குழந்தைகளுக்கான தோட்டம்!
டாக்டர். எம். ராஜலெட்சுமி

குழந்தைகளுக்கு எதையும் நல்லமுறையில் கற்றுக்கொடுப்பது என்பது பெரியவர்களான நம்கையில்தான் உள்ளது.
குழந்தைகள் உலகம் அற்புதமானது. தான்வாழும் இடத்தில் நிகழும் விஷயங்களை தொ¢ந்து கொள்வதில், குழந்தைகளின் ஆர்வம் எப்போதுமே குறைவதில்லை. ‘இது என்ன… இது எதுக்கு… இது எப்படி?’ என்பது அவர்களுக்குள் இருக்கும் தேடலின் அடிநாதம்!
அவர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும் பட்சத்தில், அடுத்தடுத்த கேள்வியின் ஆழம் வியப்பை ஏற்படுத்தும். பதில்பெற இயலாத குழந்தைகள் தான் முடங்கிப் போகிறார்கள்.
அதுபோல எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் குழந்தைகளுக்கு அதிகம். விளையாட்டுப் போல எடுத்துச் சொல்லும் விஷயங்களை அவர்கள் வேகமாகக் கற்றுக் கொள்கிறார்கள். தோட்டக்கலை, குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ளும் விஷயமாகவே இருக்கிறது. கற்றுக்கொள்வதற்கு அதில் நிறைய விஷயங்களும் இருக்கின்றன. தோட்டக்கலை மூலம் குழந்தைகள், உருவாக்குதல், பராமா¢த்தல், பயன்பெறுதல் எனும் படிக்கட்டுகளைக் கடந்து, அந்த உலகத்தில் சஞ்சா¢க்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.
தோட்டம் அல்லது தோட்டக்கலை பற்றித் தொ¢ந்து கொள்ளும் இடங்களாக, பொதுவான இடத்திலுள்ள பூங்காக்கள், மழலையர் பள்ளிகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களாக மட்டுமே உள்ளன.
குழந்தைகளுக்கான தோட்டத்தை உருவாக்க, அவர்களுக்கென்று ஓர் இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். அந்த இடத்தில் நம்முடன் சேர்ந்து அவர்கள் பணிமேற்கொள்ளும்படி செய்திட வேண்டும். விதை விதைப்பது எப்படி… செடி நடுவது எப்படி… பூக்கள் எவை… காய்கள் எவை…என்பதை நாம் தான் சொல்லிக் கொடுக்க வேணடும். விளையாட்டுபோல இதை விளக்கினால், மிக எளிதில் அவர்கள் மனதில், இது பதிந்துவிடும். அவர்களுக் கும் தோட்டக் கலையில் ஈடுபாடு வந்துவிடும்!
குழந்தைகளுக்கானத் தோட்டம் அமைக்கும் போது, அது பாதுகாப்பானத் தோட்டமாக அமைந்திட வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும்.
தோட்டத்தின் வேலிகளாக ரோஜா, மூலிகைச்செடிகளை உட்புறமாக நட்டு வைக்கலாம். அது தோட்டத்துக்கு அழகையும் கூடுதல் பாதுகாப்பை யும் அளிப்பதாக இருக்கும்.
தோட்டத்தில் பயிர்களுக்கு உரம், மருந்து அடித்த நாட்களில் இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்கு குழந்தைகளை அனுமதிப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது. உரம் மற்றும் மருந்தின் வீ¡¢யம் காற்றில் கலந்தே இருக்கும். அது சில வேளைகளில், குழந்தைகளுக்குத் தீங்கு விளைவித்து விடலாம். அதுபோல உரம், மருந்து அபாயம் குறித்தும் குழந்தைகள் பு¡¢ந்துகொள்ளும் வண்ணம் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
வீட்டிற்குள் தோட்டம் அமைப்பதாக இருந்தால், பெட்டிகள், பூந்தொட்டிகள், ஷ¥க்கள் ஆகியவற்றிலும் கூட அமைக்கலாம். இவை குழந்தை களுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காதவை. வித்தியாசமான அனுபவத்தையும் அவர்களுக்கு கொடுக்கும்.
குழந்தைகளுக்கானத் தோட்டத்தில் ஊஞ்சல், தூக்குத் தூக்கி ஆகியவற்றையும் அமைக்கலாம். ஒருவேளை இடப்பற்றாக்குறை இருந்தால், அதனை விட்டுவிடலாம். இவையிருந்தால் குழந்தைகள் கூடுதலாக சில மணிநேரத்தை தோட்டத்தில் செலவிட வாய்ப்பு இருக்கும். இதன் மூலம் கூடுதலாக சில விஷயங்களைத் தொ¢ந்து கொள்ளும் சந்தர்ப்பம் அதிகா¢க்கும்.
குழந்தைகளுக்கான தோட்டத்தை உருவாக்குதன் மூலம் அவர்கள் தாவரங்களைப் பற்றிய ஞானம் பெறுவதுடன் அவற்றைப் பாதுகாப்பது தொடர்பான ஆர்வமும் கொள்வார்கள். செடிகளை யாரும் பிடுங்கவோ சேதப்படுத்தவோ முடியாது. அதைக் குழந்தைகள் அனுமதிக்க மாட்டார்கள்.
குழந்தைகளிடம் ஒரு செடியைக் கொடுத்து, அதன் பயன்பாட்டையும் சொல்லிப் பாருங்கள். அவர்கள் காட்டும் ஈடுபாட்டில் ஒரு தோட்டமே உருவாகி விடும்!
தாவரங்களிடம் அவர்கள் காட்டும் ஆர்வத்துக்கேற்ப சில சலுகைகளையும் கொடுத்துப் பாருங்கள்…
நல்லதொரு சூழல் நம்சுற்றுப்புறத்தில் உருவாகிவிடும்!
landscaping_greenworld08@rediffmail.com
டாக்டர். எம். ராஜலெட்சுமி
- குளியலறையில் பேய்!
- Last kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா ?
- காலடியில் ஒரு நாள்
- ஊமச்சி
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15
- கவிதை
- வாடிய செடி
- மெழுகுவர்த்தி
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9
- நினைவுகளின் தடத்தில் – 12
- குங்குமப்பூ
- பட்டமரங்களும் பச்சைமரமும்
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)
- வறுமை
- இழப்பு
- நான் கண்ட தன்வந்திரி
- Last Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)
- அக்கா
- மென்தமிழ் இணைய இதழ்
- தாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)
- புதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா
- காற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் ?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்
- குழந்தைகளுக்கான தோட்டம்!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் ! (கட்டுரை: 30)
- கவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா!
- மறந்துபோகும் பிறந்த நாள்கள்
- Ramayana for Youth Balakanda Monday July 7 – Friday July 11, 9 a.m. – 12 p.m
- “இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”
- Call for papers for the fourth annual Tamil Studies Conference, “Home, Space and the Other”
- நீங்கள் விரும்பியதையெல்லாம் வணங்கிக்கொள்ளுங்கள்!
- கமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா
- காதலில் தொடங்கிய என் பயணம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.
- The launch of the NFSC portal for folklore journals
- மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி!