் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையே முதல் தகுதியாகவும், கடைசித் தகுதியாகவும் கொள்ளப் படுகிறது. இதனால்தான், இஸ்லாமிய மாணவர்களுக்கு இஸ்லாமிய ஆன்மீகத்தில் உள்ளது உள்ளபடி இருக்கும் கோட்பாடுகளைப் பற்றி மனதில் ஐயப்பாடில்லாது, இஸ்லாமிய உட்பொருட்களின் நோக்கம் யாது எனும் அறிவை பெற முடிவதில்லை. ஆகையால், இதில் உள்ள சட்ட திட்டங்களைப்பற்றி ஏன், எதற்கு என முழுதும், சீர்தூக்கிப் பார்க்க இயலாத சூழ்நிலையும் அவர்களுகேற்பட்டு விடுகிறது. தங்கள் லட்சியத்தில் குவிமையமாகக் கொண்ட இச் சமய மாணவர் பலருக்கு, தங்கள் மனத்தில் எழும் பல நிரடான ஆன்மீகக் கேள்விகளுக்குப் பதில்களை எதிர்பார்த்து, அச்சமயத்தால் சந்தேகங்களைக் களைய தக்க சூழ்நிலை இல்லாத காரணத்தால், ஐயப்பாடுகளைத் துலக்க, மற்ற மத விவரங்களில் தாங்கள் தேடும் பதில்கள் உள்ளதா என தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. அப்படித் தேடிபோகும்போது தான், இம்மாணவர்களுக்குத் தாங்கள் பிறந்த மதத்திலுள்ள குற்றம், குறைகளைகளெல்லாம், மற்ற மதங்களோடு ஒப்பீடு செய்கையில் நன்கு புலனாகி விடுறது. செயற்கையில்லாத ஐயமற்ற தெளிந்த இந்த புது அறிவே, அவர்களைத் தாங்கள் சார்ந்த பூர்வீக மதத்தை விட்டொழித்து, புது மதத்திலும் சேர்ந்து விடுகிட வேண்டுமென எண்ணத்தையும் உண்டாக்கி விடுகிறது. இதனால், தற்காலத்தில், இஸ்லாமிய நாஸ்திகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இதற்கு பல இணய கட்டுரைகள் நன்கு உதவி செய்கின்றன.
அப்படித்தான் பிறப்பாலும், வளர்ப்பாலும் கிருஸ்தவனான நான், கிருஸ்தவத்தில், என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் ஏங்கித் தவித்த போது, ஹிந்து சமய (சனாதன தர்ம) வேத நன்நெறியில் மாணவனாக ஆனது, அவ்விறைவனின் பேரருளே என்றே கருதி, அவருக்கு நித்தம் நன்றி கூறுகிறேன்.
[[[***இஸ்லாமிய கடவுள் நிந்தனைக்கு (blasphemy) குரானிலிருந்து மேற்கோள்கள்: 002.088; 004.155; 005.017; 005.064; 005.068; 005.073; 006.019; 009.074; 011.009; 014.028; 039.008; (இங்குள்ள மேற்கோள்களில் உள்ள வசனங்களை அப்படியே உள்ளது உள்ளபடி கொடுக்க இயலததால், மன்னிக்கவும். ஆதலால், விருப்பமுள்ளவர்கள், கீழ்க்கண்ட இணயத்தில் கண்டு தெரிந்து கொள்ளவும் —– www.usc.edu/dept/MSA/quran/ ]]]
ஹிந்து சமயத்தில், கேள்வி கேட்பதென்பது, ஆன்மீக இயல் வளர்ச்சியில் ஏற்படும் வழக்கமான, வலுவான சந்தேகங்களை அவ்வப்போது களைந்து, சமயத்தைப் பற்றித் தெளிந்த அறிவை அடைவதற்குச் செய்யும் செயல், என நேர்மையாக எடுத்துக் கொள்ளப்படும். ஹிந்து சமயம் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவில்லை. வேத வழி ஆன்மீகத்தில் தங்களுடைய ஆசிரியரை, கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டதற்கும், அவரும் எவ்வாறு பொறுமையுடன் விளக்கங்களை விவரமாகக் கூறி, மனதில் ஏற்பட்ட ஆன்மீக மாசுகளை, களைந்து அதனால் தெளிவு பெற வேத வழியிலேயே செய்கிறார் என்பதை பற்றி ஒரு இலக்கிய உதாரணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இறைவனே ஆசிரியராக வந்து, வகுப்பை நடத்தி, மாணவர்களுக்குப் பிரம்மதத்வத்தை போதிக்கிறார்.
கீழ்க் கூறிய வேத வழி இலக்கியப் பாடலில், ஆன்மீகத்தில் நல்லறிவைப் போதிக்க, நுழைபுலம் வாய்ந்த கடவுளே இளம் ஆசிரியராகவும், மாணவர்கள் வயதான முனிவர்களாகவும், ஆல மரத்தடியில் வகுப்பெனக் கூடி, பிரம்ம தத்துவங்களில், கேட்கப்பட்ட ஐயப்பாடுகளுக்கு எவ்வாறு சந்தேகத்துக்கிட மில்லாதவாறு மிக நேர்த்தியாக, மௌனமாக, நுட்பமாக, வினைத் திறனுடன் (subtle) முற்றிலும் களையப்பட்டன எனவும் இப்பாவில் மிக அழகாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. (ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய தட்சிணாமூர்த்தி அஷ்டகம்).

चित्रं वटतरोर्मूले वृद्धा: शिष्या: गुरु: युवा । गुरोस्तु मौन व्याख्यानं शिष्यास्तु छिन्न संशया:॥ சித்ரம் வடதரோர் மூலே விருத்தா: சிஷ்யா: குரு:யுவா | குரோ: ஸ்து மௌனவ்வாக்யானம் சிஷ்யா: ஸ்து ச்சின்ன சம்சயா: ||

அடுத்ததாக: ஆசிரியர்-மாணாக்கர் கேள்வி-பதில் எனும் கருத்தை விளக்க:
ஆசிரியர் ஸ்ரீ ராம கிருஷ்ணர் – மாணவர் விவேகானந்தர், இத் கேள்வி பதில் தொடரைப் தேடிப்படித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்ததாக; ஆசிரியர்: ஸ்ரீ ரமண மகரிஷி, மாணாக்கர்கள் – ஏராளம், இதில் சிலர்: சிவப்பிரகாசம் பிள்ளை, நடேச முதலியார், கணபதி சாஸ்த்ரி, FM Humphreys, Paul Brunton முதலியோர்.
ஒருதடவை, ஸ்ரீ ரமண மகரிஷிக்கும் ஒரு பழுத்த முஸ்லிமுக்கும் இடையே கடவுளுக்கு உருவமுண்டா இல்லையா எனும் மிக நேரிடையாக நடந்த, சுவாரசியமான உரையாடலை இங்கு தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன்.

(Based on ‘Ramana Maharshi’ and the path of self-knowledge by Arthur Osborne-Jaico publication – page 121 & 122)

முஸ்லிம்: கடவுளுக்கு உருவமுண்டா?

ரமணர்: அப்படி யார் சொன்னது?

முஸ்லிம்: கடவுளுக்கு உருவமில்லை என்றால், அவரை ஏன் ‘சிலை’ வடிவில் தொழ வேண்டும்?

ரமணர்: (நீங்களே இதற்கு பதில் சொல்லப் போகிறீர்கள் எனப் பொருள்பட, புன் முறுவலுடன்) சரி, அக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். சுலபமான கேள்விகளுடன் முதலில் ஆரம்பிப்போம். உங்களுக்கு உருவமுண்டா? சொல்லுங்கள்.

முஸ்லிம்: (நகைத்து, தன்னிடம் பின்னர் ஏதோ கேட்கப் போகிறார் என்று மட்டும் தீர்மானித்து,
முன் எச்சரிக்கையுடன்; Anticipating further intricate questions) ஆம். நிச்சயமாக எனக்கு உருவமுண்டு; நீங்களே என்னைப்பர்த்துப் பேசுகிறீர்களே! நானும் உங்களுடன் இவ்வுருவத்துடனே பேசுகிறேனே; ஆனால், நான் கடவுளல்ல.

ரமணர்: ஆக நீங்கள் தான், சதையாலும் எலும்பாலும், ரத்தத்தாலும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்கப் பட்ட இந்த உடைக்குள் இருக்கும் உடல், எனச் சொல்கிறீர்கள் இல்லையா?

முஸ்லிம்: ஆம், இதை நான் நிரந்தரமாகக் கூற முடியும். இவ்வுடல் என் உடைமை தான்.

ரமணர்:’நீங்கள்’ என்பவர் சுய உணர்வு இல்லாது ஆழ்ந்து தூங்கும் போதும் கூட ” இந்த உடலில்
உள்ள நீங்களே தான் இந்த உடல்” எனத் தீர்மானமாகக் கூறமுடியுமா?

முஸ்லிம்: இதெலென்ன சந்தேகம்! தூங்கும் போது இதே உருவில் தூங்கினேன், தூங்கும் வரை இவ்வுடலில் நான் தான் இருந்தேன் எனவும் நானறிவேன். தூங்கி எழுந்த பின், அதே உடலில் நான் இப்போதும் உள்ளேன் எனவும் எனக்குத் தெரிகிறது. ஆக தூங்கும் போதும் இவ்வுடல் என்னிடம் தானே இருந்திருக்க வேண்டும். எங்கும் போய் விட வில்லையே!

ரமணர்: சரி, ”நீங்கள்” ‘நீங்களேதான்’ எனும் உணர்வுடன் இருக்கிறீர்கள் என இப்போது உங்களால்
சொல்ல முடிகிறது. நீங்கள் இறந்த பின்னும் ”நீங்கள்” ‘நீங்களேதான்’ எனும் உணர்வுடன் இருப்பீர்கள் என அப்போதும் உங்களால் சொல்ல முடியுமா?

முஸ்லிம்: (ஒரு கணம் யோசித்து) அச்சமயம் நான் இறந்துவிட்டதாக கருதப்பட்டு, பிணமான என் உடலை மக்கள் புதைக்கப் போகிறார்கள்.

ரமணர்: இவ்வுடல் உங்களுடையது. அதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இது உங்கள் தனிப்பட்ட சொத்து என நீங்கள் சற்று முன் தான் சொன்னீர்கள். இப்படி இருக்கும்போது, உங்கள் உடலைப் புதைப்பதை எதிர்த்து, “, இவ்வுடல் என்னுடையது. நான் உடுத்தி இருக்கும் உடை என்னுடையது, என்னுடன் கூட இருக்கும் குழந்தைகள், என் குழந்தைகள். இவர் என் மனைவி. நான் வாழும் வீடு என் சொந்த செலவில் நானே கட்டியது. நான் இவர்களுடனேயே இங்கேயே இருந்து விடுகிறேன். என் உடலை அப்படியே விட்டு சென்று விடுங்கள், இதை எடுத்துப் புதைக்க வேண்டாம்” எனும் உங்களுக்குள்ள உரிமையை மற்ற நேரங்களில் நிலை நாட்டிக் கொள்வது போல ஏன் இறந்த பின்னும் நிலை நாட்டிக்கொள்ள முடியாதா?”

முஸ்லிம்: (உடல் சார்ந்த அணுகுமுறை தவறு என மெதுவாக உணர்ந்து, சற்று திகைத்து), என்னைப் புதைக்க வேண்டாம் என, பிணமான நான் எப்படி எதிர்த்துச் சொல்ல முடியும்? ஆக, என்னை இது வரை பேச வைத்தது வேறு: அதாவது, என் உடலை இதுவரை ஆட்டி வைத்துச் சொல்ல வைத்த ஏதோ ஒன்று இறந்த பின்னர், அதைக் காணவில்லை, ஆதலால் தான் பிணமான என்னால் பேச முடியாது. என்னை இதுவரை ஆட்டி ஓட வைத்தது ஏதோ ஓர் உள்-அமைப்பு, எனத் தெரிகிறது. ஆக என் உடல் உரிமையைப் பற்றி, என் எல்லையையும் இப்போது உணர்ந்து கொண்டேன்.

ரமணர்: (புன் முறுவலுடன், இப்போது விளக்கத்தையும் அளிக்கிறார்):
இதுவரை உங்கள் உடலை ’நீங்கள்’தான் அது என நினைத்திருந்தீர்கள். அதுதான் உங்களுடைய அடிப்படை அறியாமை. பின்னர் உடல் அமைப்பில் ஏதோ உங்கள் ’உள்’ உள்ளது எனவும் பின்னர் சொன்னீகிறீர்கள். உங்களைப் போல ’உருவ வழிபாடு’ சச்சரவில் ஈடுபடும் எல்லோருடைய கேள்விகளுக்கு, முன் சொன்ன உங்கள் அறியாமை தான் ஆரம்ப கட்டம். எதுவரை நீங்கள் இந்த அறியாமையை முற்றிலும் அகற்றாத வரை, அதாவது உங்கள் உடலுக்குள் உங்களை ஆட்டி ஓட வைக்கும் ஒரு ’உள்’ அமைப்பு உள்ளது, அது யார்? என்ன? ஏன்? என்பதைப் பற்றி முழுதும் அறியாதவரை அநாவசியமாகப் பகட்டு ஆரவார நூலறிவைக் (pedantry) காட்டுவதில் எந்த பயனுமில்லை. நான் சொன்னதில் பொதிந்த உண்மையைப் புரிந்து கொண்டவுடன், நீங்களே என்னைத் தேடியோ, அல்லது இதைப்பற்றி, மீண்டும் எவரிடமும் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் நிச்சயமாக உங்களுக்கு என்றும் ஏற்படாது. நல்லது உண்டாகட்டும். போய் வாருங்கள்.

என மறை பொருளான கடவுளைப்பற்றி, ரத்தினச் சுருக்கமாக தன் இயல்பான பண்பினால், விளக்கினார். (”Some times, Ramana Maharshi’s answers given were terse and cryptic, sometimes full and explanatory but always adopted to the questioner and always marvelously apt”]]].
23. ஹிந்து சமயத்திலில்லாது எச்சமயத்திலும் இல்லை. இது மதிப்பிட முடியாதது.
இன்று உலகில் காணப்படும் அநேக மதங்கள் கலாச்சாரங்கள், அடிப்படையில் நன்நெறிகள் சம்பந்தமான சாதாரண ஒழுங்கு முறைகளைப் பற்றியே கூற இயலும். இருப்பினும் வன்முறைக்கு ஊக்கமளித்து, ஆதரித்து, அவைகளை செயலாற்றவும் ஆணையிடும் சமயங்களிலிருந்து நன்நெறிகளை எதிர்பார்ப்பது மடமையல்லவா! இவ்விபரீத வழிபாடு முறை இயக்கத்தை மதம் என ஒப்புக்கொள்வதே, மற்ற மதங்களுக்கு செய்யும் இழுக்கல்லவா? அநேக ஆன்மீக சமயங்கள் சிறந்த அறிவைப் புகட்ட ஒரு நிலைக்கப்பால், இயலாத நிலையில் தான் உள்ளன. இது அம்மதத்தைச் சார்ந்த பல கூர்மதி படைத்த சீடர்களுக்கு அதிருப்தியையும் உண்டாக்கி விடுகிறது. இஸ்லாமில் ஆன்மீக சம்பந்த ஐயங்களை துலக்க, அவைகளைப் பற்றி விசாரிக்க விரும்புவதையே ஒரு மாபெரும் குற்றம், எனக் கொள்ளப்பட்டு, கொடும் தண்டனைக்கும் உரியது என மேல் பத்தியில் கண்டோம். உலகில் உள்ள மற்ற மதங்கள், மிக நெரடான, மிக உயர்ந்த படி நிலை எனக் கருதப்படும் ஆன்மீக அறிவுத்திறனைப் பற்றி போதிக்க முற்றிலும் இயலாமல் உள்ளன. ஆனால் வேத வழி எந்த நெரடான, மிக உயர்ந்த படி நிலை எனக் கருதப்படும் ஆன்மீக அறிவுத்திறனைப் பற்றி மிகத் துல்யமாக, சுலபமாக போதிக்க முடிகிறது (Complex spiritual queries with skill and ease), ஆகவே ஒரு உதாரணத்திற்காக, ’மதிப்பு எண்’ (marks) எனும் முறையில் ஒப்பிடும் போது, வேத வழி நன்நெறி பல கோடிகளுக்கு சமமானது, அதே நேரத்தில், சில மதங்கள் ஆயிரம், அல்லது சில ஆயிரங்களுக்கு சமமாகவும் தெரிகிறது. ஆனால் இஸ்லாம் எனும் வன்முறை இயக்கம், ஒன்றுக்கும் இரண்டுக்கும் சில்லரைகளுக்காகக் கவலைப்படும் மிக சர்வ சாதாரணம் போல எளிதில் காட்டிக் கொள்கிறது. இவ்வாறு ஒப்பிடுவதகுக் காரணம், ஆன்மீகத்தில் வேத வழியில், பிரச்சனைகளை எளிதில் புரிந்து கொண்டு விளக்கவும், சிக்கலான பிரச்சனைகளும் மிகத் தெளிவான விடைகளை அளிக்க முடிகிறது. ஹிந்து மூதாதையர் முன்னறிவுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகில பிரபஞ்ச அடிப்படையில் ஆரம்பித்து வைத்த ‘சனாதன தர்மமே’ எல்லாவிதத்திலும் மிகத் தெளிவாக சிந்தித்து, அவைகளுக்கு விடைகளை எளிதில் தருகிறது.
இங்கு வேத வழியில் நம்மைக் காத்துக்கொள்ள நம் அருகாமையிலேயே கிடைக்கும் மததை விடுத்து, மற்ற சமயங்களைப் பற்றி நினைப்பது கூட, ”கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு, நெய்க்கு அலைவதற்கு சமமாகும்” ஏனெனில், ஹிந்து மதமே நம்மை ஏற்கனவே காத்துக் கொண்டிருக்கிறது. ஹிந்துமதமே நமக்கு ஆன்மீக நல்லறிவுத் திறனில் மிக உயர்ந்த உணர்வு நிலையை அடைய வழி செய்கிறது. இவைகளை சுலபமாக நிரந்தரமாக அடைவதற்கு நாம் வேத வழி இருக்கும் போது; மனம் தடுமாற்றமுற வைக்கும், கரடு முரடான வன்முறையை ஊக்குவித்து-ஆதரிக்கும் வழியில் சென்று, ஆங்கே கவனம் செலுத்துவது ’கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ போன்ற மடமையாகும். வேத இலக்கியங்களிலும், வேத ஒழுங்கு முறைகளிலும் ஆழ்ந்து கவனம் செலுத்தினாலே போதும். இதை விடுத்து, மற்ற சமயங்களில் கவனம் செலுத்துவது தரமல்ல.
ஹிந்து வேத வழி தவிர, மற்ற சமயங்கள் ஆன்மீகத்தை இரண்டாவதாகவும், ஆன்மீகத்தைச் சாராத, லோகாயத, பொருளுலகத்தைச் சார்ந்தவைகளில் முதலாவதாகப் பேணி, அவைகளை ஆன்மீகம் என்ற போர்வையைப் போர்த்தி தங்களுக்கும் ஒரு குழாமை ஏற்படுத்திக் கொண்டு, ஆன்மீகத்தில் உண்மையாகப் பற்றுடையவர்களை வேண்டுமென்றே துன்புறுத்து கிறார்கள். இப்படி செய்தால் தானே அவர்களுக்கு பொருளுலகத்தில் என்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்க முடியும்!
24. கடவுளைப்பற்றி நன்கு அறிந்துகொண்டு, அவரை எப்போதும் பற்றிக் கொள்ள, வேத செயல் முறை மிக சுலபமாக நம்மை இட்டுச் செல்கிறது.
இதில் கண்டுள்ள ’அன்பின்’ விவரம், ஒவ்வொருவருடைய சொந்த அபிப்பிராயத்தைப் பொருத்தது என பொதுவாகச் சொல்லி விடலாம். ஆனால், ‘அன்பு’, ஒரு முக்கியமான சொல். நாம் இதையே சற்று கூறுபடுத்தி ஆய்ந்தால், வேதவழி எவ்வளவு சுலபமான ஒழுங்கு முறை என்றும், இவ்வழியைப் பின்பற்றுவது மிக எளிது எனவும் புலப்படும்.
‘அன்பு’ எனும் இயற்கை உணர்வு, நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. இதற்காகவே ஆழ்மனதில் என்றுமே ஏங்குகிறோம். இறைவனிடம் நம் அன்பைக் காட்டுவது, நம்மை அவருடன் இணைத்துக் கொள்ளுதல் என்பதேயாம். இது, ஆன்மீக முன்னேற்றத்தின் முதல் படி. எல்லா சமயங்களும் தான் இறைவனிடம் அன்பு செலுத்துதல் என்பதை விவரித்தாலும், வேதவழி, ’அன்பை’ ஒர் தனிப்பட்ட பண்பெனவும், இதை கடவுளிடம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள உதவும் ஒரு மார்க்கம் என சொல்லிக்கொடுத்து உதவுவதோடு மட்டுமல்லாமல், அந்த அன்பு உறவை நிரந்தரமாக, தக்க வைத்துக் கொள்ளவும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.
பரந்தாமனுடைய அநேக செய்கைகளை வேத வழி இலக்கியங்கள் விளக்குவது போல வேறெங்கும் காணமுடியாது. இத்துடன் இல்லாது, அதற்கு, அவருடைய நண்பர்கள், உறவினர், தனிச்சிறப்பு, உடுப்பு, தோற்றம், இவைகளைத் தவிர மற்ற வேண்டிய விளக்கங்களுடன் கூறுகின்றன. இதெல்லாம் கூறுவதற்குக் காரணம், நம்மை அந்த பரம்பொருளிடம் நம்மை ஈடுபட வைக்கவும், நம்மை அவரிடமும் அன்புணர்வால், பாசத்தால் பிணைத்து வசீகரிக்கவும் செய்து விடுகிறது. இதையெல்லாம் செயல் முறையில் நிறைவேற்றிக் கொள்ள, வேத வழி மிக சுலபமாக, ’பக்தியோகம்’ எனபதை நமக்களிக்கிறது. ’பக்தியோகம்’ என்பதைப் பற்றி மிக எளிதான சிறு பொருள் விளக்கம் : ”இறைவனிடம், பக்தியாகிற விழிப்பு நிலையை நமக்குள், உண்டாக்கிக் கொள்ளுதல்” என்பதாகும். அதாவது, பக்தி இல்லாத உறக்க நிலையிலிருந்து, பக்தி செலுத்தும் விழிப்பு மன நிலைக்கு நம்மை எழுப்பி, ஈடுபடுத்திக் கொள்ளுதல். இதில், முதல் கட்டமாக, இறைவனை முழுமனதுடன் ஒருமுனைப்படுத்தி இறைவன் பெயர்களை மனனம் செய்தல் என்பதாகும். உதாரணமாக ‘1000’ பெயர் என சொல்லப்படும், ”சஹஸ்ர நாமம்”. மகா பாரதத்தில், பீஷ்மர் நமக்காக, சொல்லச் சொல்ல ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டுக்கொண்ட, ”விஷ்ணு சஹஸ்ரநாமம்” (ஹரி நாமம்) என்பதைச் சொல்லலாம். (பகவத் கீதையோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனால், அர்ஜுனன் மூலம் நமக்காகச் சொன்னது) அநேக யோகிகளால், வேத இலக்கியங்களில் காணப்படும் போதனைகளில், இறைவனை நோக்கி நேரிடையாக, நேர்மையாக, இயற்கையாக, நம் தொடர்ச்சியான அன்பு செலுத்தும் மனப்பாங்கை அடைவதென்பதையும் வலியுறுத்துகிறது. மேலும், இது இறைவனை அடைவதற்கு ஒரு சாதனம் என்பது மட்டுமல்லாமல், அதே இறைவனை இறுதியாக அடையும் ஒரே வழி எனவும் கூறுகிறது. இவ்வாறு இறைவனிடம் செலுத்தும் அன்பினால், நமக்கு இறைவனைப்பற்றி எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள நமக்கு ஒரு இயக்கு விசையாக, (தூண்டுகோலாக) ஆகி, இதே, இறைவனை நோக்கி சுலபமாக, உறுதியாக, உண்மையாக ஆழ்ந்த தியானம் செய்யும் முறைமையுமாக ஆகிவிடுகிறது. இது தான் நம் மன-மாசுகளை அகற்றி, தூய்மையாக்கி, மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பெனும் சுழலில் (पुनरपि जननं, पुनरपि मरणं) (’’புனரபி ஜனனம், புனரபி மரணம்’’, from the cycles of repeated birth and death) என பரிதவிக்காமல், நம் ஆன்மீக வீட்டில் அதாவது (‘திருப்பாவை’ முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை, ஸ்ரீ ஆண்டாள் காட்டும் வழியில்) பறையில், இறையுடன் நிரந்தரமாக
””குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப்பறை கொள்வான், அன்று காண், கோவிந்தா
எற்றெற்றும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று—ஏலோர் எம்பாவய்””
என்றபடி, இறையோடு உற்றோமேயாகி, அவருக்கே ஆட்செய்ய, ‘இருக்கச்’ செய்கிறது. இதனால், ஆன்மீக உலகத்தில் தான், மெய்யான வரையற்ற நம் இயற்கையான ஆன்மீக அன்பு, தெளிவாய் உணரும் வகையில், நிரந்தரமாக இருந்து விடுகிறது. அங்கு இறைவன் அருளால் குறைவொன்றுமில்லை. எதிலும், எங்கும், எப்போதும் எல்லாமே நிரந்தரமாக நிறைந்துள்ளது.
25. ஆன்மீக வேத வழி தத்துவங்கள், சுயநலமில்லாமல், உலகளாவிய எல்லா நிலையிலும் மாறா மெய்மையுடன் மனித இனம் முழுமைக்கும் என்றும் எல்லாம் பயன் பட வேண்டும் (ஒருவருக்கு மற்றொருவரால் எவ்விதத்திலும் எத்தீங்கும் ஏற்பட்டு விடக் கூடாது) எனும் கருத்தை உருவாக்கி விளக்குகிறது.
முன்னர் விளக்கிக் கூறியவாறு, வேத வழி தத்துவங்கள், உலகளாவியது. இது ஒரு இனத்துக்காகக் கூறப்பட்டதல்ல, அல்லது எந்த இனங்களுக்கும் எதிராகவோ எவரையும் தூண்டிவிட்டு, செயல்பாட்டில் ஈடுபடவும் செய்வதில்லை.
இறைவனால், படைக்கப்பட்ட ஒவ்வொரு பிறவியும், இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமெனவும், அப்பிறவி ஒவ்வொன்றும் (மகா) பிரபஞ்சத்தையே நுண்ணளவில் காட்டும் ஆவண உருவத்துள் (அச்சுக்குள்) இருக்கும் மற்றொரு சின்னஞ்சிறு உருவமெனக் (அச்சு எனக்) கூறுகிறது. (every individual is a part of the universe and in microcosm represents the macrocosm) இன்னொரு உற்சாக மூட்டும் தகவல்: உலகளாவிய பிரபஞ்ச அமைப்பே நம் உடலில் நுண்ணளவாகக் குடி கொண்டுள்ளது, என ஆழ்ந்து, ஆராய்ந்து, படித்துத் தெளிந்த பின், வான சாஸ்த்திர வல்லுனர்கள் ஒருமனதாக அழுத்தந்திருத்தமாக வற்புறுத்திக் கூறுகிறார்கள். இதன் பின்னணியில், எந்த மானிடரும், தன்னைச் சுற்றியுள்ள, குடும்பம், சமூகம், நாடு, உலகம், ஆகிய இவைகளெல்லாம், பிரபஞ்சத்திலிருந்து தனித் தனியாகப் பிறித்து வைத்துக் கொண்டு பேச இயலாது. கூடவும் கூடாது. இதை மற்றொரு விதத்தில் கூறினால், அநேக உருவளவைச் சார்ந்த மனித குலத்திலுள்ள ஒவ்வொருவருமே, பல விதங்களில், அநேக உருவளவைக்கொண்ட அநேக பிரபஞ்சங்களில் உள்ளவைகளின் உருவளவைக் கொண்டவர்களே!! (he or she is a multidimensional being who is connected in many ways to the multidimensional universe)
உலகளாவிய மன உணர்வு நிலை எனும் பொதுக் கருத்தை மனதில் ஏற்படுத்திக் கொண்ட பிறகு நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொருவருக்கும், உறவினர்களே என நமக்குப் புலப்பட்டு விடும். ஆகையால், நமது செயல்கள் யாவும் நம்மைச் சூழ்ந்தவர்களையும், ஏன்! தாவரங்களையும் மிருகங்களையும் பாதிக்கும். ஆகவே, உயிருள்ள எந்த உளதாம் பொருட்கள்களை (living entities) காவற்பணிப் பொறுப்பாளர்களாக நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் எந்த காரியங்களால், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ, நம்மை அறியாமலும் கூட, எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது, ஏனெனில், எதற்கும் எவருக்கும், ஏற்படும் எந்த பாதிப்பும், கட்டாயமாக ஏதாவதொரு விதத்தில் நம்மீதே பிரதிபலிக்கக் கூடியவை. இம்மாதிரியான உணர்வு நிலை நமக்குள் ஏற்பட, ’பூமி’ என்ற கிரகத்தில் உள்ள மாந்தர், சிறு உயிர்கள், சொத்து உள்பட எல்லாவற்றையும், காக்கும் பாதுகாவலர்களாக நாம் அரவணைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று மேலை நாடுகளிலும், (அதனால் இந்தியாவிலும்) நுகர்வோர் நலன் பாதுகாப்பு (consumerism) எனும் எண்ணம் ஊடுருவி விட்டது. இதன் (உண்மைப்) பொருள்: முதலில் நம் நலனுக்கும் நம் மகிழ்ச்சிக்கும் தான் முதலிடம் என்பதாகும். ஆனால் வேத சமூகத்தில், இக்கருத்தையே மற்றொரு விதத்தில் கண்ணுற்றனர். அதாவது, ஏதாவது ஒரு சமூகத்தில் உள்ள ஒருவராலும் தங்கள் செயகைகளால், மற்றவர்களுக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்படுத்த முடியும். பிறர் தேவைகளை தன் தேவைகளுக்கு முன்னர் மனதில் கொண்டால், இந்த கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், இது இந்நாட்களில் எங்குமே இது காணக் கிடைக்காது. காரணம் என்ன, என யோசித்தால், மக்கள், வேத வழியிலிருந்து வழுவி, வெறும் மேலை நாட்டு சுய நல நுகர்வோர் நலன் பாதுகாப்பில் இறங்கி, நல்வழிகளை மறந்து விட்டோம். பிறர் நலனில் எல்லோரும் கவனம் கொண்டால் நுகர்வோர் நலன் சங்கம் முதலியவைகளுக்குத் தேவையே வந்திருக்க முடியாது.

[[[விளம்பரத்தால் எந்த உபயோகமற்ற பொருளையும், உயர்வாக விலையை நிர்ணயித்து, அதன்படி விற்று காசாக்க முடியும். அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ளோரே கையூட்டு வாங்கிக் கொண்டு, உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக கொள்ளை லாபம் அடித்துக் கொள்ள எந்த கேடுகெட்ட செயலிலும் இறங்க தயாராக ஆகியும் விடுகின்றனர். இதனால் பொருட்களுக்கு விலையும் உயர்ந்து விடுகிறது. அதையும் பிறர் மீது சுமர்த்தியும் விடுகின்றனர். இது எல்லாவற்றிக்கும் காரணம், சுய நலம். சுய நலம், பிறர் நலனில் அக்கறை யின்மையே ஆகும். இது வேத வழியே அல்ல]]]

26. மற்றவருடைய கவலைகளைக் களைய உளமார்ந்த கவனமும், அவர்களுடைய நலனில் உண்மையான ஈடுபாடு கொண்டு அக்கறையுடன் இருக்க ஹிந்து வேத வழி ஊக்கமளிக்கிறது.

இயற்கையை நன்கு புரிந்து கொண்டதாலும், அஃதேபோல, மற்ற உயிரினங்களில் உள்ள இயற்கை நிலையும் மேற்கூறிய பத்திகளில் கூறியவாறு அறிந்துகொண்டதாலும், உயிரினங்களுக்குள் உள்ள உறவை, இன்னும் பழுதற்று நிலை நிறுத்திக்கொள்ள, எல்லா உயிரினங்களில் மிக்க அக்கறை கொண்டொழுக சந்தர்ப்பம் உண்டாகிறது. இச்செயல்களால், இவ்வுலகத்தில் லோகாயதப் பொருளால் நமக்குக் கிடைக்கும் பலன்கள், நம்மைச் சூழ்ந்துள்ளவர்களுக்கும் இதே பலன்களும் உண்டாகின்றன. உதாரணமாக: பசியால் யாரும் வாடக்கூடாது; எல்லோரும் நன்கு உடையணிய வேண்டும், எல்லோருக்கும் வசிக்க நிம்மதியான இடம் வேண்டும் என்பன. இதையே சற்று விரிவு படுத்திக் கூறினால், இது, நம் ஆத்மாவையும் சேர்த்துத் தான் எனக் கூறவேண்டும். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகிலுள்ளோர் எல்லோரும் நன்கு வாழ வேண்டும் என உள்ளத்தால் நினைந்தாலும், முடிவில் செயல்பாட்டில் நம் ஒவ்வொருவரால் நடத்திக்காட்ட முடியுமா, எனும் ஐயப்பாடும் கூடவே நம் மனதில் எழுகிறது. அதாவது எத்தனை சொன்னாலும், விரும்பினாலும், நாம் சாதாரண மனிதர்கள் தானே!. நமக்கு இப் பொருளுலகில் நமக்கு வேண்டியவைகளால், நாமே ஏற்படுத்திக் கொள்ளும் அநேக இன்னல்களுக்கும் ஈடுகொடுத்து அவைகளுக்கு வேண்டியவை களையும் நல்லதாகச் செய்தாக வேண்டும். ஆகையால், நாம் ஆன்மீகத்தில் முன்னேறம் அடைந்தால், இம்மாதிரியான இடர்களைக் களையமுடியும். நமக்கேற்படும் ஆன்மீகத்தின் முன்னேற்றத்தால், பொருளுலகம், அருளுலகம் என்பதன் உட்பொருள் உணர முடிகிறது. இதனால், பொருளுலக உடல் நிலையற்றது என உண்மையை அறிந்தபின், அதாவது இவ்வுடல் அநித்தியமானது, வினை, வினைப்பயன், பிறப்பு இறப்பு, எனும் எண்ணம் நம் மனதில் உதித்துத் தெளிந்த பிறகு, நாம் மற்றவருக்கு செய்யும் நன்மைக் கடமைகளைச் செவ்வனே செய்ய முயல்கிறோம். இப்படி ஒவ்வொருவரும் நம் சமூகத்துக்கு ஆற்றும் நற்பணியால், பொதுப் பிரச்சனைகளை எளிதாக தீர்த்துக் கொள்ள இயற்கையாகவே முடியும். இதே தான் இப்பத்தியின் (26வது) தலைப்பில் உள்ளது.: மற்றவருடைய கவலைகளைக் களைய உளமார்ந்த கவனமும், அவர்களுடைய நலனில் உண்மையான ஈடுபாடு கொண்டு அக்கறையுடன் இருக்க ஹிந்து வேத வழி ஊக்கமளிக்கிறது.
அடுத்ததாக ஹிந்து-வேதவழியில் ‘தீண்டாமை’ இருப்பதாக, விதவைகளுக்கு அவமரியாதை செய்யப் படுவதாகவும், ஏழ்மை எங்கும் தாண்டவமாடுவதாக விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன. இது கட்டாயமாக வேத வழியினால் ஏற்பட்டதல்ல, ஏனென்னில், இப்பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணமே வேதவழியைப் பின்பற்றாதது தான். சுருக்கமாகச் சொன்னால், ஜாதி முறை என்பதே, பிடிவாதமாக காரிய காரணமின்றித் தவறான வழியில் வேத வழியைக் குடை சாய்ப்பதற்கும், உண்மை வழியிலிருந்து விலக்கி மக்களை வர்ணாச்ரம முறையை சுற்றி வளைத்து உபயோகப் படுதப்பட்டது. வர்ணம் என்பது வேத ஒழுங்கு முறையில் அவரவர்கள் அறிவாற்றலின் படித்தரத்துக்கும், நுண்ணறிவின் மேன்மைக்குத் தக்கவாறும், வேலையில் திறமை, விருப்பத்திற்கேற்றவாறு, ஒவ்வொரு வேலைக்கும், சமூக சேவை புரியவும், பரிந்து கூறப்பட்டது. ஆக, ஒருவர், ஆழ்ந்து ஆய்வுசெய்து படிப்பதிலும், ஆன்மீக சமய நூல்களில் நாட்டம் கொண்டவர்களை பிராம்மணர் என பயிற்சி அளிக்கப்பட்டது; வியாபாரத்தில் ஈடுபாடுள்ளவரை வைசியர் என பயிற்சியளிக்கப்பட்டது. குழந்தைப்பருவத் திலிருந்து, எவரெவருக்கு குறைந்த அறிவுத்திறமும், உடலால் ஆகும் வேலையில், நாட்டமுள்ளதோ அவர்களை சூத்ரர் என அத் தொழிலில் பயிற்சியளைத்து, அத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அவரவர்களுடைய சுய கௌரவத்திற்கு எங்கும் குந்தகம் விளைவிக்க வில்லை, மாறாக பாதுகாக்கப்பட்டது, எந்த வகுப்பில் பயிற்சி பெற்றாலும், அதிலுள்ளவர்களுக்கு, மற்ற பிரிவில் உள்ளவர்களுக்குள்ளவர்கள் போல சம உரிமை அளிக்கப்பட்டு, கௌரவத்துடனும் நடத்தப்படவேண்டுமெனவும், ஏற்றத்தாழ்வு என்பதற்கே இடமில்லாமல் இருக்கத்தான் வேத வழிகள் வகுத்துள்ளன.
ஆனால், ஜாதி முறை என் நாம் இன்று காண்பது, இவ்வாறு உள்ளது.
• ஒருவர் ’பிராமண’க் குடும்பத்தில் பிறந்துவிட்டால், அவரை பிராமிணர் என ஒப்புக்கொள்ளப் படுகிறது.
• ஒருவர் ‘சூத்ர’க் குடும்பத்தில் பிறந்து விட்டால், அவரை ’சூத்ர’ என பெயரிடப் பட்டு, அங்கேயே நிலை மாறாது தொடர்ந்து நீடித்திருக்க வைக்கப் படுகிறது.
இவ்வாறாக, வருடக் கணக்கில் நாளாக ஆக, மேற்குடி ஜாதிக்காரர்கள் தங்கள் மனப் பான்மையில் கீழ் ஜாதிக்காரர்களைக் காட்டிலும், ஆள்வகையில் மற்றவருடன் நெருங்கிப் பழக விருப்பமில்லது தங்களை தனியாக விலக்கிக் கொண்டும், தங்கள் இடத்தில் புதிய உருப்பினர்களை சேர்த்துக் கொள்ள விருப்பமில்லாது இருந்தும் விட்டனர். இதற்கு வேத இலக்கியங்களான பகவத் கீதையிலும் பாகவத புராணத்திலும், “ ஒவ்வொருவரும் மடமையுடன் பிறந்தவர்கள்” எனவும்; இச்செய்கையை கொஞ்சம் கூட நியாயமென நிரூபிக்க முடியாது என மிகத் தெள்ளத் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. முதலில் ஒவ்வொருவரும் ‘பிறக்கும்போது ‘சூத்ர’ ராக பிறந்து, பிறகு அறிவாற்றலின் படித்தரத்துக்கும், நுண்ணறிவின் மேன்மைக்குத் தக்கவாறும், வேலையில் திறமை, விருப்பத்திற்கேற்றவாறு, நிணயிக்கப்படுமெனவே உள்ளது. இதற்குப் பின்னர் தான் ஒவ்வொரு வரும் எந்தெந்த பிரிவில் இருக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட வேண்டும். இதையே வேறு விதமாகச் சொன்னால், நீங்கள் ஒரு மருத்துவர் குடும்பத்தில், பிறந்தவுடன் மருத்துவராக ஆவதில்லை, உங்களுக்கு தேர்வாய்வு செய்யப்படுகிறது பின்னர், பயிற்சி அளிக்கப்படுகிறது, பிறகுதான் மருத்துவராக ஆகத் தகுதி பெறுகிறீகள். கிறுக்குக் குறுக்கு வழிகளில் கிடைக்க வாய்ப்பில்லை. டாக்டருக்குப் பிறந்து அத் தொழிலில் தேர்வு பெறாவிட்டால், நீங்கள் மற்றொரு தொழிலை மேற்கொள்ள வேண்டி வரும். தகுதி பெறாமல் மருத்துவராக இயலுமா? அஃதே போல, பிராமிணருக்குப் பிறந்தாலும், அவரே, புகைத்தலிலும், குடி, புல்லாலுண்டு, பறத்தையரைத் நாடி நாட்களை வீணாக்கினால், அவரையும் பிராமிணர் எனக் கூற முடியுமா? வர்ணாச்ரம ஒழுங்கு முறையின் கீழ், ஒருவர் கீழ் ஜாதி குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவரே நற்பண்புகளையும், மூளைத்திறனில் மேம்பட்டு பலர் அறியத் தெரிந்தால், அவரை கீழ் ஜாதியில் நிரந்தரமாகத் தள்ளிவிட இயலாது. அப்பேற்பட்டவர்களுக்கு மற்ற திறனில் தகுந்த பயிற்சி அளித்து முனேற்றவேண்டும். இம்மாதிரி பிரச்சனைகளை நன்கு தீர்த்துவைக்க, வேத வழி நன்நெறி இலக்கியங்களில் ஆழ்ந்து படித்துத் தெளிதல் அவசியம். இப்படி படித்துத் தெளிந்தபின்னர், நம் ஒவ்வொருவரின் ஆன்மீக படிநிலை மேலோங்கி, வேத வழிகளில் உள்ள நன்மைகளை தங்களுத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் முடியும்.. இது வெறும் சொல்லல்ல. இப்படித் தெளிந்து விட்டால், நாம் போலியில்லாத மெய்யான, நம்பத்தகுந்த வழிதான் வேத வழி என நன்கு புரிந்து கொள்ள முடியும். இதற்கு மாறாக, வெளியிலிருந்து கத்திக் காட்டுக் கூசல்போட்டு ஆர்பாட்டம் நடத்துவதால், எங்கும் குழப்பமும், வீண் வம்பும் தான் விளைவாக முடியும். வேத வழி நிர்மாணிக்க உதவுகிறதே தவிர சமூகத்தை அழித்து, மன பேதங்களை உண்டாக்கி, அதனால் ஒரு சிலருக்கு மட்டுமே பலனை அளித்துக் கொள்ளும் வழியல்லவே அல்ல. வேத வழியால், நம் ஒவ்வொருவரையும் ஆன்மீக உறவினராக்கி, வீணாகக் கண்ணில் காணும் பொருளாகிற வேற்றுமைகளை உண்டாக்காமல், நாம் எல்லோரிடமும் அன்புடன், அக்கறையுடன், கூட்டுறவுடன் வாழ வழி வகுத்துக்கொள்ளவும் முடியும்.
[[[இங்கு ஒரு வேத வழியை எவ்வாறு இறைவனே எல்லோருக்கும் இதன் பொருட்களை ஐயமின்றி செயல்படச் செய்தார் என்பதை கூற வேண்டும். வேத இலக்கிய உதாரணம்:
திருப்பாணாழ்வார்: உறையூரில் பாணர்குலத் சேர்ந்த ஒருவரால், நெற்கதிர்களிடையே, கண்டெடுக்கப்பட்டார். மகப் பேறற்ற பாணர் குலத் தம்பதிகள், மாலவனே தங்கள் மேல், கருணைகொண்டு மனம் மகிழ்ந்து அக்குழந்தையை அளித்துள்ளார் என சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். இவர் யாழ் மீட்டி வாசிப்பதில் இயற்கையாகவே இணையற்று விளங்கினார். தென் திருக் காவிரியின் கரையில் நின்றுகொண்டு, திருவரங்கன் கோயில் நோக்கித் தொழுதவாறு கேட்பவர் ”ஊனுருக, உள்ளமும் உயிருமுருக, உலகத்து உயிகளெல்லாம் உணர்விழக்கும் வண்ணம் ஊறிடும் உன்னதத் தேன் வாரிதியாக யாழிசைத்து ஏழிசைப் பாடல்களை ஏராளமாகப் பாடி”, (ஸ்ரீ காச்யபர்) தன்னையும், பிறரையும் பரவசக் களிப்பில் ஆழ்த்தினார்.
ஒரு நாள், பாணாழ்வார் திருவரங்கன் புகழைப் பாடித் தன்னை மறந்த நிலையில் உள்ளபோது அங்கு திருக்காவிரி படித்துறையில் நீராட வந்த அரங்கன் சன்னதி அர்ச்சகர் லோக சாரங்க முனிவர், பாணாழ்வாரை விலகிப் போகச் சொன்னார். ஆழ்வாரோ, திருவரங்கனையே நினைந்து, மெய் மறந்த நிலையில் இருந்ததால், லோக சாரங்கர் வந்தது; தன்னைத் தள்ளிப் போகச் சொன்னது; முதலியவைகளைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. ஆகையால் லோக சாரங்கர் அங்கு கிடைத்த சிறு கல்லை எடுத்து ஆழ்வாரை நோக்கி எறிந்தார். அது அவர் நெற்றியில் தவறிப் பட்டுவிட்டது. உடனே பாணாழ்வார் திடுக்கிட்டு எழுந்த போது, திருக்கோவிலில் குடி கொண்ட திருவரங்கன் நெற்றில், குருதி பெருக்கெடுத்து ஓடியது. தன் திருத்தொண்டனுக்கிழைத்த சிறு கடுஞ்செயல், திருவரங்கனுக்கிழைத்த கடுஞ்செயலன்றோ! அரங்கனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அரங்கனையே இந்நிகழ்ச்சி அத்தனைத் துயருற வைத்துவிட்டது. அன்று இரவு, இறைவன் லோக சாரங்க முனிவர் கனவில் தோன்றி, பாணாழ்வாருக்குத் தீங்கிழைத்த கொடுமைகாக, லோக சாரங்கர் தானே தன், தோளில் பாணாழ்வாரை தென் காவிரிக்கரை யிலிருந்து, அரங்கன் சன்னதிவரை சுமந்து வரவேண்டும் எனவும் ஆணையும் இட்டு, அப்படிச் செய்யும் வரை, தன் சன்னதிக் கதவைத் திறப்பதற்கில்லை என உள்தாழ்பபாள் இட்டுக் கொண்டு விட்டார். பாணர் குல ஆழ்வாரை லோக சாரங்கர் தன் தோளில் சுமந்துவரும் காட்சியை ஊர், உலகம் அறிய வேண்டுமென அரங்கனின் திருவுள்ளமன்றோ! அரங்கன் திருவுள்ளப்படி, அரங்கன் கோவில் அர்ச்சகரான முனிவர், பாணாழ்வாரைத் தன் தோளில் சுமந்து, திருவரங்கன் சன்னதியில் சகல தெய்வ மரியாதைகளுடன் கொணர்ந்தவுடன்தான் அரங்கன் சன்னதித் தாழ்ப்பாள் திறந்தது. பாணாழ்வாரைத் தன் சன்னதியில் காண வரும் வரை, திருவரங்கனும், தன் சன்னதியுள் துடித்துக் கொண்டுதான் இருந்தார். அரங்கன் திருமேனியை நேரில், இதுவரைக் கண்ணால் காணாத ஆழ்வார், அத் திருவரங்கனை பக்கலில் கண்ணாரக் கண்டவுடன் அவர் அழகில் அப்படியே சொக்கி, ‘அமலனாதிபிரான் எனும் தொடங்கும் அற்புத, பத்துப் பாசுரங்களில் வருணித்துப் பாடினார். பிறகு அரங்கனிடம் அடைக்கலம் (சரணாகதி) அடைந்து அவருடனே என்றும் உறைந்தும் விட்டார். பாணாழ்வார் அரங்கன் சன்னதியிலிருந்து வெளிவரவில்லை. அரங்கனே பாணாழ்வாரைத் தடுதாட்கொண்டு விட்டார்.
பாணாழ்வார் இயற்றிய பாசுரத்தில், முத்ற்பாசுரத்தையும் கடைசிப் பாசுரத்தையும் கீழே கொடுத்திருக்கிறேன்:
முதல் பாசுரம்:

” அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன், நிர்மலன், நீதி வானவன்,
நீள்மதில் அரங்கத்து அம்மான், திருக்
கமலபாதம், வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்னதே” (க)

கடைசிப் பாசுரம்:

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்னெய்
உண்ட வாயன், என் உள்ளம் கவர்ந்தானை,
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே””. (க0)

மேற்கூறியதுதான் வேத வழி.!!]]]

27. நாம் எல்லோரும் இறைவனிடம், தனிப்பட்ட முறையில், நேரிடையாக, சர்வ சுதந்திரமாகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் காண்பித்து, இதனை நிலை நாட்டவும் செய்கிறது.

இது ஒரு மிக முக்கிய விஷயமாகும். உலகில் மற்ற சமயங்களை எடுத்துக்கொண்டால், அவைகள் கடவுளை ‘சர்ச்’ மூலமாகவோ, அல்லது நிர்ணயிக்கப்பட, மரபு கொண்ட நிறுவனத்தின் மூலமாகத்தான் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்; வேறு வழிகளாலல்ல என அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றன. இப்படி செய்யாவிடில், அச்சமயத்தோர் மாற்றுவழியில் சென்றால், அவர்களைத் தங்கள் சமயத்திலிருந்து, தண்டனையாக, நிரந்தரமாக விலக்கிவைத்து (excommunicated or eternally damned), அருவருக்கத்தக்க மீள முடியாத நரகத்திற்குத் தள்ளப் படப்போவதாக சாபமிட்டு, அவர்கள் புகழையும் அழித்துவிடுறது. ஒப்பீடாக, வேத வழி ஒழுங்கு முறையில் சொல்வது: உலகிலுள்ள ஒவ்வொருவரும் இறைவனின் ஆன்மீக உறவினர்களே, ஆகவே அவருடன் நிரந்தரமாக, எல்லையற்று தொடர்புகொள்ளத் தக்கவர்களே எனத் தீர்மானமாகச் சொல்கிறது. இந்த தொடர்பை மீண்டும், தொடர்பில்லா-உறக்க நிலையிலிருந்து, தொடர்புள்ள-விழிப்பு நிலையைப்பெற எழுப்ப வேண்டுமெனக் கூறுகிறது. இந்த விழிப்பை ஏற்படுத்தத்தான் நிறுவனங்கள் உள்ளதே தவிர, அந்நிறுவனங்கள் மூலமாகத்தான் கடவுளிடம் தொடர்பு கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்க அல்ல என வேத பாடங்கள் அறிவிக்கின்றன. இறைவனிடம் செயலற்றுருக்கிற தொடர்பை, வேத வழி சமயத்தோர்களுக்கு, உதவி செய்ய, (பாடங்களாலும், போதனைகளாலும்) மீண்டும் உயிர்பெற வைக்க ஆன்மீக ஆசான்கள் உள்ளனரே தவிர, எதையும் நிர்ப்பந்திக்க இல்லை என சொல்கிறது. இத் தொடர்புக்கு மீண்டும் இயல்பிலும், தோற்றத்திலும் இளமையூட்டி, உள்ளுரம் பெறச் செய்ய, ஒவ்வொருவருடைய சொல்லிலும் செயலிலும் நேர்மையாக நிறைவேற்றிக்கொள்ள, அவ்வாசான்கள் சொல்லிக் கொடுக்கும் போதனிகளின்படி நடந்து காட்டுதலேயாகும். உதாரணமாக, ’சர்ச்’ நிறுவனங்களேதான், அல்லது ’போப்’ எனும் அதன் தலைவர்களே கடவுளிடம் தொடர்பு கொள்ளத் தகுதி பெற்றவர்கள், ஏனெனில், அவர்களுக்குத்தான கடவுளுடைய மூலாதார உண்மைகள் அறிந்து கொள்ள முடியும் எனவும்; ஆகையால் இவர்களிடமே இச்சமயத்தோர் நம்பி சார்ந்திருக்க வேண்டும் எனவும், ஆக இத் தலைவர்கள் இடும் எந்த கட்டளைகளும், இறைவன் சொல்லென அச்சயத்தோர் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பது வேத வழி அல்ல.

[[[ ’’ஆச்சார்யர்’’ என கொண்டாடப்படுவது ஏன்? ஏனெனில், அவரிடம் ”ஆசரணம்” = “நடத்தை” இருக்கிறது. எண்ணத்திலும், சொல்லிலிலும், செயலிலும் ஒன்றாகி நடந்துகொள்ளும் பண்புள்ளது. அதனால் தான் இப்பண்புள்ளவரை ”ஆச்சாரியர்” “ஆசிரியர் “எனச் சொல்கிறோம்]]].

உண்மையில், வேத வழி ஆச்சார்யர்கள், ஆசான்கள், மரபு சார்ந்த வழி வழியாக வந்த வேத வழி போதனைகளை ஹிந்து சமயதோருக்கு கல்வியூட்டுவதோடு மட்டுமல்லாமல், இவ்வழியில் நடப்பதால் விளையும் நன்மைகளை நிரூபித்து, (தங்கள் முன்னுதாரணமான நடத்தையால் நிரூபித்து), மற்றும் சமயத்தில் உள்ள இலக்கியங்களில் உள்ள சித்திபெற்றவர்களின் சரித்திர உண்மைகள், நற்பணிகள், செற்கள் முதவற்றைப் போதிக்கிறார்கள். இவர்களுக்கு வேறொரு உள்நோக்கமும் கிடையாது. இந்த மனநிலையை மரபு சார்ந்த வழியாகிற வேத வழி ஆசான்கள் நமக்குள் ஓர் விழிப்பை உண்டாக்குகிறார்கள். ஆம்! கடவுளுக்கும் நம் ஒவ்வொரு வருக்கும் நேரிடை உறவு உள்ளது; தொடர்புள்ளது இதில் எவரும் குறிக்கிட இயலாது என போதித்து, சீடர்களுக்காக கடவுளிடம் நம் மன நலனுக்காக உளமார எப்போதும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆகவேதான் தெய்வத்தின் குரல் இவ்வாசான்கள் குரலிலும் பிரதிபலிக்கிறது. ஆகையால் தான் அவ்விறைவனே அவரிடம் எக்கணமும் உறைந்துள்ளார் என மெய்ப்பொருள் உணர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

28. வேத வழி சாரம் இது தான்: ஹிந்து தத்துவங்கள், வாழ்க்கையின் உண்மைப் பொருள்களைக் (கருத்துகளைக்) காண வழி காண்பிக்கிறது

ஹிந்து வேத வழி தத்துவங்களை உங்கள் வாழ்க்கை-செயல்பாட்டில் நடத்திக்காட்டு வதோடு, இவைகளிலுள்ள கோட்பாடுகளின் படி வாழ்ந்தால், நீங்களே உங்கள் புலன்களால் அறிகிறவாறு, வெளிப்படையாகத் தெரியக்கூடிய மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் கண்ணாரக் காணமுடியும். இதே செயற்களங்களில், உங்கள் உள் ஆற்றலிலும் பிரதிபலிக்கும்.
உங்கள் ஆன்மீக அடையாளத்தை நீங்களே விழிப்படையச் செய்ய ஆரம்பித்து, அதனால் பரம்பொருளிடம் உங்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, இதனால், உங்களுக்கு மிகச் சுலபமான நிறைவமைதியுடன் (போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தென) மன மகிழ்ச்சியையும், மன அமைதியையும், அடைவீர்கள். உங்களுக்கே, நீங்கள் யார், எங்கிருந்து வந்தீர்கள், உங்கள் வாழ்க்கை நோக்கமென்ன என்பதில் தெளிவான உய்த்துணர்வையும் பெற முடியும். ஆகவே, எதற்காக இப்புவியில் உள்ளோம் எனவும், இப்பொருளுலகத்தில் என்னென்ன செய்ய முடியும் என செயலில் விஞ்சுமளவுக்கு, உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் இயலும். முன்னர் சின்னஞ்சிறு விஷயத்தையும் மிக உள்ளார்வம் மிக்க அக்கறையுடன் கண்காணித்தலால் உண்டான பின் விளைவுகளும் முன் மாதிரி உங்களை அதே பாணியில் பாதிக்காது. வாழ்க்கையில் எல்லா விஷயங்களைப் பற்றித் தெளிவான பார்வையுடன் காணவும், சிற்சில கானல் நீர்போல் உள்ளவைகள் காண்பீர்கள். (மேற்பரப்பில் மட்டுமே அருகிலுள்ளதுபோல காட்சியளிக்கும் – ’பிபீலிகா’ – पिपीलिका = கானல் நீர்), ஆகையால் உள்ளுணர்ச்சி வகையில் ஆழமற்றவைகள் இனி மிக முக்கியமாகத் தென்படாது.
மிக முக்கியமாக உலகில் நிரந்தரமாக உள்ள எல்லாவற்றிகும் உரிய, எல்லாவற்றையும் பாதிக்கிற, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எங்கும் எந்நிலையிலும் பல்வகைகளிலும் பயன்படுத்தக் கூடிய மனித இனம் முழுதுக்கும் ஏற்றதான சமயம், “சனாதன தர்மம்” எனும், ஹிந்து “வேத வழி நன்நெறியே” என உங்களுக்குப் புரியவைத்து, இயற்கையாகவே உங்களுள் உறைகிற அத்மாவை உறக்கத்திலிருந்து விழிப்படையச் செய்யும் நோக்கத்தோடு, அந்த ஆத்மாவே (இறைவனின் துகளே) உங்கள் பக்கலில் உள்ளதென தெரிவித்துவிடும். இதனால், உங்களுக்கும் ஆன்மீக அடையாடத்தையும் காட்டிவிடும். இறைவனிடம் உங்கள் நெருங்கிய உறவை புதிப்பிக்கச் செய்தும் விடும். அதாவது நீங்களே எவ்வாறு இறையின் அன்பை அறிந்து, வெளியில் காட்டி, அவ்விறைக்கே தொண்டு செய்யவும் இயலும்.

இதுதான் முக்கிய பகுதியான (உணர்ச்சிகளின் இருப்பிடமான) வேதவழியின், இதயம் போலாகும்.

(முற்றும்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி … கட்டுரை பற்றி

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

ஜடாயு


அன்புள்ள ஆசிரியருக்கு,

சில வாரங்களாக வரும் இந்த தொடர் கட்டுரையின் பாகங்களைப் படித்தேன்..

மூலக் கட்டுரையை எழுதிய ஸ்டீஃபன் நாப் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) பிரசாரகர். மேற்கத்தியராக இருந்தாலும் சம்பிரதாயமான இந்து மதத்தை தான் சார்ந்த இஸ்கான் பக்தி மார்க்கம் மூலம் புரிந்து கொண்டவர். தனது புரிதலை நூல்கள் மற்றும் இணையதளம் மூலம் தொடர்ந்து எடுத்துரைக்கவும் செய்பவர்.

அவரது நீண்ட கட்டுரையை சிறப்பாக சேஷாத்ரி ராஜகோபாலன் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார்.. பல இடங்களில் வாக்கியங்கள் நீளநீளமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக படிப்பதற்கு எளியதாக உள்ளது. அடைப்புக் குறிக்குள் ராஜகோபாலன் தரும் விரிவான விளக்கங்கள் மூலக்கட்டுரையை விடவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இதிகாச புராணங்களில் இருந்து அவர் தரும் உதாரணங்களும் அருமை.

அன்புடன்,
ஜடாயு

Series Navigation

ஜடாயு

ஜடாயு

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 5

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் – தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்


17. ’மதத்திற்காகப் புனிதப் போர்’ (HOLY WAR IN THE NAME OF RELIGION) (இஸ்லாமியத்தில் ’ஜிஹாத்’ = JIHAD; கிருஸ்தவத்தில் = CRUSADE), இஸ்லாமிய மதப் போரில் பங்கெடுக்கும் தியாகிகள் (MARTYRS) இவர்களுக்கு சுவர்க்க போக உத்திரவாதம் (GURANTEE), ஆகியவைகளை போலவோ, அல்லது இவைகளுக்கு ஒத்த பொருள் படைத்த எண்ணமோ, சொல்லோ, செயலோ, வேத வழியில் கிடையாது.
[[[Dr. N.S.ராஜாராம் எனும் உலகப் புகழ் பெற்ற பொறியியல் நிபுணர், பல பொறியியல் தொழில் துறைப் பட்டங்களுக்குப் பெருமை சேர்த்தவர், ex-NASA – முன்னாள் NASA விஞ்ஞானி. மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், கூறுவது:” கடவுள் பெயரைச் சொல்லி நடக்கும் இஸ்லாமிய ‘ஜிஹாத்’ பயங்கரவாதமே தான். மேலாக, இஸ்லாமிய சரித்திரமே ‘ஜிஹாதின்’ அட்டவணை தான்.” என்கிறார். ”Jihad is nothing but terrorism in the name of God and Islamic history is a catalog of Jihads”.– Dr. N.S.Rajaram]]]
இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளை வற்புறுத்திக் கூறி, முஸ்லிம்களைத் தவிர வேறு எல்லா சமயத்தவரையும் அழித்திட வேண்டுமென இஸ்லாமிய புனித நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி, இயல்பு கடந்த செருக்கு நிலையில், உச்சநிலைத் தீவிரவாதிகளை ஊக்குவித்து, உருவாக்கி, இக்கருத்தைச் செயல் படுத்த ’ஜிஹாத்’ எனும் கட்டாயப் போர்ப்பாணியும், அதன் தொடர்ச்சியாக, இம்மதப்போரில் பங்கெடுத்துக் கொண்டோ, அல்லது இதில் உயிர்துறந்த தியாகிகளுக்கு, இவர்கள் நூல்களில் உள்ளபடி, இஸ்லாமிய மதத்தின் பெயரால், சுவர்க்க போகம் கட்டாயம் உண்டென்று, இஸ்லாமிய மதமே உத்திரவாதத்தை அளிக்கிறது. அதே போல, ’புனிதம்’ ’அன்பு’ எனும் இரு அழகான சொற்களை எப்போதுமே உச்சரித்துக் கொண்டே, வாஸ்த்தவத்தில் அச்சொல்லுக்கு பொருள் மாறாக, நேர் முகமாகவோ அல்லது மறை முகமாகவோ, அல்லது அவர்கள் அதிகாரம் பெற்ற (இத்தாலிய) பிரதிநிதிகள் மூலமாகவோ, கிருஸ்தவர்கள், உலகெங்கும் மற்ற சமயங்களை திட்டமிட்டு அழிக்கும் ’புனிதப்போர்’ எனும் கிருஸ்தவப்பணியில் அந்த நாள் முதல் இந்த நாள் வரை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய ‘ஜிஹாத் (JIHAD)’ போன்றோ, கிருஸ்தவ புனிதப் போர் ’க்ரூஸேட்’ (CRUSADE) போன்ற சொல்லோ, எண்ணமோ, செயலோ, வேத வழி கலாச்சாரத்தில், கிடையவே கிடையாது.
[[[இத்தாலியில் தற்போது ’வாடிக’னில் உள்ள, போப், மற்ற மதத்தவரை மதமாற்றம் செய்யச் ஆணையிடும் போது உபயோகிக்கும் அகில உலகப் புகழ் பெற்ற சொல்-“Harvesting People”- மனிதர்களை ஏதோ பயிர் அறுவடை செய்வது போன்று பிதற்றுவதை, வேத வழியில் வந்தவர்கள் எந்நாளும் சொல்லமாட்டார்கள். ஆட்களை அறுவடை செய்வது தானே கிருஸ்தவப்பணி]]].
ஆன்மீக வாழ்க்கை என்பதே, மற்ற சமயங்களுடன் சண்டை சச்சரவு செய்து, அதன் விளைவாக எப்பாடுபட்டாவது, தங்கள் ஹிந்து – வேத வழிதான் ஒப்புயர்வற்றது என நிலை நாட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஹிந்துக்களுக்கு, என்றுமே இருந்ததில்லை. வேதவழிக்கு ‘தரக் குறியீட்டு முத்திரையாக’ (Hall mark) ஆன்மீகக் கருத்தான ’கடவுளை அணுகுதல்’ என்பது இருப்பதால், இக்கருத்துப் படிவமே, அதற்கு வேண்டிய மன வலிமையையும், பாதுகாப்பையும் அளித்து விடுகிறது. அதன் பின்னணியில் தான், ஹிந்து சமயம் மற்ற சமயங்களையும், மதிக்கிறது, சூதுவாது புரிந்தாலாவது, எல்லாவிதத்திலும் தங்கள் சமயத்தைச் சார்தோர் எண்ணிக்கையைக் கூட்டிக் காண்பிக்க, எக்காலத்திலும் ஹிந்து சமயத்திறகுத் தேவை இருந்ததில்லை. ஏன், யாருக்கு, எதற்காக, நிரூபித்துக் காட்ட வேண்டும்? நிரூபிக்க வேண்டு மென்றால், தனக்குத்தானே நிரூபித்துக்கொள்ள வேண்டுமே தவிர, வேறு எவருக்கும் நிரூபித்துக் காட்டத் தேவையில்லை என ஹிந்துக்கள் கருதுவார்கள். 1400 வருடங்களாக, இவ்விரு மதங்களால் ஹிந்து-இந்தியா, இவ்வளவு சீரழிந்துக் கிடப்பதைப் பற்றிக் காரணங்களை அறிய, எவ்விதத்திலும் குறைபாடற்ற, நடந்தது நடந்தபடி எழுதப்பட்ட சரியான சரித்திரத்தை கருத்தூன்றிப் படித்த அனுபவத்தாலும், மேலாக, மேற்கூறியவாறு படித்தறிந்தவைகளை உறுதிப் படுத்தத் தங்கள் கண்ணுக்கு நேராக இன்று அன்றாடம் காணும் இஸ்லாமிய ’ஜிஹாத்’ மேலும் தக்கியா = புனித இஸ்லாமிய ஏமாற்றல் = வாய்ப்பந்தல்களாலும், மேலும் கிருஸ்தவப் பகட்டு, திறன்படைத்த வாணிகத் தந்திர வாய்ந்த போலி நடத்தைகள், புனைத் திறம் வாய்ந்த அவர்கள் திட்டங்களையும் கண்டு, தெளிந்த சிந்தனையுடன் தீர்மானமாக எடுத்த முடிவுதான் இது. இதனால் தான் ஹிந்துக்களுடைய மூதாதையர் முன்னறிவுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகில பிரபஞ்ச அடிப்படையில் (இந்தியாவிலுள்ள ஹிந்துக்களுக்கு மட்டுமன்றி) ஆரம்பித்து வைத்த ‘சனாதன தர்மமே’ தங்களுக்கு எக்காலத்திலும், மிக உகந்தது, என மனதளவிலும், சொந்த (மேற்கூறிய) அனுபவங்களாலும் அறிந்து, தெளிந்து, இக்கருத்தில், திட நம்பிக்கை கொண்டவர்கள்.
ஒவ்வொரு மானிடரும், “தான் யார்? நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் தொடர்பென்ன? இப்பிரபஞ்சத்தின் உள்நோக்கம் தான் என்ன?” என்றெழும் மன வேட்கைகளுக்கு தக்க விடைகளை முற்றிலும் அறிய, ஆன்மீக செயல் முறை தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது. இவ்வாறு ஆன்மீக வழியில் முன்னேறுவதில் எவரொருவர் உண்மையாக ஈடுபடுகிறாரோ, அவருக்கு, மற்ற மதங்களை அழித்திடவும், புனிதப் போரில் பங்கேற்க வேண்டுமென ஒரு எண்ணமுமே மனதில் அறவே தோன்றாது. இதனால், மதத்தின் பெயரால், போரில் பங்கு கொண்டோ அல்லது ஆங்கே தன் உயிர்த் தியாகம் செய்து சுவர்கம் புக வேண்டும் எனும் மனக் கருத்து ஏற்பட வாய்ப்பில்லை.
[[[இன்னும் ஒரு படி மேலாக, பிரதிப்பலனை எதிர்பார்த்து எக்காரியத்திலும் இறங்காதே என வேத வழியே இக்கருத்தை வழிவழியாக சொல்லிக்கொடுத்துச் செயல்படுத்துவதால், இக்கருத்து ஹிந்துக்கள் ரத்ததிலும் தன்னியக்கமாகக் கலந்துள்ளது. வேத வழியில், ”வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய். வினைப்பயனில் ஒருபொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவனாக ஆகிவிடாதே. ஆனால், வெறுமனே இருப்பதில் எக்காரணங் கொண்டும் விருப்புக் கொள்ளாதே” – ப.கீதை – 2:47)
कर्मणि एव अध्कार: ते मा फलेषु कदाचन ।
मा कर्म फल हेतु: भू: मा ते सङग: अस्तु अकर्मणि
கர்மணி ஏவ அதிகார: தே மா பலேஷு கதாசன । மா கர்ம பல ஹேது: பூ: மாதே ஸங்க: அஸ்து அகர்மணி || – ப.கீதை – 2:47 (மேற்கூறிய சம்ஸ்கிருத ஸ்லோகத்தைப் படிப்பதற்கும், அதன் அர்த்தங்களை நன்கு, சுலபமாகப் புரிந்து கொள்ளவும் பதங்களைப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது)
“வினைப்பயன் விரும்பாது வினையாற்ற முடியாது. வினைப்பயனை விரும்பாதார் வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவான் கிருஷ்ணனோ, இதற்கு நேர்மாறாக உபதேசிக்கிறார். ஏனெனில், இதனால் கருமம் புரியாது வெறுமனே (சும்மா) இருக்க வேண்டாம். ஓயாது பெருவினையாற்றிக் கொண்டிரு. ஆனால் வினையினின்று விளையும் பயன் யாது என்ற ஏக்கம் வேண்டாம். அத்தகைய பற்றற்ற பாங்கினின்று தான் நன்மை விளையும்” என்பது தான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்லும் உட்பொருள்.
“படகு நீரில் இருக்கலாம். ஆனால் நீர் படகுக்குள் நுழையலாகுமோ? அங்ஙனம் மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் புகுந்து விடலாகாது”. — ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்]]]
ஆன்மீகத்தை உண்மையாக விரும்பும் மதங்களானால் ‘இஸ்லாமிய ஜிஹாத்’ போன்ற, பயங்கரத் தீவிரவாத வன்முறை எண்ணம் மனதளவில் கூட, உதயமாகாது! அப்படி ஒரு ‘எண்ணம்” ஏதாவது மதத்திற்கு உண்டானால், அம்மதத்தை மதம் என ஒப்புக்கொண்டு, எவ்வாறு மற்றவர்கள் மதித்து, சகித்துக் கொள்ள முடியும்? இம்மாதிரி மதம் எனும் பெயரால் ஆர்பரிக்கும் இயக்கத்தை ”விபரீத வழிபாட்டுக் கொள்கை முறை” (cult) எனவே தான் அழைக்க முடியும். இக்காரணங்களுக்காகவே, ஜிஹாத் வழியாக சுவர்க்கம் புகுதல், எனும் செயலூக்கக் கருத்து, வேத இலக்கிய ஆய்வுரையில் எங்கும் காண முடியாது. மேலாக இதே காரணத்தால், மற்ற சமயக் கடவுள்களை, ’தவறான-கடவுள்கள்’என விளக்கம் அளிக்கவோ, அல்லது எவருடனும் ஒத்துப்போகாத பிடிவாதத்துடன், செருக்கு வாய்ந்த அணுகு முறையும் வேத வழியில் கிடையாது.
இதனால், வேதவழி-ஹிந்து சமயம் மக்களைக் காக்க அக்கறை கொள்ளத் தவறி விட்டது என்பதாக பொருள் கொள்ளலாகாது. இதன் உட்பொருள், அவரவர்களாகவே, ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைய, குறிப்பாக, ஆன்மீக அறிவைக் கைப்பற்ற, ஒவ்வொருவருக்கும் பூரண சுதந்திரத்தை தங்கு தடையின்றி, வேத கலாச்சாரம் அளிக்கிறது. வேத வழியில் கருத்தூன்றி நுழைவதற்கு, தனக்குத் தானே ஒரு பேராவல் அல்லது உந்துதல் வர வேண்டும். குதிரையை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு ஒருவர் அக்கறையுடன் அழைத்து சென்றாலும், அக்குதிரை, தனக்கு தண்ணீர் வேண்டுமானால் தானே குடிக்கும். அதை யாரும் வலிந்து தண்ணீர் குடிக்க நிர்பந்திக்க முடியாது. (You can take the horse to drink water, but you cannot make it to drink) எனவும் சொல்வதுண்டு. அப்படி வேத இலக்கியங்களை கருத்தூன்றி, நுழைந்து படிப்போற்கு, ஆன்மீக உண்மைகளை அதன் ஆரம்ப கட்டத்திலிருந்து, படிப்படியாக, உச்ச நிலையை அடையும் வரை, ஒவ்வொரு மாணவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு பாடத்தையும் நன்கு புரிந்து கொள்ளும் வரை, மீண்டும் மீண்டும், அக்கறையாகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நல்லாசிரியர் போல, மிக அக்கறையுடன் தெளிவாக, வேத வழி சொல்லிக் கொடுக்கிறது. இப்படி இருந்தும் கூட, ஆன்மீகத்தில் மெதுவாகவோ, அல்லது சடுதியில் நுண்ணறிவை அடைந்துவிட வேத வழி அனுமதிக்கிறது. இதற்கும் மேலாக, கடுமையான விசாரணைகளையும் விமர்சனங்களையும், எந்த நாஸ்திக வாதக் கேள்விகளையும் சற்றும் பயமின்றி கேட்கவும், அதற்குத் தக்க பதில்களையும், அவ்வப்போது, ஆங்காங்கே அளிக்கிறது. மற்ற சமயம் போல ‘நீ கேள்வி கேட்பதற்கு அறுகதையற்றவன்’ ’நாங்கள் உன்பொருட்டு தீர்மானித்து வைத்திருப்பதை மட்டும் கேட்டு அவ்வாறே நடக்கவேண்டு’மென பிடிவாதத் திமிருடன் பதிலளிப்பதில்லை. கேள்வி கேட்பது எனும் கருத்து, ’’மனதில் ஏற்படும் ஐயங்களை அவ்வப்போது களையத் தான். ஆகவே வரவேற்கத்தக்கதே’’ எனக் கருதி, இக் கேள்வி கேட்கும் வழக்கத்தை / கருத்தை ஊக்குவிக்க, இதை அவரவர் தனிப்பட்டத் தேவைக்கும் விருப்புக்கும், வேத வழி விட்டு விடுகிறது. ஆகையால் தான், ஹிந்து வேத வழியில் கட்டாய மதமாற்றம், அல்லது சமயத்தைச் சார்ந்த கொடுங்கோன்மை ஆட்சி அல்லது மற்ற சமயங்களுடன் போட்டி, சண்டை, சச்சரவு, ஆகியவை இல்லை. ஹிந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கு, இவ்வாறு மேற்கூறியவாறு பிறரை வீணாக நிர்ப்பந்திக்கும் நடப்புகளைப் பற்றி நினைவோ, அப்படிச் செய்து காட்ட வேண்டுமென்ற ஒரு துடி துடிப்பு உணர்வோ, அல்லது இதைப்பற்றி மேலும் அறிந்து பொருள் பெறும் எண்ணமே மனதில் என்றும் உதயமாவதில்லை. ஹிந்து வேத வழியில் அவரவர் இஷ்டப்படி, ஆன்மீக இறை நிலையை உணரத் தங்கள் சொந்த முயற்சி கொண்டு, படிப்படியாக (step by step), தங்களால் முடிந்த அளவிற்கு மெதுவாகவோ, அல்லது துரிதமாகவோ, செல்லலாம். ஆதலால், வேத வழி ஆசிரியர்கள், தங்களை அணுகிய ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பொன்னான நேரத்தையும், ஆற்றலையும் மனதார அளித்து, ஆன்மீகத்தில் மென்மேலும் சீடர்களை மேம்பாடடைய ஊக்குவிக்கின்றனர். உதாரணத்திற்குச் சொன்னால், ஹிந்துக்களல்லாத பிற சமயத்தைச் சார்ந்த பலர், ஹிந்து வேத வழியான ’யோக’ப் பயிற்சிகளில் மிகச் சிறப்பாகக் கற்று, தாங்கள் கற்றவாறே, பிறருக்கு இன்றும் கற்பிக்கின்றனர். பிற சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தால் இவர்களை வேத வழி நிராகரிப்பதில்லை. வேத வழி, ’பெற்ற அறிவு எல்லோருக்கும் உபயோகப்பட வேண்டும்’ எனும் மனப்பங்குடையது. ஹிந்து மதம் என்றும் குறைவில்லா அறிவுப் பெட்டகம். (Artesian well போல) எப்போதுமே சுரந்து கொண்டிருக்கும். அள்ள அள்ளக் கூடுமே தவிர, குறைவதில்லை. இவ்வாறாகத் தான் வேத கலாச்சாரத்தில், மக்கள் வழிகாட்டப் படுகிறார்கள். பிடித்த ”முயலுக்கு மூன்றே கால்கள்” தான் எனும் கொள்கைப் பிடிவாதம் கிடையாது.
ஆன்மீக வழியில் ’தங்கள் வழி’ ஒரு ’தனி வழி’ யெனக் கொள்ளும் மற்ற சமயத் தோருக்கும், அல்லது வேற்று சமயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் எதிரிகள், அல்லது மற்ற சமயத்தவர் தங்களுடன் போட்டியிடுபவர்கள் எனும் எண்ணம் கொண்டவர்களுக்கு, திறந்த செல்வழித் திட்டமான ஹிந்து வேத வழிகளைப் பற்றி புரிந்து கொள்ளக் கூட விரும்பாததில் வியப்பொன்று மில்லை. இதில் வியப்படைய என்ன இருக்கிறது?! இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்தால், இதன் அடிப்படை காரணம், அவர்களுக்குள்ளிரும் ‘பயமே’ தான் காரணம் என்று, உளநூல் (psychology) ஆராச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக, இவர்களுடைய பயத்தையும் விட்டு விட இயலாமல், அப்படி பயத்துடன் இருக்காவிடில், தாங்கள் நரகத்தில் தள்ளப்பட்டு, துன்புத்தில் உழல நேர்ந்து விடுமோ என்ற அச்சதாலும், சிலர் ’பிடிக்கிறதோ அல்லது இல்லையோ, தலைவிதியே’ என, தங்கள் குறுகிய வழியே சரியென போகப் போக மனது சமாதானமாகி, ஏதாவது ஏடாகூடமாகச் செய்யப் போய், தங்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு விடுவோமோ எனவும் பயந்து, தவிர்க்க முடியாமல் பற்றிக்கொண்டு, அதில் உள்ள வேதனையைப் போக்கிக் கொள்ள, தங்கள் சமயமே சரியானது என வீம்புடன், உறும்புப் பிடியாக சமயம் சொல்லும் காரியங்களில் இறங்கிவிட, நேர்ந்து விடுகிறது. ஹிந்து வேத வழியில் இந்த பயம் கிடையவே கிடையாது. இவ்வேத வழியைப் பின்பற்றும் ஹிந்துக்கள் தங்கள் ஆன்மீக வளர்ச்சியில் மேம்பாட்டை கண்காணிக்க, தங்கள் ஆன்மீகக் உள்ளுணர்வே, அவர்களுக்கு அளவு-மானியாக (measuring instrument) அமைந்துள்ளது. இதில் ஏதாவது குற்றம், குறையை உணர்ந்தால், அதைக்களைய மேன் மேலும் ஆத்ம சோதனைகளில் / முயற்சிகளில் ஈடுபடுவார்களே ஒழிய, அடாவடி காரியங்களான ’ஜிஹாத்’ அல்லது புனிதப்போர் எனும் வன்முறைகளில் என்றும் இறங்கவே மாட்டார்கள். ஆன்மீகத்தில் முழு முதிர்ச்சி அடைந்ததற்கு, உள்ளுணர்வு நிலையில், மனதில் ஏற்படும் மாற்றங்களே அதற்கு கணிப்பு மானியாக அமைந்து விடுகிறது.
வன்முறையில் ஈடுபடும் கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் பய-அடிப்படையில் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், என்று, மற்ற சமயங்களில் உள்ள மிக உயர்வான கருத்துக்களை மனதளவிலாவது ஒப்புக் கொண்டு, அல்லது அறிந்திருப்பதாக உணர்ந்து அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்களோ, மற்ற மக்களும் தங்கள் இஷ்டப்படி, அவரவர்களுகேற்ற சமயக் கோட்பாடு களிலும், செயல் முறைகளிலும் தங்கள் வாழ்க்கையில் அனுசரிக்க வாஸ்தவத்தில் உரிமை உண்டென அறிந்து கொள்கிறார்களோ, கிருஸ்தவ வழிபாடு தலங்களிலும் (churches), இஸ்லாமியர் தொழுகை செய்யும் மசூதி, அல்லது பள்ளிவாசல்களிலும், அவர்கள் சமயச் சொற்பொழிவு ஆற்றும் மேடைகளிலும் (pulpits) மனித இனம் முழுமைக்கும் ஏற்றதான உண்மையான அன்பு வழி தான் அவர்கள் உள்ளத்தை ஒளி பெறச் செய்யும் என இவைகளைப் பற்றி, எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி, முற்றிலும் மனதார உணர்ந்து ஒப்புக்கொண்டு, உரையாற்றத் தொடங்குகிறார்களோ, (Not just lip service but heart felt sincere expressions publicly announced) அன்றுதான் கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், வேதவழியிலும் கூட நல்ல விஷயங்கள் உள்ளன என தங்கள் உள்ளத்தில் அடையாளம் கொண்டு, உலகிலுள்ள எல்லா நல்வழிகளையும் அனுசரித்து, இதனால் மற்ற எல்லோரையும் மகிழச் செய்வார்கள். அதுவரை ……….. ?!! இப்படி மேற்கூறியவாறு நிஜமாகவே செய்து முடிந்துவிட்டால், கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், மற்ற சுதந்திர எண்ணங்கொண்ட மற்ற சமயங்களை, கண்டனம் செய்வதையும், மற்ற மதத்தவர் கட்டாயமாக நரகத்தில் தள்ளப்படும் பயத்தை உண்டாக்குவதையும் கைவிட்டு விடுவார்கள். இதை ஒரு ‘உடோபியா’ (utopia) ’சிறந்த கற்பனை உலகம்’ எனதான் சொல்வார்கள். காரணம் புரிகிறதல்லவா?
ஆகையால் தான், வேத கலாச்சாரம் ஒன்றில் தான் கடவுளுடைய ஆழம் காண இயலாத அன்புள்ளத்தை அறிந்து கொள்ள வழி வகுக்கிறது, ஆனால், மற்ற கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், கடவுளிடத்தில் ’’பயத்தை அடிப்படை’’யாகக் கொண்ட கொள்கைகளை உடையவைகள். மற்ற மதங்களிலெங்கும் பயத்தைத் தவிர, அன்பில்லை. கிருஸ்தவ சமயத்தில், ’அன்பு’ ’அன்பு’, என வெறும் அழகிய வாய்ப்பந்தல் போட்டாலும் (mere mouthing) அது பயத்தின் அடிப்படையில், மனிதப் பிறவிகளை, கிருஸ்தவ போதகர்கள், ’பாவிகளே’ என்று ஆரம்பத்திலிருந்து விளித்து தான், செயல் படுத்துகிறார்கள்.
[[[உதாரணத்திற்காக, குரானிலிருந்து இங்கே சில குரான் சுராக்கள் (வசனங்கள்), ஆயாதுடன் (உட்பகுதியுடன்) உள்ளது உள்ளபடி மேற்கோளாகக் கொடுக்கப் பட்டுள்ளன:
Quran (2:216) clearly says fighting in jihad war is ordained for Muslims.
குரான் – (02:216) போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முத்தாய்ப்பாக (‘Al Walaa wa al Baraa’, a fundamental principle of Islamic ethics and Sharia, being unyielding towards the Kafirs, hard against them, and detesting them), ’’ அல்-வலா வா அல் பரா” – (Basic Islamic Jurisprudence) – இது இஸ்லாமிய நடத்தைக்குரிய வழிமுறைத் சட்டத் தொகுப்பான ‘ஷரியா’ வின் அடிப்படை – இஸ்லாமில் இல்லாத,”காஃபிர்” களிடம் இசைந்து கொடுக்காதே, அவர்களிடம் கடுமையாக நடந்து கொள், அவர்களை எப்போதும் விடாது வெறுத்துக் கொண்டு இரு எனும் மன வேற்றுமையை வேண்டுமென்றே வளர்க்கும் கொள்கை)
9.5 Kill kuffar wherever you find them.
Quran 9.38: You who believe! What is the matter with you, that when you are asked to march forth for jihad for Allah, you cling heavily to the earth?
Quran 9.39: If you will not go forth to fight in the cause of ALLAH, you will be given a painful punishment. It is the duty of a Muslim to kill kuffar:
குரான் (08:39 (முஃமின்களே) இவர்களுடைய விஷமங்கள் முற்றிலும் நீங்கி, உலகில் அல்லாஹ்வின் மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே என ஆகும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் விஷமங்கள் செய்வதிலிருந்து விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

Quran 8.039 – YUSUFALI: And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do.

குரானில் மட்டுமே, ஜிஹாதைப்பற்றி, 164 இடங்களில் கூறப்பட்டுள்ளது. கீழே இதன் பட்டியல்:
வசனங்கள் = சுராக்கள்; ஆயாத்

002: 178-179, 190-191, 193-194, 216-218, 244;
003: 121-126, 140-143, 146, 152-158, 165-167,169, 172-173, 195;
004: 071-072, 074-077, 084, 089-091, 094-095,100-104;
005: 033, 035, 082;
008: 001, 005, 007, 009-010, 012, 015-017, 039-048,057-060, 065-075;
009: 005, 012-014, 016, 019-020, 024-026, 029,036, 038-039, 041, 044, 052, 073, 081,083,086,
088, 092, 111, 120, 122-123;
016: 110; 022: 039, 058, 078; 024: 053, 055; 025: 052; 029: 006, 069; 033: 015, 018, 020, 23, 025-027, 050; 042: 039; 047: 004, 020, 035; 048: 015-024; 049: 015; 059: 002, 005-008, 014; 060: 009; 061: 004, 011, 013; 063: 004; 064: 014; 066: 009; 073: 020; 076: 008

இஸ்லாமின் பொருள், ‘அமைதி’ என்று அடிக்கடி மக்கள் மத்தியில், விளம்பரத்திற்காகச் சொல்வதிலிருந்துதான் தான் ’புனித ஏமாற்றலான ’தக்கியா’ ஆரம்பமாகிறதா? ஆரம்பக் கருத்துப் படிவமான (Islamic concept) மதப் பெயரிலேயே ஏமாற்றுதல்’ என்பது ஆரம்பித்து விடுகிறதா? ’அமைதி’ என வெறும் பெயர் சூட்டிக்கொண்டு விட்டால் மட்டுமே, இம்மதத்தை அமைதியான சமயம் என ஒப்புக் கொள்ள முடியுமா? மேற்கூறிய குரான் வசனங்களாலும், அவைகளை இவர்கள் வாஸ்தவத்தில் நிரூபித்துக் காட்டும் செயல்களாலும், ’இஸ்லாம்’ என்பதற்கு ‘அமைதி’ எனப் பொருள் கூறுவது மலையும் மடுவும் ஒன்றேதான் என சொல்வது போல உள்ளதே! (கவுண்ட மணி – செந்தில் வாழைப்பழ நகைச்சுவைப் பாணியில் சொல்வதானால் – ‘அதாங்க இது’ என்பது போலவா?) ‘இதற்கும் மேலாக,”Salamu alakum” (peace to you)”உனக்கு அமைதி உண்டாகட்டும்” என வாய் நிறைய வெறும் வார்த்தையாக வாழ்த்திச் சொன்னால் மட்டும் போதுமா? செயலிலும் காட்ட வேண்டாமா? ’வெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்பதற்கு, ,”Salamu alakum” என்பதும் மற்றொரு உதாரணமா?

இங்கே, ’ஜிஹாத்’பற்றி, அவர்கள் போற்றும் மற்ற புனித நூல்களான, ஹடிஸுகள், சுன்னாக்கள், சிராக்கள், ஆகிய இவைகளிலிருந்தும், பெரும் பட்டியலாக கொடுத்து, கட்டுரையை நிரப்பத் தேவை இல்லை எனக் கருதுவதால், இவைகளையும் இங்கே கொடுக்க வில்லை.

சுவர்க்கத்தில் கட்டாய மதப்போரில் பங்கேற்றவர்களுக்கும், அதில் உயிரிழந்த ஒவ்வொரு ‘ஷாஹீது’ க்கும் (!) உடலின்பத்திற்கு 72 (ஹௌரிகள் – whores) பளிங்குக் கன்னிகள்: குரான் சுரா: 37: 40-48; 44:55; 52:17-20; 55:56-57 & 55: 70-77; 78:31; ஓரினச் சேர்க்கைக்கு 28 மீசை முளைக்காத இளம் பாலகர்கள்: குரான் சுரா: 52: 17 & 24; 72:19; (அதாவது விகிதப்படி – 1:100 – அதாவது ஒவ்வொரு ‘ஷாஹீதுக்கும்’ 100 பேர் வீதம் (like joining kits) வழங்கப்படும்!!!) இவ்வசனங்கள் மற்ற மதங்களை அடியோடு அழித்திட, முஸ்லிம்களை மதப்போருக்கு உக்குவிக்கும் நோக்கத்தோடு, கொடுக்கப்பட்ட அப்பட்டமான, உத்திரவதம் இல்லையா? (Is it not an open, deliberate incentive to wage holy war against all other religions?) இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் சுவர்க்கத்தில் இருக்கும் அநேக வாய்ப்புகள், இன்ப வசதிகள் பூஉலகில் தவிர்க்க வேண்டியவை என புனித நூல்களால் வரையறுக்கப்பட்டவை -மது மாது etc. I.e. prohibited in Earth but available in plenty with more added typical facilities at Islamic Heaven!!) காரணம்?

மேல் இரண்டு தலைப்பில் மட்டுமே கொடுத்தவைகளுக்கும் மேலாக, சுவர்க்கத்தில் இன்னும் இன்ப உடற்கிளர்ச்சியூட்டும் வசதிகள் பற்றி, இஸ்லாமிய புனித வசனங்கள் பல உண்டு. சுருக்கமாக, சுவர்க்கத்தில் மது ஆறு ஓடும், மல-மூத்திரம், வியர்வை கிடையாது, ஹௌரிகளை யும் சிறார்களையும் வெற்றியுடன் ஒருங்கே இஷ்டப்படி சமாளிக்க, இறைவரத்துடன் நிரந்தர சுறு சுறுப்பான ஆரோக்கியமான உடலாற்றால், போன்ற மேற்கோள்களையும் இங்கே கொடுக்க வில்லை.]]].
18. வேத வழி சித்தாந்தத்தை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட சீடர்கள், எவரையும் மதமாற்றம் செய்ய மாட்டார்கள்.
ஹிந்துக்கள் மற்ற சமயத்தவரை மதமாற்றம் செய்ய என்றுமே முயற்சி செய்ய மாட்டார்கள். தேவையும் இல்லை. ஹிந்துக்களுடைய தீர்மானமான நம்பிக்கை யாதெனில் – ஆன்மீக வேத வழியில் உள்ளவை அனைத்துமே கடவுளைப்பற்றி இருக்க வேண்டுமே தவிர, தற்காலத்தில் காணப்படும், பல கணினித் திட்ட வலைப்பின்னல் போன்றவைகளால், தங்கள் லாபத்தை மட்டுமே பெருக்கிக்கொள்ள இருக்கும், வியாபார நிறுவனங்கள் போல, பட்டியல் போட்டுத் தங்கள் சமயத்திற்கு மதம் மாறியவர்கள் கூட்டத்தை அதிகரித்து புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுக் காட்டத் தேவையில்லை. ஹிந்துக்களுக்கு சிறந்த தரம், பண்புகள் முக்கியமே தவிர, எண்ணிக்கை முக்கியமில்லை. இதற்காக மிகச்சிறந்த ஆன்மீகப் பயிற்சி பெற்று, மனத் தூய்மை அடைந்து, தன் முன்னுதாரணத்தால், தன்னைச் சூழ்ந்தவர்களையும் கடவுளிடத்தில் ஈடுபாடு கொள்ள ஊக்கமளிக்க வேண்டுமே தவிர, இன்று, ‘வாடிகன் போப்’ ஆணையிடுவது போல மனிதர்களை அறுவடை செய்து, எண்ணிக்கையை, உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியத்தில் ஹிந்து மதம் என்றும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. யாரிடம் நற்சான்றிதழ் பெற்று யாருக்குக் காட்டி, இதனால் என்ன ஆதாயம் ஹிந்துக்களுக்குப் பெற்றாக வேண்டும்? பிறர் மீது வெறுப்பை வாந்தியெடுத்து, பொய் பேசி, பித்தலாட்டம் செய்து, மொத்தமாக பல சமய, மனித சமூகத்திடையே, இனம் மொழி ஆகியவைகளால், உட்பூசலைக் கிளப்பி விட, ஹிந்துக்களுக்கு என்றுமே இதனால் தான் நாட்டம் என்றுமே இருந்ததில்லை. ஆனால், கிருஸ்தவர்கள், (both Catholics and Protestants) ஹிந்துக்களை, பேகன்கள் (கிருஸ்தவத்தில் சேராத மூடர்கள்) என்றும், ஹீதன் (காட்டுமிராண்டிகள்) என்று அடைமொழிகளை தாராளமாக அள்ளித்தந்து, நரகத்துக்குத் தள்ளப்படத் தக்கவர்கள் என ஹிந்துக்களுக்கும் சேர்ந்து இவர்களே தீர்ப்பை அளித்து விடுவார்கள். அப்படி நரகத்துள் தள்ளப்படுதலைத் தவிர்க ஒரே வழி, ஹிந்துக்களை கர்த்தர் காத்து ரட்சிக்க, ஹிந்துக்கள் கிருஸ்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டால், கண்ணிமைக்கும் (fraction of a milli-micro second) நேரத்தில், பாவ மன்னிப்பு கிடைத்து, எல்லாம் சுபமாக முடியும். எப்படி இருக்கிறது!! இதனால்தான் கிருஸ்தவ மதத்திலுள்ள எல்லோரையும் எடுத்த எடுப்பில், ”பாபிகளே!” என்று ஆரம்ப போதனைகளில் விளிக்கிறார்களா?
”பலகடவுள்” எனும் கருத்துப் படிவமென்ன (concept) ? என்பதைப்பற்றி ஒன்றுமே அறியாது ஏதேதோ மேல்-புல் மேயும் கால்நடைகள் போலப் பேசும், முஸ்லிம்கள், ஹிந்துக்களை, சிலையைக் கும்பிடும் நீசர்கள், பல தெய்வங்களை வழிபாடு செய்யும் உதவாக்கரைகள் {நாசீஸ் – என்றால், அரேபிய மொழியில் (உருது மொழியிலும் இப்படித்தான் பொருள் கூறுவர்) எதற்கும் லாயக்கற்றவர்கள் (?) என்பது பொருள்} என குரானில் உள்ளபடி தீர்ப்பளிப்பார்கள். குரான் சுரா: ஆயாத்-9:28 உள்ளபடி, O! YOU who have attained to faith! Those who ascribe divinity to aught beside God are nothing but impure: and so they shall not approach the Inviolable House of Worship from this year onwards And should you fear poverty, then [know that] in time God will enrich you out of His bounty, if He so wills: for, verily, God is all-knowing, wise! ஆக, இவர்கள் எல்லோரும் நரகத்தில் கொதிக்கும் நெருப்பில் தள்ளப்படுவார்கள் என பயமுறுத்துவார்கள். இஸ்லாமை ஒப்புக்கொள்ளாதவர்களை, ’கடவுள்’ குரங்குகளாகவும் (apes) பன்றிகளையும் (swine) மனித உருவில் உலவ விட்டுள்ளார் என குரானில் உள்ளபடி சித்தரிப்பார்கள். (In Islam, a pig is considered Najis (impure), so are others belonging to other religions except Islam)
Qur’an 005.060 – Say: Shall I inform you of (him who is) worse than this in retribution from Allah? (Worse is he) whom Allah has cursed and brought His wrath upon, and of whom He made apes and swine, and he who served the Shaitan; these are worse in place and more erring from the straight path. Interpretation -Tafsîr Ibn ‘Abbâs: Allah Curses People and Transforms Jews into Apes and Christians into Pigs — Allah then revealed about their saying: ” we do not know any religious community that is more disfavoured than Muhammad (pbuh) and his Companions ” , saying: (Shall I tell thee of a worse (case) than theirs) that which is worse than what you told Muhammad and his Companions (for retribution with Allah) for him who is going to be punished by Allah? (Worse (is the case of him) whom Allah hath cursed) imposing on him the capitation tax, (him on whom His wrath hath fallen! Worse is he of whose sort Allah hath turned some to apes) in the time of the Prophet David (pbuh) (and swine) in the time of Jesus, after eating from the table that Allah sent from heaven, (and who serveth idols) soothsayers and devils; or he whom Allah has made the worshipper of the devil, idols and soothsayers. (Such are in worse plight) worse in works in this world and worse in status in the Hereafter (and further astray from the plain road) the road of guidance.
மேற்கூறிய சொற்கள் எல்லாம் இஸ்லாமியத்திலும், கிருஸ்தவத்திலும், ’நல்ல மதக்கொள்கைகள்’ என்றால், உலகில் ’கெட்ட கொள்கைகள்’ என்ற சொல்லுக்கு என்னதான் பொருள்? பைபிளில் சொன்னபடி கிருஸ்தவர்களும், குரானிலும் உள்ளபடி, முஸ்லீம்கள் நடக்கிறார்கள். ஆனால், ஹிந்துகளுக்கு இம்மாதிரி விபரீத சித்தாந்தங்கள் எந்த உருவிலும், இவர்களுக்குள்ள வேத வழி நூல்களில் கிடையாது. அதனால் மேற்கூறியவைகளை நல்ல செயல்கள் அல்ல என ஹிந்துக்கள் தீர்மானிக்கிறார்கள். ஹிந்து மதம் இவ்வாறு தீர்மானிப்பது தான் தவறா?.
இருந்தபோதிலும், தங்கள் கோட்பாடுகளை ஒரு தலையாய் அதிகாரத் தோரணையில் கூறும் கிருஸ்தவமும், இஸ்லாமும் தங்களிடம் கணக்கிலடங்காத குற்றங்களையும், குழப்பங்களையும், வைத்துக்கொண்டே, ஹிந்துக்களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு, இடை விடாமல், குற்றங்காணும் ஒரே எண்ணத்துடன் அநாவசியமாகச் செய்யும் விமர்சனங் களால், ஒரு சமயம் இல்லா விட்டாலும் மற்றொரு சமயத்தில், இந்த அதீதமான குற்றச்சாட்டு களை, முதற்படி எதிர்வினை யாக, மற்ற மதத்துடன் கொள்கைப் பிணக்குக்கும், சண்டைக்கும் வித்திடாமல், ஹிந்து கலாச்சாரத்திற்கு ஆதரவாக நேர்மையான விளக்கங்கள் அளிக்கவும், வீண் விமர்சனங்களை மறுத்துக் கூற விழைவதும், மனித இயல்புதானே. வேறொரு விதத்தில் சொன்னால், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர் தரத்திற்கு ஹிந்துக்களும் தங்களைத் தாழ்த்திக்கொண்டு, மனிதருக்குள் மனிதர்கள் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படையாக தங்களைத் திட்டிக்கொள்வது போல (man to man abusing each other publicly) ஹிந்து-வேத நூல்களில் இவ்வாறு இல்லாது போனாலும், இவர்கள் உதிர்த்த அதே பொன்மொழிகளை – exact words as they have used – nothing more nothing less – (அதிகமாகச் சேர்த்துகூட அல்ல) அவர்கள் மீதே அதே செயல் திற வேகத்திலும், உபயோகித்தால், இச்சொற்களை கேட்டு ஹிந்துக்கள் போல இவர்களால் வாளா இருக்க முடியுமா? இத்தனைக்கு பிறகும், ஹிந்துக்களுக்கு எதிராக, கிருஸ்தவமும், இஸ்லாமும், வலிந்து அக்கிரம ஆக்கிரமிப்பை தொடர்ந்து, ஹிந்துக்களின் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவைகளால் மிகத் துணிவு பூண்டு, மீண்டும் மீண்டும் தொடர்ந்துத் தங்கள் முடிவில்லா அநாவசிய தாக்குதல்களை வேண்டுமென்றே நடத்தி, அல்லது மத மாற்றுக் செயல்பாட்டினால் ஹிந்து கலாச்சாரத்தை தாக்கிக்கொண்டே இருப்பதற்கும், ஒரு எல்லை உண்டல்லவா? இதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட, எவ்வித எதிர்ப்பு எங்கிருந்து வந்தாலும் தகர்த்தெறிய, கூடிய சீக்கிரமே ஹிந்துக்களால் ’’பொறுத்தது போதும் என, பொங்கி எழு’’ எனவோ, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற மூதுரைக் கேற்றவாறு எதிர் விளைவு உண்மையாக கூடிய சீக்கிரம் ஏற்பட்டால்………..!! (conflagration) பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?’ தற்கால, வருங்கால சூழ்நிலையில் ஹிந்து இளைஞர்களும், தங்கள் முன்னோர்கள் போல பொறுமைப் பதுமைகளாக, அப்படியே, இருப்பார்கள் என யார்தான் வருவதுரைக்க முடியும்? ஹிந்துக்களின் பொறுமை எனும் எல்லையைத் தாண்டத் தூண்டுவது யார்? (Who started all these? Certainly not Hindus) நிச்சயமாக ஹிந்துகளே அல்ல. அதே சமயம், ஹிந்து ஆன்மீகத் தத்துவங்களும், வேத வழி கலாச்சரங்களும், மிகப்பரந்த மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது எனவும், மதமாற்றம் செய்துதான் தங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கவோ அல்லது ஆட்களை அறுவடை செய்யத் தேவையில்லை என இன்னும் மிகச் சிறப்பாக’’ஜாடிக்கு மூடி’’ எனும் தக்க மொழிகளிலும், எடுத்துரைக்க வேண்டும். ஹிந்துக்கள் எடுத்த எடுப்பிலேயே, முதலில் வன்முறையில் இறங்குபவர்களல்ல, என்பதை உலகில் எல்லோரும் மனப் பூர்வமாக அறிவார்கள். ஹிந்துக்களின் இப் பொறுமையே ஹிந்துக்களுக்கு எதிரியாகி, மேலும் இப்பொறுமையே இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் துணிவு கொடுத்து, ஹிந்துக்கள் மீது தாக்குதல்களை அதிகரிக்கத் தூண்டுகிற தல்லவா? எக்காலத்திலும் வன்முறையாளர்களான, இஸ்லாமியர், கிருஸ்தவர்கள் போல, ஹிந்துக்களும் அன்றே வன்முறையில் இறங்கி இருந்தால், குறைந்தது 1400 வருடங்களாக முஸ்லிம்களும், பிற்காலத்தில் கிருஸ்தவர்களும், இந்திய மண்ணில், கனவில் கூட ஒரு காலடி வைத்திருக்க முடியாமல் போயிருக்குமே! விளைவு என்ன ஆயிருக்கும்? இந்திய சரித்திரத்தை நடந்தது நடந்தபடி படித்தறிந்தவர்களுக்கு, இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் இந்தியாவில் எவ்வாறு படிப்படியாக நுழைந்து, இந்திய நாடு முழுவதையும் அடிமையாக்கினர் என தெளிவாக அறிந்திருப்பார்கள். (இருவர்களில் ஒருவர் கூட நேர்வழியில் நுழைந்தவரல்ல அல்லது மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்துடனும் அல்ல. அப்படி ஏதாகிலும் நல்லது நடந்திருந்தால், அது கட்டாய நிலையில் தவிர்க்க முடியாமல், அந்தரங்க நோக்கத்துடனே செய்ய நேர்ந்ததாகும். அல்லது உள்நோக்குடன் இன்று தெரிவிக்கப்படும் இலவசத்திட்டங்கள் போல ஆகும் (according to comparative cost theory). ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியாவை அடியோடு சுரண்ட, என்றுமே எவ்விதத்திலும் இவ்விருவரும் தயங்கியதில்லை என தீர்மானமாகக் கூறிவிடலாம்.) மேலாக, ஹிந்து-இந்தியா எந்நாட்டுடனும் இதுவரை வலிய சண்டைக்குச் வென்றதில்லை. ஒரு சிறு ஆதாரத்தையாவது உலகில் எவராவது கூறமுடியுமா? ஆதாரமும் தேவையில்லை எனலாம். ஏனெனில் இது உலகறிந்த உண்மை. (The whole world knows this universal truth). ஆனால் வந்த சண்டையையும் இனி சகித்துச்செல்ல வருங்காலத்திலும் முடியுமா? அது, இதுவரையிலும் நடக்காதற்குக் காரணம், இது அவர்கள் வழி வழியாக பாரம்பரியமாகப் பின்பற்றிவரும் சாத்வீக வேத வழி இயல்புதான். ஆனால், தற்போதுள்ள நிலைமை, மகா பாரதத்தில் அன்று நடந்தவாறு இன்று, நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நடக்கிறதல்லவா?. மகா பாரத யுத்ததில் அன்று முடிவுற்றவாறு இந்தியாவிலும் (உலகத்திலும்) அப்படி நேர்ந்து விடுமா? அப்படி ஒரு நிலைமை உண்டாகிவிடுமா? இதில் யார்தான் வெற்றிபெற்றவர், தோல்வியடைந்தவர் என ஆவார்கள்? இதுவரை தெரிந்த விஷயங்களிருந்து வருவதை ஊகித்தால் இப்பயங்கரத் தோற்றமே மனதில் உண்டாகிறது. (extrapolation) எவ்வாறு இருப்பினும், இஸ்லாமிய கிருஸ்தவ சமயப் பிரசாரகர்கள் தொடர்ந்து வேத வழியைப் பற்றி அவதூரான பொய் பிரசாரங்களில் ஈடுபடும் போது ஹிந்துக்கள் இச்செய்கைகளுக்குத் தக்க தற்காப்பு நடவடிக்கை எடுத்தால், இதில் என்ன தவறு இருக்க முடியும்? இம்மாதிரி வேண்டுமென்றே ஹிந்துக்கள் மீது அபவாதமாக இஸ்லாமிய, கிருஸ்தவ போதனைகள் அதிகரிக்கும்போது, ஹிந்துக்களும் தங்களையும் தங்கள் புராதன கலாச்சாரதையும் தற்காத்துக் கொள்ளத் தானே வேண்டும். இது தானே நியாயம் கூட.
தற்காலத்தில், குறிப்பாக, கிருஸ்தவ மத பிரசாரகர்கள் கீழ்த்தர விபரீதமான எண்ணங் கொண்டு, இந்திய நகரங்களில் பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து, கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்களிடையே, பிரசாரங்களை நடத்துகின்றனர். நகரங்களில் உள்ளது போல, கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்கள் நிறைந்த பகுதிகளில், நகரத்து நன்மைகள் அனைத்தும் நாட்டுப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அல்லது இவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்லெண்ணங்கொண்டு அல்லவே அல்ல. இதற்குக் காரணம், நகரத்தில் உள்ள பொது மக்களால் உண்டாகும் பலதரப்பட்ட இடர்பாடுகள், மேலும் அங்கு கற்றறிந்த பொதுமக்கள் அதிகம், இவர்கள் நடவடிக்கைகளில் விவரங்களை அறிய, கிருஸ்தவர்களுக்கு பற்பல அசௌவுகரியமான கேள்விக்கணைகளை விடுக்கும் போது அவைகளை சமாளிக்க முடியாதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால், பெரும்பான்மையாக படிப்பறிவில்லாத கிராம மக்களிடமிருந்து இம்மாதிரி தொந்திரவு கிடையாது, கிராமப் பகுதிகளில், ”கொடுப்பதைக் கொடுத்து பெறவேண்டியதைப் பெற” என (ஒரு அறிஞர் அன்றே சொல்லிக் கொடுத்தது போல) எல்லாவித லஞ்ச லாவண்யத்தைக் காட்டி சமாளிப்பதும், பல பகுதிகளைக் கொண்ட சட்ட திட்டங்களை எப்படியாவது ஏதாவது செய்து ஏமாற்றுவது அல்லது அங்கு சட்டங்களை வளைப்பதும் கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்கள் நிறைந்த பகுதிகளில், மிக சுலபம். ஆகவே தான் கிருஸ்தவ மத பிரசாரகர்கள், இம்மாதிரி, வற்புறுத்தலுக்கு எளிதில் பணிகிற, மென்மையான இலக்குகளில் தான், தங்கள் கிருஸ்தவப் பணியாற்றும் திறத்தைக் (கைவரிசையைக்!) காட்ட, முழு மூச்சுடன் செயல் படுகிறார்கள்.
உலகிலும், குறிப்பாக, இந்தியாவிலும். எங்கும் அமைதி நிலவ ஓரே ஒரு சந்தர்ப்பம் உண்டு. இந்த அமைதியைப்பெற, கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும், தற்போது நடத்தும் மத மாற்றம், வன்முறை, வெடிகுண்டு கலாச்சார நடவடிக்கைகள் இல்லாமல் போனால் தான் முடிவாக அமைதி நிலவ முடியும். இல்லாவிடில் அமைதியை என்றும் காணவே முடியாது. இந்த பிரச்சனைக்கு இது தான் நியாமான தீர்வு: இதற்கு மற்றொரு மாற்று வழி: இவர்களைப் பற்றிய உண்மை ரகசியங்களை, உலகிலுள்ள எல்லோரும் அறிய, இவர்கள் புனித நூல்களில் உள்ளது உள்ளபடி, தற்கால நடப்புகளைத் தொடர்வு படுத்தி, முற்றிலும் வெளியிட்டு மக்களுக்கு ஒரு மன விழிப்பு நிலையை உருவாக்குவது ஒன்றில் தான் உள்ளது. இரண்டாவது தான் நடப்புக்கு சாத்தியமானது. உடனடியாக செயலாற்ற வேண்டியது. இது மிகவும் இன்றியமையாது.
[[[ அம்பேத்கர், சொன்னது போல, ”முஸ்லிம்களுக்கு, அகில உலக சமூக சகோதரத்துவ ஒற்றுமை/ தோழமை எனும் உணர்ச்சி எனபது கிடையாது; அவர்களுக்கு சகோதர ஒற்றுமை எனபதே முஸ்லிம்களுக்குள் சகோதர தோழமை ஒன்றுதான்” என்றார். (Dada Saheb Ambedkar wrote: “Muslims do not have anything to do with universal brotherhood; their brotherhood is limited only to Muslims”) இது கிருஸ்தவர்களுக்கும் மிகப் பொருந்தும்.
உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர், சீர்திருத்தவாதி, பெட்ர்ட்ராண்ட் ரஸ்ஸல் கூறுகிறார்: “ஆழ்ந்த ஆராய்வுக்குப்பிறகு, இதைத் தெளிவாகக் கூறுகிறேன். ’சர்ச்’ ஏற்பாடு செய்யும் கிருஸ்தவ சமயமே (கிருஸ்தவ பிரசாரங்களே), உலகளவில், நல்லொழுக்க மேம்பாட்டுக்கு முக்கிய விரோதி” “I say quite deliberately that the Christian religion, as organised in its Churches, has been and still is the principal enemy of moral progress in the world.” – Bertrand Russell
ஸ்ரீ சீதாராம் கோயல், கூறுகிறார், “கிருஸ்தவ சமய பிரசாரகர்கள், கிருஸ்தவ (மதம் மாற்றும்) இயக்க சரித்திர ஆரம்பத்திலேயே, தங்கள் காரியத்தை முழுதுமாக சாதித்துக்கொள்ள மனித உள்ளங்களுக்கு மோசடி செய்யும் கலையில் மிக திறம்பட முற்று பெற்ற நிலையை என்றோ அடைந்து விட்டனர்” “Christian missionaries had perfected the art of manipulating human minds quite early in the history of their cult” – Sita Ram Goel]]]
19. ஆன்மீகத்தில் தெளிவு பெற்ற நிலையையும், பேரின்பப் பேறு பெறும், (ஜீவன் முக்தி அடையும்) முயற்சியில், தங்களுக்குகந்த வழியைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டென ஹிந்து சமயம் உடன்பாடு கொண்டது.
உதாரணமாக, இங்கே 2001 இல், அலஹாபாதில் நான் கண்ட கும்ப மேளா எனும் விழாவைப்பற்றி கட்டாயம் கூறத் தான் வேண்டும். அங்கே 7 கோடியே, 10 லட்சம் (71 million people) பொதுமக்கள் கும்ப மேளா விழா நடைபெற்ற நாட்களில், 5000 பற்பல ஹிந்து ஆன்மீக தத்துவங்களைப் பின்பற்றும் அநேக ஆச்ரமங்களிலிருந்து வந்திருந்தனர். இதில் குறிப்பிடும் அம்சம் யாதெனெல், தங்களுக்குள் ஒத்த தத்துவத்தைச் சார்ந்தவர்கள் அநேகமாக நிறைந்திருந்தும், தெளிவாகத் தெரியும் தத்துவ வேறுபாடுகளுடைய ஆச்ரமவாசிகளும் வந்திருந்தனர். இருந்தும், அங்கே வந்திருந்த ஒவ்வொருவரும் பொது நலனுக்காக ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, தக்க மதிப்பளித்து, மரியாதையுடன் நடந்துகொண்டு, இப்புனித விழாவில் பங்கேற்றனர்.
இஸ்லாமிய சமயத்தில், 72 உட்பிரிவுகள் உண்டு, கிருஸ்தவத்திலும், அநேக வித இனங்களைச் சார்ந்த கிருஸ்தவர்கள் உண்டு, இவைகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள பற்பல வித்தியாசங்களையும், விமர்சனங்களையும் பொது மேடைகளில் மிக பண்பற்ற தன்மையில், மிக அசிங்கமாக போட்டுடைத்துக் கொண்டு, ஒருவர் மற்ரொருவரை பரஸ்பரம் குற்றங்களைச் சாட்டி, திட்டித் தீர்த்து, கண்டனம் செய்வதையும், அன்றாடம் காண்கிறோம். இஸ்லாமியம் என்பது ஒரே சமய மாக இருந்து கொண்டு, அதே புனித நூல்களை ஆதாரமாகக் கொண்டு, சில வேறு காரணங்களுக்காக, அநேக உட்பிரிவுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு, மிகக் கொடுமையாக பரஸ்பர கொலை வரை நீண்டு, தூக்கிலிட்டு, அப்படித் தூக்கிலிட்டு கொல்லப்பட்டவர் புகைப்பட, காணொளிப் படங்களை, பத்திரிக்கை, தொலைக் காட்சிகளிலும், ஒவ்வொரு நாளும் உலக மக்களுக்குத் திகட்டிப் போகுமளவுக்குக் காணக் கிடைக்கிறது. (ஈரானில் பஹாய்கள் படு கொலை, பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் அக்ரம வன்முறைச் செயல்கள், பாகிஸ்தானில் அஹமதீயர்கள் படு கொலை, ஆப்கானிஸ்தானில், முன்நாள் பிரதம மந்திரியே கொல்லப்பட்டு, அவர் பிணத்தை, ஒற்றைக் காலைமட்டும் தலை கீழாக மின்சார வெளிச்சக் கம்பத்தில் தொங்கவிட்டு, பிணத்தைக் கூடக் கத்தியால் குத்திச் சீண்டிக் கண்டு களிக்கும் வெறிக் கூட்டம், முஸ்லிம் பெண்களைக் கல்லால் அடித்தே கொலை செய்யும் கொடூரப் படங்கள் முதலியன சர்வ சாதாரணக் கிடைக்கும் சில இஸ்லாமிய உதாரணங்கள்). பல பிரிவுகளுள்ள இஸ்லாமியர் நம்புவதும் ஒரே கடவுள் – ’அல்லாஹ்’, எல்லோரும் பின்பற்றுவதும் அதே புனிதல் நூல்களான், குரான், ஹடிஸ், சுன்னா, சுரா ஆகியவைகள்தான். இருப்பினும்?…………
கிருஸ்தவ மதத்திலோ, கத்தோலிகர்கள், ப்ராடஸ்டண்ட் என்றும் இவர்களுக்குள்ளும் அப்பப்பா! கணக்கிலடங்காத, உட்பிரிவுகள் பிரிவுகளும் உண்டு. இவர்களுக்குள், ஏராள வேற்றுமைகள், பரஸ்பர விமர்சனங்கள், முழு நீளப்போர் என அநேக நூற்றாண்டுகளாக இடைவிடாது இன்றுவரை ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. இதில் மிக திகைப்புக்கு உறியது என்னவென்றால், இவர் எல்லாரும் ஒரே கிருஸ்துவையே பின்பற்றுபவர்கள், பைபிளே தங்கள் உயிர் என சொல்லிக் கொள்பவர்கள், இவர்களுக்குள், மற்ரொருவரைத் தாக்கியும் தங்களுக்குள் மதமாற்றுவதில் பரஸ்பரம் நிலை குலைந்து, மற்ரொருவரைத் துன்புறுத்திக் கொள்வதில் தன்னிறைவு அடைந்து கொள்கின்றனர். கிருஸ்தவ, இஸ்லாமியருக்கும் இடையே நடக்கும் நிரந்தர கொடூர சண்டைகள் என்பதே ஒரு மிகப்பெரிய தனிப் பிரச்சனை. உதாரணமாக, பாகிஸ்தானில் இது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.
ஒரே கடவுளெனும் கருத்துப்படிவத்தில், அந்த ஒரே கடவுளையே பல உருவங்களாகத் (சிலைகளாகத்) தொழும் ஹிந்து வேத வழியிலுள்ளவர்கள், பரஸ்பரத்தில், (கிருஸ்தவர், இஸ்லாமியர்கள் போல) வெட்டிக் கொலை புரிந்து கொள்வதை எங்காவது யாராவது பார்த்ததுண்டா? சற்று சிந்தியுங்கள். இது தான் வேத வழிக்கும் மற்ற இஸ்லாமிய கிருஸ்தவ வழிகளுக்கும் உள்ள மற்றொரு முக்கிய வித்தியாசம். ஹிந்துக்களுக்கும் ஒரே கடவுள், ஹிந்துக்களின் புனித பெட்டக நூல்களின் ஆதாரம் (Source Books) ஒன்றே தான்.
20. மற்ற சமயங்கள் போலல்லாமல், ஹிந்து சமயம் ஒன்றில்தான் எல்லா உலகத்துக்கும் ஒரே கடவுள் எனவும், அவரை மனதார உணரும் நிலையை அடைவதற்கு, வழியையும், காட்டுகிறது.
பொதுவாக நாம் காண்பது, ஒவ்வொரு சமயமும், ஒரு நிலப்பரப்பைச் சார்ந்த மக்களுடைய சரித்திரம், பின்னணி, அல்லது முன்னேற்றம் ஆகியவகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஹிந்து சமய கலாச்சாரமோ, பிரபஞ்ச அடிப்படையில், இந்திய மக்களைச் சார்ந்ததாக மட்டுமில்லாமல், உலகிலுள்ள எல்லா பிராந்தியங்களுக்கும் சார்ந்ததாகி, அநேக உருவளவைச் சார்ந்த பிரபஞ்சத்திலிருக்கும், பலதரப்பட்ட கிரகங்களையும் சார்ந்து, ஒரு முன்னறியும் திறனுடனுடன், தூய்மையான பார்வையுடன், எந்த அம்சத்தையும் மிகைப்படுத்திக் கூறாமல், அதே தருணத்தில் ஒன்றையும் புறக்கணிக்காமல், மிகப் பொருத்தமான உருவமைப்பு, தொலைவு, ஆகியவற்றைக் குறித்துச் சரியான கருத்தைத் தோற்றுவிப்பதாகவும் காணப்படுகிறது. ஆகையால்தான், வேத வழி ஆன்மீக தத்துவங்கள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் உகந்ததாக, தக்க போதனைகளை அளிக்க முடிகிறது.
வேதவழி கடவுளைப்பற்றி கண்மூடித்தனமான அபிப்பிராயங்களைத் தழுவியதல்ல அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் சரித்திரத்தைச் சார்ந்ததுமல்ல. வேத தத்துவங்கள், படைப்பு ஆரம்பித்த நாளிலிருந்து இருக்கும் இயற்கையின் விதிகள், செயல் ஒழுங்கு முறைகளை, அடிப்படையாகக் கொண்டது. இதனால் தான், பிரபஞ்ச விதிகளும், வரையறுத்துக் கொண்ட பிரபஞ்ச ஒழுக்க நியதிகளும் எல்லாருக்கும் பொதுவான சட்ட திட்டங்களும் வேதவழி செயல் முறைகளில் உள்ளடங்கியது. வேத பாடங்களில் உள்ள இவ்வேத வழிக ளைப் பின்பற்றும்போது, இதன் விளைவாக, ஆன்மீகத்தில் ஒருவர் இயற்கையின் ஒழுக்க நியதிகளை தங்கள் புலனாற்றலால் கூர்ந்து கவனித்து, மிகுந்த உயர் நிலையான மன-விழிப்பு-நிலையில், (consciousness) இறையை நன்கு புரிந்து கொண்டு, அவ்விறையே நம் ஒவ்வொருவருள்ளும் சுடரொளியாக, (சிறு துகளாக) உள்ளார் என்பதை நேரிடையாகவே அறிந்து, அகத் தெளிவு பெற முடியும். இம்முறையில் ஒருவர் தங்களுடைய ஆன்மீக அடையாளங்களை மனதால் உணர்ந்து கொண்டு, படைப்புகளில் உள்ள ஒற்றுமைகளையும் அறிந்து கொள்ள முடியும். இதனால்தான் வேத தத்துவங்கள் அனைத்திலும் பிரபஞ்ச அணுகுமுறையையே அடிப்படையாகக் கொண்டது என வேத வழி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள்.
வேத வழி ஒரு பிராந்திய அறிவாற்றலால், கடவுளைப்பற்றி கண்மூடித்தனமான அபிப்பிராயங்களைத் தழுவியதல்ல என முன்பத்தியில் கூறி இருக்கிறோம். அக்கருத்தை மீண்டும் வலியுறுத்த, வேதவழி என்பது ‘இந்தியர்களையும், இந்திய பிரதேசத்திற்கு மாத்திரமே உரியதும் அல்ல, சார்ந்ததும் அல்ல. ஆனால், இதில் குறிப்பிட்ட அநேக நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடந்தபோதும், இந்திய காப்பியங்களான மகாபாரதத்தையும், மற்ற புராணங்களைச் சார்ந்து இருந்தும் கூட, அல்லது இதில் கூறப்பட்டுள்ள ஏராள வேதகால ஆட்களும், அவதாரங்களும், ஆங்கே சித்தரிக்கப்பட்ட பற்பல செயல்கள் (போர், சமாதானம், உறவுக்குள் சண்டை, சச்சரவு, நல்லது, கெட்டது, விளையாட்டு, ஓய்வு நேர பொழுது போக்கு முதலியன), இருந்தபோதிலும், இக்காப்பியங்களில், (மகாபாரதம், மற்ற புராணங்களில்) இந்தியாவுக்கு வெளியில், அநேக கிரஹங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும், அக்காப்பியங்களில் கூறும் போதனைகள், தத்துவங்கள், யாவுமே, ஆன்மா சம்பந்தப்பட்ட அறிவியலைச் சார்ந்ததேயாகும். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். உலகில் உயிருடன் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ’ஆன்மா’ என்பதைச் சார்ந்தது. ஆகையால், ஆன்மாவைப்பற்றிய அறிவு, தெரிந்துகொள்ளல், எந்த ஒரு பிராந்தியத்தையோ, அல்லது ஒரிடத்தில் வாழும் மக்களையோ, சார்ந்ததல்ல. இது எல்லாவற்றிற்கும் உரிய, பாதிக்கிற, உள்ளடக்கிய, எங்கும், எல்லா நிலைகளிலும் உள்ள, மனித இனம் முழுதுக்குமே ஏற்றது. ( It is universal).
மேற்கூறிய யாவுமே, கடவுளைப் பற்றிய அனுபவ அறிவைச் சார்ந்தது. வேத மனோபாவத்தில் கடவுள் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு உரியதோ, அல்லது ஓரினத்தைச் சார்ந்ததாகவோ, அல்லவே அல்ல அல்லது இதில் குறிப்பிட்ட ஒழுங்கு முறைகள், தொழுகைகள், ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக, செய்யப்பட்டதும் அல்ல அல்லது ஓரின மக்கள் தான், தனிப்பட்ட முறையில் இவைகளைச் செயல்படுத்தப்பட வேண்டியது என்பதுமல்ல. இக்கடவுள், யூதர்களுக்கோ, ஹிந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, அல்லது எந்த சமயத்தாருக்கோ தனித்தனியாகப் பொறுக்கி எடுத்து அவர்கள் தான் பிரத்யேகமாக, செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரையறுக்கப் பட்டதும் அல்ல. இக் கட்டுப்பாடுடன் கூடிய குறுகிய மனோபாவம் வேத வழிக்குள்ளும், வேத மரபுக்குள்ளும், இல்லவே இல்லை. வேதபாட நூல்களில், கடவுளைப் பற்றி விவரமாக குறிப்பிட்டபடி, கடவுள் தாம் படைத்த எல்லாவற்றிடமும் அன்புள்ளவர், தாம் படைத்த ஒவ்வொன்றின் மீதும் (விதி விலக்கில்லாமல்) அக்கறை கொண்டவர், படைத்தவைகள், மானிடர் மட்டுமின்றி, எல்லா ஜீவ ராசிகளிடமும் பற்று உற்றவர், படைத்த பூவுலகம் எனும் ஒரு கிரஹத்தில் மட்டுமின்றி, மற்ற எல்லா கிரகங்களில் உள்ளவைகள் எல்லாவற்றிலும் (புழு, பூச்சி, பூண்டு ஆகியவைகள் மீதும் அக்கறை கொண்டவர் என்றுதான் வேத வழி நூல்கள் கற்பிக்கின்றன. கடவுளால் படைக்கப் பட்டவைகள் எங்கிருந்தாலும், எவ்வித உருவங்கொண்டிருந்தாலும், கடவுள் மிக்க அக்கறை கொண்டு, எல்லாவற்றிலும் பற்றுடன் உள்ளார் என, தான் படைத்தவைகளும் உணரவேண்டும் எனும் நல்லெண்னமும் உடையவர், இக்காரணங்களுக்காகவே தான், அவ்வப்போது தானாகவே, அவதாரம் எடுத்துக் கொண்டு நம் முன் தோன்றுகிறார்.
இன்னும் மேலாக, ஹிந்து சமயம், உலகத்திற்குத் தலைமை ஆசிரியரையோ, அல்லது தனி ஒரு மனிதரையோ அடையாளங்காட்டி, அதன் அடிப்படையில் செயலாற்றுவது இல்லை. கத்தோலிக்க கிருஸ்தவ சமயத்திலுள்ளபடி, ஒரே ஒரு “போப்” என்பவர் மட்டும் தான் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் மீது ஏக போக உரிமை பெற்றவர், தன் அதிகரம் (எதுவானாலும்) செலுத்தத்தத் தக்கவர், ஆக உலகிலுள்ள எல்லா கத்தோலிக்க கிருஸ்தவர்கள் அனைவரும் “போப்” எதெது ஆணையிடுகிறாரோ, அவைகளுக்கு மறுப்பு, வெறுப்பின்றி, கீழ்ப்படியவேண்டும் என்பது போல, வேத வழிகளில் கிடையவே கிடையாது.
எந்த மாணவர் / சீடர், எந்த குறிப்பிட்ட ( ரிக், யஜுர், சாம வேத வழி) ஆன்மீக ஆசிரியரிடம் முறையாக தீட்சைபெற்று வேத பாடங்களைக் கற்று இருந்தாலும், அவரவர் ஆசிரியர் கற்றுக்கொடுத்த வேத வழி, மரபுகள் மட்டுமல்லாது, மற்ற வேத வழியில் மிகச்சிறந்த ஆசான்கள் காட்டிய வழிகளிலும் தக்க பயிற்சிபெற்று மிகச் சிறந்த தேர்ச்சியையும் பெறவேண்டும் எனவே செயல்படுகிறது. வேதவழியைப் பின்பற்றும் போது ஒவ்வொருவருவரும் சரியான தடத்தில் செல்கிறார்களா அல்லது இல்லையா, எல்லா நற்போதனைகள் நன்கு பின்பற்றப் படுகின்றனவா என பற்பல இடங்களில், ஒழுங்குமுறைத் தராசுக்கோலால் சமநிலையில் உள்ளதா என பரிசோதிப்பதையும் வேத (மரபு) வழக்கங்கள் பரிந்துரைக்கின்றன. இதற்கான தேர்வுத்திட்டங்கள் பல குறிப்பிட்ட இடங்களில், தக்க ஆன்மீக குருக்களாலும், சாதுக்களாலும் (ஆன்மீகத்தில் குண நலன்களால் நிரூபிக்கப்பட்ட நிபுணர்களாலும்), பரீட்சை அதிகாரிகளாக (examiners) – வருடாவருடம் அநேக பொது இடங்களில் ஆன்மீக-மாணாக்கர்களை தேர்வு செய்கிறார்கள். இவைகளைத் தவிர வேத நூல்களில் தகவல் நிறைந்த நிர்ணயிக்கப்பட்ட பாடங்களும் உண்டு. இந்நூல்களில் உள்ளவை வேற்றுமையில்லா போதனைகளக் கொண்டதால், எங்கும் எதிலும் இடர்பாடில்லை. சில இடங்களில் பாட-விளக்கங்களில் வேற்றுமைகள் எழும்போது, நன்கு விவாதித்து, விசாரணைசெய்து, ஏற்றவர்களால், நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், எல்லாமே தெளிவாக எல்லாராலும் ஏற்கும்படியாகவும் உள்ளது. இதனால், வேத வழி மாணாக்கர்கள் செல் தடம் சரியாக உள்ளதா எனவும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் மற்றொரு விளைவு. அதாவது மாணாக்கர்களும், நல்லாசிரியரிடம் தங்கள் பாடங்களை முரண்பாடற்ற முறையில் கற்றுக் கொள்கிறோம் எனவும் (சுய) திருப்தியையும் அவர்களுக்கு அளிக்கிறது.
21. ஹிந்து தத்துவங்கள், எல்லா உயிரினங்களிலும் கடவுளைக் காண ஊக்கமளிக்கிறது:
கடவுளைப்பற்றி வேண்டிய விரிவுரைகளுடன், ”கடவுள் எல்லா உயிரினம் ஒவ்வொன்றின் உள்ளும் உறைந்துள்ளார்” என வேத புனித நூல்கள், எடுத்துரைத்து நம் முன்னுணர்வை ஐயமற, அதிகரித்துக் கொள்ள, தேவையானவற்றை சேகரித்துக் கொடுக்கின்றன. வேத நூல்களில் உள்ள பாடங்களை ஆர்வமுடன் ஆழ்ந்து ஆராய்ந்த பின், நமக்குள் முன் இருந்த கடவுள் உணர்வு இன்னும் அதிகரித்த்து, பரமாத்மாவான கடவுள் (Supersoul), ஜீவாத்மாவான (individual soul) நம் ஒவ்வொருவரிடம் உள்ளார் என வித்தியாசமான உணர்வு நமக்குத் தன்னால் ஏற்பட்டுவிடும். இம்மாதிரியாக விளக்கிப் பொருள் கூற, வேத நூல்களில் உள்ளது போன்று வேறு எந்த நுல்களிலும், எந்த இடத்திலும் காண இயலாது. இத்தகவல் கொண்டு, உயிர் வாழும் ஒவ்வொரு ஜீவனுள்ளும், (நாம் எல்லோரும் உள்பட), அப்பரம்பொருளின் ஒரு சிறு பகுதி எனவும், மிகச்சிறிய அத்தெய்வத்தன்மை நமக்குள் இருப்பதையும் காணலாம். இந்த முன்னுணர்வுள்ள மன உணர்வால் கடவுளால் உருவாக்கப்பட்ட உயிர்வாழும் ஒவ்வொரு பிராணி மீதும், இயல்பாகவே, நமக்கு மரியாதையும் அக்கறையும் அதிகரித்து விடுகிறது. ஆக, நம்முள் கடவுள் உள்ளார் என்றவுடன், நம் மனதைத் தெளிவாக்கி, ஒவ்வொரு உயிரும் நமக்குப் புனித உறவுமாகிவிடுகிறது. இந்த அறிவால், நாம் கடவுள் படைத்த எதையும் யாவரையும் நேசிக்கவும், மற்றவர்களோடு ஒத்துழைத்து பரஸ்பரம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் எண்ணம் உருவாகிக் கொள்ளலாம். வேத வழி வந்த ஹிந்து தத்துவங்கள்தான் எல்லா உயிரினங்களிலும் கடவுளைக் காண ஊக்கமளிக்கிறது. (இதனால் வெறுப்பு, அதன் தொடர்ச்சியாக மதப்போர், சுவர்க்க உத்திரவாதம், புனித ஏமாற்றல், கொலைகளேது?)
[[[ஒவ்வொரு ஹிந்து வேத வழித் தொழுகை முடிவில்,

”உலகெங்கும் உள்ள யாவும் (கடவுள் படைத்தவை அனைத்தும்) சுகமாக வாழ வேண்டும், எல்லாவற்றிகும் (எல்லோருக்கும்) எல்லாவித மங்களங்களும் உண்டாகட்டும்” –

“லோகா: ஸ்மஸ்தா: சுகின: பவந்து; |
சமஸ்த சன் மங்களானி சந்து|| ”

लोका: समस्ता: सुखिन: भवन्तु ।
समस्त सन् मंगळानि सन्तु॥

– என வாழ்த்துக் கூறி முடிப்பது வழக்கம்]]]
.
(இனி, தொடரும் 6வது பகுதியே இக்கட்டுரையின் கடைசி பகுதியாகும்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 4

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் – தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்


11. ஹிந்து சமயமே, பொருள் பொதிந்தியது, முற்றிலும் பயன் படுத்திக் கொள்ள சாத்தியமானது, இறைவனிடம் நமக்கு இருக்கவேண்டிய ஈடுபட்டை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்று, ஆத்ம திருப்தியையும் அளிக்க வல்லது.
சங்கீதம், நாடகம், நடனம், சிற்பம், சதுரங்கம், ஓவியம் முதலிவை வெறும் புலன் சார்ந்த இன்பத்திற்குரியது, ஆகவே தவிர்க்கத் தக்கது, எனத் தங்கள் புனித நூல்களில் சொல்லப் பட்டவை களை மேற்கோளாகக் காட்டி, அதன்படி, எல்லோரும் அனுசரித்தாக வேண்டுமெனக் கூறி, இவ்வுன்னத மரபுகள் அனைத்தையுமே, அழித்து விட ஒரு சமயம் துடிக்கிறது.

ஆனால், சங்கீதமே உலகில் வேண்டாம் என்பவர்கள், தங்கள் சமயக் கொள்கைகளை மட்டுமே பரப்ப, தங்களுக்கென ஒரு பிரத்யேக இசைப் பாணியையும் அமைத்துக் கொண்டு சங்கீதத்தை உபயோகித்துக் கொள்ள என்றும் தயங்கியதில்லை! காரணம், இவர்களைத் தான் கேட்கவேண்டும்?!

[[[ ……………….. ↓

• மிகத் தொன்மையான மரபு சார்ந்த உன்னத (சாஸ்த்ரீய) சங்கீதம், நாடகம், நடனம், சிற்பம், போன்றவைகள்,
Prohibited as per Sahih Bukhari Volume 007, Book 069, Number 494 —-Sahih Muslim Book 024, Number 5279
• மிகப் புராதன இந்தியக் கண்டுபிடிப்பான, சதுரங்கம், போன்று, குறிப்பிட்ட சூழ்நிலையில் சடுதியில் பகுத்தாயும் திறனையும், மேலும், மதிநுட்பத்தை அதிகரிக்கப் பயிற்சியை அளிக்கவல்ல, போர்த்திற நடவடிக்கைக்கு ஒப்பான விளையாட்டு,
Playing chess is completely prohibited, as per Sahih Muslim Book 028, Number 5612 and Malik’s Muwatta Book 52, Number 52.2.7; Al-Muslim Vol IV – No. 5612– Chapter: CMXLVI
• இவைகள் போன்ற மற்ற கலைகள் சம்பந்தமான, Drawing Pictures and images prohibited: ref: Sahih Bukhari Volume 003, Book 034, Number 428 — Sunan Abu Dawud Book 001, Number 0227, Book 032, Number 4140 – Book 027, Number 3746
• உடலில் பச்சை குத்திக் கொள்வது
prohibited: ref: Sahih Bukhari Volume 003, Book 034, Number 299; Sahih Bukhari Volume 003, Book 034, Number 440; Sahih Bukhari Volume 007, Book 072, Number 829, Sahih Bukhari Volume 007, Book 072, Number 845 ]]]

இருப்பினும், வேத வழி ஒன்றில்தான் ஒவ்வொருவருடைய மனதிலுள்ள தூய்மையான உணர்வுகளை அநேக செயல் பாணிகளில் இணைத்து, அதாவது சங்கீதம், நாடகம், நடனம், சிற்பம், இவைகள் வாயிலாக, சர்வ சுதந்திரத்துடன் வெளிப்படையாகக் காண்பிக்க ஊக்கமளிக்கிறது. இம்மாதிரி ஒவ்வொருவருடைய-மனதிலுள்ள ’உணர்வு’களை வெளிப்படையாகக் காண்பிப்பதையும், சொல்ல விரும்புவதையும் பரம்பொருளுக்கு தொண்டு செய்யும் கருத்தோடு தான் உபயோகிக்கப்படுகிறது. ஆகவே, இம் ’மன உணர்வை’ இவ்வாறு வெளிப்படுத்துவதால், இறைவனின் மீது ஒருமுகப் படுத்திக் கொண்ட ஈடுபாட்டில், ஏதாகிலும் தவறு நேர்ந்து விடுமோ என்ற பயம் கலந்த கவனத்தைச் செலுத்தி, இறைத் தொண்டிற்கே இசை போன்ற கலைகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். இப்படியாக மரபு சார்ந்த உன்னத சங்கீதம், நாடகம், நடனம், சிற்பம், இவைகளைக் கூட ஆன்மீக ஆற்றலாகவும், இறைவன் மீது கொண்டுள்ள பக்தி உள்ளத்தை வேத வழிகளில் மேம்படுத்திக் கொள்ளவும், உபயோகப் படுத்தப் படுகிறது.
வேத ஒழுங்கு முறையில் இறை வழிபாடு என்பது, காலங்காலமாக முக்கிய அங்கமாக வகித்து வருகிறது. வேத இலக்கியங்களில் பக்தியூட்டுகிற, வர்ணனை மிக்க மந்திரங்களும், கவிதைகளும், இறையருள் வேண்டி கடவுட்பற்றுள்ள வழிபாடுகள் ஏராளமாக இருக்கிறன. இவைகள் பிரதி தினமும் இறைவனிடம் முழு ஈடுபாடோடு பக்தி செலுத்தவும், தியானத்தில் மூழ்கவும் பயன்படுத்தப் படுவதோடு மட்டுமல்லாமல், இவைகளைத்தும் பாட்டுகளிலும் இணைத்து தனியாகவோ, அல்லது கூட்டிசைத்தோ பாடப்படுகிறது. இவ்வழிபாட்டை தனித்தனியாக தங்கள் வீடுகளிலோ, அல்லது கூட்டாகவே, அல்லது கோவில்களிலோ, அல்லது கோவில்களில் உள்ள சிலைகள் முன்பாகவோ, செய்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.
[[[கோவில்கள், சிலைகள் ஏன், எதற்கு என கேட்பவர்களுக்கு இதைக் கூறலாம்:

– WHY WE HAVE SO MANY TEMPLES, IF GOD IS EVERYWHERE?
A WISE MAN REPLIED:” AIR IS EVERYWHERE, WE ALL KNOW, BUT WE STILL NEED A FAN TO FEEL IT”]]]
வேத கலாச்சாரத்தில் எல்லாவித (சாஸ்த்ரீய) சங்கீதமும் உண்டு. ’காச்யப புரா’விலிருந்து (அதாவது மொகலாயர் வழங்கிய பெயரான – காஷ்மீரிலிருந்து) கன்யாகுமாரி வரை வியாபித்திருக்கும் தெய்வங்களை அடிப்படையாகக் கொண்ட மரபு சார்ந்த இந்திய சங்கீதத்தை ஒருவர் கேட்கும் போது, இனிய இச்சங்கீதம் கேட்பவர் கவனத்தையும் உள்ளத்தையும் உடனுக்குடன் ஈர்க்கிறது. ஆங்கே தெய்வீகம் எல்லா பக்கங்களிலும் சூழ்ந்துள்ளதாக (ambience) உணர முடிகிறது. சங்கீதமே வேண்டாம், என சங்கீதத்தை வெறுப்பவரை, ‘ஔரங்கசீப்” என ஏன் சொல்கிறோம்? இப்போது புரிகிறதல்லவா! இந்திய சாஸ்த்திரீய சங்கீதம் உலகிலுள்ள எல்லா சங்கீதங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக ஆனால் எவ்விதத்திலும் மிக மேம்பட்டதாகக் காணலாம். இந்திய இசை ஒரு விதிக்குட்பட்டு, ஒவ்வொன்றும், ராக, தாள, லய சந்த ’பாவ’த்துடன், இந்திய சங்கீதமே ஒரு அறிவியல் போன்று, கணித நுண்ணறிவு அடிப்படையில் படைக்கப்பட்டதென, என கேட்பவர்களுக்கு தாமதமின்றி எடுத்துக்காட்டி விடும். இவைகள், பலவித இசைக் கருவிகளோடு இசைப்பதோடு மட்டு மல்லாமல், இவைகளில், அநேக பாணிகளில் பக்திக்கென்றும், தொழுகைக்கும், நடனங்களுக் கென்றும், நாடகங்களுக்கும் அல்லது பல தரப்பட்ட சடங்குகளுக்கென்றும், ஒவ்வொன்றிற்கும் இடம், காலம், மன நிலைக்கேற்பக் கேட்கலாம். இந்திய சங்கீதம் அநேக மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற (variables and permutations & combinations) திறனுள்ள தகைமை உடையது என கேட்பவர்களை வியக்கவைத்து ஆனந்தப்பரவச மூட்டுகிறது. மேலை நாட்டு இசைக்கருவிகளைக் கூட இந்தியர்கள் தங்கள் சங்கீதத்திற்கும் ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்துகொண்டு, குறுகிய நோக்க மின்றி, அவைகளையும் தனதாக்கிக் கொண்டு, மேலை நாட்டவரே போற்றி அதிசயிக்கும் வண்ணம், உபயோகிக்கிறார்கள்.
இந்தியாவில் அநேக இயல்புகளைக் கொண்ட பொருள் பொதிந்த சடங்குகளும், மரபு முறையில் செய்யப்படும் கடவுள் வழிபாடுகளும் உண்டு. இவைகளில் சில, கோவில்களிலும், சில வீடுகளிலும், சில திறந்த வெளி அரங்குகளில் அங்கு குழுமியுள்ள எல்லாரும் சேர்ந்து பங்கேற்றுக்கொள்ளும் வகையிலும் நடத்தப்படுகிறது. சில சடங்குகள் வேத வழி தெரிந்த பண்டிதர்களால் நிகழ்த்தப்படுகிறது, அப்படிச் செய்யும் போது குழுமியுள்ள மக்கள் யாவரும், பக்தி சிரத்தையுடனும், மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். அநேக மரபுசார்ந்த வழிபாடுகள நடனத்தில் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வித நடனங்கள் மிகப் புராதன அசைவுகளாலும், முக பாவங்களாலும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாறு நடனம் செய்யும் முறை, முன் தலைமுறையிலிருந்து பின் வந்த தலைமுறை யினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அரங்குகளில் நடத்தப்படுகின்றன. இவற்றில் பல நடனங்கள், அந்தந்த மொழிகளில், கலைஞர்களுடைய விளக்கங்களுடன் இந்திய புராண, இதிஹாசங்க ளிலிருந்தும் வேத இலக்கியங் களிலுள்ள இறைவன் சம்பந்த கதைகளில் உள்ள நிகழ்ச்சிகளை மையமாக வைத்து, நாடகங்களும், நடனங்களும் நிகழ்த்தப்படுகின்றன.
[[[ புராண, இதிஹாசங்களுக்கான விளக்கம் — (पुरादपि + नवम्) (புராதபி + நவம்) = புராணம் = பழைய நிகழ்ச்சியாகக் கூறப் பட்டாலும் என்றும் புதிது (என்றும் உபயோகமானது); (इति + ह) = (இதி ஹ) = இதிஹாசம் = இவ்வாறு நடந்தது = சரித்திரம் = History)]]]
பெரும்பாலும் இவைகள் ஓய்வு நாட்களிலும், பொது விழாக்களிலும் பண்டிகைகளிலும் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய நாடக நடனங்களில், ஒவ்வொரு இந்திய பிரதேச (பிராந்திய) பண்பாடுகளின் பின்னணியில், விதவிதமான ஆடை அணிகலன்கள், நாட்டிய நாடகங்கள், காலங்களுக் கேற்ற ஒப்பனைகளுடன், தங்களுக்கே உரிய வெவ்வேறு பாணிகளில், அந்தந்த கதைப் பாத்திரங்களுக்கேற்ற உணர்ச்சி பாவங்களோடு, மிக வியக்கும் வண்ணம் கண்டு களிக்கலாம். இதைப் பார்பவர்களுக்கு, பழைய வேத வழி பாரம்பரியம், மற்ற உலக பாரம்பரியங்களைக் காட்டிலும் எவ்வளவு மிகச் சிறப்பானவை என தெள்ளத் தெளிய தெரியவரும். உலகில், பல இடங்களில் நானும் பற்பல நாடக நடன நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்ததுண்டு. ஆனால், அவைகள் இந்திய பாரம்பரிய நிகழ்ச்சிகளைப் போன்று எவ்விதத்திலும் சிறப்பானவை அல்லவே அல்ல என்னால் தக்க காரணங்கள், சான்றுகளுடன் தெளிவாக நிரூபித்துக் கூற இயலும்.
மேற்கூறியவைகளைப் போல வேத கலாச்சாரத்தைச் சேர்ந்த அணிகலன்கள், ஆபரணங்கள், நகைகள் ஆகியவைகளுடன், அழகு எனும் சொல்லுக்கு பொருள்விளக்கம் தந்துகொண்டு, மனதை கொள்ளை கொள்ளும் ஓவியங்களும், கடுஞ்சிக்கலான சிற்பங்களும், (intricate designs in sculpture) வெறும் வார்த்தைகளால், பாராட்ட இயலாது. இவைகள் யாவும், மனிதர்களால் உண்மையாகப் படைக்கப் பெற்றாலும், இவைகளை இவ்வளவு அழகுடன் படைத்தது மனித உருவில் வந்த எல்லாம் வல்ல இறைவனின் கை வண்ணம் தானோ, என வியக்கும் வண்ணம் உள்ளது. (“ यह .खूबसूरती .कुदरत ने अपने हात से बनाया “ = “யே .கூப்சூர்தி .குத்ரத் நே அப்னே ஹாத்சே பனாயா” = இறைவனே ( .कुदरत = .குத்ரத்) மனித உருவில், தன் கைவண்ணத்தை இவ்வழகுச் சிற்பத்தில் காட்டி இருக்கிறாரோ என இருக்கிறது) இறைவனின் பற்பல வெளிப்படைத் தோற்றங்களையும், மகிழ்ச்சியுடன் இனியவர்களுடன் பொழுது போக்குவதற்குரிய செயல்களையும் காட்சிக்குரியதாகவும் கவனத்துடன் இறை வழிபாட்டிற்குச் சித்தரிக்கப்படுகிறது. ஓவியம், சிற்பம் ஆகியவைகள் மதித் திட்ப நுட்பம் நிறைந்த அறிவியலைச் சார்ந்ததே. இவைகளில் முறையாக பயிற்சி பெற்ற கலைஞர்களால் தான் மிகச் சிறந்த ஓவியங்களும், கண்ணுக்கினிய சிற்பங்களையும் வடிக்க இயலும். வேத வழியில், எந்த கலைஞனுக்கும், தங்கள் மனதில் உள்ள உணர்வுகளையும் இறைவனிடம் இருக்கும் பக்தியையும் வெளிப்படுத்த நல் வாய்ப்பு அளிக்கப் படுகிறது. இதைப்போன்ற கலைகள், ஆன்மீகத்தில் அவர்களுக்குள்ள தெளிவான அறிவையும், உணர்தலையும், தெளிவு பெற்ற நிலையையும் வெளிக்கொணர்கின்றன. இதைக் கண்டு களிப்பவர்களுக்கு இறைவனைப் பற்றி அகத் தூண்டுதலையும் உண்டாக்கி விடுகிறது.
இம்மாதிரியாக, மனித உள்ளத்தில் உருவாகும் இயல்புகளை எண்ணற்ற முறைகளில் எடுத்துக் கூறும் வழக்கம் ஹிந்து சமயத்தில் இருப்பதால் தான், வேத வழியே நல்வினை நல்குவதாகவும், நாம் எப்போதும் ஆன்மீகத்தில் மனதளவில் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாககவும் வேத வழி விளங்குகிறது.
12. உணவிலிருந்து, வாழும் பாணி, தினசரி செய்ய வேண்டிய காரியங்கள் ஆகியவைகளை அறிவியலுக்குரிய முறைப்படி வாழ்க்கையில் அமைத்துக்கொள்ள, ஹிந்து சமயம், வேத கலாச்சாரம் நமக்குத் திருப்தி அளிக்கும் வகையில் வழி காட்டுகிறது:
உலகாயதத்தில் நேர்மையுடன் பொருளீட்டவும், ஆன்மீகத்திலும் வாழ்க்கைப் பாணிகளை அமைத்துக் கொள்ளவும் வேத புனித நூல்கள், சம நிலையில் நமக்கு வழி காட்டுகின்றன.
உதாரணமாக, வேத வழி விளக்குவது:
முதலில், தியானம்: ஆழ்ந்த இறை சிந்தனைக்கு உகந்த காலம், விடியற்காலை. அதாவது ’ப்ரம்ம முகூர்த்தம்’ எனச் சொல்வார்கள். இது சூரிய உதயம் ஆவதற்கு சற்று முன்பாக உள்ள நேரம். காரணம், கழிந்த இரவில் நல்ல உறக்க-ஓய்வுக்குப் பிறகு, விடியற்காலையில் தான் மானிடருக்கு இயல்பாக இருக்கும் நல்லொழுக்கம், பாச உணர்வு, அன்புடமை, தாராள குணம் முதலியன மாற்றமடையாத நேரம், அதாவது சாத்வீக குணம் நிறைந்த காலம். ஏனெனெல், இந்நேரத்தில் தான் அன்றாட உலகாயத தினசரி வாழ்க்கை நடப்பில் ஏற்படும் சத்தம், நடவடிக்கை, சச்சரவு, எல்லாவித எண்ணங்கள் உதயமாக ஆரம்பிப்பதற்கு முன் உள்ள காலம். ஆகவே இக்காரணங் களுக்காகத் தான் தியானத்திற்கு விடியற்காலை மிக உகப்பானது.
இரண்டாவதாக உணவு: சாதாரணமாக, நண்பகல், (உச்ச வேளை) ஏறத்தாழ பகல் பன்னிரண்டு மணி அளவில் உண்ட உணவை ஜீரணிக்கச் செய்யும் ஜடராக்னி அமிலம் வயிற்றில் அதன் உச்சகட்டத்தில் உற்பத்தியாகி இருக்கும் நேரம். (hydrogen + sodium chloride à Hydrochloric Acid (HCl) – நீரியமும் (தண்ணீர்) லவணசாரமும் = ஜடராக்னி அமிலம். அதாவது சூரியன் தன் கொளுத்தும் சூட்டை, உச்சகட்டத்தில் உலகுக்களிக்கும் நேரத்தில் உணவை உண்டால், உணவு நன்கு ஜீரணிக்கப்பட்டு, அஜீரணமும் அதன் தொடர்புள்ள வயிற்று நோய்களும் உண்பவரை அணுகாது. உண்ணும் உணவை காலாகாலத்தில் உண்ணாதது தான் வயிற்றுக் கோளாறுகளுக்கு மூல காரணம். கண்ட நேரத்தில் கண்ட உணவை உண்பதால், அஜீரணமும் அதன் தொடர்புள்ள வயிற்று நோய்களும் உண்டாகின்றன என வேத வழி ஆயுர் வேத (Ayur Veda) மூலமாகத் தெளிவாகச் சொல்கிறது.
உண்ணும் உணவும் எந்தெந்த காலத்தில் உண்ண வேண்டியது, என மட்டுமல்லாமல், அதில் நல்லுணவின் உள்ள குணாதிசயங்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. உணவு வகைகளில்
1. நல்லொழுக்கத் தரும் உணவு (Sattvic = goodness)
2. சீற்றம், காம உணர்ச்சி, உண்டாக்கும் உணவு (Rajasic = passion)
3. உடல், மனது ஆகியவைகளுக்குத் தீமை, கறை பயக்கும், உணவு (Tamasic = darkness)
என வகுக்கப்பட்டுள்ளது
சாத்வீக உணவு – நல்லொழுக்கம் தரும் உணவு (Sattvic = goodness), அதாவது, சைவ உணவுக் கோட்பாடுள்ளது, (புலாலில்லாத உணவு) பழங்களும், காய் கறிகளும், நமக்கு சிக்கலற்ற உடல் நலம், மன அமைதி, மன நிறைவு, மனத் தெளிவு முதலியவைகளை ஊக்குவித்து, நம்மைப் பேணுகிறது.
ராஜச உணவு – சீற்றம், காம உணர்ச்சிகளை உண்டாக்கும் உணவு {(Rajasic = passion) அதாவது சுவை மிக்க நாவின்பம் தரும் உணவு (जिह्वा चापल्यम्), ஜிஹ்வா சாபல்யம்} நாக்கு சபலத்தால் அவ்வுணவின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி, நறுமணமும் காரசாரமும் நிறைந்த உணவு (spicy). இவ்வுணவு, மனக்கிளர்ச்சி, கோபம், காம உணர்ச்சி, பேன்றவைகளை இதன் தொடர்புள்ள நோய் நொடிகளை அளிக்கவல்லது.

ஒரே மேற்கோள்: ராஜச உணவை உண்பதால் உண்டாகும், ராஜச குணத்தால் விளையும் ”கோபத்தை”ப் பற்றி, கண்ணன் சொன்ன கீதையில் ப.கீ: 2-63 இல் கூறியபடி:

क्रोधाद्भवति संमोह:, संमोहात् स्मृतो विभ्रम: । स्मृति भ्रंशात् बुद्धिनाश:, भुद्धि नाशात् प्रण्श्यति ॥
க்ரோதாத் பவதி சம்மோஹ: சம்மொஹாத் ச்ம்ருதி விப்ரம: | ச்ம்ருதி ப்ரம்சாத் புத்தி நாச: புத்தி நாசாத் ப்ரணச்யதி ||

சினத்தால் à மனக்குழப்பம்; மனக்குழப்பத்தால் à நினைவு தடுமாற்றம்; நினைவு தடுமாற்றத்தால் à புத்தி நாசம் (நியாய அநியாங்களை சீர்தூக்கிப்பார்க்கும் திறனின்மை); புத்தி நாசமானதால்à மானிடரே முடிவில் அழிவை அடைந்து விடுகின்றனர்.

From anger produces delusion, from delusion confused memory, from confused memory the ruin of reason, due to ruin of reason, the human being ultimately perishes.

தாமச உணவு: உடல், மனது ஆகியவைகளுக்குத் தீமை, கறை பயக்கும் உணவு, (Tamasic = darkness) அதாவது, நல்ல சுவையும் இருக்காது, ஆனால், இவை பழைய உணவாகவும், புளிக்க வைத்த விபரீத சுவையுடன் கூடிய (fermented) உணவாகவும் இருக்கும், ஊட்டச்சத்தில்லாதது, மீண்டும் மீண்டும் உட்கொள்ளத் தூண்டி (alcoholic) மனதை தவறான வழிக்கு இட்டுச்செல்லும், சோம்பேறித் தனத்தை வளர்த்து, தூக்கத்திலும், முடிவாக, எப்போதுமே துன்பத்திலும் ஆழ்த்திவிடும்.
இவ்வாறாக, உணவைப்பற்றி ஒளிவு மறைவின்றி ஆர்வத்துடன் ஆழ்ந்து சிந்தித்து, நமக்கே நாம் வழி காட்டிக்கொண்டால், நாம் ஒவ்வொருவரும் மன நிறைவுடன் அமைதியுடன் வாழ்க்கை நடத்தலாமல்லவா! ; இங்கே — (மகா கவி காளிதாசர் எழுதிய ’குமார சம்பவ’ காவியம் – 5வது சர்கம், 33வது ச்லோகம் ) ஏனெனில், “अपि क्रियार्थं सुलभं………..। अपि स्वशक्त्या तपसि….. शरीरं आद्यं खलु, धर्म साधनम्” ”சரீரம் ஆத்யம் கலு தர்ம சாதனம்” = நம் நல்வாழ்வை நாமே தர்ம வழியில் அமைத்துக் கொள்ள இவ்வுடல் தான் மிக இன்றியமையாத கருவி / சாதனம் என நமக்குப் புலனாகிறது. இதை நல்வழியில் பேண நமக்கு ஊக்குவிக்கிறது. (நல்லுணவு + உடற்பயிற்சி முதலியன)
ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நாம் நான்கு செயற்களங்களாக்கி: (ஆச்ரமங்களாக்கி)
1. பிரும்மசர்ய ஆச்ரமம்: கல்வி பயிலும், பள்ளிப் பருவம்
2. கிருஹஸ்த ஆச்ரமம்: மணமாகி, குடும்ப பாரத்தை ஏற்று தம் மக்களுக்கு நல் வாழ்வு அமைத்துக் கொள்ள வழிகாட்டுதல்
3. வானப்ரஸ்த ஆச்ரமம்: வாழ்க்கைப்பணியிலிருந்து, அதாவது மண வாழ்க்கைப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்று, சம்சார பந்தத்தை அவிழ்த்துக்கொண்டு,
4. சன்யாச ஆச்ரமம்: இச்சமயத்தில் மிக வயதாகிவிட்டதால், உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு, இனி வானேறும் வாழ்விற்கு வேண்டிய ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டு, இறைவனையே நாட அதற்கு வேண்டிவன தயார் செய்துகொள்ளும் பகுதி
இவ்வாறாக, அறிவியல் பாணியில் நம் பணிகளை எவ்வாறு நன்கு வகுத்துக் கொள்கிறோமோ, அவ்வாறே, மானிடப்பிறவியை வீணாக்கி விடாமல், உயிர் வாழ்வதற்கும் உட்கருத்து உண்டென இன்நான்கு ஆச்ரம ஒழுங்கு முறைகளால், ”பொருளிலாற்கு இவ்வுலகம் இல்லை, அருளிலற்கு அவ்வுலகம் இல்லை” என்பதற்கிணங்க, சம நிலையில் உலகாயதத்தில் பொருளீட்டவும், பிறகு ஆன்மீகத்திலும் வாழ்க்கைப் பாணிகளை சரியானவாறு அமைத்துக்கொள்ளவும் வேத நெறிகள் வாயிலாக நமக்கு வழி கிடைக்கிறது.
13, உலகிலுள்ள யாவரும், எவ்வித வேறுபாடின்றி, ஹிந்துவாகலாம், வேத வழிகளைப் பின்பற்றலாம், அவ்வழி போதனைகளால் விளையும் நன்மைகளை தங்கு தடையின்றி அனுபவிக்கலாம்.
வாழ்க்கையில், ஒருவர் ஏழையாகவோ, செல்வந்தராகவோ, படித்தவரானாலும் அல்லது படிப்பறிவில்லாதவரானாலும், ஆணானாலும் பெண்ணானாலும், ஆக யாவரும் வேத பேதனைகளில் முழுமையாகவோ அல்லது சிற்றளவிலாவது தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இதனால், பலவித ஆதாயங்களைப் பெறலாம். யாருக்காவது ஆரோக்கியமாக, மன நிறைவுடன், அமைதியான நிலையில், ஆன்மீகத்தில் முன்பு இருந்தது போலல்லாமல் – அறியாமையை அகற்றி, தவறான நம்பிக்கை களிலிருந்து விடுபட்டு களிப்புடன் வாழவேண்டுமானால், மேற்கூறியவைகள் அனைத்துமே நீக்கமற வேதவழியே அளிக்க வல்லது.
வேத வழியைப் பின்பற்றுபவர் இந்தியராகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர் மேலை நாட்டைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம். எப்பிரிவிலோ, எச்சமயத்திலுள்ளோராக எங்கும் இருப்பினும், வேத போதனைகளைத் தன் வாழ்க்கையில் மேற்கொண்டு, தன்னுடன் வேத வழியை இணைத்துக் கொண்டு விட்டால், வேத வழியால் கிடைக்கும் அநேக நன்மைகளால் தாராளமாகப் பயனடையலாம். இவ்வாறு வேத வழியில் தன்னை இணைத்துக் கொண்டவுடன் மேலை நாட்டவர் என இனத்தாலும் நிறத்தாலும், மொழியாலும், அநேக வேற்றுமைகள் கொண்டிருந்தபோதிலும், இவைகளால் சற்றும் பேதமில்லாது, ஒவ்வொருவரும் இறைவனால் படைக்கப்பட்ட மற்றொரு ஆத்மா என கருதப்பட்டு, இவ்வழி போதனைகளில் உள்ளவைகள் அனைத்தையும், பெற்றுக் கொள்ள எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஒன்றே ஒன்று தேவை அதாவது எண்ணம், சொல் செயல் ஆகியவைகளில், நேர்மை (அந்தரங்க சுத்தி) வேண்டும். அவ்வளவே தான். வேறொன்றும் தேவை இல்லை. அந்தரங்க சுத்தி தான் தூய்மையின் சாரம். இவைகள் ஒருவருக்கு இருந்துவிட்டால், அவருக்கு வேதவழியில் உறுதிப்பாட்டுடன் மென்மேலும் முன்னேற்றம் அடைய, தடையேதுமில்லை, மேலும் அவர் நோக்கமும் கண்டிப்பாக ஈடேரும்.
சனாதன தர்மம் என்பதே ஆத்மாவின் ஆதியந்தமில்லாத, (நிரந்தரமான, அழிவில்லாத) இயல்பாகும். உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியும் இறையின் துடிப்பால் (துகள்) இயங்கும் ஆத்மா தான். அதாவது, ஆண்டவனின் சிற்றுருவாக்கப்பட்ட அவருடைய மறு வ / ப டிவமே. ஆம்! இதில் எல்லாமே அடக்கம். ஆகவே, ஒருவருடைய தற்போதைய (உயிருடன் இருக்கும்) இடம் / காலம் தற்காலிகமானாலும், ஆன்மீகத்தில் மெய்யாகவே முன்னேற்றம் காண முடியும்.
14. உலகிலுள்ள எல்லா சமயங்களூம் உண்மையே, அல்லது உண்மையின் பாகங்களே,’ மேலும், இச் சமயங்கள்,’பேறின்பப் பேறு’ பெற செல்வழி காட்ட வல்லது என வேதவழி கருதுகிறது.
மற்ற சமயங்களை வேறுபடுத்தி, வேண்டுமென்றே வாதத்திற்கே இடமற்றவாறு, காரண காரியங்களில்லாமல் பழி சுமர்த்தி, அவைகளை அடியோடு வெறுத்து, ஒதுக்கி, ஒழித்துவிட, வேத வழி, கனவிலும் கூட நினைக்காது. நம்பத்தகுந்த எல்லா சமயங்களும், கடவுளைப்பற்றி தங்கள் உள் உணர்வு நிலையை நன்குணர்த்திக் கொள்ள, தம் சீடர்களுக்கும், ஏனைய மானிட சமூகங்களுக்கும், நன்கு போதிக்கும் ஆற்றல் கொண்டவை என்றே வேதவழி கருதுவதால், இறையைப் பற்றி அறிந்து கொள்ள, ’வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது’ எனும் மிகச் சிறப்பான வழியை, மனித சமூகத்திற்கு ஹிந்து சமயம் தெரிவிக்கிறது. இதனால் தான், ஹிந்துக்கள் எவருடனும் ஒருங்கிணைவார்கள். அவர்களும் மற்ற சமூகங்களுடன் சமாதானமாக சக-வாழ்வு (co-exist) வாழ்கிறார்கள், என்றும் வாழ்வார்கள். உதாரணம்: இன்று கூட ஹிந்துக்களுடன், பௌத்த, ஜைன, சீக்கிய, மதத்தவர் எல்லாரும் கூடி அமைதியுடன் வாழ்வதைக் கண்கூடாகக் காண்கிறோமல்லவா!!. ஆனால், அதிகாரத் தோரணை மிக்க, கொள்கைகளில் பிடிவாதமாக ஒருதலையாய் வற்புறுத்திக் கூறும் ஏனைய மதத்தவருடன் கலந்து வாழும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டால், அங்குதான் குழப்பம், கிளர்ச்சி, தொல்லை, என அமைதியைக் குலைக்கும் எல்லா மன வேதனைகளும் கணக்கற்று தனக்குத் தானே உடனுக்குடன் உண்டாகிவிடுகின்றன. உண்டாக்கப்படுகின்றன என்றே தோன்றுகிறது. அப்படி உண்டாக்கப்படு கின்றன என்றால் யாரால்? காரணத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். பிடிவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ள மதங்களுக்கு, ’’வேற்றுமையில் உண்மை’’யைக் காண்பது எனும் எண்ணத்திற்கே, இடமில்லை. இவர்களுக்கு, கீழ்க்காணும் இவ்விரண்டில் ஒன்றை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியாக வேண்டும்.
1. (முதல்), ஹிந்துக்களும், இவர்கள் போன்ற மதத்தவர்களும், கொள்கைகளில் பிடிவாதமாக உள்ள சமயத்தில் சேர்ந்தாக வேண்டும்.
2. (இரண்டாவதாக), முதலில் கூறுவதை ஏற்க மறுத்து விட்டால், அவர்களை உயிருடன் வாழ அனுமதிக்க முடியாது. இச்சமய நூல்கள் வாயிலாகப் பிரத்யேகமாகச் சொன்னவாறு தங்கள் சமயத்தில் சேர மறுப்போரை அழித்தாக வேண்டும். அவ்வளவே தான்.
இதனால், கொலைகளில் குறியாக இருக்கும் குறுகிய மனத்தால், உலகில் மற்றவர்களையும் தங்கள் சமயத்தவராக ஆக்கிவிட முழு மூச்சுடன் ஈடுபடுகிறார்கள். இன்னும் மிகத் தெளிவாகச் சொன்னால், மற்றோரையும் தங்களைப் போல இவர்களைச் சேர்ந்த சமயக் கொள்கைகளில் பிடிவாதமாக ஈடுபட, வலுக் கட்டாயமாக மத மாற்றம் செய்கிறார்கள். இதன்படி, மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களுடைய உணர்வுகளைப் நேரிடையாகப் புண்படுத்துவதாக அமைந்தாலும் இச்சமயத்தோருக்கு எவ்வித மன உறுத்தல் என்பதே கொஞ்சமும் கிடையாது. ஏனெனில் இவர்கள் சமய போதனை அப்படி இருக்கிறது.
கடுமை மிக்க, தீவிரவாத எண்ணங்கொண்ட இயக்கங்களாலும், சில மதங்களாலும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவும், அவர்களைக் கட்டாய மத மாற்றம் செய்யும் கெடுபிடி நடவடிக்கைகள் நடக்காமல் இருந்தால், உலகமே, சாந்தி நிலவி என்றும் எங்கும் உண்மையான, பேரின்ப மயமான, கலப்பற்ற உவகையுடன், சொர்க்க பூமியாக ஆக்க முடியும். உலகில் அமைதியைக் கெடுப்பது, அமைதியை விரும்பாத, இந்த கூறுகெட்ட மதங்களே, இயக்கங்களே தான், இப்படிக் கூறுவதில் எனக்கு எவ்வித சங்கோசமும் சந்தேகம் இல்லை.
இக்காரணங்களுக்காகக் தான், அதாவது மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்களைக், கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யும், மிக முக்கியமாக, கிருஸ்தவ, இஸ்லாமிய, இரு சமயத்தைச் சேர்ந்தவர்களால் தான், உலகெங்கும் கடந்த பல நூற்றாண்டுகளாக, படுகொலைகள், குருதி சிந்துதல், சித்திரவதை முதலியன, நாள்தோறும் அடிக்கடி நடக்கின்றன. உலகில் எங்காவது குழப்பம், வன்முறைகள், தீவிரவாதம் என்றால், இவைகளுக்கு ஆரம்பிக்குமிடம் ஆதிக்க வெறிக் கொள்கைகளைக் கொண்ட மதங்களே, அல்லது இயக்கங்களே. இவ்வியக்கங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாத சர்வாதிகார எண்ணம் கொண்ட எந்த இயக்கங்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம். கணிக்கப்பட்ட இவ்வறிவிப்பு மிக சரியானதே. சற்று சிந்தியுங்கள் புரியும்.
தங்கள் சமயங்களைப் பற்றி எவ்வளவு தான் வீம்புரை செய்து கொண்டாலும், கீழ்க்கண்டவற்றை தங்கள் சமயத்தோருக்கு உணர்த்தத் தவறியதே இவ்வளவு சீரழிவுக்கும் முழு காரணங்கள்:
1. தங்கள் சீடர்களுக்கு கடவுளின் உண்மையான இயல்புகளையும்,
2. அக்கடவுளின் சிறு சுடரொளி, (spark) நம் ஒவ்வொருவரிடம் கூட உள்ளது,
என உணர்த்தத் தவறியதே. ஆக, கடவுளின் பணித்திட்டங்களுக்கு நேர் மாறாக இவர்கள் காரியங்களைச் செய்த வண்ணம் இருப்பதால், இவர்களை மற்றவர்களுடன் ஒருங்கிணைக்கவே முடியாது, இவர்களுக்கும், உண்மைக் கடவுளுக்கும் எவ்வித சம்பந்தமில்லையென தங்கள் நடத்தையால், தனியாகவும் கூட்டாகவும் அடையாளங்காட்டிக் கொண்டு, வெளியிலும் அப்பட்டமாகக் காட்டியும் விடுகிறார்கள். இதைத் தவிர மற்ற மதங்களிலுள்ளவர்கள் மீது, மேலெழுந்தவாறாக உள்ள மிக அற்ப வித்தியாசங்களைக் கூட மிகைப்படுத்திச் செல்லிச் சொல்லி, பிடிவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ள இவர்கள் மத சீடர்களுக்கும், அஹிம்சை தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட ஏனைய மதத்தோரைச் சார்ந்தவர்களுக்கும் ஒன்றுக்கொன்றுடன் என்றுமே ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் தான், சனாதன தர்மம் என்பது ஒரு மதமல்ல, கட்டுக்கோப்புள்ள ஒழுக்க நெறிகளைச் சாந்த ஒரு வாழும் வழி, என ஆன்றோர் கூறுவர். இதனால் தான் மற்ற மதங்களை விடுத்து, இந்த சனாதன தர்மம் ஒன்றுதான் உலகில் எல்லாருக்கும், நல்வாழ்வு வாழ வழி கண்பித்துக்கொண்டு, ஈடு இணையற்று, விளங்குகிறது. ’வேத வழிகளே, எல்லோருக்கும், ஆன்மீகத்தில் மிக உன்னத அறிவை அளிக்கவல்லது’ எனும் நல்ல கொள்கைகளுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டுச் சின்னமாகத் திகழ்கிறது.
அடிப்படையில், லோகாயதம் என்பதையே தன் மூலாதாரக் கொள்கை என கொள்ளும் அல்லது உள் உணர்வுகளில் ஆழமற்ற சமயங்களைக் காட்டிலும், (பொருள், அதிகாரம் முதலியவைகளில் மட்டுமே நாட்டம் கொண்ட சமயங்களைக் காட்டிலும்) சனாதன தர்மம் ஒன்றில் தான் நம் ஒவ்வொருவருக்கும், நாம் உண்மையில் யார் என்பதை உணர்த்துகிறது. ஆகையால், உலகில் எந்த மதத்தைச் சார்ந்த யாவரும், வேத வழியை ஒரு நல் வழியென பயன்படுத்தி, தன் நிலையை உணர்ந்து கொண்டால், பிரபஞ்சம், கடவுளின் இயல்பான ஆன்மீக அன்பு, மனித நேயம், ஆகியவற்றில், முன்பிருந்த அறிவைக் காட்டிலும், இன்னும் அதிகரித்துக் கொள்ள இயலும்.
15. வேத வழியில், மனிதர்களுக்குப் பொதுவான ஒரே கடவுளை, மத ரீதியில் வேறுபடுத்தித் தனித் தனியாக காட்டுவதில்லை.
இயல்பாக, வேத கலாச்சாரமே மனித இனம் முழுமைக்கும் உரியதாக இருப்பதால், கடவுளை ஒரு சமூகத்திற்கே உரியது அல்லது அக்கடவுள் தேர்ந்தெடுத்த ஒரு சமூகத்திற்குத் தான் அக்கடவுள் உரியவர் என்று சொந்தங் கொண்டாடும் கருத்தை முன்வைப்பதில்லை. வேத வழியில், கடவுள் தான் படைத்த எல்லா உயிரினத்தையும், எவ்வித பாகுபாடின்றி, அன்புடன் ஒரே நோக்குடன் நேசிக்கிறார் எனும் கருத்தைப் பறை சாற்றுகிறது.
இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, எல்லோருக்கும் பொதுவான கடவுள் தன் அன்பைப் பாகுபாடின்றி உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியாகப் பொழிவதால், பிறகு நாம் எல்லோருமே (அவர் நம் மீது செலுத்தும் அதே அன்பைப்போலவே), நம்மைப்போன்ற பிறர் மீதும் நம் அன்பை ஏன் செலுத்தக் கூடாது? ஒருமுகப்பான்மையுடன், தன்னிடம் அன்பு செலுத்தும் பக்தனை, அவன் எந்த இனத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவரானாலும், அப்பிறவி மனிடப் பிறவியாக இல்லாதிருந்தாலும் சரி, (ஆடு, மாடு, புழு பூச்சி உள்பட) எல்லார் மீதும் தன் அன்பைப் பொழிந்து அருள்கிறார். தான் படைத்தவைகளுள் எதையும் எவரையும் அவர் வெறுப்பதில்லை. வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பிரிப்பதில்லை. பிரத்யேகமாகச் சிலருக்கு மட்டுமே சலுகை காட்டுவதும் இல்லை. அவருக்கு எல்லோரிடமும் தன் அன்பை ஒருமுகமாகக் காட்டத்தான் தெரியும். இம்மாதிரிதான் எல்லா மதத்திற்கும் பொதுவான ஒரே கடவுள் தன்னைக் காட்டிக்கொள்கிறார்.
அப்படிக்காட்டாத அல்லது காட்டிக்கொள்ள விரும்பாத எந்த மதமும் மதமே அல்ல. அது உலகத்தில் இன்றுள்ள அரசியல் ஆதாயத்திற்கு நிறுவப்படும் இயக்கம் போன்றவைகளே!!
இதனால் தான் கடவுளைப்பற்றி இவ்வாறு கூறுவதுண்டு:
• எல்லையற்ற சக்தி படைத்தவர் – Omnipotent
• எல்லாம் அறிந்தவர் – Omnicient
• எங்கும் நிறைந்தவர் – Omnipresent
இவ்வாறு எல்லாரும் கடவுளைப்பற்றிய, விழிப்புள்ள நிலையை, அதாவது முன்னுணர்வை அடைந்துவிட்டால், அப்படிப்பட்ட பக்குவப்பட்ட மனிதர், கடவுளை எங்கும் எதிலும் எவரிடத்தும், எல்லா சமயங்களிலும் காண்பார்கள். இவ்வாறு பதம்பட்ட முன்னுணர்வுடன் நம்மை கடவுளிடம் ஆழ்த்திவிடும். இது தான் வேத வழி, என வேத நூல்கள் ஒருமுகமாகக் கூறுகின்றன.
16. மேற்கூறிய காரணங்களுக்காகத் தான், வேத வழியை பின்பற்றும், ஹிந்துக்கள், எல்லா சமயங்களுக்கும் ஈடு கொடுத்து, மற்ற எல்லா மதங்களின் நடுவிலும் அமைதியுடன் வாழ முடியும்.
பொதுவாக ஹிந்துக்கள, அல்லது ஆன்மீகத்தில் பக்குவப்பட்ட மற்ற மதத்தவர் யாவரும், கடவுளுடைய அநேக தோற்ற, பண்பு வேறுபாடுகளைப் பற்றி நன்கு உணர்ந்தவர்களாதலால், தாங்கள் சாராத மற்ற சமயங்களிலும், அம்மாதிரியே, கடவுளை யதார்த்தமாகக் காண்கிறார்கள். இப்பேற்பட்டவர்களுக்கு மற்ற எம்மதத்தை சேர்ந்தவர்களுடன் எவ்வித கொள்கைப் பிணக்கு/ சச்சரவுகளுக்கு வாய்ப்பு இருப்பதில்லை. கிருஸ்தவமத போதகர், தன் மதபோதனைகளை ஆரம்பிக்கும் போதே, மனிதர்களைப் பார்த்து, ’பாவிகளே’ என்றுதான் ஆரம்பிக்கிறார். பாவிகளாக இருப்பதால், நரகத்தில் உழலப் போவதாகவும் இவரே கடவுள் போல தீர்ப்பும் அளித்து விடுகிறார். ஆனால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்கள் சொல்லும் மதத்திற்கு உடனுக்குடன் மதமாற்றம செய்து கொள்ள வேண்டுமென நிர்பந்திக்கிறார். (மனித அறுவடை செய்கிறார்). அங்கு தான் சச்சரவு ஆரம்பிக்கிறது. எதுவரை இக்கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்களும், ஆக இருவரும் ஹிந்துக்களையோ, அல்லது இச்சமயம்போன்ற மற்ற மதங்களையும் மதமாற்றம் செய்ய யத்தனிக்காது இருக்கிறார்களோ, அதுவரை எங்கும் அமைதி நிலவுகிறது.

ஹிந்துக்கள் தங்கள் கடவுளை வெவ்வேறு உருவங்களில் ஏற்றுக்கொண்டு தொழுகிறார்கள். வெறுப்பைக் கக்காத அல்லது காண்பிக்காத கடவுளை உண்மையென ஒப்புக்கொள்வார்கள். இதில், ஹிந்துக்களுக்கு என்ன இடர்பாடு இருக்க முடியும்? அப்படியே, சொல்லிலும் செயலிலும் நேர்மையாக, உண்மையான கடவுளின் மெய்யான தன்மையை உணர்ந்த எந்த முதிர்ந்த கிருஸ்தவரும், ஹிந்துவுடன் கூடி நல்ல தன்மையுடன் வாழ முடியும். அஃதே போல, ஒரு மனப்பக்குவமடைந்த முஸ்லிம், சீக்கியரிடமோ அல்லது பௌத்த மதத்தவருடன், எச்சமயத்தைச் சார்ந்தவர்களுடனும் (வெறுப்பைக் கக்காது அல்லது காண்பிக்காது இருந்தால்) கூடி வாழ முடியும்.

இதுதான் சமய தத்துவங்களை வாழ்க்கையில் கடைபிடிக்கும் நல்லோருடைய மனப்பாங்கின் சாரம். இதில்தான் நம்முடைய முழு கவனமும் செலுத்த வேண்டும்

மத அடிப்படையின் (கடவுளை அறிதல்) எனும் கொள்கைய நன்கு உணராத ’‘மனித உருவத்தில் மிருகங்களால் தான், சிறு மன வேற்றுமை ஏற்பட்டு விட்டாலும், திமு திமு என மற்ற சமயத்தாருடன் காரணமின்றி வெறிமாடுபோல முட்ட வருவார்கள். ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களாலும், எந்த நெருக்கடி நிலையிலும் மனம் மாறாத உளப்பாங்கு கொண்டவர்களுக்குள் எவ்வித சங்கடங்கள் நிகழ வாய்ப்பில்லை. எவருக்கு ஆன்மீகத்திலும், கடவுளைப்பற்றிய முன்னுணர்வு இல்லையோ, அவர்கள் தான் தங்கள் குற்றம் சாட்டும் விரல்களை எக்காலும் பிறர் மீது நீட்டி முழக்கிய வண்ணமே, கிடப்பார்கள.

[[[என்றோ நான் படித்த ஒரு சுலோகம் நினைவுக்கு வருகிறது. இதை எழுதிய ஆன்றோர் பெயர் எனக்கு நினைவில்லை. ஆனால், இதில், அர்த்தம் மிகுந்து உள்ளது.

अलं भारतीया: मतानां विभेदै: अलं देश भेदेन वैरेण चालं (च अलं) ।
इयं शाश्वतो धर्म एको धरायां न संभाव्यते धर्म तत्वेषु भेद: ॥
அலம், பாரதீயா: மதானாம் விபேதை: அலம் தேச பேதேன வைரேண ச அலம் |
இயம் சாச்வதோ தர்ம ஏகோ தராயாம், ந சம்பாவ்யதே தர்ம தத்வேஷு பேத: ||

பாரத நாட்டு மக்களே! சமய வேறுபாடுகளாலும், பிராந்திய வேற்றுமைகளாலும், கோபதாபங் களாலும் விளையும் விபரீதங்கள் யாவுமே போதும் போதும்!. தர்ம-தத்துவத்தை (இறையை) அடிப்படை யாகக் கொண்ட (மத) சமயக்கோட்பாடுகள் யாவுமே, ஒரே ஒன்றைப் (இறையைப்) பற்றித்தான் நிரந்தரமாகக் கூறுகின்றன, அதாவது நல்ல சமயங்களுக்குள் வேறுபாடுகள் எழ, எந்த வாய்ப்பும் கிடையவே கிடையாது; இக்கருத்து மிகவும் பொருள் பொதிந்தது. சிந்திக்கத் தக்கது.

(இனி, ஐந்தாம் பகுதி தொடரும்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்



5. உயிர் நீத்தபிறகு, மானிடருக்கு ஏற்படும் நிலை மாற்றம், செய்த நல்வினைத் தீவினைகளின் விளைவு, மறுபிறப்பு ஆகியவைகளைப் பற்றி, அறிவியலுக்கும், தர்க்க வாதங்களுக்குத் திருப்தி அளிக்கும் வண்ணம், நம்பத் தகுந்த தகவல்களை வேத இலக்கியங்கள், நமக்களிக்கின்றன.
உயிர் நீத்த பின் மானிடருக்கு ஏற்படும் நிலையைப் பற்றி நிச்சயமாக, அநேகமாக எல்லா சமயங்களும், சுட்டிக் காட்டுகின்றன. அவைகளில் கூறுபவை யாவும், அந்தந்த சமயத்தில் நம்பிக்கை கொண்டு, நல்லவராக இருந்தால், சுவர்க்கத்தை அடையலாம் அல்லது அந்தந்த சமய கோட்பாடுகளுக்கு மீறி நடந்துகொண்டால், நரகத்திற்கு போக நேரும் எனவும் என பலரும் எதிர்பார்க்கும் பதிலைத்தான் வழக்கமான அளிக்கின்றன.
ஆனால், வேத வழி அப்பழுக்கு இன்றி, அளவுக்கு விஞ்சிய அநாவசிய உடற்கிளர்ச்சிப் பேச்சில்லாமல், எல்லோருக்கும் மனதால் திருப்தி கொள்ள, நியாயமென நிரூபிக்கும் வகையில், விவரமான பதில்களை பளிச்சென அளிக்கிறது. அவ்வழி கூறுவதை, சுருங்கச் சொன்னால்: சுவர்க்கம், நரகம் எனும் கருத்துப்படிவம் என்பதே: முன் பிறவிகளில் எண்ணம், சொல், செயல், ஆகியவைகளால் விளைந்த வினப்பயனை, வரும் பிறவிகளில் ஒவ்வொருவரும், அனுபவித்தே ஆகவே வேண்டும். இதில் எந்த குறுக்கு வழியும் கிடையாது. முன்கூட்டியே உத்தரவாதம், விதிவிலக்கு என்பது வேத ஹிந்து வழிகளில் கிடையவே கிடையாது. ஆகவே நல்ல-தீய விளைவுகளுக்கு அவரவர்களே தான் பொறுப்பு (காரணம்). முன் பகுதியில் கூறியபடி, ‘வினை விதைத்தால் தினை கிடைக்காது’. வரும் பிறவி மானிடராக அல்லாமல், வேறொரு ஜன்மமாகவும் (புழுவாக, கொசுவாக, பூச்சியாகக் கூட) ஆகலாம். வேத வழிப்படி, சுவர்க்கம் எனும் கருத்துப்படிவம், கடவுளை எக்கணமும், இணை பிரியாது இருத்தல் என்பதே!! அங்கு வெறும் உடலுக்கின்பம், கேளிக்கை, என்பதற்கிடமே இல்லை. இதை வேத வழி அறுதியிட்டுச் சொல்கிறது.
உண்டாக்கப்பட்ட ஓவ்வொன்றின் (ஜீவராசிகள்) உள்ளில், இறைவனுடைய சிறு பாகம் (துகள்) உறைந்துள்ளது. அத் துகள், (சுடரொளி, or ticking) நின்று விட்டால், மானிடர் பிணமாகிறார். அதை இனி மானிடரென சொல்வதில்லை. ”பிணம் கிடக்கிறது” எனவே ஒரு ஜடப்பொருளாக, அழைக்கிறார்கள். பிணத்தை நிரந்தரமாகப் வீட்டிலேயே பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியுமா? மற்றொன்று, பின்வரும் பிறவியில் விளையப் போவதற்கு இப்பிறவியிலேயே எந்த உத்திரவாதமும் ஒரு சமயம் அளிப்பதுபோல, வேத வழி எந்த உத்திரவாதம் (religious guarantee) அளிப்பதில்லை.
ஹிந்து (வேதவழி) சமயத்தில் எவரையும் எவ்வித சந்தர்ப்பத்திலும் கட்டாய மதப்போர் நிகழ்த்தியாக வேண்டுமென்றோ, அல்லது அக் கட்டாய மதப் போரில், ஹிந்து மதத்தில் இல்லாதவர்களைக் கொலை செய்தாக வேண்டும் என்று, ஹிந்துக்களைத் தூண்டி விடுவது கிடையது. எனவே, கட்டாய மதப் போரே ஹிந்து மதத்தில் இல்லை என்றால், மதப் போர் ஏது, போர்த்தியாகிகள் ஏது, சுவர்க்க போக உத்திரவாதம் தான் ஏது?! இதற்கு எதிர்மாறாக, வேறொரு மதத்தில் உள்ளவை களைச் பரிசீலிப்போம்.
உலகத்தோருக்கு ஏன்! தன் மன சாட்சிக்குமே, தான் மன்னிக்கத்தகாத மகாபாபி என அந்த ஒருவருக்கே, தெரிந்திதே இருந்தாலும் (known desperados = KD), அவரே தான் சார்ந்த ஒரு மதம் சொல்லும் கட்டாயப்போரில் பங்கேற்று, அச்சமய நூல்களில் குறிப்பிட்டுக் காட்டும் பலிகடாக்களை (victims), (நிரபராதிகளாக இருப்பினும்), அதாவது தங்கள் சமயத்தைப் பின்பற்ற மறுப்போர்களை, வேண்டுமென்றே கொல்லும் போது, தன் உயிரையும் துறக்க நேர்ந்து விட்டால், அப்பேற்பட்டவர் பெரும் சுவர்க்க பதவிக்குத் தகுதி பெற்று, மதத்திற்காக உயிர் துறந்த தியாகி-‘ஷாஹீத்’ என பட்டமும் அளிக்கப் பட்டு, போற்றப்படுகிறார். உடனுக்குடன் அவர் அதுவரை செய்த பாபங்கள் எல்லாமே மன்னிக்கப்பட்டு, இவர்கள் புனித நூலில் கூறியபடி உடனுக்குடான் சுவர்க்கம் புக (Direct ticket) இப்புவியிலேயே உத்திரவாதமும் (religious guarantee) அளிக்கப்படுகிறது. இச்சுவர்க்கத்தில், எண்ணற்ற உடற்கிளர்ச்சி போகங்களுடன் நிரந்தரமாக வாழ, பூவுலகில் வாழும் போதே உத்திரவாதமும் அளிக்கப்படுகிறது. இவ்வாறாக கட்டாய மதப் போருக்கு இச்சமயச் சீடர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள்! இவர்கள் செய்யவேண்டிய தெல்லாம், மிக மிக சுலபம். அதாவது சமயம் சொல்லும் வகுப்பினரை கட்டாயப் போரில் வேண்டுமென்றே அந்தந்தந்த இடத்திற்குத் தக்கவாறு, எவ்விதத்திலாவது போட்டுத்தள்ள (கொலை செய்ய) வேண்டும்!! அவ்வளவுதான். (very simple) பிறகு எல்லாம் இன்பமயம். குறிப்பாக உடலுக்கு விதவித இன்பமே இன்பம்!! (இதற்கு அவர்கள் புனித நூல்களிலிருந்து ஆதாரங்கள் ஏராளம் உண்டு). இதில் ஆன்மீக எண்ணம் எங்கே காணமுடியும்? மற்ற மதத்தில் முழு கவனமும் உடலின்பத்திற்கே அன்றி வேறொன்றிலும் இல்லையே!. உடலின்பமா ஆன்மீகத்தின் குறிக்கோள்?
இவ்வுலகில் உள்ளவர்களை சற்று உற்று நோக்கினால், சிலருக்கு ஏராளமான சொத்து, ஆசைப்பட்டதை வாங்க கை நிறையப் பணம், வானிலையில் இயற்கையாக சீதோஷ்ண ஸ்திதியில் ஏற்படும் ஏற்றம், இறக்கம் ஆகியவைகளுக்கு, வெற்றிகரமாக ஈடுகொடுக்கும் நிலப்பரப்பில், நல்ல சுகாதார சுற்றுச்சூழல் கொண்ட வசதியான சுகமான மிகப் பெரிய வீடு, வாகனம் முதலியவைகள் என, பூலோகத்திலேயே, சுவர்க்க வாசிகளாக வாழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதே உலகில், வேறு சிலர், போர் நிகழும் நாடுகளில், எப்போது குண்டு தன் தலையிலும் வெடித்து விடுமோ என்ற உள்ளூர பயத்துடனும், மேலும் பஞ்சம், (எங்கும் எதிலும் பற்றாக்குறை) வறட்சி, நோய், வறுமை முதலிய மனக் குறையுடன் வாழ்வதையும் காண்கிறோம். இவைகளை மாத்திரம் சொல்வானேன். ஒரே குடும்பத்தில் பிறந்தபோதிலும், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நன்றாக கல்வி கேள்விகளில் மிகச் சிறந்து விளங்குவதும், ஒருவர் பணக்காரராகவும், ஒருவர் படு ஏழையாகவும், ஒருவர் எடுத்தகாரியத்தை முடித்து சாதனை படைத்தவராகவும், ஆனால், அதே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளில், மற்றொருவர், பிறவிக் குருடர்களாகவும், சிலர் அங்க ஹீனராககவும், ஒரு சிலர் படிப்பே ஏறாத படு முட்டாளாகவும், இப்படி பல ரகங்களாக வாழ்வதையும் கண்கூடாகக் காண்கிறேம். ஏன் இவ்வாறு இருக்க வேண்டும் என எப்போதாவது யோசித்திருக் கிறோமா? பல சமயங்கள், அடிப்படையாக ஒரே வித பதிலைத் தான் அளிக்கப் பார்க்கிறோம், அதாவது, இதற்கு இவர்கள் கூறும் காரணம், ’கடவுள் சித்தம், என் பாக்கியம்’ எனும் கடவுளுக்கே ‘முகஸ்துதி செய்வது போலவோ‘ அல்லது ’கடவுள் மீது குற்றம் சுமர்த்தி’, விரக்தியில் பதிலளிப்பார்கள். ஆனால், மேற்கூறிய காரணங்களைக் காட்டிலும், வேதவழி சமயம், கூறும் பதில் / சமாதானம் மிகத் திருப்தி அளிக்கிறது. உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தங்கள் ஜீவிதத்தில் நல்லவைகளையும் கெடுதல்களையும் அனுபவிக்கக் காரணம், முன் பிறவியில் அவரவர்கள் செய்த நல்வினை தீவினைக்கேற்றவாறு (எண்ணம், (உணர்வு நிலை), சொல், செயல், ஆகியவைகளால் விளைந்தவாறு) தற்போதுள்ள பிறவியில் அதற்குத் தகுந்தவாறு தான் அனுபவிக்கிறார்கள் என்ற பதில் மிக தெளிவாகவும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் பதிலாக உள்ளது.
[[[கீழ்க்காணும் உரையாடலை, பெரியவரரொருவர், ஹிந்து சமய சொற்பொழிவில், சொல்லக் கேட்டேன். அந்த நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒருதடவை ஒரு சீடன் தன் ஆசிரியரிடம், கேட்டானாம். ஏன் மனிதர்களுக்குள், விதவிதமாக கஷ்ட நஷ்டங்களைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கிறார்கள். எல்லாரும் கடவுளின் குழந்தைகளென்றால், ஒரே பெற்றோருக்குத் தன் குழந்தைகளிடம் இப்படி ஓரவஞ்சனை இருக்கலாமா? கடவுள் நம்மிடம் ஒரு தாயாக, தந்தையாக இருக்கிறார் எனவும் கூறுகிறீர்கள். ஆக, ஒரு தாய் / தந்தை தன்னிடம் இருப்பதை, எல்லாருக்கும் பகிந்து கொடுப்பதைத்தானே நாம் காண்கிறோம். ஏன் இப்படி கடவுளே நடந்து கொள்ளவேண்டுமென படு சீற்றத்துடன் கேட்டானாம். அதற்கு அப் பெரியவர் அளித்த பதில்,
• நம் வேத தர்மத்தை நம்புகிறாயா?
• ஆம் நம்புகிறேன்.
• அத் தர்மத்தில் கூறப்பட்டவைகள் யாவையும் நீ நம்புகிறாயா?
• ஆம் நம்புகிறேன்.
• ஆக, உனக்கு பிறப்பு, இறப்பு, மறுபிறப்பில் நம்பிக்கை உண்டல்லவா?
• ஆம். உண்டு
• சரி, நீ இதுவரை எத்தனை பிறவி எடுத்திருக்கிறாய் என உனக்குக் கூறமுடியுமா? அதில் நீ எவ்வளவு பாப-புண்ணியங்களைச் செய்திருக்கிறாய் என சிறு பட்டியலிட்டு அல்லது சிறு தலைப்பில் கூற உன்னால் இயலுமா? அப்படியும் முடியா விட்டால், போனால் போகிறது. எல்லா பிறவிகளைப்பற்றியும் வேண்டாம். தற்போதுள்ள பிறவிக்கு முன்னிருந்த பிறவியிலாவது என்னென்ன நல்லது / கெட்டது செய்தாய் எனவாவது சொல்ல முடியுமா?
• அதுவும் எனக்கு இருக்கும் புத்தியால் ஆகக்கூடியது இல்லை. இதெல்லாம் எனது சக்திக்கு அப்பாற்பட்டதெனத் தெரிகிறது.
• ஏன் அப்படிச் சொல்கிறாய்?
• முந்தா நாள் நானே சாப்பிட்டதைக் கூட என் நினைவு படித்திக் கூற முடியவில்லையே. கடந்த பிறவியைப் பற்றிக் கூறு என்றால் நடக்கிற காரியமா? மேலும், அதைத் தான் நான் தினமும் பார்க்கிறேனே! ஆகாயம், நட்சத்திரங்கள், இரவு பகல், குளிர், வெப்பம், சூரிய வெளிச்சம், முன் கணக்கிட்டுச் சொல்லியபடி. கிரகணங்கள், எண்ணற்ற நட்சத்திரங்கள், மிகப்பரந்த ஆகாயம், மழை, இடி, மின்னல், ஆறுகள், மலைகள், வெள்ளம், சமுத்திரங்கள், அலைகள், சுனாமிகள், பனிக்கட்டி, கருப்பர்-வெளுப்பர், மாநிறக்காரர், உலகப்பரப்பு, முதலியன……….. எதைச் சொல்லி, எதை விடுவது? அப்பப்பா! அவர் படைத்ததைப் பற்றிச் சொல்லிச் சொல்லி என்னால் மாளாது! அவருக்குள்ள சக்தியைச் சொல்ல நம் சக்திக்கப்பாற்பட்டது. ஆம்! ஒப்புக்கொள்கிறேன்.
• ஆக உனக்கென்று அநேக குறைபாடுகள், கட்டுப்பாடுகள் உண்டல்லவா? உனக்குள்ள அம்மாதிரி குறைபாடுகள், கட்டுப்பாடுகள் அவருக்கில்லையா? அப்பெரும் மகா சக்தி அவரொருவருக்கு மட்டுமே இருக்கிறதென நீ நம்புகிறாயா?
• அவருக்குக் குறைபாடுகள் இருப்பதாக என்னால் கணிக்க இயலாது. அதற்குத் தகுதியும் எனக்குக் கிடையாது என நினைக்கிறேன். ஒன்று மாத்திரம் எனக்குப் புரிகிறது: அதாவது, அவருக்கு மாபெரும் சக்தி உண்டென நம்புகிறேன். இதற்கு மேல் எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.
• சரி, எத்தனையோ பிறவிகளில் நீ செய்த பாப-புண்ணியங்களைத் தொகுத்து நீண்ட பெரும் தீர்ப்புத் தொகுப்புப் பட்டியலை, இன்றிருக்கும் கணினியால் கொடுக்க முடிந்த அதே காகிதத்தில் ரீம் ரீமாக பிரசுரித்து, (Don’t worry about paper! God will take care of that! printed computer output in reams & reams of paper) கடவுளே அதையும் உனக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தால், (அவருக்கு தான் சக்தி இருக்கிறது என நீயே ஒப்புக் கொள்கிறாயே!) அது எவ்வளவு பக்கங்கள் இருக்கும் என நீ நினைக்கிறாய்?
• உலகிலுள்ள ஒவ்வொருவருக்குமா? தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் எல்லா பிறவிகளுக்குமா? ஐய்ய்ய்ய்யோ! அதே ஏராளமாக ஆகுமே! எத்தனை பக்கங்கள் வருமோ! தெரியவில்லையே!!
• ஏன்! வாயைப் பிளந்து கொண்டு, பொறிகலங்கி, சோர்ந்து விட்டாய்! அக்காகிதப் பட்டியலை முழுதும் படிக்க ஒவ்வொருவருக்கும் படித்தறிய எத்தனை காலம் தேவைப்படுமென நினைக்கிறாய்?
• என்னால் கூற முடியாது. சுவாமி! அதைப்படிக்க அநேக வருடங்கள் கூட ஆகலாம். அவைகளைப் படிக்கவே அநேக பிறவிகள் வேண்டுமானாலும் ஆகலாம்.
• ஆக, உனக்கு, ஏன்-என எல்லாம் உனக்குத் தெரியவேண்டும், ஆனால் அப்படி பட்டியலிட்டு அளித்தாலும் உன்னால் படிக்க ஒரு பிறவி போதாது. அப்படித்தானே! ஆக, இதற்கெல்லாம் ஒரு சிறு உபாயம் சொல்லட்டுமா?
• தயவு செய்து உடன் சொல்லி விடுங்கள்! சுவாமி!!,
• நடந்தவைகளை மறந்து, தற்போது அனுபவிப்பவைகளை அப்படியே ஏற்று, இனியாவது நல்ல காரியங்களில் உன் புத்தியை செலுத்து. ஏனெனில், கடந்த பிறவிகளில், செய்த நல்வினை தீவினைகளின் விளைவுகளை அனுபவித்தாகவே வேண்டும். இதை மாற்ற முடியாது. வரும் பிறவியிலாவது நல்ல கதி அடைய முடியுமா என பார்த்துக்கொள். ஆக, பிறப்பு, இறப்பு இல்லாமல் எக்கணமும் நம்மைப் படைத்த இறைவனுடனே, என்றும் ஒன்றி உறைந்திருக்கும் உயர் நிலையான நற்கதியை அடைய, நற் செய்கைகளை இனியாவது செய்ய முயற்சி செய். இனியாவது நல்லதைக் கேள், நல்லதைச் சொல், அதன்படி, நல்லதைச் செய். ஆக நல்லதே உனக்குக் கிடைக்கும். எல்லா நலனும் உனக்குண்டாக என் ஆசிகள்!! உன்னையே நீ உயர்த்திக் கொள்ளப் பார்த்துக் கொள்! உன் மனசாட்சிக்கு (உன்னுள் உறைந்திருக்கும் கடவுளின் சிற்றொளிக்கு / சுடர் ஒளிக்கு) பதில் கூறு!! அது போதும். உனக்கு சர்வ மங்களங்களும் உண்டாகும்!

என அறிவுரை வழங்கினாராம்! எப்படி இருக்கிறது.
இது தான் வேத வழி!! எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத் தக்க பதில் தானே இது!!
6. கடவுளையும் ஆன்மீக உருவளவையும் முழுதுமாக புரிந்து கொண்டு, இரண்டையும் நன்கு இணைத்து, வேத வழி தத்துவம் நமக்களிக்கிறது.
நாம் அன்றாடம் காணும் ஏனைய சமயப் புத்தகங்களில், ‘பரமாத்மா’ வைப்பற்றி (கடவுளைப் பற்றி) எழுத்து மூலம் இருக்கும் முழு வருணனைகளைக் காட்டிலும், கடவுளுடைய உருவளவு, அல்லது பற்பல, கொள்ளளவைப்பற்றி விளக்கமாக, மிகச் சிறப்பாக, வேத வழிகள் புரிந்துகொண்டது போல வேறு எங்கும் காணக் கிடைக்காது.
வேதவழி, கடவுளை:
• ’பேராற்றல்’ படைத்தவர் எனவும்,
• ஒப்புயர்வற்ற தனிச்சிறப்புள்ளவர், இவ்வுலகை உண்டாக்கி, தான் படைத்தவைகளையும் கண்காணிக்கிறார். இதில் கடவுள் தனக்கிருக்கும் வீர்யத்தை நாமறிய நமக்குக் கண்ணால் காண்பிக்கவும், உணர்வில் உணரவும் செய்கிறார்.
• கடவுளைப்பற்றி மற்றொரு சிறப்பான விவரத்தில், அவர் எப்படி நமக்குக் காணக் கிடைக்கிறார்; எவ்வாறு வாழ்கிறார், எவ்வாறு தன் நண்பர்களுடன் உள்ளார் எனவும், அவர்களுடன் எப்படி விளையாட்டிலும் ஈடுபடுகிறார் எனவும் இருக்கிறது. வேத வழிகளில் கடவுளுடைய பக்தர்கள், அவருடைய மிகச் சிறந்த ஆன்மீக குடும்பத்தில் அவருடைய தாயாகவும் தந்தையாகவும், உறவினர்களாகவும், ஆக்கப்படுகின்றனர் எனவும் காணலாம்.
• பாகவதத்திலும் விஷ்ணு புராணத்திலும், மஹாபாரதத்திலும் கடவுள் எவ்வாறு தன் நண்பர்களையும் பக்தர்களையும் பொறுப்புடன் காக்கிறார்; எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்; எவ்வாறு தன்னிடம் மிகுந்த அன்புடையோரிடம் தன்னுடைய பொன்னான நேரத்தைக் கழிக்கிறார்; சாதாரண மாந்தர்களான நாமும் அவரை தன் வசமாக்கி, அவருடன் எவ்வாறு இன்றும் நேரத்தை கழிக்கிகலாம் என வேத நூல்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன.
• கடவுளே தக்க சமயத்தில் நம்மிடம் உள்ள ‘அருள்’ சுரக்கும் இரக்கத்தால், (இரக்கம் என்பது பிறர் படும் துன்பத்தைக் கண்டு துன்பபட்டு, தானாகவே மனம் கனிந்து இரக்கம் காட்டுதல்) அவ்வப்போது, அவருடைய உயர்வான இருப்பிடத்தையும் விட்டு நம்முடன் ஒருவனாகப் பிறந்து, அவரை நாம் நேரிடையாக அறிந்து கொள்ளவும், அவரிடம் நாமே ஈர்க்கப்பட வைத்து தக்க பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார் எனவும்
• ஆன்மீக உலகைப்பற்றி, அதில் என்ன நடக்கிறது, எவ்வாறு அங்கே உண்மையாக யாரால் நுழையமுடியும், பிரபஞ்ச படைப்பில் என்னென்ன அடங்கியுள்ளது என விவரமாக வேத வழிகளில், அமைதியான தெளிந்த நீரோடை போல தொடர்ச்சியுடன் முற்றிலும் முரண்பாடற்று, உள்ளது. எங்கும் எதிலும் ஓரிடத்தில் கூறியதை வேறொரு இடத்தில் மாற்றிக் கூறாது உள்ளது. (ஆனால் மற்றொரு மதத்தில், கடவுளே தான் முதலில் தவறாகத் சொன்னதற்கு அவர் வாயிலேயே, சைத்தன் புகுந்து கடவுளையே தவறு செய்யத் தூண்டினான் என கடவுளே, தான் படைத்த ஒருவர் (சைத்தன்) மீது வழக்கமாகக் குற்றம் சொல்வதும் கிடையாது!
வேத வழி நூல்களில், பிரபஞ்ச விவரிப்பும், அங்குள்ளவைகள் ஒவ்வொன்றும் எவ்வாறு படைக்கப்பட்டன என்று விவரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்று சமய நூல்களில், உள்ளவைகளில் மக்கள் நம்புவதற்காக, உருவகப்படுத்தி எழுதப் பட்டுள்ளன. அவைகளில் பிரபஞ்சத்தைப்பற்றி மிகச் சிறிதாகவும், முக்கியமல்லாதவைகள் போலவும், அக்கறை யின்றி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேத நெறி விளக்கங்களில், பிரபஞ்ச படைப்புகளைப் பற்றி, எளிதில் விளக்குவதற்குக் கடினமான, ஆனால், நெறி பிழவாத நிலையில் விவரங்களுடன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, பல பகுதிகளில் அடங்கியவைகளாக அளிக்கப்பட்டுள்ளன; இவைகளைப்பற்றி, நன்கு கற்றறிந்த வான் கோளங்களின் ஆய்வியலில் தலைசிறந்த வான நூல் வல்லுனர்களிட மிருந்தே கற்க முடியும். மேலாக, இவைகளில் நாம் இன்று அறிந்து கொள்ளும் பிரபஞ்சம்பற்றி, எதெது எப்போது படைக்கப்பட்டன / நிறுவப்பட்டன எனவும் ஐயமற தெளிவுபடுத்திக் கூறப்பட்டுள்ளது. [[[பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப்பட்டது என, ஸ்டீபஃன் நாப்” எழுதிய புத்தகத்தில் மிக விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது- “How the Universe was Created,” By “Stephen Knapp” gives excellent details]]].
• இக்காரணங்களுக்காகத் தான், வேறு எச்சமயத்தை சேர்ந்தவர்களால், வேத நெறி புனித நூல்களிலுள்ளவைகளைப் ஆழ்ந்து படிப்பதோடல்லாமல், அவர்களுக்கு முன்புள்ள ஆன்மீக புரிந்துணர்வுகள் எதுவாக இருப்பினும், அவைகளுடன் இவைகளில் உள்ளவைகளையும் அறிந்து, மேலும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்; அல்லது, அப்படி அவர்களுக்கு (போதிய) ஆன்மீக புரிந்துணர்வு இல்லையெனில், மேலும் அறிந்து கொள்ள, உரிமையுடன், தாயகம் செல்வது போலவும், அல்லது நீர் செல்லும் வழிச் செல்லும் தடம் போல தங்குதடையின்றி அறிந்து கொள்ள; அல்லது வட திசை கொண்டு எல்லா திசைகளுக்கும் வழிகாட்டும் துருவ நட்சத்திரம் போல; இருக்கும் வேத வழிகளிலிருந்து எல்லாவறையும் மிகச்சிறந்த வழிகாட்டியாக, இவைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். பிரபஞ்ச அறிவியலில், வேத வழியிலுள்ளவைகளுடன் மற்ற சமயங்களில் உள்ளவைகளை ஒப்பிடும்போது அவைகளில் உள்ளவைகள் எல்லாமே …………. அதாவது, வேத வழி இமய உச்சத்திற்கும், மற்ற சமய மடுவுகளுக்கும் இருக்கும் வித்தியாசம் போல, கண்கூடாகக் காணக்கிடைக்கிறது. இதில் ஐயமே வேண்டாம். உண்மை வேண்டுவோருக்கு மேற் கூறியவை போதும் என நினைக்கிறேன்!
(2) [[[வேத வழிகளிலுள்ள சிறப்பு அம்சங்களாவன:
கடவுள் நம் உறவினர்; இது ஒன்றே போதாதா? அவரிடம் தொடர்பு கொள்ள! என் அப்பன், என் தாய், என் குழந்தை, என பெருமையுடன் சொல்லிக்கொள்ள! நமக்கு கடவுளை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். நமக்கு அத்தகுதி இருந்தால் கடவுளே, அவ்வப்போது அவதரமெடுக்கும் போது கடவுளுடைய நெருங்கிய உறவினனாக, ஏன்! தாய், தந்தையாகக் கூட, (தேவகி-யசோதா, வசுதேவர்-நந்த கோபர்) நண்பனாகவும் உங்களையும் ஆக்கிக் கொள்லலாம். (நன்பர்கள்: விதுரர், குசேலர்)
கடவுளை மற்ற சமயங்கள் சித்தரிப்பது போலல்லாமல், ஹிந்து மதத்தில் அவர் பயங்கரமானவரல்ல. யாரும் அவரை அணுகலாம். அணுகுவற்கு மிக எளிதானவர். மானிடர் சுயநலத்தில் செயல் படுவது போல இறைவன் சுயநலமில்லாதவர்; மனிதனால் தன் சுய நலத்திற்காக, தனக்கிஷ்டப்படி அவர் பெயரால் வேண்டியவைகளைப் புனித நூலில் நுழைத்து, எழுதிக்கொள்ள, ஒரு கடவுளை உண்டாக்கவும் கிடையாது முன்னுக்குப் புரணாக எண்ணத்திலும், சொல்லிலும் செயலிலும், ஈடுபட்டு, பின்னர், தான் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிக் கொள்பவரல்ல. சுருங்கச் சொன்னால், இறைவன் பெயரைச் சொல்லி புனிதமாக ஏமாற்றவோ, கட்டாயப் போர் தொடரவோ வேண்டியதில்லை.

வேதவழிகளில் வேண்டுமென்றே பிறருக்குத் தீங்கிழைப்பதில்லை, தேவையும் இல்லை. மேலாக, நாம் இறைவனுக்குக் காண்பிக்கும் அன்புக்கு, மிகவும் கட்டுப்பட்டவர்; நமக்கு சேவகனாகவும் ஆகக் காத்துக்கிடக்கிறார். அர்ஜுனனுக்கு ரத-ஓட்டுனரானார் (chariot driver), தேசீய மகா கவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய கண்ணன், என் சேகவன் எனும் படைப்பில். ”நெஞ்சிலுள்ள காதல் பெரிது, எனக்குக் காசு பெரிதில்லை என்றான்” என கடவுளான கண்ணன் என்ற சேவகன் சொன்னான். பாரதியாரும், அக்கண்ணனை நினைந்து உருகி, “இங்கிவனை யான் பெறவே என்ன தவஞ் செய்து விட்டேன்” என்கிறார். நாம் அவருக்கு அன்புடன் செய்யும் எவ்வித உபசரிப்பையும் உகப்புடன் ஏற்றுக்கொள்பவர்; ஒவ்வொரு பழத்தையும், அது சுவையாக உள்ளதா, பழுத்திருக்கிறதா என பரிசோதித்து, இறைபக்தியில் தலைசிறந்த, ஏழைக் கிழவி சபரி, எச்சில் படுத்திக் கடித்துக் கொடுத்த பழங்களையும் மிகக் களிப்புடன் உகந்து, மற்றவர் போல அசிங்கமென ஒதுக்காமல், சுவைத்து உண்டவர். பள்ளிப் பருவத்தில், சாந்தீபினி மகரிஷி ஆச்ரமத்தில் சக மாணவனாக (classmate) இருந்த “குசேலர்” , மிகுந்த ஏழ்மை நிலையில் தன்னை காண வந்தவுடன், அவரை அன்புடன் இறுகக் கட்டித் தழுவி, வரவேற்று, குழந்தையாக இருந்த அந்நாட்கள் போல அதே நட்புடன், வாஞ்சையுடன், சற்றும் மாறாமல், நண்பனுடன் கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு, பேசிக்களித்து சிறிது நேரத்திற்குப் பின்னர், சின்னஞ்சிறு குழந்தை போல குசேலரை “எனக்கு அந்நாட்களில் தினமும், உன் வீட்டில் செய்த தின் பண்டம் ஏதாகிலும் மிக்க ஆசையுடன் கொண்டு வந்து கொடுப்பாயே! அது போல தின்பதற்கு இன்று எனக்கு என்ன கொண்டு வந்துள்ளாய்!!” என அந்நாளில் இருந்த அதே நட்பு, உரிமையுடன் பழகும் நண்பனாக, சிறுவனாக, நச்சரித்து, ஆவலுடன் கேட்க, ஆனால், ஏழை குசேலரோ தான் அன்புடன் தன் நண்பனுக்காகக் கந்தல் துணியில் கட்டிக் கொண்டு வந்திருந்த மிகச் சாதாரண ஒரு பிடி அவலை நண்பன், கிருஷ்ணனுக்குக் கொடுப்பதா வேண்டாமா எனத் தயங்கிய போது, தன் நண்பன் குசேலன் மிகப் பிரியத்துடன் தன் வீட்டிலிருந்து தனக்காகக் கொண்டு வந்ததையும் அறிந்து, குழந்தைபோல, அவசர அவசரமாக பரபரத்துக் கொண்டு, அதையும் அதே பழைய உரிமையுடன் உண்ணப் பிடுங்கி, தானும் களித்துச் சுவைத்து உண்டு, அதில் ஒரு பகுதியைத் தன் மனைவிக்கும் சுவைக்கக் கொடுத்தவரன்றோ!!

பகவத் கீதை 9வது அத்தியாயம், 26வது ச்லோகத்தில்,

”பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி |
த்தஹம் பக்த்யுபஹ்ருதம் அச்னாமி ப்ரியதாத்மன: ||

””யார் எனக்கு இலை, மலர், கனி, அல்லது சாதா தண்ணீரையோ, தூயமனதுடன் படைக்கிறானோ, (அளிக்கிறானோ) அவ்வாறு எனக்கு அளித்த மிகச் சிறிய பொருளையும், மிக்க அன்புடன் (களிப்புடன்) ஏற்றுக் கொள்கிறேன் / அருந்துகிறேன்.” — (ப.கீதை. 9: 26)

“पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति । तदहं भक्त्युपहृतं अश्नामि प्रयतात्मन: ॥

என நமக்கு வேதவழிகள் கூறுகின்றன (அப்படி உதாரணங்கள் வேண்டுமெனில், மேலும் பாகவதம், மஹா பாரதம், பகவத் கீதை போன்ற நூல்களிலிருந்து ஏராளமாக அடுக்கடுக்காக கொடுக்கலாம்.
அஃதே போன்று ஒரு சமய நிறுவனர், தன் முன்னாள் நண்பர் அவரை ஆவலுடன் காண வந்தவரை உதாசீனம் செய்து, அவமதித்த நிகழ்ச்சியையும் ஒப்பீடாக ஆதாரத்துடன் அவர்கள் புனிதமாக்க் கொண்டாடும் புனித சமய நூல்களிலிருந்தே மேற்கோளாகக் கூற இயலும்]]].
7. இறைவனின் வாய்மொழிகள், போதனைகள், ஹிந்து சமய வேத இலக்கியங்களில் உள்ளன.
வேத இலக்கியங்களில், இறைவன் நேரிடையாக அல்லது அவருடைய பல அவதாரங்களின் வாயிலாகவோ, கதைகளாகவும் போதனைகள் மூலமாகவும், அவ்வப்போது நமக்காக அளிக்கப்பட்டன. ஆனால், மற்ற சமயங்களில் கடவுள் மூலமாகக் கட்டளைகளையும் (commandments) அவருடைய இராயபாரிகள் (messengers) மூலமாக அல்லது அச்சமய கடவுளின் தூதர்களுக்கு செய்திகளாக அளிக்கப்பட்டதென அச்சமயத்தோர் சொல்கின்றனர். இவைகள், அச்சமயத்தோர்களுக்கு வேண்டுமானால் வழிகாட்டியாகக் கூட அமையலாம். ஆனால், வேத வழிகளிலோ, பகவான் விஷ்ணு / கிருஷ்ணன், அக்கடவுளின் அவதாரங்களின் போது ஒரு திரட்டாக நமக்கு கிடைத்திருக்கும் நேரிடை போதனைகள், திட்டவட்டமாக, ஐயத்துக்கு இடமற்றவாறு, ஆன்மீகத்தில், பரம்பொருளை மெய்யாக, முழுமையாக உணர்ந்துகொள்ள வழி வகுக்கின்றன. ஆன்மீக மெய்யுணர்தலில், பகவத்-கீதையிலும், பாகவத புராணங்களிலும், மற்ற வேத வழி நூல்களிலும், எல்லாருக்கும் வேண்டிய விழுமிய அறிவுரைகள், உசிதமான நடைமுறைக்கேற்ற நேரிடையாக ஆலோசனைகளைக் கூறுவது போல, வேறெந்த சமயவழிகளிலும் உறுதியாக இல்லவே இல்லை. ஆம்!. அறிவியலைக் சார்ந்த இச்செயல் முறைகளை, இப்போதனைகளில் கூறிய சூத்திரங்கள், வாய்ப்பாடுகளில் உள்ளது உள்ளபடி, சொல்லிலும் செயலிலும் நேர்மையாக வழிகாட்டிகளாகக் கொண்டு விட்டால், இவைகளால் நம் மனங்களைத் தூய்மையாக்கி, உணர்ச்சிகளின் இருப்பிடமான இதயத்தில் உள்ள மாசுகளையும் அறவே அகற்ற முடிகிறது. முழுமையான, அப்பழுக்கில்லாத பேருண்மையின் கணக்கற்ற தோற்ற வேறுபாடுகளின் உருவளவு, அல்லது பற்பல கொள்ளளவைப் பற்றியும் (DIMENSIONS), ஆன்மீகக் கண்டுணர்தலையும் நம் மனத்தால் உணர, இவ்வழிதான் நமக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது. ஒருவருக்கு வேறென்ன வேண்டும். சொல்லுங்கள். (we can perceive our own spiritual identity and then the numerous aspects of the Absolute Truth)
8. இறைவனின் நேசபாவம் நிறைந்த, கண்ணுக்கினிய வெளிப்படையான தோற்றங்களின் (VARIOUS FORMS) உட்கருத்துகளை, வேத வழி நமக்காவே தெளிவாகக் காட்டுகிறது:
இறைவனுடைய கணக்கற்ற பண்புக் கூறுகளைப் பற்றி முழு விவரங்களுடன் எடுத்துரைப்பதோடு மட்டுமல்லாமல், இவைகளில், இறையின் அநேக அவதாரங்களின், அமைப்புகள், இயல்புகள், செயற்பாணி, உருவம், ஆகியவற்றிலுள்ள அனுபவ அறிவுடன் தொடர்பு படுத்தி, வேத இலக்கியங்களில், வேத வழிகள், தெளிவாக நமக்களிக்கின்றன. இவ்வாறு கூறப்படும் அவதாரங்களில் இறைவன், பல் வேறு காரணங்களுக்காக, எண்ணிக்கையற்ற பொழுது போகுதற்குரிய செயல்களைச் செய்து அதன் வாயிலாக நமக்கு பல அறிவுரைகளைத் தருகிறார். இவைகளெல்லாம், இயற்கையாக ஆன்மீகத்தைச் சார்ந்தவைகளே.
உதாரணமாக, லக்ஷ்மி-விஷ்ணு, சீதா-ராம், ராதா-கிருஷ்ணா, ஆகியவைகளின் உட்கருத்துகள் மிக மேதகைமையுள்ள பக்தி பாவம் மிக்க, அவதாரங்களாகும். மிகக் குறிப்பாக, ராதா – கிருஷ்ணா எனும் கருத்துப்படிவம் இணைந்த உருவாக்கமும், இதைப்பற்றி விரிவாக வருணனை செய்யப்பட்ட தத்துவங்களனைத்தும், பண்புகளும், தலைசிறந்த பக்தி அம்சங்களும், அமிர்தம் போன்று, ஒப்புமைக்கப்பாற்பட்ட அழகு படைத்தவை. இம்மாதிரி வேறெங்கும் காணக் கிடைக்காது.
ஆகையால், வேத செயல் முறை, பரம்பொருளின் பரம ரகசியமான இயல்புகளைப் பற்றியும், மிக்க அன்பு நிறைத்த மனநிலையைப் பற்றியும், அகசார்பான தெளிவான அறிவு எனும் ஞான ஒளி விளக்கை நம்மனதில் ஏற்றி வைக்கிறது.
பரம்பொருளின் உருவை, எப்போதுமே கோப நிலையில், எழுத்தில் வடிக்க முடியாத மிக அசிங்கமானச் செயல்களைப் புரிந்தவ ரென்றோ அல்லது பொறாமையே உருவானவரென்றோ, மற்ற சமயங்கள் காட்டுவதுபோல, இவைகள் போன்றவைகள் வேத வழியில் ஏதும் கிடையாது. இயற்கையாக நம் மனத்தூய்மையையும், நற்பண்பு நிறைவான பக்தி நிலையையும் கிடைக்க வல்ல, பரம்பொருளின் ஆன்மீக நல்லுருவின் மேதகைமையைப் பற்றி மற்ற சமயங்கள் கூறுவது கிடையாது,
[[[கிருஷ்ணன், அவர் அண்ணன் பலராமனுடன் கம்ச வதத்திற்காக, மதுரா போவதற்கு முன்னர், கோகுலத்தில் 11 வயதுவரை இருந்தார். கோகுலத்தில் இருக்கும் போது எப்போதும் இறை அறிவால் (ஞான), இறையை விரும்பி (தர்சன), இறையுடன் கூடவே இருக்கும் எண்ணத்தால் (ப்ராப்தி), ”தங்களை அறிந்தவர்களால்” (தாம் யார், ஏன் இக்கோகுலத்தில் பிறவி எடுத்தோம் என அறிந்தவர்களால், இறையுடன் ஒரு தடவை கூடவே இருக்க ஆரம்பித்து விட்டால், எங்கும் எக்கணமும் எப்போதும் இணை பிரியாது கூடவே ஏதாவது ஒரு உருவில் இறையுடன் இருப்பவர்களால்), அவர்கள் மனதில் எழுந்த முதிர்ந்த பக்தி பாவத்தால், கோகுலத்தில் கூடி வாழ்ந்தனர். பக்தர்களுக்கு இறைவனின் கூட இருக்கும் ஆனந்த அனுபவம் எப்படி இருக்கும் என நமக்குக் காண்பிக்கவே இறையும் அவ்வதாரத்தைச் அவ்வாறே செய்தது தான், பதினோராவது வயதுவரைச் சிறு பிராய அந்த கோகுல வாச அவதார கட்டம். கம்ச வதத்திற்குப் பின் அங்கிருந்து ‘துவாரகை’ சென்று, தான் உதித்த யாதவ (மாடு மேய்க்கும் இடையர்) தேசத்தை நிர்மாணித்துக் கொள்ளச் சென்றுவிட்டார். அதற்குப் பிறகுதான் ’பாண்டவர்’ ’கௌரவர்’ ஆகியோரின் நேரிடை அழைப்புகளின் பேரில், சிறிது காலத்திற்காக துவாரகையை விட்டு, குருக்ஷேத்ர யுத்தத்தில் பங்கேற்க வந்தார். கிருஷ்ணனின் சேனைகள் மட்டுமே வேண்டிய, துரியோதனனுக்காகத் தன் பெரும்படையையும் (Quantitatively), கிருஷ்ணனான இறைவன் ஒருவரன்றி, வேறொன்றுமே வேண்டாம் என ஒருமனத்துடன் வேண்டி நின்ற அர்ஜுனனுக்காக, (If GOD is with me, who can be against me எனும் வகையில்) யுத்தத்தில் ஆயுதங்களைச் சீண்டாது, அர்ஜுனனின் சேவகனாக, தேரோட்டியாகத் தான் (பார்த்த சாரதியாக) (Qualitatively) பங்கேற்றார். அங்கே தான் ‘பகவத் கீதை’யெனும் ஆன்மீக அறிவுரைகளை அர்ஜுனனுக்காக தன் வாய் மொழியால் வழங்கினார். அக் குருக்ஷேத்ர யுத்தத்தின் போது தான் ’1000 பெயர்’ எனும், ’**சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தை’ ’பீஷ்ம பிதாமஹர்’ (நமக்காக) செல்லச் சொல்ல இறைவனான கிருஷ்ணன் தன் காதால் கேட்டு அருளினார். (**இது மகாபாரத அனுசாசனீக பர்வாவில், பீஷ்ம-யுதிஷ்டிர உரையாடலில், 149 அத்தியாயத்தில் உள்ளது]]].
9. ஆன்மீகத்தில், (கற்பிக்கச் சிறந்த) ஆசிரியர்களும், (ஆசார்யர்களும்) திறங்கொண்ட நிபுணர்களும் வேத கலாச்சாரத்தில் காணலாம்
பரம்பரையான சம்பிரதாயங்களில், ஆன்மீக-ஆசிரியர்கள்-சீடர்கள், எனும் போது இதில் மும் மூர்த்திகளான, பிரும்மா, விஷ்ணு, சிவன், ஆகியோரும் அடக்கம். இச்சம்பிரதாயங்களின்படி, மிக உயர்ந்த ஒழுக்கப்படி நிலையிலுள்ள ஆன்மீக அனுபவ அறிவுரைகள், ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் தங்கள் ஒவ்வொரு சீடர்களுக்கும் மிக பொறுப்புடன் முறையாக ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, சிறந்த ஆசிரியர்களிடமிருந்து, மிக நுட்பமான விவரங்களுடன் கூடிய நெறிமுறைகளும், அவர்கள் வாழ்க்கைப் பாணியில் நடத்திக்காட்டிய மனித சக்திக்கும் மீறிய அநேக அற்புத நிகழ்ச்சிகளும், எல்லாவற்றிக்கும் சிகரமாக, இவையனைத்தும், மிகச் சிறப்பு வாய்ந்த, மனப்பூர்வமான அன்பு, ஆசிகளுடன், சீடர்கள் வாயிலாக நமக்காக, நம் நலனுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இப்பேற்பட்ட ஆன்மீக ஆசிரியர்கள், புனித திருத் தொண்டர்கள் ஆகியவர்களின் சரித்திரங்களும், வாழ்க்கை வரலாறுகளும், நம் போனற சாதாரண மானிடர்களின் வாழ்க்கையை இன்னும் வளம்பெறச் செய்து, எதிர்பாராத நல்ல மாற்றங்களையும் உண்டாக்க வல்லது, மேலாக மேற்கூறிய புனிதர்கள் எவ்வாறு கடவுளிடமே நிரந்தரமாக, நேருக்கு நேர் (on one to one basis-1:1) என்றபடி, எப்படி அந்தரங்கமாக உரையாடினர் என்ற அசாதாரணமான நிகழ்ச்சிகளைப் பற்றியும் நமக்குச் சித்தரிக்கின்றன.
இவ்வழியை நாம் மிக மனப்பூர்வமாக அல்லது அக்கறையுடன் ஏற்றுக்கொண்டால், வேத ஒழுங்கு முறைகளும், ஆன்மீக ஆராய்ச்சி முறை நூல்களும் எவ்வாறு ஒன்றுக்கொன்றுடன் இணைந்து செயல்படுகிறதென்று நம் ஒவ்வொருவருக்கும் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றன. நாம் வேதவழிகள் சொல்லும் உன்னத மோக்ஷம் / சம்சாரத் தளைகளிலிருந்து விடுதலை அடைகிறோமோ, இல்லையோ, நம் தளராத முயற்சியுடன் நாமும் மனப் பூர்வமாக ஈடுபட்டு, அதில் வெற்றி கண்டு விட்டால் அந்த உன்னத ஒழுக்கப்படி நிலையை அடைவது மெய்யாலும் திண்ணமே / நிகழக்கூடியதே என மேற்கூறிய கற்பிக்கச் சிறந்த ஆசிரியர்களும், திறங்கொண்ட ஆன்மீக நிபுணர்களும், நமக்கு வழி காண்பிக்கிறார்கள். முற்றுப்பெற்ற ஆன்மீக முழுமையை வாழ்க்கையில் நாம் அடைந்துவிட, இம்மேலோர், இவை அனைத்தையும் அநேக உதாரணங்களுடன் நமக்குக் கற்பிப்பதுடன், பல ஆசிரியர்கள் நெறிமுறைகளை நடைமுறையில் செயலாற்ற, நமக்கு சுலபமாக புரியும்படியும் அவைகளையும் எழுத்தில் எவ்வாறு நாம் அவைகளைச் செய்ய வேண்டும் என படிப்படியாகப் புகட்டி, வழிகாட்டி நூல்களாக அளித்துள்ளனர். உன்னத ஒழுக்கப்படி நிலையை அடைய, நாம் செய்ய வேண்டியது இது ஒன்றேதான்:- அதாவது, இவர்கள் காட்டும் அடிச்சுவடிகளை அப்படியே பின்பற்றினாலேயே போதும். அவ்வுன்னத நிலையை அடைய வேறொன்றும் தேவையில்லை. (வேறென்னதான் வேண்டும்!)
10. ஆன்மீக மெய்யுணர்தலையும், அறியாமை என்னும் தவறான நம்பிக்கையிலி ருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, தெளிவு பெற்ற நிலையை அடைய வேத பண்பாடு, பிரத்யேக முறையில் நேர் வழியைக் காட்டுகிறது.
ஆன்மீக ஆன்மா என்றால் என்ன? நமது ஆன்மீக இயல்பும், அதன் படிநிலையும் என்ன? இம்மாதிரி போதனைகளை நாம் பகவத் கீதையிலும், எனைய முக்கிய புனித வேத நூல்களிலும் காணலாம். பிறகு, சனாதன-தர்மம் நம் செயல்களில், உணரும் சக்தியை விழிப்படையச் செய்ய ஒரு ஒழுங்கு முறையை நம் உபயோகத்திற்கு முன்னேற்பாடாக தயார் செய்து தருகிறது.
இதன் திறவு கோல்:
பல் வேறு வகைப்பட்ட பயிற்சிகளால், மேம்பட்ட உண்மைப் பொருள் சரியானவாறு ஒழுக்கப் படி நிலையில் இயக்குவதற்கு (operate on higher levels of reality) நம் மனதிற்கு வரவேண்டிய விழிப்பை ஏற்படுத்துகிறது. அந்நிலை தான் யாவுங்கடந்த இறுதியான ஆன்மீக உச்ச அடுக்கு (மேல் அளவு). இந்த படிவம் நம்முடைய முன்னுணர்வை (awareness) அதிகரித்து, இதனால் நாம் பல்வேறு உருவளவைச் சார்ந்த பிரபஞ்சத்தின் மேலான சமதளப் பரப்பில் வாழும் முறை பற்றி மனதால் புரிந்து கொள்ளும் திறனை நமக்களித்து விடுகிறது. இவ்விதமாக, எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் இறைவனைச் சார்ந்த ஆன்மீகச் சிந்தனையில் மேன்மேலும் மூழ்கிப்போகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு, ஆன்மீகம் எங்கெங்குளதோ அவைகளை தாங்களாகவே கண்டுபிடித்துக் கொள்ளலாம் அல்லது செல்வழித் தடங்கண்டு கொள்ளலாம். இதேபோல ஆன்மீகத்தில் தொடர்ச்சியாக முதிர்ச்சி ஏற்பட்டுவிட்ட பிறகு, ஆன்மீக வாழ்க்கை என்பதே ஒரு பொருள் விளங்காத செய்தி என (விரக்தி) ஏற்படாது, இதனால், ஆன்மீக வாழ்க்கை என்பது நாமே உண்மையாக, நிச்சயமாக அனுபவிக்கக் கூடியது என்பதாக ஆகிவிடும். இதனால் தான் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் வேத ஒழுங்கு முறையே தான், கல்வியின் (அறிவொழுக்கப் பயிற்சியின்) தலைமை பீடம், அதாவது, சிகரம். (zenith of education), இதுதான் ரகசியங்களுக்குள்ளும் இருக்கும் பரம ரகசியம் (the most secret of all secrets–गुह्यात् गुह्यतरं –ப.கீதை 18:63), இதுதான் சனாதன தர்மத்தின் மிகச்சிறந்த நிலை (குறைபாடில்லாத, முற்றுப்பெற்ற நிலை).
ஏனெனில், மெய்யை உணர்ந்து கொள்ளுதலில், கல்விகளுக்கெல்லாம் சிகரமான இந்த வேத முறைக் கல்விதான், ’’நான்’’ (Self) எனும் அக நிலைப் பண்பை பற்றியும், ஆன்மாவைப் பற்றியும் நம்முள் உறைந்த இறைவனைப் பற்றியும், நமக்கு நேரடியாக நம் புலன்களாலும், மன உணர்வுகளாலும் புரிந்து கொள்ள உதவுகிறது. இதைத்தான் மிக மகிழ்ச்சியாக நிறைவேற்றப்பட வேண்டும்;
அந்நிலை தான்:
• நிரந்தரமானது,
• எல்லையற்றது,
• ஆதியந்தமில்லாதது,
• காலவரையற்றது,
• மாற்றமில்லாதது,
• அழிக்க முடியாதது,
• அழியாதது,
• ஆனந்த மயமானது.
இந்நிலை நடைமுறையிலும் சாத்தியமானது. முயன்றால் அந்நிலையையும் அடைந்திட முடியும்.
(இனி நான்காவது பகுதி தொடரும்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்


2. ஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக் காட்டிலும் முன்தோன்றியது.
உங்களைச் சுற்றி எல்லா திசைகளையும், உற்று நோக்கிப் பாருங்கள். இவ்வாறு நோக்குங்கால், காற்றோடு காற்றாக மறைந்து போகாமல், தண்ணீரில் அமிழ்ந்து போகாமல், அல்லது மண்ணோடு மண்ணாகாது இந்நாள்வரை உறுதியுடன் வாழும், வேத வழி நன்நெறி கலாச்சாரம் போன்று, வேறொரு கலாச்சாரம் ஏதாகிலும் உலகில் தென்படுகிறதா? ஹிந்து கலாச்சாரமோ, குறைந்து, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக (இன்னமும் அதிகமாகச் சொல்ல வேண்டும்), ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த அதே வீரியம் இன்றும் குன்றாது, வெற்றிகரமாக செழித்தோங்கி, இதற்கிணையில்லை என கூறுமளவிற்கு, இயங்கும் ஆற்றலுக்குரியதாகவும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே வழி வழியாக மரபு கொண்டு, தழைத்தோங்கி, அந்நாட்களில் செயலாற்றிய அதே திறனுடன், இந்நாட்களிலும் கொள்கையளவில் இல்லாது தற்காலத்திற்கு ஒப்ப மெய்யாக செயலிலும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் சமயம் வேறொன்றுண்டா? மற்ற பழைய கலாச்சாரங்களான, எகிப்திய, இன்கா, மயன்***, அஸ்டெக், (Egyptian, the Inca, Maya, Aztec) ஆகிய இவையெல்லாமே, 5000 ஆண்டுகள் புராதனமானது தான், ஆனால் இதில் ஒன்றுகூட இன்று வரை நிரந்தமாக இல்லையே. இவைகள் எல்லாம் மறைந்து, அந்நாளிலிருந்து இன்றுவரை எஞ்சியுள்ள, அக்கால மனிதர்களால் உண்டாக்கப்பெற்ற சில கட்டங்கள், வடிவங்கள் என நமக்கு அக்கால கலாச்சாரம் எப்படி உண்மையில் செழித்தோங்கி இருக்கவேண்டுமென தெரிந்து கொள்ளும் நம் ஆவலை மட்டுமே தூண்டிவிட்டு, ஆனால், நம்மிடம் மௌன மொழியில்தான் பேசுகின்றன. அவ்வளவுதான். இவைகளைப்பற்றி நிரந்தரமான. உண்மையென தகவல் இதுதான் என நிரூபித்து நமக்கு உறுதியளிக்கவில்லையே! இக்கலாச்சாரங்கள் இருந்தன என நம் கண்ணெதிரே தெரிந்தாலும், அவைகளைப் பின்பற்றுவோர் எப்படி வாழ்ந்தனர், இன்று அக்கலாச்சாரங்களை அனுசரிப்பவர்கள் எங்கேயாவது இருக்கின்றனரா? இருந்தால், எங்குள்ளனர்? என்றோ, அல்லது அவர்களது சமயப் பெயர்கள் தான் என்ன? அவர்கள் சமய சித்தாந்தங்கள் தான் என்ன, என சொல் வழியாகவோ அல்லது எழுத்து வழியாகவோ விவரமாக, முடிவாக, நாம் காண முடியலில்லையே! இவைகளைப்பற்றி எல்லா முடிவுகளும் கற்பனையில், அல்லது ஆராய்ச்சியால், தர்க்க ரீதியில் ஊகித்து சொல்லப் படுபவைகளாகவே இன்று நமக்குக் கிடைகின்றன. இவைகள் எல்லாமே காலத்தின் கோலத்தால் நமக்கு விவரமாகக் கிடைக்க நாம் கொடுத்துவைக்க வில்லை.
*** சிறுவனாக ’சம்ஸ்கிருதம்’ பயின்ற போது, ’ஸ்ரீ ராமோதந்தம்’ எனும் ஸ்ரீமத் ராமாயண சுருக்கப் புத்தகத்தில் இவ்வாறு அன்று படித்ததாக ஞாபகம்:
“मण्डोदरीं मय सुतां परिणीय दशानन: । तेषां उत्पादयामास मेघनाथाह्व्यं सुतम् ||
இதன் பொருள்: மயனுடைய பெண்பிள்ளையான ’மண்டோதரி’யை ராவணன் மணந்து, ’மேகநாதன்’ (இந்திரஜித்) என்பவனைப் பெற்றான்” என படித்திருக்கிறேன்.
இதனால் வேதவழியே, ’மயன்’ நாட்களைக் காட்டிலும், இன்னும் மூத்தது எனத் தெரிகிறது.
ஆனால் ஹிந்து கலாச்சாரமோ, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும், அக்காலத்திலிருந்து இக்காலம் வரை எஞ்சியுள்ளவைகளிலிருந்து நம்மால், அதன் விவரங்களை தொடர்ச்சியாகக் கண்டுபிடிக்க முடிகிறது. இதன் சரித்திரம், புராணங்கள், இதிஹாசங்கள் (history) என்றும், ஏராள ஆய்வுகள் மூலமாகவும், நன்கு ஆவணங்கள் கொண்டது. இதற்கு மேலும் ஆராய்ச்சி செய்யவேண்டியவை இன்னும் அநேக பகுதிகள் உண்டு. என்றாலும், இதுவரை நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி, வேதகால சமூகம், என்பதே தொன்மை காலத்திய அல்லது வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொடக்கம் கொண்டது என்பதே ஐயமற எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இன்று நம்மிடையே காணும், ”இருக்கும் கலாச்சாரங்களான”, முறையே, இஸ்லாம், கிருஸ்தவம், புத்த சமயங்கள், ஆகியவை எல்லாமே 1400, 2000, 2500 வருடங்களுக்கு முன்னர்தான் பிறந்தவைகள். இருப்பினும், வேதகால கலாச்சாரம் மேற்கூறிய எல்லா கலாச்சாரங்களைக் காட்டிலும், மிக மிகப் புராதனமானது.
அநேக, அறிஞர்கள், வேதகால நாகரிகத்தைப்பற்றிச் சொல்லும் போது அதன் தொன்மையைப்பற்றி மிகச் சிறப்பாகக் கூறியுள்ளனர். உதாரணமாக, பேராசிரியர் Bournouf, பிஃரான்ஸ் கல்லூரியில் (College of France) ”சமஸ்கிருதமும் அதன் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஆற்றிய ஆராய்ச்சி சொற்பொழிவில், ”நாம் வேத கால (ஹிந்து) தத்துவ ஞானம், அதன் புராணக் கதைகள், இலக்கியங்கள், சட்டங்கள், மொழிகளைப் பற்றி எல்லாம் நன்கு அறியவேண்டும். இவைகள் இந்தியா எனும் ஒரு பிரதேசத்தைப் பற்றி மட்டுமன்றி, உண்மையாகவே, உலகத்தின் தொடக்கத்தைப் பற்றியது, அவைகளில், நம் சிற்றறிவுக்கும் அப்பால், எட்டாத மறைபொருட்களைப் பற்றிக் கண்டறிய வேண்டிய, எவ்வளவோ எஞ்சிய ””குழூஉக் குறி”” க்களுக்கு (source codes-மூலாதாரக் குறிகள்) அனைவரும் அறிய வழங்கும் மொழியில் (decipher) பெயர்க்க இன்னமும் கணக்கற்றவைகள் உள்ளன” (it is a page of the origin of the world that we will attempt to decipher) எனக் கூறியுள்ளார்.
இக்கருத்தை ஒட்டியே, திரு. தார்ன்டன் (Mr. Thornton) என்பவரும், தன் வெளியீட்டான, History of British India புத்தகத்தில்,”உலகிலுள்ள எல்லா நவீன நாடுகளைக் காட்டிலும், அல்லது எகிப்திலுள்ள நைல் நதியை எத்தனையோ நூற்றாண்டுகளாக, நித்தம் பார்த்துக் கொண்டே இருக்கும் மிகப் பிரசித்தி பெற்ற பிரமிட்டுகளைப் படைத்த, எகிப்திய நாகரிகங்களைக் காட்டிலும்; மனிதன் படைத்த கலைகளின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரேக்க, இத்தாலிய நாகரிகங்கள் போன்ற மற்ற புராதனமாக உள்ள எந்த நாட்டு நாகரிகங்களைக் காட்டிலும், வேத நன்நெறியைச் சார்ந்த இந்தியாவிலுள்ள ஹிந்துக்களின் நாகரிகத்திற்கு, மேலாகவோ, அல்லது குறைந்த பட்சம், ஈடு-இணையாக, செல்வத்திலோ அல்லது மேதகைமையிலோ இருக்கக் கூட இயலாது. இது மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மையும் கூட” என அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்.
ஜெர்மன் தத்துவ ஞானி, அகஸ்டஸ் ச்லேகெல், (Augustus Schlegel) அவர்கள் எழுதிய ’’புராதன இந்தியர்களின் மதிநலம்’’ எனும் புத்தகத்தில், (Wisdom of the Ancient Indians), தெய்வீகத்தன்மையுள்ள வேதகால நாகரிகத்தின் தொன்மையைக் குறிப்பிடும் போது, “கடவுளிடமிருந்து கிடைத்த அறிவையே, முன்நாள் வேத நன்நெறியுணர்ந்த ஹிந்துக்கள், உடைமையாகப் பெற்று இருந்தனர். இதை எவரும் மறுக்க இயலாது. ஆகவே, இதே அறிவு, மெச்சத்தக்க, மிகத் தெளிவான, மேன்மையான மெய்யுணர்வு பற்றிய, ஹிந்துகளின் எழுத்துக்களில், மொழி, செயல், ஆகிய இவைகளின் நடைகளில் காண்கிறோம். இவைகளைக் காட்டிலும், மற்ற வேறு எந்த மானிட மொழிகளில் பேசப்பட்ட, எழுதப்பட்டவைகளிலோ, இவைகளில் இருப்பது போலக் காணக்கிடைப்பது அரிது”.
இன்னும், ஒருபடி மேலாக, மாக்ஸ் முல்லர், (Max Mueller in his ’’India–What It Can Teach Us‘’ (Page 21) ”இந்தியா நமக்கு எதைக் கற்பிக்க வல்லது?”, எனும் புத்தகத்தில், “”ஆவணங்கள் எனும் தலைப்பில், இந்நாள்வரை உலகில் பாதுகாக்கப்பட்ட எந்த ஆவணங்களைக் காட்டிலும், ஹிந்துக்களின் ஆவணங்கள், மிகத் தெள்ளத் தெரியும் விதத்தில் இருப்பதால், இந்த ஆவணங்களிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள், எவ்வித தொடர்பும் இற்றுப்போகாமல், மிக முழு நிறைவாக, எவ்வித வாதப் பிரதிவாதத்திற்கும் இடமின்றி, யாவும் அடங்கி நமக்குக் கிடைக்கிறது” என கூறுகிறார்.
மேலாக மாக்ஸ் முல்லர் சொல்வது: மிகத் தொன்று தொட்டுள்ள, பழமை நிறைந்த வேத நன்நெறியில் ஈடுபாடுகொண்ட சமூகத்தில், வாழ்க்கை வழி பற்றி அதிலுள்ள அநேக தத்துவங்கள், வாழ்க்கையைப் பற்றிய மனோபாவங்கள், அவைகளை அறிந்துகொள்வதிலும், மென்மேலும் அவ்வறிவில் முதிர்ச்சியடையவும், நாம் ஏன் உலகில் வாழவேண்டும், போன்ற கருத்துகள் எல்லாமே, இதன் ஆரம்ப நாளிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக உள்ளடங்கி இருக்கிறது. இதை விவரிக்கையில், அநேக விளங்காத பகுதிகளுக்கு விளக்கவுரைகள், வாழ்க்கை நெறியின் பற்பல ஒழுங்கு முறைகள், அடிப்படை விழுமியங்களில் (values) உள்ள மதிப்பிட இயலாத, மிக உயர்ந்த கோட்பாடுகள், ஆகியவைகளில் மாறா கவனம், எந்த சூழ்நிலையிலும் மனவலிமை, எப்போதுமே நிதானம், மன அமைதி நிறைந்திருத்தல் என நமக்கு அக் கலாச்சாரத்தைப் பற்றி இன்றும் நமக்குக் கூறிக் கொண்டிருக்கின்றன. வயதாகாக, அறிவு கூர்மையும், மிகத் தெளிவாக சிந்திக்கவும், கண்டுணர்தலிலும், அறிவுத்திறனில் நமக்கு இயற்கையாகவே, முன்பு இருந்ததை விட கூடி இருக்கிறது. வேத விவேகத்தில் பொதிந்து கிடக்கும் உள்ளார்ந்த பண்புகள், கருத்தாழங்கள், இன்று நம்மிடமிருக்கும் எத்துடனும், இதற்கிணையாக ஒப்பீட்டுக்கு ஒவ்வாதது. மெய்யானவற்றில், அக்கறை கொண்டவர்கள் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்; இவ்வேத அறிவாற்றல் உலகளவாக எல்லோருக்கு, எங்கும் பயன்படத்துவதற்கு உரியது, எனவும் விரிவாகச் சொல்கிறார்.
3. வேத இலக்கியங்களை உலகிலுள்ள எல்லா சமய இலக்கியங்களுடன் ஒப்பிடும்பேது, வேத இலக்கியங்களே மிக பழமைவாய்ந்தது, உயர்ந்தது, முற்றுப் பெற்றது, குறைவற்றது
தொன்று தொட்டு, உள்ள சமய இலக்கியப் படைப்புகளில் எது மிக தொன்மையானது என, சரித்திரத்திலோ, அல்லது சமயங்களில் புலமைவாய்ந்த கற்றறிவாளர்களைக் கேட்டால், ’வேத சம்ஹிதைகளே’ எனவும், அதாவது “ரிக் வேதம்” போன்றவைகள் என எல்லோருமாக தயக்கமின்றி, ஒருமனதாக ஒப்புக்கொள்வர். மாக்ஸ் முல்லர் (Max Mueller) எழுதிய (”History of Ancient Sanskrit Literature“(page 557), ”மிகப் பழமையான சம்ஸ்க்ருத இலக்கியத்தின் சரித்திரம்” எனும் தலைப்பில் எழுதிய புத்தகத்தில், இவ்வாறு உள்ளது. “’எகிப்திய’ அல்லது ’நினேவா’ (Egypt or Ninevah. . .) இவைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், அல்லது நாணயம் முதலியவற்றில் பொறிக்கப்பெற்ற எழுத்துகளிலிருந்தும் விட, மிக உண்மையான பழங்காலத்தைப் பற்றி, (நமக்கறியக் கிடைக்கும் எல்லா ஆவணங்களை சீர்தூக்கிப்பார்கையில்) ‘ரிக் வேதம்’ தான் மிகத் தொன்மையானது என எளிதில் புலப்பட்டுவிடும். அதே புத்தகத்தில், 63ம் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்: “வேதத்தால் இரண்டு வித நன்மைகள் உண்டு. வேதம், உலக சரித்திரத்திற்கும், இந்திய சரித்திரத்திற்கும் நன்மை பயக்கவல்லது. எந்த மொழிகளிலுள்ள இலக்கியப்படைப்பும் நிரப்ப முடியாதவைகளை, வேதங்களே காலியிடத்தை நிரப்புகிறது. நம்மிடம் அக்காலத்தைப் பற்றிய எவ்வித ஆவணங்கள் இல்லாத போது வேதமே நம்மை அக்காலத்துக்கு நமது கைகளைப் பற்றிக்கொண்டு, (ஒரு தாய் தன் குழந்தையை கவனத்துடன் கூட்டிச் செல்வதைப் போல மிகப் பொறுப்புடன்), கூட அழைத்துச் செல்கிறது”.
எவ்வளவுதான் ’ரிக்வேதமே’ புராதனமானதாகவும், மிக அறிவாழம் மிகுந்து இருப்பினும், இந்த ’ரிக்’ வேதமே, எல்லா வேத நன்நெறிகளின் ஆழ்ந்த கருத்துக்களின் ஒரு சிறு பகுதியைத்தைத் தான், முன்னுதாரணமாக நமக்கு எடுத்துக் காட்டுவதாக விளங்குகிறது. ஆகவே, வேத நன்நெறிகளின் முழுமையான ஆழ்ந்த கருத்துக்களையும், நல்விவேகத்தையும், இன்னும் விரிவாகத் தெளிவு படுத்த, அறிந்து கொள்ள, மற்ற அநேக வேத இலக்கியங்களில் உள்ள பற்பல பகுதிகளைப் படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். மேலாக, பல்வேறு வகைகளிலும், சாதாரணமாக எங்கும் கிடைக்கக் கிட்டாத அநேக தலைப்புகளில், புராதன வேத வழிகளின் மூல பாடங்களை, இந்நூல்களிலிருந்து, படிப்படியாக நாம் கற்றுக்கொள்ளலாம்.
இன்னும் சுருக்கமாக சொன்னால், நான்கு வேத சம்ஹிதைகளான ரிக், சாம, யஜுர், அதர்வ வேதங்களில் மேற்கூறியவைகள் யாவுமே கிடைக்கின்றன. மேலாக, ’பிராம்ணங்களில்’ (Brahmanas) வேத சடங்குகளைப் பற்றி அநேக தொழில் நுட்ப ஆய்வுக்கட்டுரைகள் (treatises = systematic expositions in writing of subjects) நன்றாக எடுத்துக்காட்டி விளக்குகின்றன. “ஆரண்யகங்களில்’ (Aranyakas), உலகப்பற்றை விட்டொழித்து வனங்களில் வசிப்போரைப் பற்றி விளக்கு கின்றன. அடுத்தாக நூற்றுக்கணக்கான உபநிஷத்துக்களில், அவைகளிலும் சிறந்த 108 எனும் எண்ணிக்கையில், இதிலும் குறிப்பிடத்தக்க மிகப் பிரசித்தமானவைகளான – கதோ, முண்டக, ப்ரஹதாரண்யக, பிரச்ன, சாந்தோக்ய, போன்றவைகளும், மற்ற உபநிஷதங்களும், வேத ஆன்மீக உண்மைகளை நமக்குத் தெளிவுப் படுத்துகின்றன. வேதாந்த சூத்திரங்கள் என்பவைகள், ஆன்மீகத்தில் உள்ள உண்மைகளின் தனித்தன்மையுள்ள உட்பொருள்களை, ஆன்மீக தத்துவங்களில் மிகச் சிறந்த குருவிடம் தான் பயிலவேண்டும். (இதை ’நல்ல வழிவழியாய் வந்த தகுந்த ஆசார்ய பரம்பரையைச் சார்ந்த ஆசார்யரிடம் ’காலக்ஷேபம் செய்தல்’’ என வைணவத்தில் கூறுவர்) இதற்கும் மேலாக இதிஹாசங்கள், இவைகள் சரித்திரங்கள், நடந்வைகளை நடந்தவாறு எழுதப்பட்ட மிகப்பெரிய நூல்கள், அதாவது, ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாரதம் – இதில் ஒரு பகுதியான பகவத் கீதை முதலியன. இவைகளில், மிக மேன்மையான ஆன்மீக விழுமியங்களைத் தழுவிய, நல்லொழுக்க நியதிகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளும் ஏராளமாக உண்டு. இவைகளெல்லாம் நமக்கு வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டி நூல்கள். இதில் ஆன்மீகத்தில் தெளிவுபெற்ற நிலையை அடைய, படிப்படியான அனுபவ செயல்முறைகளை பாமரரும் அறிய தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் கூறி, விளக்குகின்றன. புராணங்களையும் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம். புராணங்களில், 18 மகா புராணங்களென்றும், மற்ற சிறு அல்லது உப புராணங்களென்று 18ம் இருக்கின்றன. அடுத்தபடியாக, தலபுராணங்கள் எனும் அநேக பிராந்திய புராணங்களும் உண்டு.
இவைகளனைத்தும் நமக்கு உலகின் அல்லது பிரபஞ்சத்தின் பழைய சரித்திரங்களை சித்தரிக்கும் போது, மனித இனத்திற்கே ஏற்றதான, பயனுள்ளதான முக்கிய ஆன்மீக போதனை களையும் நாம் அறிவதற்கு அளிக்கின்றன. இவைகளைத் தவிர பின் சேர்க்கப்பட்ட பற்பல சூத்ரங்களும் அதாவது ஒழுங்கு முறைகளும், ஒவ்வொரு குடும்பத்தலைவர்களுக்கும் உகந்த, முறைப்படுத்தப்பட்ட சட்டத் தொகுப்புகள் (codes), பல தலைப்புகளில் தொகுத்து அளிக்கப் பட்டிருக்கிறது. வேதாங்கத்தில் ஒலியியல், இலக்கணம், வானூல், முதலிய பல அறிவியலுக்கு துணையாக பல நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. இவைகளைத் தவிர, உபவேதங்கள் என்பவைகளில், கலைகள், அறிவியலைப் பற்றியும், நடனம், இசையைப்பற்றிய (Gandharva-veda) ஒழுங்கு முறைகளையும், உடலுறுப்பும் அதன் பாகங்களுக்குத் தேவையான ஒழுங்கு முறைகளும், (Ayur-veda), போர்க்கலைகளைப் பற்றியதும், கட்டடக்கலையைப்பற்றியும் வேதங்கள் உள்ளன. இவைகளையும் தவிர, ஏராள ஆன்மீகத் தலைவர்கள் இயற்றிய மூல வேதங்களிலுள்ள வாசக விரிவுரைகளும் (வ்யாக்யானங்களும்), உள்ளன. இவையனைத்துமே ஹிந்து-வேத ஆன்மீக வழியையே ஒருங்கே முன்னிறுத்திக் காட்டுகின்றன. இவ்வாறாக, ஹிந்து வேத புனித நூல்களில், நன்நெறிகளைத் தவிர, இசை, கலைகள், சிறப்பியல்புள்ள முனிவர்களைப் பற்றி வரலாறுகளும், கதைகளும், அந்தந்த படிநிலைக்குத் தக்க உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன. இவைகளுக்குள் பொருளுலகத்தில் பிறந்தும், அதனின்று முக்தர்களாகி, பிறவின் பயனான ஆன்மீக சிகரத்தை எட்டியவர்களைப்பற்றிய, நற்பாடங்களாலும், கதைகளாலும், நன்நடத்தைக் கோட்பாடுகளும், தத்துவங்களாலும் ஏராளமாக நிறைந்து இருக்கின்றன. இவைகளில் தலைசிறந்ததாக எல்லோராலும் கருதப்படும், பகவத்-கீதையும், வேதங்களுக்கு வேதவ்யாசரே எழுதிய விளக்கவுரைகளும், பாகவத புராணமும் மிக முக்கியமானவை. வேதங்களில் பல முக்கிய மூலபாடங்களின் மூல நூலாசிரியர் வேதவ்யாசரே. பாகவத புராணத்தில், எதெது வேதங்களிலும் விட்டுப்பட்டுப் போனதோ, அவைகனைத்தையும் ஸ்ரீமத் பாகவத புராணம் உள்ளடங்கியது. ஆதலால், ஆன்மீக அறிவை அடைய விரும்புவோர், பாகவத புராணத்தை, எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க இயலாது.
வேத மூல பாடங்களை புனராய்வு செய்கையில், நமக்கு பிரமிப்பளிப்பவைகள் ஏராளம். இவ்வறிவியல் பாடங்களை, முன்னோர், முற்றிலும் ஐயந்திரிபுற முழு நிறைவாகவும், அதேசமயத்தில் எல்லோராலும் புரிந்து கொள்ளும் வகையிலும், செய்திருக்கின்றனர் என நமக்கு வியப்பளிக்கும்-எண்ணத்தை தானே உருவாக்கிவிடுவார்கள். இதில் ஒளிவு, மறைவு ஒன்றுமே இல்லை. இந்த வேதபாடங்கள், நமக்கு இறைவனின் வெவ்வேறு சமயங்களில் தோன்றும் வெவ்வேறு தோற்றங்களைப் பற்றியும் (விச்வரூபம் முதற்கொண்டு), இறையின் தனிப்பண்புகளும், இறையின் பேரன்பும், போற்றத்தக்க மாட்சிமையையும், அருளிரக்கத்தையும், கருணையும், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவரைப்பற்றி வேறெந்த புனித நூல்களீல் காணக்கிடைக்காத பல தத்துவ விளக்கங்களுடன் நம் மனக்கண் முன்னே நின்று காட்சியளிக்கின்றன, அறிந்தபின், நமக்கு ஆனந்தப்பரவச மூட்டுகின்றன. இவ்வேத நூல்களே, இறையை உணர, நமக்குச் செல்வழித் தடத்தைப்பற்றியும், வேறெந்த புனித நூல்களில் காணாத மிகச்சிறப்பு வாய்ந்த விளக்கங்களுடன், நமக்குக் கிடைக்கின்றன.
சமயங்களில் ஈடுபாடுள்ளவர்களாலும், தத்துவ ஞானிகளாலும், அரசியல்வாதிகளாலும், கலைஞர்களாலும், பிரசித்தமானவர்களாலும், உலகாயதத்தை விட்டொழித்த முற்றும் துறந்தவர் களாலும், தொடர்ந்து இவ்வேத நூல்களில், இலக்கியங்களில் உள்ளவைகளைப் பற்றி சிந்திக்கும் போது இவைகளை மகிழ்ந்து பாராட்டுவதோடு, அவைகளிலிருந்து நற்பயனையும் பெறுவது திண்ணம். ஆகவே, ஹிந்து வேத நன்நெறிகளை தினமும் அனுசரிக்கும் நற்பண்பாளர்கள், இந்நூல்களைத் திரும்பத் திரும்ப ஆய்வோர், இவைகளுள் பொதிந்திருக்கும் தத்துவங்களின் உய்த்து அறியும் திறனையும், உணரும் சக்தியையும் புதுப் புது விதத்தில் உணர்ந்து, இனி இவைகளைத் திருப்பத்திரும்ப ஆய்வு செய்கையில் இதுவரை கிடைக்காத பற்பல புதுப் புது ரகசியங்கள் தங்களுக்குக்காகக் காத்துக் கிடக்கின்றன என எண்ணத்துடன் இந்நூல்களை இனி அணுகுவார்கள் என்பது நிச்சயம்.
இயல்பாகவே, மிகச்சிறந்த (எந்த) புத்தகங்களை ஆழ்ந்து படிக்கும் போது நமது நல்லறிவையும், தெளிவாகப் புரிந்துகொள்ளும் திறனையும் அதிகரிக்கும் என்பது மிக உண்மை. ஆனால், வேத நன்நெறியில் பொதிந்துள்ள அறிவின் ஆழமும், இதற்கும் மேலாக இவைகள் ஒரு நீர்வீழ்ச்சியாகக் கொட்டும் விதமும், இவைகளை உள் உணர்த்த அடுக்கடுக்காக நமக்குள் ஏற்படும் உணர்தல் கைகூடுதலும், உணர்வு நிலை மேம்பாடடைதலும், ஆக, இவைகளுக்குப் பிறகும், நமக்கு இதனால் கிடைத்த அறிவு எல்லாமே, மிகச் சிறிதளவே (ஸ்வல்பமே / கொஞ்சமே) எனவும் தோன்றி விடும். சாதாரணமாக எதையும் உட்கொள்ளும்போது, (intake) உட்கொள்பவருக்கு ஒரு கட்டத்தில் திகட்டிப்பேவது இயல்பு. ஆனால், இது போன்றவைகளில் கவனம் செலுத்தும்போது, திகட்டிப் போவதென்பதற்கு இடமில்லை. ஆனால், இவைகளைப் பற்றி மேலும் கற்றறியும் வேட்கையே அதிகமாகிறதே தவிர, எச்சமயத்திலும் குறைவதில்லை. வேத வாழ்க்கை வழிப் பாணியின் எல்லாவித நோக்கும், ஒவ்வொருவரும், வேத நன்நெறியில் இச்சிறிதளவான மேன்மையையே அடையவே, இத்தனை பலமான ஆழ்ந்த கவனத்தையும் மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தையும், பின்னணியையும், நமக்கு வலியுறுத்தி, இன்னும் தேடி அறிய வேண்டியவைகள் ஏராளம் ஏராளம் என எளிதில் புலப்பட்டு விடும்.
இதனால்தான், வேத நூல்களை எப்போதுமே ஆழ்ந்து படிப்போற்கு அவ்வேத நூல்கள் என்றுமே புதியது என உணர்த்திவிடும். இவ்வாறு ஒவ்வொரு தடவையிலும், ஆழ்ந்து படிப்போற்கு புதுப்புது உணர்த்தலையும், நுண்ணறிவுத்திறமும், நல்லறிவையையும் புதிதாக அளித்துக்கொண்டே இருக்கும். ஆக, ஒருவர் தன் வாழ் நாள் அனைத்தையும் வேத நன்நெறி நூல்களை ஆய்வு செய்கையில், படிப்படியாக மேன்மை உணர்தலை முடிவாக அடைந்துவிட்டோம் என அறுதியிட்டுக் கூற இயலாது என அறிந்தோர் ஆலோசனை அளிப்பர்.
[[[நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் கொட்டும் விதத்தில் வேத நன்நெறி ஒரு படிநிலையில் நம்மீது படிப்படியாக, தாரை தாரையாகக் கொட்டும்போது, எப்படி நீர் வீழ்ச்சி யிலிருந்து விழும் நீரை ஒருவர் எவ்வளவுதான் பிடித்து (தம் உபயோகத்திற்கு) வைத்துக்கொள்ள இயலும் என்பது போல, வேத நன்நெறி எனும் தாரை நம் மீது கொட்டோ கொட்டென கொட்டும்போது, உலகில் அணுவிலும் அணு போன்ற நாம், எவ்வளவைத்தான் தேக்கி வைத்துக்கொள்ள இயலும் என பொருள் கொள்ளல் வேண்டும். இத்தனை முயற்சிக்குப் பிறகும் இவ்வளவு தானா பலன் என, நமது இயலாமையைத்தான் இது உணர்த்திவிடும். ஆக இன்னும் கவனம், இன்னும் முயற்சி தேவை என நமக்கு புலப்பட்டு நம்மை இன்னமும் ஆழ்ந்து ஈடுபட வைத்து விடும். இதனால்தான், “கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என உற்ற கலைமடந்தை (யே) ஓதுகிறாளோ”!!]]]
4. வேத நெறியே, முதிர்ச்சியும், முழுமையும் அடைந்த நெறி.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, புனித வேத நூல்களில், உள்ளிருக்கும் உட்பொருட்கள், போன்று வேறெங்கும் இல்லை என்பற்கு ஏற்ப, மிகச் சிறப்பாக உள்ளது. இதில் ’பொருள்’ என்றும், (material), ஆன்மீகம் என்றும் (spiritual), ஒன்றுக்கொன்றுடன் முற்றிலும் மாறான மனக்கருத்து கொண்டவைகளைப்பற்றி, வேறெந்த சித்தாந்தங்களிலோ, அல்லது வாழ்க்கைப்பாணிகளிலோ பார்க்க முடியாவைகளை, வேத நெறிகளில் காணலாம். இவ்வாறாக, வாழ்க்கையைப் பற்றியும் பல்வேறு கருத்துக் கோணங்களில், வெளிப்படையாகப் பெருட்களைப் பற்றியும், அதேசமயத்தில், முன் விவரித்த இறைவனின் ஆன்மீக இயல்புகளைப் பற்றியும், இதிலுள்ள உட்பகுதிகளை தனித்தனியாக ஐயமற ஆய்ந்தும், அவ்வாய்வின் முடிவுகளைத் தொடர்பு படுத்தித் தொகுத்துக் கொடுத்துள்ளனர். இதிலில்லாதவை வேறெங்குமே இல்லை என உலகோர் வியக்கும் வண்ணம், மிக அக்கறையுடன் நம் நலனுக்காக பூர்த்தியான நிலையில், மேற்கூறிய யாவையும் தந்துள்ளனர். வேத நெறி இவ்வாறு இருப்பதால்தான், உலகிலுள்ள எல்லா சிந்தனையாளர் களையும், மெய்யறிஞர்களையும் எந்நேரத்திலும், வேத நன்நெறிகளில் உள்ளவைகள், தன்பால் வசீகரிக்கிறது. மேலும், இன்நன்நெறிகள் நிரந்தர உண்மைகளென உறுதிப்படுத்துகிறது. அனுபவ அறிவு சார்ந்த ஆன்மீக அறிவுரைகளுக்காக, மேலை நாடுகளிருக்கும் கிருஸ்த, யூத வழிபாடு தலங்கள், (churches or synagogues) அளிக்க இயலாதவைகளை, ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளோர், ஹிந்துஸ்தானை எதிர்பார்த்து தான் என்றும், (இன்று கூட) உள்ளனர். (practical spiritual guidance)
இதிலடங்கியவை:
• ஒவ்வொருவரிடத்தில் உள்ளிருக்கும் இறைவனை உணர்ந்து, கண்டுபிடித்துக் கொள்ளுதல்.
• உலகப் பகுதிகளை இணைத்து நிறைவாக்கும் உள்நோக்கத்தில் நேர்மை, (மத வெறியோ, மூடபக்தியோ இல்லது இருத்தல்)
• ஆன்மீகம், மன எழுச்சி ஆகியவைகளுக்குத் தேவையானதை நிறைவேற்றிக்கொள்ளுதல்,
• மனித அறிவுக்கெட்டாத மறைபொருளில், ஆழ்ந்த உட்பொருளில் உள்ளவைகளிலும், ஆன்மீகத்திலும் உண்மையான அனுபவங்கள்
பெரும்பாலான சமய அடிப்படை நம்பிக்கையின், எண்ணமும், அதன் எல்லையும், இறுதியில் இறைவனின் உறைவிடமான சுவனத்தையடைய (heaven = சுவர்கம்) வேண்டும் எனும் வரம்புக்குட்பட்டது, அதற்கு சமய நம்பிக்கை மட்டும் ஒரே வழி, அச்சமய நம்பிக்கையுடன், சமயம் சொல்லும் இறைவனிடம் தாம் இழைத்த பாபங்களை மன்னிக்க தொழுவது மட்டுமே தான் அச்சமய மரபுகளின் எல்லை என இருக்கிறது. இயல்பாகவே நாம் இறைவன் என்றவுடன், உடனே மிக பணிவுடன்தான் நடந்துகொள்கிறோம். ஆனால், வேத வழி சார்ந்த ஆன்மீக செயல் முறைகள், எப்போதும் சமயங்கள் பற்றி எவருக்கும் உள்ள மிக சாதாரண மரபொழுக்கங்களுக்கும் எட்டாத ஓரிடத்திற்கப்பால், இட்டுச் செல்கின்றன. இப்படி இந்நிலையை அடைவதற்குத் தான், வேத வழி, பொறுப்புடன் இத்தடத்தை தெரிந்தெடுத்துச் செல்வோரை உற்சாகப் படுத்தி, இவ்வழியில் முதிற்சியடைய, படிப்படியாக தனக்குத் தானே முன்னேற்றிக் கொள்ளச் செய்கிறது.
வேத வழியில் செல்ல விரும்புவோருடைய மன உணர்வை நனவாக்க, நேசபாவம் மிக்க பக்தியூட்டுகிற வழியை பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து, வேத போதனைகளில் கூறப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளால், மன-மாசுகளை அகற்றி, இதில் பலனையடைய, எவ்வளவோ காலம் எடுத்துக்கொண்டாலும், மனப்பூர்வமாக, நேர்மையுடன் தன்னை இவ்வழிக்கே, அர்ப்பணம் செய்துகொள்ள ஆலோசனை வழங்குகிறது. ஒருவர் மெய்யுணர்வுடன் இறையை அடைய, தங்களுக்குத் தாங்களே அமைத்துக் கொள்ளும், வேத வழி அல்லாத வேறு வழிகளைக் கடைபிடித்தாலும் அவ்வழிகளை, அதைரியப்படுத்தி, அல்லது நம்பிக்கை இழக்கச் செய்வது கிடையவே கிடையாது. இறையை அடைய வேறெவ்வழியானாலும், அவ்வழி நல்வழியே என வேத நெறி சொல்கிறது.
ஆனால், மற்ற சமயத்தோர், தங்கள் சமயங்கள் கூறும் வழிகளைத் தவிர்த்து, வேறு வழிகளில் செல்வதை கடுமையான விமர்சித்து, மாற்று வழிகளைக் குறைத்துக் கூறி; ஆதலால் புறக்கணிக்கக் கூறி விடுகிறது. கிருஸ்தவ ’சர்ச்’கள் தங்கள் சமயத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு, ’சர்ச்சே’ கடவுளிடம் தொடர்பு கொள்ள வல்லது, மற்றவழிகளல்ல என அழுத்தமாகப் போதிக்கிறது.
ஆனால், வேத வழிகள், மாந்தர் யாவரும், முழுமையான இறைவனின் ஆன்மீகத் துகட்களே (மிகப்பெரிய சுடரொளியின், சிற்ரொளி) என நமக்கு போதிக்கின்றன. இறைவன் ஒரு தாய் போல, தான் படைத்த ஒவ்வொரு ஜீவராசியுடன், குழந்தை / குஞ்சுகளைப் பேணிக்காக்கக் கூடவே இருக்கவேண்டும் என்ற அன்புள்ளத்தோடு, நம்மையும் நமக்குள் உள்ளிருந்து செயல்படுத்தி (activate), நம் கண்ணால் காணமுடியாத, ஆனால் புலனால் மட்டுமே உணரமுடிந்த உயிர்த் துடிப்பாக, ஒரு துகளாக, பொறியாக, சிற்ரொளியாக, அணுவாக, சிறு பாகமாவே நம்முடன் இருக்கிறார். சேயைப் பிரிந்து தாய் இருப்பாரா? இருக்கத்தான் அவரால் முடியுமா? (அத் துகள், துண்டு, ஒளி, பொறி, அணு, சிறு பாகம் நீங்கிவிட்டால், உயிர் துடிப்பற்ற, பிண்மாகி விடுகிறோமல்லாவா?) ஆகவே, நாம் யாவரும் உயிருடன் இருக்கும் வரை, இறைவனின் இயற்கையான, பிரிக்க முடியாத நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள் (குருதித் தொடர்புள்ள உறவுமுறைபோல) எனக் கொள்ளல் வேண்டும்.
ஒருவருடைய மனவிழிப்பு நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதற்கு இவ்வெற்றி வழியை விட வேறு வழியை மனதிற்கொள்ள வேண்டிய அவசியம் எவருக்காவது ஏற்படுமா? அல்லது வேண்டுமா? இறைவனே ’என் உறவல்லவா’?
[[[வைணவ 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றும், தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. உதாரணத்திற்காக, இரு ஆழ்வாரைப்பற்றி மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
பெரியாழ்வார், (மொத்தம் இவர் இயற்றியது 473 பாசுரங்கள்), திருவாய் மொழி ஆரம்பத்தில் இருக்கும் பாசுரங்கள், இவர்தான் ஒருவேளை அவ்விறையின் உண்மைத் தாயோ என வியக்கும் வண்ணம் அதி அற்புதமாக, பக்தியில் எல்லைக்கே போய், பக்தி என்றால் என்ன என நமக்குப் புகட்டி (தாய் தன் குழந்தைக்குச் சிறு பாலோடையில் பால் புகட்டுவது போல), இப்பாசுரங்களால் இறைவனை அனுபவித்து, மனதால், மலரால் பாமாலைகலைத் தொடுத்து, அலங்கரித்தார். இவர் இயற்றிய பாசுரங்களைச் சொன்னால் வாய் மணக்கும், நினைந்தால் இறையின்ப மழையில் நனைந்து, மனங்கனிந்துருகி கண்ணீர் தானே சுரக்கும். ஒரு குழந்தையை தாய் எவ்வாறு பேணிக்காப்பாரோ, அவ்வாறே, இறையை அனுபவித்தார். இறையாகிற குழந்தையை பெரியாழ்வார் அனுபவிக்குங்கால், அவரே, இறைவனின் தாயாக, தன் குழந்தைக்கு, பிறர் சுடும்கண் சுட்டுவிடுமோ என பயந்து, ‘பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார், குழந்தைக்குத் ’தாலேலோ’ தாலாட்டு பாடினார், விளையாட்டுகளை செல்லிக் கொடுக்கொடுக்கிறார். குழந்தையின் தளர் நடையழகைப் பார்த்துப் பார்த்துப் பரவசப் பட்டார், தன் குழந்தை தன்னை (தாயை) இறுக்கக் கட்டித் தழுவ அழைத்தார், பூச்சி காட்டி விளையாடினார், தாய்ப்பால் அருந்த அழைத்தார், குழந்தைச் சடங்கான காதுகுத்துதல் செய்வித்தார், தன் கையாலேயே நீராட்டினார், தலை முடியை வாரும் போது காக்கையை அழைத்தார், பூச்சூட்டி மகிழ்ந்தார், (அதி அற்புதப் பாசுரங்கள்-உண்மையில் அனுபவித்தால் நம் கண்ணீர் தன்னாலே சுரந்தோடும்) அமுது ஊட்டினார், குழந்தை வீட்டில் செய்யும் குறும்புகளைக் கண்டும், பிறர் சொல்லும் குற்றச்சாட்டுகளைக் கேட்டு, கோபிப்பதுபோல, ரசித்தார். குழந்தைக்குத் தண்டனையும், (மற்றவர்களைத் திருப்தி செய்ய) அளித்துத் தாயாகி நின்றார். இவருடைய மகளோ, ஸ்ரீ ஆண்டாள், இவர் வேறு எவ்வாறாக இருந்திருக்க முடியும்!! ஸ்ரீ ஆண்டாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடையாக, அவ்விறையையே மணாளனாக வரித்து., ”எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னொடு உற்றொமே ஆவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம்” எனக் கூறி, நம் எல்லோரையும் பேரின்ப வீட்டுக்கு / பறைக்குச் இட்டுச் செல்ல நம்மை ஊக்குவித்து இன்றும் ’திருப்பாவை’ பாசுரங்களால், வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்).
’’என்னப்பனல்லவா, எந்தாயுமல்லவா, பொன்னப்பனல்லவா, பொன்னம்பலத்தவா’’ – என்றிசைத்த நந்தனார் போல,
இறைவனே — என் தாய் போலவும், என் தந்தை போலவும், என் தோழன், ””தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை, நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை”” என்று சொன்ன என் சேவகன் போலவும், என் அரசன் போலவும், என் சீடன் போலவும், என் சற்குரு போலவும், என் குழந்தை போலவும், என் விளையாட்டுப் பிள்ளை போலவும், என் காதலன் போலவும், என் காதலி போலவும், என் ஆண்டாள் போலவும், என் குலதெய்வம் போலவும் — என பல்வேறு விதத்தில் இறைவனை அனுபவித்து, மகாகவி, இந்திய தேசீயக் கவி, சுப்பிரமணிய பாரதியார் பூரித்து, நெகிழ்ந்து பாடி, எழுதி வைத்தாற் போல.]]]
ஒவ்வொருவருடைய எண்ணங்களும், சொற்களும், செயல்களும், மேலாக, நம்மைச்சுற்றியுள்ள புலனால் அறியப்பெறும் பொருட்கள், நடவடிக்கைகள், பிம்பங்கள், ஒலிகள், ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவைகளாதலால், இவைகள் யாவும் எதிரொலி போன்று, நம் மன உள்ளுணர்வு நிலையில், அவ்வப்போது பிரதிபலித்து விடுகிறது. தக்க மனப்பயிற்சிகளைப் பயின்று, அதனால் நல்ல திறமும் கைவரப்பெற்று, அனுபவத்தால் ஒருவர் ஆன்மீகத்தில், எந்த நிலையை அடைய வேண்டுமோ அந்த மன உணர்வு நிலையை கட்டாயம் அடைய முடியுமென வேதவழிகள் திறப்பட நன்கு வழிகாட்டுகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீகத்தில் தாங்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டு விடுகிறதோ, எவரும், அந்த மேலான இறையுடன் நெருங்கி இருக்கும் நிலையை மனதால் உணர முடியும். நாம் ஒவ்வொருவரும் தங்கள் ஆன்மீக அடையாளங்களையும், இறைவனுடன் நெருங்கிய உறவை அடைந்துவிட வேண்டுமென்று தான் இதன் பின்னணியில் உள்ள வேத வழியின் சாராம்சம். இவ்வாறு, ஒருவருக்கு இந்நிலையை அடையும் நோக்கம் ஈடேறப்பெற, அல்லது முறைப்படி அமைத்துக்கொள்ள, தனிச்சிறப்பு வாய்ந்த ஆன்மீக குருவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம். இந்த செயல்முறை எங்கு குறைவற்று நிறைவு பெற வில்லையோ, அல்லது இவ்வழியில் மாணாக்கர் மிக்க அக்கறை கொண்டு பின்பற்ற வில்லையோ, இதனால் எதிர்பார்க்கும் பயனை என்றும் அடையவே முடியாது. இது அசைக்க முடியாத உறுதியாக. இருப்பினும், மேற்கூறியவாறு ஆன்மீக செயல்முறை நல்ல முறையில் நடந்துவிட்டால், மாணாக்கர் எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் நேர்மையுடன் ஈடுபட்டுவிட்டால், இதன் பயனை கட்டாயம் காணலாம். இந்த ஒரே காரணத்திற்காக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, உலகிலுள்ள தத்துவஞானிகளும், ஆன்மீகத்தில் விருப்பமுள்ளோர்களும் வேத ஆன்மீக ஒழுங்கு முறைகளைக் கசடறக் கற்க, இந்தியாவை நோக்கி, வந்த வண்ணம் உள்ளனர். மேற்கூறிய நல்வழிகளைப் பின்பற்றினால், எவருக்கும் நடைமுறையில் பலன் கிடைக்கிறது. இது திண்ணம்.
{{{ [[[நம்மைப்பற்றி நாமே பீற்றிக்கொள்வதை விட, எதிலும் (முக்கியமாக நமக்குத்) தொடர்பில்லாத, அகில உலகப் புகழ் பெற்ற அறிஞர்களாலேயே, அங்கீகரிக்கப்பட்ட இலக்கியங்களிலிருந்தும், ’பேரறிஞர்’ என ஏற்றுக்கொள்ளப் பட்டவர்களுடைய. மனப் பூர்வமான, சுய நலமில்லாத, அபிப்பிராயங்களை எவரும் மறுக்க இயலாதல்லவா? கீழே கொடுத்துள்ளவை இக்கட்டுரைக்குத் தொடர்புடவைகள். வேத நெறிகளில் உள்ளவைகளை, இந்தியரில்லாதவர் சொன்னால், பலருக்கு பெருமையாகவும், மேலும் பலருக்கு நம்பிக்கை ஊட்டுகிறதாக இருக்கிறதல்லவா!? எப்படி ஆனாலும், எனது நோக்கம் வேத நெறியைப்பற்றி அதில் உள்ளவைகளை உள்ளபடி யாவரும் அறியவேண்டும். அவ்வளவுதான். மறைப்பதற்கு ஒன்றுமில்லையே! இருப்பதைத்தான் எழுதுகிறேன்.

அரேபியாவை இஸ்லாம் விழுங்குவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக, அரேபியர் இந்தியாவைத் தங்கள் ஆன்மீக, கலாச்சார தாயகமாகவே நினைத்து வாழ்ந்திருந்தனர். இதற்கு சான்றாக அரேபிய மொழியில் இயற்றப்பட்ட கவிதைகளை அதன் ஆங்கில மெழிபெயர்ப்புடன், கீழே தமிழாக்கமும் (Translation) செய்யப்பட்டுள்ளத அரேபிய மொழியில் இருப்பதையும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு செய்து, (Transliteration) செய்யப்பட்டுள்ளது இதில் ஹிந்துக்களின் (1) ரிக், (2) யஜுர், (3) சாம, (4) அதர்வ, என நான்கு வேதங்களைப் பற்றி, மிகவும் போற்றி எழுதப்பட்டுள்ளது. இக்கவிதை, 1860 B.C. யில், அதாவது, முகம்மது, இஸ்லாமை அரேபியாவில் நுழைத்ததற்கு 2460 (1860+600) வருடங்களுக்கு முன், லபி-இப்னு-ஏ-அக்தாப்-இப்னு-டர்ரஃபா (Labi-Bin-E- Akhtab-Bin-E-Turfa) என்பவரால் இயற்றப்பட்டது. இப்பாமாலைகள், ஷாயர்-உல்-ஓகுல் (Sair- Ul-Okul) என்னும் பண்டைகால அரேபிய கவிதைத் திரட்டில் உள்ளது. இக் கவிதைத்திரட்டு 1742 AD இல், துருக்கிய நாட்டு சுல்தான் சலீம் ஆணையால், மிக்க முயற்சியுடன் சேகரிக்கப்பட்டது. வேத கலாசாரமே முகம்மது தோன்றுவதற்கு முன்னரே அரேபியாவில் பரவி இருந்ததற்கு மேலும் சான்றுகளை அதே ஷாயர்-உல்-ஓகுல் (Sair- Ul-Okul) என்னும் பண்டைகால அரேபிய கவிதைத் திரட்டிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

1.. Aya muwarekal araj yushaiya noha minar HIND-e Wa aradakallaha manyonaifail jikaratun”
“Oh the divine land of HIND (India) (how) very blessed art thou!
Because thou art the chosen-of God blessed with knowledge
’ஹிந்த்’ என்னும் ஆன்மீக பூமியே! நீ எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமானவள்!! ஏனெனில், இறையே உன்னைத் தேர்ந்தெடுத்து நுண்ணறிவனைத்தையும் உன்னிடம் மட்டுமே அளித்திருக் கிறார்.

2.. “Wahalatijali Yatun ainana sahabi akha-atun jikra
Wahajayhi yonajjalur -rasu minal HINDATUN ”
“That celestial knowledge which like four lighthouses shone in such
brilliance – through the (utterances of) Indian sages in fourfold abundance.”
வானுலகைச் சேர்ந்த கலங்கறை விளக்கங்கள் போன்று மிகப் பொலிவான பூர்ணத்வமுள்ள ஹிந்து ஞானிகளால் அளிக்கப்பட்ட நான்குவித அபூர்வ அறிவை, வேதம் நான்கையும்) உன்னிடமே அளிக்கப்பட்டு இருக்கிறது. [[[வேறெங்கும் இதைப் போல இல்லை]]]

3.. “Yakuloonallaha ya ahal araf alameen kullahum
Fattabe-u jikaratul VEDA bukkun malam yonajjaylatun”
“God enjoins on all humans, follow with hands down
the path the Vedas with his divine precept lay down.”
வேறெங்கும் தேட வேண்டாது, நான்கு வேதங்களில் உள்ள மிக உன்னத வழிகளையே பின்பற்ற எல்லா பிறவிகளுக்கும் தெய்வமே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது..

4. “Wahowa alamus SAMA wal YAJUR minallahay Tanajeelan
Fa-e-noma ya akhigo mutiabay-an Yobassheriyona jatun”
“Bursting with (Divine) knowledge are SAMA & YAJUR bestowed on creation,
Hence brothers! Respect and follow the Vedas, the guides to salvation”
இறைவனே தான் படைத்த பிறவிகள் மேன்மையடைய ஸாம, யஜூர் வேதங்களில் பீரிட்டெழும் நுண்ணறிவு அனைத்தும் உள்ளடக்கி இருக்கிறார். ஆக சகோதரர்களே! பவசாகரத்தைக் கடக்க வேதங்களையே ஓடமாக பாவித்து அவைகளைப் பின்பற்றுங்கள்

5.. “Wa-isa nain huma RIG ATHAR nasayhin Ka-a-Khuwatun
Wa asant Ala-udan wabowa masha -e-ratun”
“Two others, the Rig and Athar teach us fraternity,
Sheltering under their lustre dispels darkness till eternity”
நம் போன்ற மானிடர்களுக்கு, தஞ்சமடையும் புகலிடமாக, நம்முள் இருக்கும் இருளை அகற்றிட, அதனால் உண்டாகும் பேரொளியால், உலகம் உள்ள வரையில் சகோதரத்வத்தை கற்ப்பிக்க இன்னும் இரு ரிக், அதர்வ என்னும் வேதங்களை நமக்களித்து இருக்கிறார்.

மற்றொரு மேற்கோளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
முகம்மதுவின் தாய் மாமன், உமர்-பின் (இப்னு)-ஏ-ஹஷம் (Umar-Bin-E-Hassham) என்பவர் ஒரு ஹிந்துமத தீவிர பக்தர்; இவர் சிவபெருமானின் மீது அநேக பாமாலைகளைப் புனைந்துள்ளார். இவரும் ஒரு பிரசித்த கவிஞர், அவர் அன்று எழுதிய, பரமேஸ்வரனைப்பற்றிய கவிதைகள், இன்றும், ஸைர்-உல்-ஓகுல் (page 235 of Sair-Ul-Okul) இல் உள்ளது. இந்த அரேபிய பாமாலையின் சொற்களை ஆங்கிலத்தில் (transliteration) கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் ஆங்கிலத்தில் பொழிபெயர்த்து, தமிழாக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Kafavomal fikra min ulumin Tab asayru Kaluwan amataul Hawa was Tajakhru
We Tajakhayroba udan Kalalwade-E Liboawa Walukayanay jatally, hay Yauma Tab asayru Wa Abalolha ajabu armeeman MAHADEVA Manojail ilamuddin minhum wa sayattaru Wa Sahabi Kay-yam feema-Kamil MINDAY Yauman Wa Yakulum no latabahan foeennak Tawjjaru Massayaray akhalakan hasanan Kullahum Najumum aja- at Summa gabul HINDU

The above is translated into English as:

The man who may spend his life in sin and irreligion or waste it in lechery and wrath
If at least he relent and return to righteousness can he be saved? If but once he worship Mahadeva with a pure heart, he will attain the ultimate in spirituality. Oh! Lord Shiva exchange my entire life for but a day’s sojourn in India where one attains salvation. But one pilgrimage there secures for one all merit and company of the truly great.

தமிழாக்கம்

எவரொருவர் தன் வாழ்நாள் அனைத்தும் பாப காரியங்களில், (ஹிந்து) மதக் கோட்பாடு களுக்கு முரணாக செயல்பட்டு, துன்மார்க்கமான சிற்றின்ப வாழ்வில் ஈடுபட்டு, மிக கடுங்கோபி யாக இருந்த போதிலும், அவனே, பின் மனம் வருந்தி, நல் வாழ்வில் திருந்தி, சிவ சன்மார்க்கத்திற்கு வந்து தன்னை காத்துக்கொள்ள முடியும்! மஹேஸ்வரான பரமேஸ்வரனை தூயமனத்துடன் அவனே ஒரு தடவை உள்ளூர வணங்கினால் போதும்; அவனுக்கு இறுதியான பேரின்பமான ஆன்மீகானுபவம் ( மெய்ஞானம்) உண்டாவது திண்ணம். ”ஓ! பரமேஸ்வரா!! – ஹிந்து சத்சங்கதில் கூட இருந்து, ஒரே ஒரு தடவை மட்டும், இந்தியாவுக்கு யாத்திரை செய்தால், மேல் குறிப்பிட்ட அனைத்தும் எனக்குக் கட்டாயம் கிட்டுமே! இது போதும் ஸ்வாமி!!! ஆக, பவசாகரத்தைக் கடக்க, பேரின்பப்பதவி அடைய, என் பூரண வாழ்க்கை வருடங்களுக்கு) ஈடாக, மிகச் சிறிது காலமாவது ஹிந்தில் ( இந்தியாவில்) வாசிக்க எனக்கு ஆசி அருளுமைய்யா!!” அங்கு ஆன்மீக வழிகளில் இன்னும் கற்கவேண்டியவை ஏராளம் எனக் கூறுகிறார்
முதலாவதாக, வேத வழிகளை வகுத்தோருக்கு, சில இயக்கத்தை, அல்லது சமயத்தை வகுத்தோர் போலல்லாமல், வேறெந்த தாழ்ந்த நோக்கமோ, சுய நல எண்ணங்களோ கிடையாது. மானிட ஜன்மங்களை எப்பாடுபட்டாவது இறைவனிடம் கடைத்தேறச் செய்ய வேண்டும். அவ்வளவு தான். நம் நல்வினை தீவினைக்கேற்றவாற்று, அடுத்தபிறப்பில், எந்த ஜென்மம் எடுப்போமோ யாருக்குத் தெரியும். ஆகையால், ஆழ்ந்து சிந்தனை செய்யும் திறனுள்ள மானிடராகப் பிறந்த இந்நல்ல தருணத்தை வழுவ விடாமல், ஒரு நல்வழியை தேர்ந்தெடுத்தாக வேண்டும். அவ்வழி வேத வழியானாலும் சரி, அல்லது அவரவர்களே தேர்ந்தெடுத்த சொந்த வழியானாலும் சரி. இறுதியில் யாவரும் நற்கதியடைய வேண்டும். அவ்வளவே தான். உன்னத இறையிடத்தை அடைய நல் வழி எதுவாக இருந்தாலும் அவ்வழி நல்வழியே என வேத நெறி கொள்கிறது. எல்லா நதிகளும் சமுத்திரத்தை நோக்கியே செல்கின்றன = All the rivers go the ocean = नदीनां शागर: गति: = (நதீனாம் சாகர: கதி :). என வேத நெறி கூறுகிறது.

आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरं ।
सर्व देव नमस्कार: केशवं प्रति गच्छति ॥
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் |
சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி ||

“ஆகாயத்திலிருந்து பொழியும் மழை நீர் வெவ்வேறு ஆறாகளாக மாறி, சமுத்திரத்தை நோக்கியே செல்வதுபோல, நேர்மையான நோக்கங்கொண்டு வெவ்வேறு கடவுள்களை நாம் தேர்ந்தெடுத்து செய்யும் வித வித நமஸ்காரங்களும், பரம்பொருளான ஒரே இறைவனுக்கே அர்ப்பணிக்கப் படுகின்றன”. வழிகள் பல்வேறாக இருக்கலாம். ஆனால் போகுமிடம் ஒன்றே தான்!.
அடுத்ததாக வேத வழிகளில், எவ்வித நிர்பந்தமும், பயமுறுத்தலும், சுயநலத்திற்காக, இல்லாததை மிகைபடுத்திக் கூறுதலும், மற்ற சமயங்களில் உள்ள நல்லவைகளை வேண்டுமென்றே குறை கூறி, மதிப்பைக்குறைத்துக் கூறுவதும், கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், கட்டயப்போர் எனவும், சுவன கேளிக்கை, மது-மாது என கிளர்ச்சிக் கவர்ச்சியூட்டி, மயக்கி, சிக்கவைப்பதும் கிடையாது. ஆக வேத நெறி எப்போதுமே எல்லோரையும் ஒருங்கிணைக்கிறது, வேத ஒழுங்கு முறையில் எதையும், எவரையும் அழிக்கவோ, அல்லது ஒழித்துக் கட்டவோ, புனித நூலைக்காட்டிக் காட்டி பயமுறுத்துவதும் கிடையாது. மேலாக வேதவழிகளைத் தொகுத்தோர் அதிலுள்ள தத்துவங்களில் உறுதியான (தன்) நம்பிக்கை கொண்டர்களாகவும் இருந்தனர். மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்! வேத வழி, மானிடர்களை இணைத்து உருவாக்கும் ஒழுங்கு படுத்தப்பட்ட முறை; இருக்கும் நல்லவைகளையும் இடித்துத் தள்ளி, நிர்மூலமாக்கும் பயனற்ற, பண்பாடற்ற, கிறுக்குத்தனமான முறையே அல்ல. காலம் சென்ற, அன்வர் ஷேக், முன்னாள் முஸ்லிம், பாகிஸ்தானில் பிறந்து, 1947இல், ஹிந்து-முஸ்லிம் தேசப்பிரிவினையின் போது, இவரே தன் கையாலேயே, ஹிந்து-சீக்கியர்களைக் கொன்றவர். (காந்தி, நேரு, முகம்மது அலி ஜின்னா, ஆங்கிலேயர்களுடைய, கூட்டு முயற்சியால் ஆன தேசப்பிரிவினை), தன் கையால் ஹிந்து-சீக்கியர்களுக்கு தான் இழைத்த அக்ரமங்களை நினைத்து, மிக வருந்தி, பின் நாட்களில் தன் பெயரையும் “அநிருத் கியான் சீக்கா” என பெயர் மாற்றிக்கொண்டு, “Wonders of Rg Veda” ’ரிக்’ வேத அற்புதங்கள்’ எனும் சிறந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்: (இவர் முன்னோர் காஷ்மீர் பண்டிட் வகுப்பைச் சேர்ந்தவர்கள்-வேத விற்பன்னர்கள்) இவர் அந்நூலில் கூறுவது:: ”இந்தியாவை இடர்களிலிருந்து மீட்க்கப் போவது வேதவழி ஒன்றே தான், ஏனெனில் வேதவழி, மற்ற எல்லா சமயங்களில் உள்ள மத வெறி, மூடபக்தி இல்லாதது. ஆகவே, இந்தியாவிலுள்ள எல்லோரும், இந்தியாவை ஒரு நாடாக ஒன்றிணைக்க இந்த தத்துவத்தை காலங்கடத்தாமல், உணரவேண்டும்” என்றார். ””The salvation of India lies in following the Vedic way of life, which is far above religious bigotry. It is high time that Indians of all shades realised this fact to unify as one nation.”” – by (Late) Anwar Shaikh, ex- Muslim of Pakistan, who later changed his name as Aniruddha Gyan Shikha]]].}}}

(மூன்றாவது பகுதி இனி தொடரும்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்



தமிழாக்கம் செய்தவருடைய சிறு விளக்கம்:
வேத-ஆன்மீக நெறிகளிலுள்ள உட்பொருளுணர்ந்து, அந்நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் யாவை என இக்கட்டுரை விளக்குகிறது. பக்குவப் படுத்தப்பட்ட நற்பண்புகளை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதையும், இக்கட்டுரையில் காணலாம்.
பிரதான மூல ஆங்கில கட்டுரையிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டதோடு, படிப்போர்களுக்கு இன்னும் நன்கு புரிந்து கொள்ள, சில விவரங்களைக் கூறி, இன்னும் சிறப்பாக்க, பண்டைக் காலத்து மேற்கோள்களையும், நல்லுதாரணங்களையும், இலக்கிய நயம் வாய்ந்த உயர்ந்த தமிழ், சமஸ்கிருத நூல்களிலிருந்து எடுத்துக்காட்டாக, வேண்டிய இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், பகவத் கீதை, மகாகவி காளிதாஸ காவியங்கள், ஆங்கில மேற்கோள்கள், போன்றவைகளீல் இருந்தும், அரேபிய நாட்டு மிகப் பழைய பாமாலைகளின் எழுத்துப் பெயர்ப்புத் தொகுப்பிலிருந்து தமிழாக்கமும், (transliteration & translation), ஏனைய முது மொழிகளுடன், விளக்கமாக அளிப்பட் டுள்ளது. மேற்கோள்களும், தமிழாக்கம் செய்தவருடைய சொந்த கருத்துகளனைத்துக்களும் இந்த அடைப்புக்குறியில் (Bracket) காணலாம். [[[………..]]].
முகவுரை

நான் கிருஸ்தவனாகப் பிறந்தவன். 2001 ஜூன் மாதத்தில், என் பாரத சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். அப்போது, இந்தியாவிலுள்ள சிறுபான்மை இயக்கங்களைச் சார்ந்தவர்கள் தங்களை முன்நிறுத்திக் கொள்வதுடன், ஹிந்துக்களல்லாதவரைச் சினமூட்ட எவ்வித தூண்டுதலுமின்றியே, இவர்கள், ஹிந்து சமய தத்துவங்களின் மதிப்பைக் குறைத்து, வரம்புமீறி, எவ்வித கட்டுப்பாடின்றி, கெடு நோக்கினால் வேண்டுமென்றே தவறான வழியில் செய்கிற, பொறுப்பற்ற துஷ்பிரசாரமும் (Hindu bashing), என் மனதை மிகவும் நோகடித்தது. ஹிந்துக்களுக்கு இதனால் ஏற்படும் மனவலியைப் பற்றி கொஞ்சமும் இலட்சியம் செய்யாது இருப்பதும், என் மனதை இன்னும் கூடுதலாக பாதித்தது. இந்தியாவிலுள்ள சிறுபான்மையோரால், அவ்வப்போது நிகழ்த்தப்பட்டு வரும் பொருளற்ற உரைகளில், தங்களது இயக்கத்திலுள்ள, அல்லது சமயத்திலுள்ள கருத்துகளை மட்டுமே நேர்வழியில் மக்களுக்கு தெரியப் படுத்தாது, ஹிந்து சமயத்தையே சாடும் இவர்கள் செய்கை, ஹிந்து சமய நன்நெறியின் மீது அவர்கள் கொண்டிருக்கும் மிகக் கீழ்தரமான காழ்ப்புணர்ச்சியையும், மனப்பக்குவமில்லாமையும், அற்பத்தனத்தையும், மிக முக்கியமாக, ஹிந்து சமயத்தைப் பற்றி அறியாமையையுமே படமெடுத்துக் காட்டியது.

[[[இவைகள் யாவும், தங்களுடைய குறைபாடுகளை இட்டு நிரப்ப, நம்பிக்கை இழந்த நிலையில் தங்கள் குறிக்கோள்களை எவ்விதத்தாலும் அடைந்து விட, வெறிபிடித்துச் செய்யும் தந்திரங்களாகவே எனக்குத் தோன்றியது.

இவர்களுக்குள்ள குறைபாடுகளுடன்:

1. கேட்ட கேள்விகளுக்கு ஒப்புக்கொள்ளும் வகைகளில் பதிலளிக்காமல், பேச்சுவார்த்தை
என காலங்கடத்தி, கட்டியணைத்து, கைகுலுக்கி, செயலற்ற உரையாடலால்
எரிச்சலையும் கிளப்பிவிட்டு, ரொக்கத்தையும் நேரத்தையும் விரயம் செய்தல்,

இக்கருத்தை ’மதன்லால்’ எனும் உருது கவிஞர் ”தகாய் உல்” — எண்ணத்தில்
எழுந்தவைகளை வாழ்க்கையில் காட்டுவது — (imagination brought to life)(கஜல்) இல்
மிக அழகாகக் கூறுகிறார்:

உருது கவிதையை தமிழில் எழுத்தாக்கம், (Transliteration)
தில் ந மில் பாயே தோ, பிர், ஆங்க் பசாகர் சல் தோ |
பே ஸபப் ஹாத் மிலானே கி, ஜரூரத் க்யா ஹை ||

தமிழாக்கம்:
”நம் இருவர் மனதே கூடாமல் இருக்கும் போது, நீ உன் கண்ணை மூடிச் சென்றுவிடு,
அநாவசியமாக, கை குலுக்குவது என்பது தேவை தானா??”

உருது மொழியை ஹிந்தியில் கூட எழுதலாம்: இதோ:
दिल न मिल पायें तो, फिर, आंख बचा कर चल दो ।
बे सबब हाथ मिलाने कि, जरूरत क्या है ||

2. தங்கள் புனித நூல்களை மேற்கோளாகக் காட்டி, ஏமாற்றுதலையும், வன்முறையையும்
புனிதமாக்கி விடுவதல், அல்லது கேள்வி கேட்பதையே அனுமதிக்காது இருத்தல்,
3. ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்ல கருத்துக்கள் தங்கள் சமயத்தில் இல்லாததைக்
காட்டிக் கொள்ள விரும்பாது, இறுமாப்புடன் முரட்டுத்தனத்தையே வெளிப்படுத்துவது,
படாடோபத்தில் இணக்கம், பண்பில்லாத கயவர் போல பிறரைப்பற்றி லட்சியம்
செய்யாமல், எருது முட்டவருவது போல, அட்டகாசத்துடன், அகங்காரமாக
நடந்து கொள்வது, தனக்கு எல்லாவற்றிலும் உரிமை உண்டென திமிர்
நோக்கு, மேலும் தற்காதல் எனும் தனித் தன்மையுள்ள குணத்துடன் எதிலும்
ஈடுபடுவது (narcissistic personality traits) ஆகிய இவைகளின் சேர்க்கையாகக் கூட
இருக்கிறது!

சமயசார்பற்ற கொள்கையை ஆதரிப்போர் (secularists) என தங்களைக் கருதிக் கொள்பவர்களும், ஜனநாயகத்தைக் காக்க, உண்மையான தகவல்களை வெளியிடாமல், இத்தகைய secularists களுக்கு ஒத்தூதும் பந்நாட்டு மூலதனத்தில் மட்டுமே செயல்படும் ஊடகங்களும் (e.g., Ajtak, NDTV, CNN-IBN), வேண்டுமென்றே, கபடற்ற, எளிய இந்திய மக்கள் மூளையை சலவை செய்யும் உள்நோக்கத்துடன், தங்கள் மதம், எண்ணங்களுக்காகவே, உபயோகப்படும் காணொளி-தொ(ல்)லைக் காட்சிகளைப்பற்றி (இந்தியாவில் 95%-media) தனியாகச் சொல்ல, என்ன இருக்கிறது? இவர்கள் எல்லோருமே, ஆதாயம் கிடைக்கும் இடங்களுக்கே ”ஜே” போடும், அணுகுமுறை கொண்டவர்களாயிற்றே!]]]

உலக அரங்குகளிலும், இம்மாதிரியே அவ்வப்போது ஹிந்துக்களல்லாதோர் உரத்த குரலில் நடத்திவரும் ’’ஹிந்து நன்நெறிகளைப் பழிப்பதையே’’ தங்கள் கொள்கையாக நிலைப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டேன். இவைகளுக்கெல்லாம் கூடுதலாக, மேலை நாட்டு நாகரிக மோகத்தால், ###ஹிந்துவாகப் பிறந்தும், சமீபத்தில் மேலை நாடுகளில் புதிதாகக் குடியேறிய அனுபவமற்ற, கற்றுக்குட்டிகளின் போலி நடத்தையால், தங்கள் மேன்மை பொருந்திய ஹிந்து நாகரிகத்திலுள்ள நல்லவைகளில் எவ்வித தெளிவான அறிவு சற்றும் இல்லாது — அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல், தங்கள் முதிற்சியற்ற தன்மையை மட்டுமே பலர் அறிய காட்சிப்பெருளாகக் காட்டிக் குழப்பி, பண்பாடற்ற முறையில் இவர்கள் உதிர்க்கும் அற்பத்தனமான சித்தாந்தங்களைக் கண்கூடாகக் கண்டேன். ஹிந்து சமய நாகரிகத்தின் தன்மையையும், அதில் உள்ளடங்கியவைகளை உணரும் திறனின்மையே இதற்கெல்லாம் மூல முழு காரணம். ஆதலால், கட்டுரை எனும் இச்சிறு வெளியீட்டால், மிக சிறப்பான வேத ஹிந்து நன்நெறிகளைப் பற்றி, எல்லோரும் அறிய எடுத்துரைக்க இருக்கிறேன்.

[[[###ஹிந்துவாகப் பிறந்தும், சமீபத்தில் மேலை நாடுகளில் புதிதாகக் குடியேறிய அனுபவமற்ற, கற்றுக்குட்டிகளின் போலி நடத்தை — ’பிளக்கப்பட்ட பெரும் மரத்தின் நடுவில் வைத்திருந்த ஆப்பைக் (wedge) கழட்டி விட்டு, ஆப்பு இருந்த இடத்தில் வால் மாட்டிக்கொண்ட குரங்குகள் போல’, इतो भ्रष्ट:ततो भ्रष्ट:कीलोत्पाटिव वानर: (இதோப்ரஷ்ட: ததோப்ரஷ்ட: கீலோத்பாடீவ வானர:) — எனும் செல்லுக்கிணங்க, வெளியில் தப்பி ஓடிவிட முடியாமலும், அதேசமயத்தில் வால் மாட்டிக்கொண்டதால், விளைந்த வேதனையைத் பொறுத்துக்கொள்ள இயலாது துடிக்கும் குரங்குகள் போல]]]

ஒரு ஒப்பீட்டுக்காகச் சொன்னால், ஹிந்து சமயம் எனும் சொல்லே, பிற்காலத்தில் இதற்கு வழங்கப்பட்டது. அதுவே இன்று இதன் பெயராகித் தங்கியும் போனது. ஹிந்து சமய தத்துவங்கள் (Hinduism) என்பது, மிகத் தொன்மையான வேதங்களைத் தழுவிய ஆன்மீக வழி என்றே இதன் சிறப்பியல்பாகக் கொள்ளவேண்டும். ஆகையால், ’ஹிந்து தத்துவங்கள்’ என்று சொல்லும்போது, அதை நான் வேத-ஹிந்து ஆன்மீக நெறி முறை எனவும், இன்னொரு வழியில் ’சனாதன தர்மம்’ எனவும், நான் அறிகிறேன். இதை முழுமையாகவோ அல்லது பகுதியாகப் பின்பற்றுவோர்களை, ’ஹிந்துக்கள்’ என்றே குறிப்பிட வேண்டுமெனவும் சொல்வேன். இதை இவ்வாறு சொல்வதில் எந்தக் குழப்பமும் எனக்கில்லை. உங்களுக்கும் இருக்க முடியாத் என நினைக்கிறேன். ஹிந்து சமய வழிகள் எனும் பெருங்குடையின் கீழ், மிகத் தெளிவாகத் தெரியக் கூடிய, தனித்தன்மைகளை யும், அதே நேரம் அநேக வேற்றுமைகளை வெளிப்படையாகக் காட்டுகிற, உட்பிரிவுகள் ஏராளமாக உள்ளன என்றாலும், இக்கட்டுரையை, பாரபட்சமில்லாமல், வேத-ஹிந்து நெறியைச் சார்ந்த அனைவருக்குமாக, அதாவது அனைத்து உட்பிரிவுகளுக்கும் ஏற்றதாகவே, எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

[[[ ‘ஹிந்து’ என்ற சொல் ஏன், எப்போதிலிருந்து உருவானது என இங்கேயே விளக்கிக் கொண்டிருந்தால், இதன் தொடர்ச்சியாக அநேக தலைப்புகளில் மிக விளக்கமாக கட்டுரைகளை நீண்டதாக எழுத வேண்டிவரும். (ஆரிய புனைக்கருத்து (Aryan Theory), சரஸ்வதி நதியின் உண்மைகள், வேதகால சம்ஸ்காரங்கள், சம்பிரதாயங்கள், கால்டுவெல்லின் இன-மொழி-சமய புனைசுருட்டு வாதம், இப்புனைசுருட்டு வாதங்களை, தமிழ் நாட்டில் சிக்கெனபற்றிக் கொண்டு, செம்மொழி பேசுவதாகவும், எழுதி, இலக்கியம் படைப்பதாகவும் ”எண்ணிக்” கொண்டிருக்கும் சில கழக முரண்பாடுகளின் தொகுப்பு, ஜெர்மனியின் மாக்ஸ் முல்லர், (Max Mueller) செய்த வேதகால ஹிந்து சமய ஆராய்ச்சித் தொகுப்புகள், ஆதாரங்கள் போன்றவை; இவைகளனைத்தையும் இங்கே கருத்து விளக்கம் அளிக்க, இது மேடையல்ல. இதைப்பற்றி பிரத்யேகமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம்!]]].

ஹிந்து சமயத் தத்துவங்கள் (Hinduism), அல்லது வேதப் பண்பாடு, என்பது ஒரு ஆன்மீக வழி. உண்மையில் இதற்கிணையாக இவ்வுலகில் ஒன்றுமே இல்லை எனலாம். நானோ, மேலை நாட்டைச் சார்ந்த கிருஸ்தவனாக வளர்ந்தேன். கிருஸ்த்தவத்தில், புனிதமாகக் கருதப்படும் பைபிளை நன்கு அறிய வேண்டி, ஆவலுடன் அட்டைக்கு அட்டை, கூர்ந்து ஆராய்ந்தேன். இருப்பினும், என்னுடைய பல கேள்விகளுக்கும் கிறிஸ்துவ மதத்தில் பதில் இல்லை என்பதை என் 19 – ஆவது வயதிலேயே தெரிந்தும் கொண்டேன். ஆதலால், வேறு சமய தத்துவங்களைப் பற்றியும் கலாசாரங்களைப் பற்றியும், சொல்லாலும் செயலாலும் நேர்மையுடன் ஆழ்ந்து, என் கேள்விகளுக்கு தக்க பதில்கைளைத் தேடித்தெரிந்து கொள்ள ஆய்வில் ஈடுபட்டேன். அனைத்திற்கும் ஓர் முடிவாக, மற்ற மரபு வழிகளைக் காட்டிலும், வேதப் பண்பாடுகளே, வழிவழியாக வந்ததாகவும், அறிவாழம் மிக்கதாகவும், ஒப்புக்கொள்ளத் தக்கதாகவும், நான் தேடிக்கொண்டிருந்தவாறு, அதில் என் கேள்விகளுக்கு பதில்களையும் ஒருங்கே கண்டேன். மேலாக, வேதப்பண்பாடு ஒவ்வொரு கட்டத்திலும் தென்றுதொட்டு கடுஞ்சோதனைக்காட்பட்டு, முடிவில் வாழ்க்கை வழிக்கும், அறிவுக்கும் மனதுக்கும், என் மனவேட்கைக்கு அருமருந்தாக அமைந்து விட்டது.
வாழ்க்கைக்கு வேண்டிய ஆன்மீக குறிக்கோள்களை அடைய, இப்பண்பாடே, இந்நாட்களில், மற்ற பல பண்பாடுகளைக் காட்டிலும், தெளிவான நுண்ணறிவுத் திறன் வாய்ந்ததாக, எனக்கு மனதாரத் திருப்தியும் அளித்தது. இதனால், இத்தனை நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கான பதில்கள், வேத மரபைச் சார்ந்த ஹிந்து இலக்கியங்களான, பகவத்-கீதை, பாகவத புராணங்களின் மூலமாக எனக்கு ஏராளமாகக் கிட்டியது. இதற்குப் பின்னர் தான், எனக்கு, உலகிலுள்ள பல விஷயங்கள், ஏன் எதற்கு என அறிந்து கொண்டு, அவைகளில் ஏற்றுக்கொள்ள வேண்டியவைகளைப் பற்றியும், தவிர்க்க வேண்டியவைகளைப் பற்றியும் தெளிவு ஏற்பட்டது. ஹிந்து சமயம், எதையும் யாரிடமும் எப்போதும் திணிப்பதில்லை. ஏற்பதோ, தவிர்ப்பதோ தனி மனிதனின் சுதந்திரமாகும். ஆதலால், மேன்மேலும் ஆன்மீக அறிவியலில் முன்னேற்றமடைய, முறைப்படி, அருளார்ந்த ஸ்ரீ பக்தி வேதாந்தஸ்வாமி பிரபுபாதாவிடம் முறைப்படி தீட்சை பெற்று அவருடைய ஆன்மீக வழியில் சீடனாக ஆனேன். எனக்கு ”நந்தானந்த தாஸ” (Nandanandana dasa) ” எனும் பெயரும் அருளப்பட்டது. இதிலிருந்து, நானும் மற்ற சமயங்களைப் பற்றி ஆய்வு செய்தும், வேத-ஹிந்து தத்வார்த்தங்களில் ஆழ்ந்த ஆராய்ச்சியையும் மேற்கொண்டேன்.
ஆமாம்!! ஹிந்து சமய வேதப் பண்பாடுகளிலும், அல்லது ஹிந்து தத்துவங்களிலும் மெச்சிக் கொள்ளத்தக்க விஷயங்கள் அப்படி என்னதான் உள்ளன? இக் கட்டுரைத் தொகுப்பில், ஹிந்து சமய தத்துவங்களின் தனிச்சிறப்பு, அச்சிறப்புகளில் வேறுபடுத்தி உணரக்கூடியவைகளை மிக எளிதான முறையில், ஆனால், மிக அடிப்படையான முக்கிய விவரங்களுடன் சுமார் 28 தலைப்புகளில், குறைந்தது ஐந்து அல்லது ஆறு பகுதிகளாக, தொகுத்துக் கொடுக்க உள்ளேன். இதில், வாழ்க்கையின் உள் நோக்கங்கள் என்னென்ன என்றும், அவைகளை அடைய வெவ்வேறு அணுகு முறைகள் யாவை எனவும் கூறி, தனித்தன்மையுள்ள வேத-ஹிந்து ஆன்மீக அடையாளங்களையும், திறந்த மனம் படைத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவற்றைப் பற்றிக் கூறும் போது, ஹிந்து சமய வேத வழியே மிகச் சிறந்தது எனக் கூறி, என் தீர்ப்பை உங்கள் மீது திணிப்பதிலும், யாரையும் நிர்ப்பந்தப் படுத்தி கோரிக்கை விடுவதிலும், எனக்குக் கொஞ்சமும் நாட்டமில்லை. இனி என் வாதங்களை ஏற்பதோ, ஏற்க மறுப்பதோ உங்கள் விருப்பம். ஆனால், மேம்பாடுடைய வேதநெறிகளைப் பின்பற்றினால், எளிதில் அடையக்கூடிய நன்மைகள் என்னென்ன என மாத்திரம் கூறி, அவைகளில் சிலவற்றைத் தொகுத்து கீழே கொடுத்திருக்கிறேன். (No compulsion at any time on anyone)
ஹிந்து சமயத்தின் சிறப்புக்கான நோக்கு நிலை:
அடிப்படையில், ஹிந்து சமயம் எனும் பெயரே, அண்மைக்காலத்தில் அதற்கிட்ட பெயர் என முன்பே கூறியிருக்கிறேன். அப்பெயர் ஹிந்து சம்பிராதாயத்திற்குத் தொடர்புடையது; இது வாழ்க்கைக்கு வேண்டிய ஆன்மீக வேத நெறி வழிகளையே குறிக்கிறது. முந்நாட்களில், எவரெவர் வேத ஒழுங்கு முறைகளில் உள்ள நன்நெறிகளை பின்பற்றினார்களோ, அவர்கள் எங்கிருந்தாலும், யாராயிருந்தாலும், எந்த இன-மொழி-சமயங்களைச் சேர்ந்தவராலும், அவர்கள் எல்லோரையுமே பாகுபாடின்றி, ’ஆரியர்’ என்றே அழைத்தனர். ’ஆரியர்’ எனும் சொல், ஒரு விளிச்சொல் (vocative case) இதற்கு ’நற்பண்பாளர்’, ’பெருந்தகைமை யுள்ளோர்’ ’குறைபாடற்ற உளப்பாங்கு கொண்டோர்’ எனும் பொருளுண்டு. அதாவது, எவர் தம் வாழ்க்கை வழிகளை, தூய்மையுடன் நடத்துகிறார்களோ அவர்களையே இது குறிக்கும். ‘ஆரியர்’ எனும் சொல், மிகச்சிறப்பான, குறைபாடற்ற, பின்பற்றத்தக்க வாழ்க்கைத் தரத்தை அனுசரிப்போர் என இதற்கான பொருளைக் கொள்ள வேண்டும். ஆகவே, ’ஆரியர்’ எனும் சொல் மரியாதைக்குத் தகுதியுள்ளோர் என்றொரு பொருளும் உண்டு. இப்பெயர் கொண்டவர்கள், சமஸ்கிருத மொழியிலும், மக்கள் இடையே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, பொதுமொழியாக பேசுபவர்கள். இயற்கையாகவே, படிப்படியாக ஒரு சமூகம் மலர்ச்சியுறுதலில், இம்மாதிரியான ‘ஆரியர்’ என்பவர்கள், முன்னுள்ளதைக் காட்டிலும் இன்னும் அச்சமூகத்தை சிறப்புற தோற்றுவிக்கும் தகைமை யுடையோர் எனச் சொல்வர். ’ஆரியர்’ எனும் இச்சொல்லை மற்றொரு விதத்தில் பொருள் விளக்கமும் தரலாம். ”ஆர்ய” எனும் இச்சொல்லை, ”ஆர்” என்றும், ’’ய’’ எனவும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். ‘ஆர்’ என்றால், ’வெண்மை’; ’தெளிவானது’; ’களங்கமற்றது’; ’தூய்மையானது’ எனலாம். அடுத்ததாக, ‘ய’ என்றால், ’படைத்தோன்’; அல்லது ’கடவுள்’; அல்லது ’நம்மையாளும் இறைவன்’ என்பதாகும். ‘ய’ என்பதையே, ‘யாதவகுலத் தோன்றல் – ’’தேவகி-யசோதை’’ மைந்தன் -’கிருஷ்ணனையே’ குறிக்கும். எவரெவர் இறைவனைப் பற்றி, தூய்மையான உணர்வு நிலையையும், இறைவழியை அடைவதற்கு, மற்றோரை அவ்வுணர்வில் ஊக்குவித்து, தங்களுக்குத் தாங்களாகவே முதிர்ச்சியடையச் செய்விக்கிறார்களோ, அல்லது உருவாக்குகிறார்களோ, அவர்களே ‘ஆரியர்’ எனும் சொல்லுக்கு மிகப்பொருத்தமானவராக இருப்பர்.
[[[தானே பழுத்த பழம் தான் மிக்க சுவையுள்ளது, அதை செயற்கையில் பழுக்கச் செய்தால், அதை பிஞ்சில் பழுத்தது எனவே கூறுவர். நல்ல பழச்சுவையை செயற்கையில் கொண்டுவர இயலுமா?]]].
இவ்வாறுதான், ‘ஆரியர்’; ’வேத கலாச்சாரம்’, ’ஹிந்து சமய தத்துவங்கள்’ எனும் ஒருபொருட் பன்மொழிகளை (synonyms) நாம் புரிந்துகொள்ள வேண்டும். இச்சொல் எந்த நிலப்பகுதியையோ, அல்லது எந்த இனத்தைக் குறிப்பிடும் சொல்லல்ல. ‘ஆரிய’ வழி என்பது – எளிதான நேர்மையான வாழ்க்கையையும், உயர்வான சிந்தனையையும் கொண்டு, (simple living & high thinking), மாந்தர்களுக்குள் அமைதி, சமாதான சகவாழ்வு, எல்லோரும் இன்புற்று இருத்தல், எல்லோருக்கும் ஒரே நியாயம்’’ போன்ற நற்பண்புகளை நடைமுறையில், ஆதரித்து ஒப்புதலளிக்கும் வழி யெனக் கொள்ளவேண்டும். இவ்வழியில் எல்லாமாந்தரும் நன்நெறிசார்ந்த வாழ்க்கையையும், தன்நலம் கருதாமல், பிறருக்கு சேவை செய்யும் மனப்பாங்கையும் கொண்டால், இஃதே இறைவனுக்கு ஆற்றும் நற்தொண்டு செய்ததாக ஆகுமென வாழ்பவராவர். ஆகவே, உலகில் எப்பகுதியில் வாழ்ந்தாலும், எவ்வினத்தைச் சேர்ந்தவரானாலும், இவ்வழிவாழ்வோரே, ‘ஆரியர்’ என்றும் வேத-வழி வாழ்வோர் என கொள்ளல் வேண்டும்
[[[ஆனால், ‘ஆரியர்’ என்பவர்களை ஒரு தனி மக்களினமாக, சிலரால் காரண காரியம் இல்லாமல், அநாவசியமாக எண்ணப்படுகிறது. மக்களைப் பிரித்துத் தங்களை முன்நிறுத்திக் கொள்வர்கள் தான் இதற்கெல்லாவற்றிற்கும் மூல காரணம். ”ஊர் இரண்டுபட்டால் தானே கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பது போல, மக்களைப் பிரித்து அதனால், தங்கள் வாழ்வுக்கு வழியேற்படுத்திக் கொள்ளும், ஈன ஜன்மங்களைப் பற்றி என்னவென்று சொல்வது? ‘ஆரியர்’ ’திராவிடர்’ சம்பந்தமாக, ’’சுப்பு’’ அவர்கள் எழுதிய ‘’திராவிட மாயை” எனும் மிகத் தெளிவாக, ஆதாரங்களுடன் படிப்படியாகக் கூறப்படும் புத்தகத்தில் 27ம் பக்கத்தில் உள்ள பத்திகளை இங்கு அப்படியே கொடுத்திருக்கிறேன். à
”””””இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எண்ணங்கள் மக்கள் மனதில் உருவாக்காத வரை தமிழர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்குணர்ந்த ** கால்டுவெல், வடவர், மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். இம்முயற்சியின் முதற்கட்டப்பணியாக ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்கினார். அவருக்கு முன்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்கும் பொதுச் சொல்லாக ‘திராவிடம்’ என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. கால்டுவெல்லுக்கு முன் டி. நொபிலி இம்மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் என குறிப்பிட்டுள்ளார்.’திராவிடம்’ என்ற சொல்லாட்சி இல்லை. கால்டுவெல் செய்த மிகப்பெரும் தவறு, மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டது தான். இணக்கமாக, மொழிகளின் அடிப்படையில் இனங்களை வரையறுப்பது வரலாற்று விதிகளுக்கு முரணானது””””.
à‘ஆரியர்’ எனும் சொல்லை, அதை ஒரு தனி ‘இனமாகவோ’, அல்லது ’மதவெறிகொண்ட சமயக் கோட்பாடுகளில் தீவிரமானவர்கள்’ என்றோ, அல்லது ’தனித்தன்மையுள்ள சமயமென்றோ’, பித்துபிடித்து கண்மூடித்தனமாக வெறி-வாதம் புரிவது, எவ்விதத்திலும் கூறுகெட்ட முட்டாள் தனமாகும். பிறித்தாள வந்த ஆங்கிலேய-கிருஸ்தவரும், ** அதே இனத்தைச் சார்ந்த ‘ராபர்ட் கால்டுவெல்’ எனும் கிருஸ்தவரும், தங்கள் கிருஸ்தவ சமயத்தைப் பரப்ப, முதன்முதலாகக் கூறியவற்றை சிக்கெனப் பற்றிக்கொண்டு, சுயநல திராவிட ’ரத்தத்தின் ரத்தங்கள்’ தங்கள் பிழைப்பதற்கு நடத்திக் கொண்ட அல்லது இன்றும் நடத்தித் திளைத்துக் கொண்டிருக்கும் நாடகமாகும். (இதைச் சேர்ந்த பல புனைக்கருத்து வாதங்கள் மிக ஆதாரமற்ற அபத்த பொய்க் கருத்துகள் என இன்று ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாகக் கூறுகின்றன. ’சரஸ்வதி நதியைப்’ பற்றி வீண் வாதமும் இத்தகையது என இன்று இந்திய அரசாங்கமே, ஆழ்ந்த ஆய்வுக்குப்பிறகு ஆதாரத்துடன் நிரூபணமாகி, முறையாக ஏற்றுக் கொண்டுவிட்டது). இதையெல்லாம் கிளப்பிவிட்டு இந்தியரிடையே ஒரு கிட்டப் பர்வையை’(myopia) வேண்டுமென்றே உருவாக்கி, இந்தியரைச் சுரண்டும் நோக்கதோடு, பிரித்தாளும் தந்திரத்தை, ஆங்கிலேய-கிருஸ்தவர்கள் அன்று கையாண்டனர்.
இன்றோ, இவர்கள் பின்வந்தோர், தந்தைக்கு மிஞ்சிய தனையன்களாக இருக்கின்றனர்.
“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது ஏன்?” என்பது குறித்து, மு.கருணாநிதியிடம், ஜூன் 21, 2010இல், விளக்கம் அளித்துள்ளதில், அதே ’ராபர்ட் கால்டுவெல்’லின் கூற்றையே, இத்தனைக்குப் பிறகும், மேற்கோள் காட்டுகிறார்!!
இவரைப்பற்றி என் சொந்த கருத்து:

கீழ்க்கூறியவை அவசியம் சொல்லப்பட வேண்டியதானது. இதில் எனக்குக் குழப்பமில்லை. ஏனெனில், இது ஒரு ஹிந்து ஆன்மீகத்தைப் பற்றிய தமிழ்க் கட்டுரை, தமிழ் நாட்டில் ஹிந்து நாஸ்திக வாதத்தை மட்டுமே பரப்புவதில் அதி தீவிரமாக இருப்பவரைப் பற்றி இங்கே குறிப்பபிட வேண்டியது அவசியம் என எனக்கு மனதில் பட்டது. இதனால் தான் இங்கு, இவைகளை ஒரு பத்தியாகச் சேர்க்க நேர்ந்தது.

• அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மட்டும் ’1330 அருங்குறட்களை’ எழுதிவிட்டு, ‘வீட்டுப்பால்’ எனும் ஒரு பகுதியை, வெறும் தலைப்பால் மட்டுமே எழுதி வைக்காமல், ஆனால், ’வீட்டை’ அடைய, ’வீட்டின்’ உட்பொருள் விளங்களை மிகத் தெளிவாக திருக்குறளெங்கும் முழங்கிய, வான் புகழ் கொண்ட ’எல்லா உலகத்திறே உரிய’ — முதற்பாவலர், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெரு நாவலர், தெய்வப்பலவர் எனப் பெயர் பெற்ற — ’’திருவள்ளுவர்’’ எழுதி வைத்த — முப்பாநூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, தமிழ் மறை, பொது மறை — ஆகிய சிறப்புப் பெயர்கள் கொண்ட கடவுளைப் பற்றிய ’திருக்குறட்கள்’ வேண்டாம்; ஆனால், தேவைப்படும்போது (கடவுளைப் பற்றிய எழுதி வைத்த குறட்களை நீக்கி வைத்து) மற்ற குறட்கள், கழகப் பிரசாரங்களுக்கு மட்டுமே வேண்டும் என சொல்பவர், இவர். மேலும் தன் தமிழ்ப்பற்றைக் காட்டிகொள்ள, முக்கியமாக, விண்ணை முட்டும்-தன்-புகழ்-பாட, திருவள்ளுவருக்கும் விண்ணை முட்டும் (வானளாவிய) சிலை வைக்க வேண்டும் என்பவர். குறளில் கூறியவைகள் போல, கலைஞர் தன் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகிறாரா என்பதைக் கேட்காமல் இருந்தால் தான், நமக்கு நல்லது. இல்லையேல் நடப்பதே! வேறு(அவர் போற்றும் திரைப்படப் பாணியில் சொன்னால்!!); தமிழறிஞர் திரு பழ. கருப்பையா அவர்களுக்கு நடந்தது ஞாபகம் இருக்கட்டும்!!
• நெற்றியிலிட்ட குங்குமப் பிரஸாதத்தை ரத்தக்கறை என ’நாஸ்திக’மாக ஏளனம் செய்து, அதே சமயம், ’ஆஸ்திகம்’ ஒன்றையே முழு மூச்சுடன் போதனை செய்யும் ’’சத்ய சாய் பாபா’’வைத் தன் வீட்டிற்கே வரவழைத்து, ஆங்கே எப்போதும் தன் மேனியை அலங்கரிக்கும் மஞ்சள் நிற சால்வையுடன், (இது மாத்திரம் குருட்டு நம்பிக்கையல்ல!), கலைஞர், தன் எதிரிலேயே, அதே ரத்தக்கறை குங்குமத்தைத் தன் நெற்றி நிறைய மிகப் பெரிதாக பொட்டு இட்டுக்கொண்டு, ஸ்ரீலக்ஷ்மீகரமாக அவர் மனைவி திருமதி, தயாளு அம்மாள், பக்தி சிரத்தியுடன், பெரியவருக்கு பாத பூசை செய்யும் போது மட்டும் அகமகிழ்ந்து ‘பாபா’வுடன் அளவளாவுதல். ஆனால், கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கையைப் பிரசாரம் செய்து, திருவள்ளுவரைத் திட்டித் தீர்த்தும், தமிழ் மொழியை ’’காட்டுமிராண்டி மொழி’’ என 40 ஆண்டுகளாகக்கூறி, ஆக, தமிழனையே ”காட்டுமிராண்டி” என கொடுஞ்சொல்லால் சாடிய, ஈ.வே.ரா. பெரியாருக்குப் புகழாரம் சூட்டும் நாஸ்தீகப் பகுத்தறிவாதி, ஈ.வே.ரா. வழியில், தான் வந்தவரெனப் பிரசாரமும் செய்து, அதிலும் பெருமையையும் கொள்பவர்…..
• ஆரிய-திராவிட-மொஹஞ்சதாரோ-ஹாரப்பா-சரஸ்வதி நதி ஆகியவைகளைப் பற்றிய, ஆய்வுகளின் முடிவுகளைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் கிடையாது, ஆம்! என்றுமே வராது! காரணம், ….. கழகக் காகித அட்டைகளால் ஆன அடித்தளம் என்னாவது?!
• வேண்டும்போது (தேர்தல் ஓட்டுக்காக) ஒத்தூத நாத்திக (ந+அஸ்தி) = (न+अस्ति) (அது இல்லை), இறையில்லை எனும் நாஸ்திக வாதம், கம்யூனிச, இஸ்லாமியக் கொள்கைகளில் ஈடுபாடென, குல்லாபோட்டுக் கொண்டு ’இஃப்தார்’ கஞ்சி குடிக்கும்போதும், அவ்வப்போது வேண்டுமென்றால் வெவ்வேறு மேல் சட்டை, குல்லாக்களை மாற்றிக்கொள்ளும் போது, இடி முழக்கத்துடன் அறிக்கைகள்.
• இதற்கெல்லாம் சிகரமாக, இப்படியாக, தமிழுக்கு அருந்தொண்டாற்றிய, இவருக்கு, புகழாரம் சூட்டக் காத்திருக்கும் திரைப்பட, தண்டவாளத்தின் மூலமும், தமிழுக்குத் தொண்டாற்றும் கவிஞர்கள் புடைசூழ ஊர்வலம் வேறு;
• இவருடைய இந்திய தேசப்பற்றைப் பற்றிக் கூறினால், ……..அதிகம் கூற வேண்டாம் ….. ஆங்கிலேயன் இந்திய நாட்டைவிடோடிய போது, ஆங்கில ஆட்சியே வேண்டும், குறைந்தது ‘மதராஸ் மாகாணத்திலாவது” நீடிக்கவேண்டுமென ”போகாதே போகாதே எங்கணவா” என பிலாக்கணத்தைக் கூட்டிசைத்த அந்நாள் நீதிக் கட்சி, கூட்டத்தைத் தன் கழக பிறப்பிடமாகக் கொண்டவரல்லாவா?
• ராஜாஜியையும் காந்தியையும், நேருவையும், காமராஜரையும் அன்று இவர் திட்டியதை எழுத்தில் வடிப்பதற்கு கை மறுக்கிறது, இவர் அன்று இவர்களைத் திட்டியது போல வேறெவரும் அவ்வளவு அசிங்கமாக (’மோசமாக’ எனும் சொல் எனக்குச் சற்று குறைவாகப் பட்டது) எவரும் திட்டியதில்லை. ஆனால் இன்றோ ராஜாஜி – மூதறிஞராகிப் போனார், காந்தி – உத்தமரானார், ’நான்சென்ஸ்’ நேருவின் புத்தகத்தி லிருந்து மேற்கோள் காட்டுகிறார், ”காமராஜரோ – இன்று ’பெருந்தலைவராகிப்போனார்’. ஏனெனில், இப்படி தன்னை மாற்றிக் கொண்டால்தான் …… இன்று நல்லது என முற்றிலும் உணர்ந்த தமிழ் ஞானி …….. ஆகையால் தான் ”நிலை மாறினால் குணம் மாறுவான்” எனத் தமிழ்க் கவிஞர் கண்ண தாசன் என தெரிந்து வைத்துக்கொண்டு தான் எழுதி வைத்தாரோ!.
• நிரந்தமாக அரசியல்வாதியாக இருப்பதற்கு ”என்றுமே, எந்த நிரந்தரக் கொள்கையும் தேவையில்லை” என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர், (திராவிட நாடு …. சுடுகாடு….மாநில சுய ஆட்சி … என அடுக்கடுக்காக) இதற்காகவே ஒரு மற்றொரு தனி ’முனைவர்’ பட்டத்தை அடையத் தக்க, முனைவர்-கலைஞர் அவர்கள்.
• இனி நாட்டிலுள்ளோர், யாராவது தமிழ் முனைவர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டாலும், அவரை ஏற, இறங்கப் பார்த்து, ஏளனப் புன்னகையுடன், ”ஒருவேளை கழக முனைவரா (ஆற்றில் போகும் தண்ணீரை, ஐயா குடி, அம்மா குடி என்றவாறு), அல்லது உண்மையாகவே தமிழறிஞர்களிடமிருந்து முறைப்படி, சிரமப்பட்டு, கற்றறிந்து, தக்க தமிழ்ப் பேறறிஞர்களால், பரிசோதனைக்காட்படுத்தப்பட்டு, தமிழிலக்கியத்துக்கு உண்மையாகத் தொண்டு புரிந்த, தமிழறிஞரா?” எனும் அளவிற்குத் திருப்பி நோக்க வைத்த முனைவர்-கலைஞர்! (உண்மைத் தமிழ் முனைவர்களையும் இங்கு இழுத்ததற்கு, அனைவரும் என்னை மன்னிக்க, தாளும் தடை கூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்).

ஆகிய இவற்றைத் தன் பின்னணியில் கொண்ட ஒருவர், ’ராபர்ட் கால்டுவெல்’லின் கூற்றையே மீண்டும், மேற்கோள் காட்டிப் பேசினால், அது எதைக் காட்டுகிறது?

சமீபத்தில் கலைஞர் உதிர்த்த மற்றொரு, முத்து, ஆம்! மற்றொரு முத்துதான்!! ”வடமொழி வேதங்களில், 20-க்கும் மேற்பட்ட ‘தமிழ்ச் சொற்கள்’ இருப்பதால், வட மொழிக்கு முன்பே தமிழ் மொழி இருந்தது என்பதை அறியலாம்” – என்று கலைஞர் கூறுகிறார். இதற்கு ‘துக்ளக்’ வார இதழில் (14-ஜூலை-2010) ‘சோ” அவர்கள் அளித்த பதில், என்னை மிகவும் கவர்ந்தது. ”சோ” அவர்கள் சொல்லாமல் சொன்னதை, நான் பகிரங்கமாகவே, சொல்ல விரும்புகிறேன். ”எந்தெந்தச் சொற்கள், எந்தெந்த மொழியிலிருந்து எந்தெந்த மொழிகளுக்குச் சென்றுள்ளன – என்பது பற்றி முழுமையாக ஒரு கருத்துச் சொல்கிற அளவிற்கு எல்லா மொழிகளிலும் விவரம் அறிந்தவர் எனத் தன்னை, அவரால் கூட ஒப்புக்கொள்ள முடியாதே”! இதெல்லாம் ஒரு வாதத்திற்குத் தேவைதானா? இதைத்தான் ”வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” எனவும், ‘கவைக்குதவாத’ வாதங்கள் எனக் கற்றறிந்தோர் கூறுவர்.

பாவம்! இவரால் வேறென்ன செய்துவிட முடியும்! நான் மேற்கூறியவற்றைப் பற்றி, யோசித்துத் தீர்ப்பு கூற உங்களிடமே விட்டு விடுகிறேன்.

”பிற மொழி சாத்திரங்கள், தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்றவாறு, நம் மனக் கதவுகள் எல்லா திசையெங்கும் எல்லா மொழிகளிலும் உள்ள நல்லவைகளைத் தேடிக் கற்றுக் கொள்ள திறந்தே கிடக்க வேண்டும். தமிழ் சிறக்க, தமிழ் மக்கள் இன்னும் சிறக்க இத்தொண்டை நாம் எல்லாரும் செய்தாக வேண்டும். தமிழர்கள் பட்டை கட்டிக்கொண்ட ‘குதிரை நோக்குள்ளவரல்ல’ என உலகோர் மதிக்க வேண்டும். உலகெல்லாம் சிறக்க, நம் தமிழிலிருந்து மற்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று தமிழைப் பரப்ப வேண்டும்]]].

இனி, எடுத்துக்கொண்ட முக்கிய தலைப்பற்றி கவனிக்கலாம் – ‘’ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள்’’

–00—
1. வேத-ஆரிய-வாழ்க்கை-வழி என்றால் என்ன?
இதையே ஆன்மீகத்தில் மேம்பாடடைந்தவரின் வழிகளை அறிந்துகொள்ளுதல் என பொதுவாகப் பொருள் கொள்ளலாம் அல்லது ஒருவருடைய ஆன்மீக அடையாளத்தைக் கண்டுணர்தல் எனவும் சொல்லலாம். ஆணுக்கோ, அல்லது பெண்ணுக்கோ, கிடைத்த இவ்வுடல் தற்காலிகமானது தான், உண்மையில் அதை ஆட்டிவைத்து உள் உறைவது ஒரு அற்புத தெய்வீகப் பொறி; அல்லது ஆன்மாதான்; அதாவது, முன் மரித்த பின், இப்போது நமக்கு புதிதாகக் கிடைத்த இவ்வுடல், ஒவ்வொருவருவருடைய வினை / கர்மா என, அல்லது முன் பிறப்பின்போது, எண்ணத்தாலும், சொற்களாலும், செயல்களாலும் செய்த வினைப்பயனால் (நல்லவைகளோ, தீயவைகளோ – जीवनं कर्मानुसारिणी ’ஜீவனம் கர்மானுசாரிணி’ என்பதற்கேற்ப) இப்பிறவியில் பலாபலன் கிடைத்துள்ளது என புலப்பட்டுவிடும். இதில் நல்வினைப்பயனால் நல்லருளோ அல்லது தீவினைக்கொப்ப தண்டனைகளோ ஒவ்வொருவரும் அறுவடை செய்ய நேரும். ”வினை விதைத்தால் தினை” கிடைக்குமா? என ஆன்றோர் சொல்வதுண்டு. இவ்வாறான ஆன்மீக அறிவிலில் திடமான உணருந்திறன் ஒவ்வொருவருக்கும் உண்டாகிப்போனால், இத்திறனைக் கொண்டோர், ஓரினத்தைச் சேர்ந்தவரென்றோ, ஆண் பெண் என்ற பாகுபாடோ, சமுதாயப் படிநிலையோ, அல்லது ஓரினத்தின் உட்பிரிவோ என இன்றி, எல்லோரிடத்தும் மன அமைதியுடன், நன்கு பழகுவர். இதனால் மற்றோர், தாமாகவே இப்பேற்பட்ட பெருந்தகைமை உடையோரை, உயர்வாகப்போற்றி உகப்பர். இந்நிலை ஒவ்வொருக்கும் உண்டானால், அவரையே ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, ஒவ்வொருவரையும் ஒவ்வொருவரிடத்திலும், நன்நெறியோடு, அமைதி நிறைந்த சமூக நடத்தையில் எல்லோரையும் ஈடுபட வைத்துவிடும். ஒவ்வொருவரிடத்திலும் உள்ள ஆன்மீக தனித்தன்மையை அடையாளங்கண்டு கொண்டால் அது நமக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கி விடுகிறது. இந்நிலையில், ’பூமி எனும் இக்கிரகத்தில்’ (planet) சிறிது நாட்களுக்கு நாம் விருந்தாளிகளாக அவ்வபொழுது வருகிறோம் என்பதையும் அறியமுடியும். வேறுவிதமாகச் சொன்னால், இப்படியாக, உங்கள் ஆன்மீக நலனுக்கு என்னால் ஆற்றப்படும் பங்களிப்பு, தன்னியக்கமாகவே, எனது சொந்த நல்வாழ்வுக்கு நானே எனக்குப் பங்களிப்புக் கொடுததாகவே ஆகிவிடுமல்லவா!. இம்மாதிரியே ஒருவருக்கொருவர் நம் பங்களிப்புகளை பரஸ்பரமாக அளித்துக் கொள்வதால், நம் சமூகமே ஒட்டுமொத்தமாக எவ்வித இடையூறின்றி தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு வழி ஏற்படுத்திவிடுமல்லவா!. ஆக, நாம் எல்லோரும் ஒன்றுகூடி, நம் ஒவ்வொருக்கொருவர் தூய்மையாகப் புரிந்துகொள்ளும் திறனையும், அப்பழுக்கில்லாத உள்ளத்தையும் அடைய உளமாற உழைப்பதாகவும் ஆகிவிடும். இது தான் வேத-ஆரிய-வாழ்க்கை-வழியின் குறிக்கோள்; இவ்வழியையே, மனப்பூர்வமாக பின்பற்றுவோர் எப்போதுமே இவ்வழியில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.
இருப்பினும், ஒவ்வொருவரும் இவ்வழியை அடைந்து விடவோ, அல்லது குறைந்த பட்சம் பின்பற்றுவதையோ விரும்புவதில்லை. அதனால்தான் வேத ஒழுங்கு முறைகளில், பேறுகாலத்திலிருந்து இறுதி நிலையான இறப்புவரை நல்லொழுக்க நடத்தைகளையும், அநேக வரையறை செய்யப்பெற்ற விதிகளையும் (அதாவது, அநேக கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு), சமய சடங்குகளையும் ஒவ்வொருவருக்கும் நிறுவியுள்ளனர். ஆம்! மற்ற சமயங்களிலும் நல்லொழுக்க நடத்தைகளைப் பற்றி, இம்மாதிரியான ஒழுங்கு முறைகள் இருக்கலாம். (ஆனால், அவைகளைப் பற்றி நன்கு யோசித்து, விமர்சனம் செய்து, பிறகு தீர்மானித்து, பின்னர் உபயோகிக்கும் சுதந்திரம் இருக்குமா?) ஆனாலும், எவரொருவர், இம்மாதிரி நல்லொழுங்கு விதிகளை அனுசரிக்க விரும்பவில்லையோ, அவர்களையும் ’’ஆரியரல்லாதோர்’’ என பெயர் சூட்டப்பட்டாலோ, அதாவது இந்த நல்லொழுக்கங்களைப் பின்பற்ற விரும்பாதோரை ’நாகரிகமற்றவர்கள்’ என சுருக்கமாகத் சொன்னால் என்ன தவறாகிவிடும்? இவ்வாறான ஆசாமிகள், இவ்வித நியமங்களையோ, தத்துவங்களையோ, அல்லது ஆசாரங்களைப் பின்பற்றாமல் இருந்தால், அவர்களை ஆன்மீகவழியில் இல்லாதோரென கூறலாம். ஆகவே,
• எவருக்கு மேற்கூறிய ஆன்மீகவழிகளில் செல்தடமில்லையோ, ஆனால்,
• உலகாயத உடலுக்கு வேண்டிய வேட்கையில் மட்டுமே நாட்டமும், கும்பி நிரப்பும் பிழைப்புக்கும், மேனியை ஒரு மேடையாக உபயோகித்து, மனம்போனபோக்கில் காரியங்களையும் செய்து, மேலாக
• அதே மேனியை ’’வெண்ணிறம், கருநிறம்’’ என பாகுபடுத்தி,
• உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனவும்,
• மக்களுக்குள் ’’என் நாடு, என் இனம், உன் நாடு உன் இனம்’’ என வித்தியாசம் பாராட்டி,
• எவரிடமும் குற்றங்குறைகளைக் கண்டுபிடித்து, அல்லது புதிதாகத் தோற்றுவித்து,
• மற்றொரை அடிமைப்படுத்தி, இதற்கும் அவர்களுடைய புனித சமய நுல் களிலிருந்து மேற்கோள்காட்டி சுய ஆதாயம் கருதி வாழ எண்ணம் கொண்டு,
• வாழ வேண்டியவர், வெட்டப்பட வேண்டியவர் எனும் பாகுபடுபடுத்தி, கட்டாயப் போர் என இவைகளுக்கும் அவர்களுடைய புனித சமய நுல்களிலிருந்து மேற்கோள்காட்டி,—
ஆகிய இவைகள் போன்ற கருத்துக்களைக் கொண்டுள்ளனரோ, அவர்களையும் ’ஆரியரில்லாதோர்’ எனக் கூறலாம்.
சிலபிறவிகள், ஹிந்துக்களின் பெற்றோருக்கு பிறந்துவிட்டதால், தாங்களும் ஹிந்துக்கள் என பெயரளவில் இருந்தாலும், வேறெவராக இருப்பினும் சரி, ’’ஹிந்து-வேத நன்நெறி’’ எனும் அளவுகோலுக்கு புறம்பாக இயங்கினால், அவர்களையும் ’ஆரியரில்லாதோர்’ எனக் கட்டாயமாக் கூறிவிடத்தான் வேண்டும். அதனால்தான், வேத நன்நெறி எனும் அளவுகோலில், நம்பத்தகுந்த ஆன்மீக அறிவொழுக்கப் பயிற்சிகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டிய அவசியத்தை, இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம்; உணர்கிறோம்.
எனவே, ’ஆரியர்’ எனும் சொல்லுக்கு, வாழும் வகையை அறிந்தோர் என மற்றொரு சுருக்கமான, பொருள் கூறலாம். அதாவது, ஹிந்து சமய ஆன்மீகம், எனும் மிக வலிமை மிக்க, விசாலமான, எந்த தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் திறனுடைய, உறுதி குலையாத அஸ்திவாரத்தின் மீது, எழுப்பப்பட்ட நன்நெறியில், சமூகத்திலுள்ள ஒவ்வொருவரின் மன உணர்வு நிலையை முன்னர் இருந்த நிலையிலிருந்து மேலும் ஏற்றமடைய வைப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வாழும் வழி எனவும் கூறலாம். அதாவது,
• ஆன்மீகத் துறையில் நம் ஒவ்வொருவரையும் மெய்யறிவின் மூலத்தைத் தத்ரூபமாக அறிந்தவராக ஆக்கிவிடவும், நம் வாழ்வின் உள்நோக்கத்தை உணர்ந்து, நம் வாழ்க்கையையும், தற்கட்டுப்பாடுடன் வைத்துக் கொண்டு, இறையை உணர்ந்த நிலையில் வாழ்நாள் முழுதும் வாழ்வற்கு துணைபுரிவது என சற்று விவரமாகப் பொருள் கூறலாம். மேலாக
• இம்மெய்யறிவு நம் ஒவ்வொருவருக்குள் உறைந்திருக்கும் இறையைக் கண்டுணர்வது எனவும் ஆகிவிடுகிறது. மேலும்,
• வீரியம் வாய்ந்த தெய்வத்தன்மையே, படைக்கப்பட்ட ஒவ்வொன்றிலும் ஊடுறுவிப் பரவி இருத்தலையும், நாமெல்லோரும் ஆன்மீக ஆற்றலையே தெளிவாக வெளிப்படுத்திக் காட்டுகிற, [நம் எல்லோருக்கும் தகப்பனான] இறைவனுடைய பிரதிபிம்பம் (உருவச் சாயல்) எனவும் தெளிவாகக் உணர்த்துகிறது. மேலும்,
• இவ்வாறாக, ஒவ்வொருவரும் தனித்தனியாக உணர்ந்துகொண்டு, அடுத்தவர்களையும் மேற்கூறிய உண்மைகளை அறியச் செய்வதுமாகும். இவ்வாறு மற்றொருக்கு உதவி செய்தல் என்பதே, தனக்குத்தானே உதவி செய்து கொள்வதற்கு சமமாகும் என்பதை நம் எல்லோருக்குமே உணரவும் வைத்துவிடும்.
• இவ்வாறாக, இறைவனை ‘பரமாத்மா’ எனவும், அல்லது மிக ”உயர்ந்த / உயர்வான ஆன்மா” என்றும், அவ்விறையே, நம் ஒவ்வொருவருள் உறைந்திருக்கிறார், என புலனுணர்வு வாயிலாக உணர்தலை நாம் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே உண்டாகிவிடுகிறது.
மேற்கூறியவை யாவும், எங்கும் நிறைந்த இறைவனின் மீது நம் ஒவ்வொருவருக்கும் இயற்கையாகவே நம்பிக்கையை உண்டாக்கி, மேலும் ஊக்குவைத்து, இன்னும் அதிகரித்து விடுகிறது. இந்நம்பிக்கையும், மிகத்தெளிவுற்ற இவ்வுணர்வும் நம் ஒவ்வொருவரித்திலும், அப்பரம்பொருளே முக்கிய மையம் கொண்டுள்ளார் என உணர்த்தி, நாமெலோரும் மரித்த பின், நமது நிரந்தர இடமான, முடிவில்லாது எங்கும் எதிலும் நிறைந்த, எல்லையற்ற, ஆதியந்தமில்லாத, இறைவனிடமே திரும்பி, ஒன்றாகிவிடுவதையும் நமக்கு உணர்த்துகிறது. இதுதான் வேதவழி வாழ்க்கைப் பாணியின் (goal of the Vedic lifestyle) மிக முக்கிய நோக்கமாகும். உலகாயத ’பூத உடல்’ எனும் வாழ்வின் மனக்கருத்திலிருந்து அல்லது நம் பிறவிப்பணியிலிருந்து நம்முடைய உடலை விடுவித்துக் கொண்டபின், ’நான்’, ’நீ’ என்றோ உண்மையில் யார், எனும் கேள்விக்கே இடமில்லை. இவ்வாறான, உணர்வு நிலையை உண்டாக்க மனித சமூகத்திற்கு நல்ல வாய்ப்பை மனதார அளிப்பது தான் வேத நன்நெறியின் மிக முக்கிய உள்நோக்கமாக இருக்கிறது. இது தான் ஹிந்து நன்நெறியின் சாராம்சமாகும்.
(தொடரும்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்