பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

நரேந்திர மோடி


ஒவ்வொரு தனிமனிதருக்கும் சுதந்திர சமுதாயத்தின் ஜனநாயகக்கொள்கை கொடுக்கும் பாதுகாப்பைப் பயன்படுத்திக்கொண்டு குற்றங்களும் பயங்கரவாதமும் ஒன்றுக்கொன்று துணையாக தங்களது பாதிப்பையும் வீச்சையும் விஸ்தரித்துக்கொள்கின்றன. இந்த சுதந்திர சமுதாயங்கள் மற்றவர்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மதிக்காதவர்களையும் கூட தங்களுக்குள் வரவேற்கின்றன. “எந்த ஒரு பாரபட்சமும் இன்றி எல்லோருக்கும் சம உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கும்” ஒரு முற்போக்கான ஜனநாயக சமூகம் உண்மையிலேயே பாதுகாப்பற்றது.

கடந்த இருபதாண்டுகளில், இந்தியா மேலும் மேலும் பயங்கரவாதத்துக்குள் முழுகி வருகிறது. முன்பு வெகுதூரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமேயாக இது இருந்தது. பிறகு பஞ்சாபிலும் பிறகு ஜம்மு காஷ்மீரிலும் பயங்கரவாதம் தலை தூக்கி, இன்று இந்தியாவின் எந்த பகுதியும் பயங்கரவாதத்திலிருந்து தப்ப முடியாது என்ற நிலைக்கு வந்திருக்கிறது. 1993, மார்ச் 12ஆம் தேதி மும்பையில், ஒரு எதிரிநாட்டின் உளவுத்துறையும் தாவூத் இப்ராஹிமின் மா·பியா கும்பலும் இணைந்து தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினார்கள். குஜராத்தில் பலவருடங்களாக குஜராத் போலீஸ் தொடர்ந்து இப்படிப்பட்ட சதித்திட்டங்களை முறியடித்து பல குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையும் கைது செய்து வந்திருக்கிறார்கள். கோத்ரா துயரச்சம்பவம் நிகழ்ந்த பின்னால், அக்சர்தாம் கோவிலில் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்த மாநிலம் தொடர்ந்து பயங்கரவாதத்தாக்குதலின் குறியாக இருக்கிறது என்பதை பலருக்கும் நிரூபித்திருக்கிறது. பயங்கரவாதத்தை முறியடிக்கவேண்டுமெனில் இந்திய பாதுகாப்புப்படைகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவர்களின் முன்னகர்வு நிலைப்பாடு கோரும் இந்த நிலை, அவர்கள் இந்தியாவுக்குள் எந்தெந்த பயங்கரவாதக்குழுக்கள் இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய அறிவை மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதச்செயல்களை செய்ய முனையும் குழுக்களைப்பற்றிய அறிவையும் கொண்டிருக்க வேண்டும் என்று கோருகின்றது. எந்த இடங்களில் பயங்கரவாதச்செயல்கள் தோன்ற முடியும் என்பதை மட்டுமல்ல, எந்த இடங்களில் பயங்கரவாதத்துக்கான தார்மீக பொருளாதார ஆதரவும் கிடைக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும். உதாரணமாக, பயங்கரவாதிகளின் முக்கிய மையப்புள்ளியாக தாலிபான் இருக்கிறது என்பதும், அவர்கள் பல உதிரி பயங்கரவாதக்குழுக்களுக்கு உதவும் கரங்களாக இருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டும். அந்த குழுக்களில் பலவும் காஷ்மீரிலும் உலகெங்கும் பயங்கரவாதச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய அரசாங்கம் அல்லாத அரசாங்கங்களையும், தாராளவாத இஸ்லாமிய அரசாங்கங்களையும் கவிழ்த்து அங்கு இஸ்லாமிய மத அடிப்படைவாத அரசாங்கங்களை தோற்றுவிக்க முனையும் அல்குவேதா அமைப்பு ஆப்கானிஸ்தானத்திலிருந்து கொண்டு பல பயங்கரவாத அமைப்புகளுக்கு பதுங்கு குழியாக இருக்கிறது என்பதும் எதேச்சையானது அல்ல. அதே போல பாகிஸ்தானும் உலகத்திலேயே ஆபத்தான இடமாக ஆகி வருகிறது. ஏனெனில், அங்கு இருக்கு ஆபத்தான சக்திகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கத்துக்குப் புரியவில்லை. அந்த சக்திகளை கட்டுக்குள் வைக்க எந்த ஒரு கொள்கையும்கூட இல்லை. இந்த நாடு அணுசக்தி ஆயுதங்களை வைத்துக்கொண்டு, பயங்கரவாத இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் விளைநிலமாக இருந்து கொண்டு, உலகெங்கும் தீமையைப்பரப்பும் ஹெராயினை விநியோகித்துக்கொண்டும் இருக்கிறது. பயங்கரவாதிகளை பயிற்றுவிக்கும் முகாம்களையும் அவர்களை இந்தியாவுக்குள் அனுப்பும் அமைப்புகளையும் கொண்டுள்ள இந்த நாடு, அந்த நாட்டினுள் இந்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலவுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. இதனால் அந்த நாடு அரசாங்கமும் நாடும் எதிர்கொள்ளும் ஆபத்தை மேலும் வலியுறுத்த முடியாது. மேலும், முக்கியமாக, சமூகத்தை பலவீனப்படுத்தும் இந்த சக்திகள், இந்த அணு ஆயுதம் கொண்ட நாட்டுக்கு கொடுக்கும் ஆபத்தையும் மேலும் வலியுறுத்தி கூற முடியாது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், தொலைத்தொடர்பின் வளர்ச்சியும், பயங்கரவாதம் குற்றம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை வளர்த்திருக்கின்றன.

பணம், பணப்பட்டுவாடா மூலங்கள், மின்னணு ஆவணங்கள் ஆகியவை இன்று உலகெங்கும் சில வினாடிகளுக்குள் அனுப்ப ஏதுவானவையாக இருக்கின்றன. மேலும், குற்றத்தை வெளிக்காட்டும் ஆவணங்களும் மிக எளிதாக அழித்துவிடக்கூடியவையாக இருக்கின்றன.

கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக்கும் வேலைகள் ஒருவழிப்பாதை அல்ல. இது ஒரு தீய சுழலாக, ஏராளமான பணம் நாட்டிலிருந்து ஒரு வழியே வெளியே அனுப்பப்பட்டு, சில வினாடிகளுக்குள் மறுவழியே மறுவடிவத்தில் உள்ளே வருகின்றன. மா·பியா கும்பல்கள் இன்று ஏராளமான அசையா சொத்துக்களை நிலங்களை வீடுகளை வாங்குவதை முற்றுமுடிவாக வைத்திருக்கின்றன. இஇதனால்இப்படிப்பட்ட மா·பியா கும்பல்கள் சட்டப்பூர்வமான வழிமுறைகள் மூலமாகவே அரசாங்கத்தையும் சமூகத்தையும் பாதிக்க முடியும் அளவுக்கு வலிமை பெறுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளும், வளர்ந்து வரும் ஜனநாயகங்களும், இந்த நாடுகளின் அரசாங்க அமைப்புகள் பலவீனமாகவையாக இருப்பதும், இந்த அரசாங்க அமைப்புகள் இன்னும் உறுதியாக கட்டப்படவேண்டியது தேவையாக இருப்பதாலும், இன்று எல்லை கடந்த மா·பியா கும்பல்களுக்கு ஒரு வசதியாகிவிட்டன. இந்த மா·பியா கும்பல்களின் துல்லியமான அணுகுமுறையை எதிர்கொள்ளக்கூடிய வலிமை இந்த நாடுகளின் குற்றவியல் அமைப்புகளுக்கு இல்லை. இந்த நாடுகள் அயல்நாட்டு மூலதனத்தை மிகவும் எதிர்பார்ப்பதாலும் குற்றவாளிகளின் பணங்கள் இந்த நாடுகளுக்குள் வருவதன் நீண்டகால பாதிப்புகளை இஇந்த நாடுகள் அதிகம் ஆராய்வதில்லை. குற்ற மா·பியா குழுக்களும் இந்த நாடுகளை விரும்புவதன் காரணம், குறைந்த ஆபத்துக்களே. இந்த குற்ற மா·பியா கைகளில் இருக்கும் ஏராளமான பணம், தங்களுக்கு எதிராக இருக்கும் போட்டியை வன்முறை மூலமாகவும் பயமுறுத்தல் மூலமாகவும் தீர்த்துக்கட்டவும் உபயோகப்படுகிறது. இதன் மூலமாக குற்றப் பணம் சட்டப்பூர்வமானதாக ஆக்கப்படுகிறது. இவ்வாறு குற்ற மா·பியா குழுக்களை அனுமதிப்பது, அந்த நாடுகளுக்கும், எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கும், அந்த நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கும் ஆபத்தானது.

பன்னாட்டு வியாபார நிறுவனங்கள் போலவே இந்த குற்ற மா·பியாக்களும் தங்களது வியாபார அமைப்புக்களை பல வழிகளில் பல துறைகளில் விஸ்தரித்துக்கொண்டே போகின்றன. இது மிகவும் ஆபத்தானது.

பாரம்பரிய தொழில்களை கைக்கொண்டபோதிலும், இப்படிப்பட்ட குற்றம் புரியும் மா·பியாக்கள் புதுப்புது வழிகளில் போலீஸை ஏமாற்றி விளிம்பு நிலை பொருளாதார முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் பலன்கள் ஏராளமானவை. பல வியாபார வழிகளில் பணம் பண்ணி, அது எங்கே யாருக்குப் போகிறது என்று புலன் விசாரணை வரும் முன்பேயே, பணத்தை தீய வழிகளில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். யாரும் இது குற்றம் என்று உணர்வதற்கு முன்னர், இந்த விளிம்புநிலை பொருளாதார முயற்சிகளில் பணம் ஈட்டப்பட்டு அது பல சுற்றுகளுக்குச் சென்றுவிடும்.

இறுதியாக, இப்படிப்பட்ட வேலைகள் அரசியல் அதிகாரத்தையும் பெற்றுத்தருகின்றன. குற்ற மா·பியக்கள் தங்களுக்கு அரசியல் அதிகாரம் வந்தால் வேண்டாமென்று சொன்னதில்லை. நவீன சமுதாயங்களுக்கு இப்படி குற்ற மா·பியாக்கள் பெறும் அரசியல் அதிகாரம் மிகவும் ஆபத்தானது. பொருளாதார குற்றங்களுக்காக கைது செய்யப்படும் குற்றவாளிகளை தந்திரம் மிக்கவர்கள் அல்லது தைரியமானவர்கள் என்று பொதுமக்கள் பார்க்கிறார்கள். குற்றம் செய்தவரைப்பற்றிய விமர்சனம் இல்லாமல், அவர் நீதியிலிருந்து தப்பிக்கமுடியாமல் மாட்டிக் கொண்டானே என்று தான் விமர்சனம் வருகிறது. இப்படிப்பட்ட விமர்சனங்கள், சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அழிவுச்சிந்தனையின் விளைவே. இப்படிப்பட்ட அணுகுமுறை மாற்றப்படவேண்டும். இந்த அணுகுமுறை குற்றங்களை விட தீயது.

இவ்வாறு குற்றங்கள் செய்வதன் மூலம் பெறப்பட்ட சட்டத்துக்கு புறம்பான பணம் (கருப்புப்பணம்) மேலும் குற்றங்கள் செய்யவே பயன்படுகிறது. இது மேலும் குற்றவாளி மா·பியாக்கள் உலகளாவிய முறையில் குற்றங்களைத் தொடர்வதையுமே குறிக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பும், தேசிய பாதுகாப்பும் இதனால் அழிவதையே இதன் விளைவாக பார்க்கவேண்டும். இதன் முக்கிய பயனாளர்கள் பயங்கரவாதக் குழுக்களே.

இன்னொரு பிரபலமான தொழில், போதைமருந்து பயங்கரவாதம் (narco-terrorism). இது பயங்கரவாதத்துக்கும் போதைமருந்துக்கும் இருக்கும் உறவைக் குறிக்கிறது.

பயங்கரவாதத்தை ஆதரிப்பது மிகவும் விலை அதிகமான, பணம் செலவழியும் வேலை. கொலை செய்யவும், ஆள் கடத்தல் செய்யவும், ரயிலில் குண்டு வைப்பது போன்ற வேலைகளைச் செய்ய நிறையப்பணம் தேவை. இது சட்டத்துக்குப் புறம்பான, அதிகாரப்பூர்வமற்ற வழிகளின் மூலம் வருகிறது. வேறெந்த மக்கள் உபயோகிக்கும் பொருளை விட மிக விலையுயர்ந்தது போதைப்பொருள்களே.

பயங்கரவாதம் தனது வேலைகளைச் செய்ய ஏராளமான பணத்தை வேண்டுகிறது. அதிகாரப்பூர்வமான வழிகளில் பணம் பெறுவதற்கு கடினமாக இருப்பதால், போதைமருந்து கடத்தும் வேலைகள் மூலமும் பணத்தை சேர்க்கிறது. உலக வர்த்தக மையங்கள் மீது நடந்த தாக்குதலை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை, செப்டம்பர் 12, 2001இல் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்துக்கு துணை போகும் அமைப்புக்களையும் அழிக்க ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. செம்டம்பர் 20 ஆம் தேதி, பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாடுகளை கண்டித்தும் ஒரு தீர்மானம் (No.1373 condemning states sponsors terrorism) நிறைவேற்றியது.

கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை பலமுறை அரசாங்கங்கள் ஆதரிக்கும் பயங்கரவாதத்தினை எதிர்த்து தீர்மானங்கள் போட்டிருக்கின்றது. பாகிஸ்தான் செய்யும் மறைமுகப்போரின் முக்கிய அங்கமே இப்படிப்பட்ட பயங்கரவாதம்தான். ஆனால், 1373க்கு முன்னர் இது போன்ற கடுமையான வார்த்தைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவுக்குள் பாகிஸ்தான் செய்யும் தொடர்ந்த பயங்கரவாதங்களையும், இந்தியாவை நிலைகுலைக்க செய்யும் அதன் வேலைகளையும் பட்டியலிட்டு, உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பிரபலப்படுத்தி அந்த தீர்மானத்தின் படி பாகிஸ்தானை “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக” அறிவித்திருக்க வேண்டும்.

1950இலிருந்து பாகிஸ்தான் இந்தியாவின் வட கிழக்கில் தீவிரவாதத்தையும் பிரிவினைச்சக்திகளையும் ஆதரித்து வந்திருக்கிறது. பஞ்சாபில் 1981இலிருந்து பிரிவினைச்சக்திகளை ஆதரித்து வந்திருக்கிறது. 1989இலிருந்து ஜம்மு காஷ்மீரில் பிரிவினைச்சக்திகளை ஆதரித்துவந்திருக்கிறது. 1993இலிருந்து உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தை பின்லாடன் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் மூலம் உருவாக்கி வந்திருக்கிறது. தாவூத் இப்ராஹிம் போன்ற பன்னாட்டு குற்ற மா·பியா குழுக்களை ஆதரித்து 1993இல் நடந்த பொருளாதார பயங்கரவாதம் போன்றவற்றை செயல்படுத்துதி வந்திருக்கிறது.

JKLF (Jammu & Kashmir Liberation Front)
ULFA (United Liberation Front of Assam)
KLF (Khalistan Liberation Front)
KCF (Khalistan Commando Force)
HUM (Harkat-ul-Mujahideen)
LeT (Lashkar-e-Toiba)
CIRA (Continuity Irish Republican Army)
UDFB (United Democratic Front of Bodoland)
UPDS (United Peoples Democratic Solidarity)
ACF (Adivasi Cobra Force)
PWG (People’s War Group)
LTTE (Liberation Tigers Tamil Elam)

விடுதலை, ஒற்றுமை, கொமோண்டோ, ·போர்ஸ், ஐக்கிய போன்ற வார்த்தைகளை கொண்டு அமைக்கப்படும் தீவிரவாதக்குழுக்களுக்கு, ஆதார சுருதி வன்முறையும் மனித உரிமைகள் பற்றி அலட்சியமுமே என்பதையும், அவைகளுக்கு அரசியல் நோக்கங்களே முக்கியமே அன்றி மனித உரிமைகள் அல்ல என்பதையும் காணலாம்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய அரசாங்க அமைப்புகள் இத்தகைய சவாலை எதிர்கொண்டே ஆகவேண்டும். வெறும் வார்த்தைகள் போதுமானவை அல்ல. நமது பாதுகாப்பில் மிகவும் பலவீனமான பகுதி, ஆழ்ந்து செயல்படும் உளவுத்துறைதான். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசாங்கத்தின் பொறுப்பில் வருகிறது. மாநில அரசாங்கமே என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து அதனைத் தடுக்க முனையவேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மாநில அரசாங்கங்களில் உளவுத்துறை மிகவும் பலவீனமாக இருக்கிறது. எல்லாவற்றையும் ரகசியம் என்று அறிவித்திருப்பதை நீக்கி, இந்த உளவுத்துறைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதைப்பற்றிய பொது விவாதம் நடைபெற வேண்டும். பணிக்கு உண்மையிலேயே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அதிகாரிகளை உருவாக்க அனைத்திந்திய அமைப்பு ஒன்றை, இந்தியன் இண்டெலிஜென்ஸ் சர்வீஸ் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.எ·ப்.எஸ் போன்றே இந்த சர்வீசும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன். எந்த ஒரு மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தேவைப்பட்டால் அனைத்திந்திய சர்வீஸில் பணியாற்ற முடியும் வண்ணம் இருக்க வேண்டும். உறுதியான உளவுத்துறையை அப்போதுதான் உருவாக்க முடியும்.

இன்னொரு மிகவும் தேவைப்படும் விஷயம், நமது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிஇருக்கும் துறைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு தேவை. பழங்காலத்திய 303 ரக ரைபில்களை விட்டுவிட்டு இப்போது காலத்துக்கு ஏற்ற ஏகே56 ரைபிள்களை கொடுத்திருக்கிறோம். இது பயங்கரவாதிகளைக் கொல்லும் ஆயுதம். ஆனால், அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை கொடுத்திருக்கும் நாம், நமது சட்டம் ஒழுங்கு துறைகளுக்குத் தேவையான சட்டங்களை கொடுக்கவில்லை. பழங்காலத்திய சட்டங்களைக் கொண்டு நவீன காலத்திய பயங்கரவாதங்களை அழிக்க முனைகிறோம். போடா போன்ற ஒரு உருப்படியான சட்டம் போடப்பட்டால், எந்த காரணமும் இல்லாமல் அந்த சட்டங்கள் நீக்கப்படுகின்றன. ஏன் நீக்கப்பட்டன என்று யூகிக்கத்தான் முடிகிறது. செப்டம்பர்11க்குப் பிறகு அமெரிக்காவிலும் இது போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டினுள்ளே நுழையும் சட்டங்களை கடுமையாக்கியது மட்டுமல்ல, புதிய “ஹோம்லேண்ட் செக்யூரிட்டி”ஐயும் உருவாக்கியிருக்கிறார்கள். அதே போன்ற விஷயங்கள் இந்தியாவில் நடந்தாலொழிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வது கடினம்.

அடுத்து, இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டியது அவசியம். நாடு எந்த எந்த முறைகளில் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இருக்கிறது என்பது பற்றிய அறிவு பரப்பப்பட வேண்டும். எந்த அமைப்புகள் இப்படி ஜனநாயகத்தை உபயோகப்படுத்திக்கொண்டு பயங்கரவாதத்தை வளர்க்கின்றன என்பது பற்றிய அறிவும் மக்களிடம் இருக்க வேண்டும். மேற்கில், இப்படிப்பட்ட விஷயங்கள் ஆராயப்பட்டு அவைகளை எதிர்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஊடகங்களும் இதனை ஆக்கப்பூர்வமான வழிகளில் மக்களிடம் கொண்டு சென்று பயங்கரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் வளர்த்தெடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு மக்களிடமும், அரசாங்கத்திடமும், ஊடகங்களிடமும் இந்த நாட்டில் உருவானால் மிகச் சிறப்பானதாக இருக்கும்!


முற்றும்

( நரேந்திர மோடி குஜராத் மானில முதலமைச்சர் )

Series Navigation

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

நரேந்திர மோடி



பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐயின் பங்கு

இந்தியாவில் நடத்தப்படும் பெரும்பாலான பயங்கரவாதச் செயல்கள் பாகிஸ்தானின் உளவுஸ்தாபனமான ஐ.எஸ்.ஐயின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்படுகின்றன. 1993இல் நடந்த மும்பை குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் பங்கு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதநேயமற்ற காரியத்துக்கு பொறுப்பாக இருந்த டைகர் மேமோன் போன்ற முக்கியமான குற்றவாளிகளை பாகிஸ்தான் பாதுகாத்துவருகிறது. 1996இல் நடந்த டெல்லி குண்டுவெடிப்புகளுக்கும், மும்பையில் 1997இல் நடந்ததற்கும், 1998இல் நடந்ததற்கும் ஐ.எஸ்.ஐயே காரணம். கொல்கொத்தாவில் அமெரிக்க தூதராலயத்தில் நடந்த தாக்குதலுக்கும், குஜராத்தில் அக்ஸர்தாம் கோவிலில் (2002)இல் நடந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐயே காரணம்.

பயங்கரவாத அமைப்புவலையின் இன்னொரு முக்கியமான அம்சத்தைப் பற்றி பேச விழைகிறேன். ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் ஆபத்தான, மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் வெறி கொண்ட ஒரு குழு இருக்கும். மற்ற குடிமக்களைப்போலவே, தங்கள் வேலையை செய்து கொண்டு சாதாரண சட்டம் ஒழுங்கை கடைபிடித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், இவர்கள் அமைதியாக ஒரு பயங்கரவாதம் விதைக்கப்பட வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். மிகவும் நுண்ணிய முறையில் சில தவறான கருத்துக்களை விதைப்பதன் மூலம் பயங்கரவாதம் வளர ஏற்ற விளைநிலத்தை தயார் செய்வார்கள். சமூகத்தில் இவர்களுக்கு இருக்கும் உயரிய இடத்தின் காரணமாக இவர்களது கருத்துக்கள் நம்பப்படும். இவர்களது கற்பனைகள், சமூகசேவை என்ற போர்வையின் கீழ் பரப்பப்படும் இவர்களது கற்பனைகள் சமூகத்தின் ஆதார அமைப்பையே பலவீனப்படுத்தக்கூடியது. இது சட்டத்தை மதிக்கக்கூடாது என்பதையும் சொல்லித்தருகிறது. இதன் விளைவாக வரும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மையும், மக்களின் சுயமரியாதை அற்ற நிலைமையும் பயங்கரவாதத்தின் விளைநிலத்தை உருவாக்குகிறது.

மீண்டும் ஐ.எஸ்.ஐ பற்றிப் பார்த்தால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிரான குறிக்கோள்கள் இவை யாவன.

குறைந்த தீவிரம் கொண்ட போர்முறைகளை தொடர்வது(Operation Destabilisation, Operation K2 and Operation Garland).

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசியல் ஸ்திரமற்றற்ற தன்மையை ஊக்குவிப்பது, உதவி செய்வது உருவாக்குவது. போதைமருந்து பயங்கரவாதம், ஆயுதக்கடத்தல், வெடிகுண்டுகள் கடத்தல், வகுப்புக்கலவரங்களை உருவாக்குதல்.

போலி பணத்தை உலவ விடுதல், ஹவாலா முறையை ஊக்குவித்தல்

மத அடிப்படைவாதத்தை ஊக்குவித்து, இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிடுதல்

மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது. காஷ்மீர மற்றும் சீக்கிய பயங்கரவாதிகளுக்கு மா·பியா குழுக்கள் மூலமும் கடத்தல் குழுக்கள் மூலமும் உதவுதல்

மேற்கண்ட விஷயங்களை மனதில் கொண்டு, 1997க்கு முந்திய மத்திய அரசாங்கங்கள் இந்த பிரச்னைகளை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம் என்றும், இதன் மூலம் பாகிஸ்தான் தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முனைகிறது என்றும் கூறின. அதே வேளையில், காஷ்மீர் பிரச்னையுடன் மட்டுமே பாகிஸ்தானை தொடர்பு செய்யாமலும், எல்லை மீறிய பயங்கரவாதம் என்ற வார்த்தை மூலம் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் கடல்வழி வான்வழி நடக்கும் ஊடுருவல்களை விலக்கியும் பேசியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வைத்திருக்கும் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களையும் மற்ற அமைப்புக்களையும் குறிவைத்து பேசின. அவ்வாறு பேசியதனால், அப்படிப்பட்ட பயிற்சி முகாம்கள் மீது தாக்குதலை தொடங்க நியாயத்தை உருவாக்க்கிக்கொண்டன

இது இந்தியாவுக்கு பாதகமான இரு விளைவுகளை உருவாக்கியது. முதலாவது, இந்தியாவில் காஷ்மீரைத் தவிர மற்ற இடங்களில் நடக்கும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தானின் பொறுப்பை இது மழுங்கடித்தது. பயங்கரவாதம் முழுக்க முழுக்க காஷ்மீர் மையமானதாக ஆக்கப்பட்டது. உலக நாடுகள் ஜம்மு காஷ்மீரை ஒரு தீர்வு பெறாத பகுதியாக பார்ப்பதாலும், பாகிஸ்தான் 1947முதல் காஷ்மீர் தனது என்று கூறிவருவதாலும், அங்கு நடக்கும் பயங்கரவாதம் அதற்கு உரிய தீவிரத்துடன் பார்க்கப்படவில்லை.

டிசம்பர் 2001இல் புதுதில்லியில் பாராளுமன்றத்தில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் உலகளாவிய நாடுகள் மத்தியில் இந்தியா மீதான ஆதரவை கொண்டுவந்தது. அதே நேரத்தில் இந்தியா தன் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் எடுக்க உரிமை கொண்டது என்பதையும் மற்ற நாடுகள் அங்கீகரிக்கும் நிலை வந்தது. அதே நேரத்தில், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியதோடு, பாகிஸ்தானையும் அதற்குள் இருக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக முயன்று அவற்றை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இது பாகிஸ்தான் அதிபரான முஷார·பை ஒரு சில வேலைகள் செய்யவைத்தாலும், எல்லோரும் எதிர்பார்த்தது போல, அது வெறும் நாடகமாகத்தான் இருந்தது. பாகிஸ்தானுள் இருக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகளுக்கு பாகிஸ்தானின் தேவை அதிகரிக்க அதிகரிக்க இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானை வலியுறுத்துவது குறைந்தது. நமது வலியுறுத்தும் சக்தி முஷார·பின் முன்னர் பயனற்றதாக ஆகிவிட்டது.

பாகிஸ்தானை உருவாக்க எந்த விதமான மனநிலை காரணமாக இருந்ததோ அந்த மனநிலையே இன்னமும் பாகிஸ்தானுள் நிலவி வருகிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் இந்திய மையம் கொண்டது. அது “இந்தியாவை வெறுப்போம்” என்ற பிரச்சாரத்திலேயே உயிர்வாழ்கிறது. இந்தியாவுடனான பிரச்னையை காரணம் காட்டி, உலகெங்கும் பாகிஸ்தான் நிதி உதவி பெற்றுக்கொள்கிறது. இதுவே இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் செயல்களின் காரணம். நாம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. ஐ.எஸ்.ஐயின் பயங்கரவாதத்தைக் குறிவைக்கும்போது இந்தியாவில் பலர் தயங்குகிறார்கள். பலமுறை அதன் ஆதரவாகவும் பேசுகிறார்கள். குற்றவாளி என்பவன் ஒரு குற்றவாளிதான். ஒரு பயங்கரவாதி பயங்கரவாதிதான். பயங்கரவாதிக்கும் குற்றவாளிக்கும் மதமில்லை. மதச்சார்பின்மை கண்ணாடிகளை போட்டுக்கொண்டோ, மதவாத அணுகுமுறையிலோ அணுகக்கூடாது. ஐ.எஸ்.ஐ (பாகிஸ்தான் உளவு ஸ்தாபனம்) எல்லா இடங்களிலும் தங்களுக்கு ஆட்களை வைத்திருக்கிறது. பாவ்நகரில் ஒரு ஐ.எஸ்.ஐ குழுவை உடைத்தோம். ஒரு பிராம்மண பையனை கைது செய்தோம். அவன் இப்போது சிறையில் காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறான். ஐ.எஸ்.ஐ வலைகளை மதத்தோடு இணைத்து பேசக்கூடாது. இந்த ஐ.எஸ்.ஐ குழுக்கள் பல மாவட்டங்களிலும், சமூகப்பிரச்னை மிகுந்த இடங்களிலும் தோன்றுகின்றன. அங்கிருக்கும் சமூக பிரச்னைகளை எவ்வாறு உபயோகப்படுத்திக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் கலவரங்களை உருவாக்குவது என்று முயற்சிக்கின்றன. இப்படிப்பட்ட வரைபடம் அவர்களிடம் தயாராகவே இருக்கிறது. ஐ.எஸ்.ஐ குழுக்கள் நாடெங்கும் வேலை செய்துகொண்டிருக்கின்றன. குஜராத்தில் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை அரசு தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு எதிராக சில வெற்றியை உருவாக்கியிருக்கிறோம். குஜராத் போலீஸை இது போன்ற பல சாதனைகளுக்காக பாராட்டுகிறேன்.

இன்னொரு வேலையும் நடந்திருக்கிறது. பாகிஸ்தானில் இன்னொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு நம் நாட்டில் எங்கெல்லாம் பிரச்னைகளை உருவாக்க முடியுமோ அங்கெல்லாம் வேலை செய்ய அமர்த்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இவர்கள் கோவாவுக்குச் சென்று அங்கு ஒரு சர்ச்சின் மீது குண்டுகளை வீசினார்கள். அங்கு குண்டு வீசப்பட்டபின்னால், அதற்குள் நுழைந்து குண்டு வீசியவர்கள் வி.ஹெச்.பி., பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸை சேர்ந்தவர்கள் என்பதாக அடையாளம் காட்டும் காகிதங்களை விட்டுச் சென்றார்கள். இதனை உடனே நம் நாட்டின் பத்திரிக்கை துறையில் இருக்கும் “மதச்சார்பற்ற” போராளிகள் எடுத்துக்கொண்டு சர்ச்சை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸைத் திட்ட உபயோகப்படுத்திக்கொண்டார்கள்.

இதே விஷயம்தான் குஜராத்திலும் இஷாரத் வழக்கில் நடந்தது. பத்திரிக்கைகளில் “மோடி இஷாரத்தை கொன்றார்” என்று எழுதப்பட்டன. மூன்றாம் நாள், பாகிஸ்தானிலிருந்து இஷாரத் அவர்களது இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும், அவள் தன்னாட்டுக்காகவும் அல்லாவுக்காகவும் உயிரைக்கொடுத்தாள் என்றும் அறிவிக்கப்பட்டதும், பத்திரிக்கையாளர்கள் தங்கள் சிவந்து போன முகத்தை எங்கே வைத்துக்கொள்வது என்று தெரியாமல் ஓடினார்கள். சிலவேளைகள் இதுதான் நடக்கிறது. பத்திரிக்கை துறையுடன் இப்படிப்பட்ட உறவுதான் நீடிக்கிறது. மூன்று நான்கு நாட்களுக்கு ஏதேனும் எழுத கிடைத்தால் போதும் அவர்களுக்கு. தேசத்தின் சில தலைவர்கள் இந்த வழக்கு சம்பந்தமாக நடந்துகொண்டதை பார்க்கவேண்டும். இஷாரத் மீது மூவர்ணக்கொடியை போர்த்த வேண்டியதுதான் பாக்கி. அவர்கள் அவளது இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டார்கள். ஒரு அரசியல் கட்சித் தலைவர் அந்த குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அளித்தார். இப்படிப்பட்ட மனிதர்களின் கலங்கிய மூளைகளைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது.

பாகிஸ்தானின் இந்த அமைப்புக்கு வருவோம். இதே வேலையை இன்னும் இரண்டு மூன்று சர்ச்சுகளில் செய்தார்கள். இந்த வேலை பயனளிக்கிறது என்று பெங்களூரில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க முனைந்தார்கள். ஆனால் விதி அவர்களை அங்கே மாட்டிவிட்டுவிட்டது. கர்னாடகா காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமாக இருந்ததும் ஒரு அதிர்ஷ்டம். அவர்களது கார், கம்யூட்டர், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உபகரணங்கள் ஆகியவை, அவர்களிடமிருந்த பிரச்சார காகிதங்கள் இந்த உபகரணங்கள் மூலமாகவே பதிப்பிக்கப்பட்டன என்று காட்டின. இது பாகிஸ்தானில் இருந்த ஒரு இஸ்லாமிய அமைப்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த அமைப்பு, கிரிஸ்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே விரோதத்தை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டிருந்தது தெரியவந்தது. இப்படிப்பட்ட புதிய அமைப்புகளையும், அவர்களது புதிய வழிமுறைகளையும் பற்றி நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இது ஆபத்தான முறை. இது சமூகப் பிரிவுகளை உபயோகப்படுத்திக்கொண்டு அதன் மூலம் பயங்கரவாதம் உருவாவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்குவது.

வட கிழக்கு பகுதி

பயங்கரவாதம் வெறுமே மேற்கு எல்லையில் மட்டும் நடப்பதல்ல. முழு வடகிழக்கும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இன, மொழி, மதவாதக் குழுக்கள் தங்களது எல்லைகளைப் பாதுகாக்கவும், தங்கள் அடையாளத்தை பாதுகாப்பதற்கும் பலவிதமான வன்முறை வழிகளைக் கையில் எடுத்துள்ளார்கள். இவர்களது முக்கிய குறிகள் அங்கிருக்கும் ராணுவம், போலீசுக்கு செய்தி அளிப்பவர்கள், அங்கிருக்கும் முக்கிய நிறுவனங்கள், மற்ற இனத்தைச் சார்ந்த மக்கள் ஆகியோர். இவர்கள் பண வசூலிப்பு, கொலை, ஆள் கடத்தல், கொள்ளை ஆகியவற்றை செய்கிறார்கள். பங்களாதேசத்து முஸ்லீம்கள் இந்தியாவுக்கு தொடர்ந்து நுழைவதையும் பயங்கரவாதத்தின் இன்னொரு முகமாகவே காணவேண்டும். சட்டப்பூர்வமற்ற அன்னியர்கள், வடகிழக்கு மாநிலங்களில் நுழைந்து அங்கு நிரந்தரமாகக் குடியேறுவதை, தங்களது வாழ்க்கையை பிரகாசமாக்கிக்கொள்ள ஒரு வளமையான நாட்டினுள் நுழைகிறதாகவே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், இதே மக்களே பல்வேறு பயங்கரவாதக்குழுக்களின் உறுப்பினர்களாகவும் ஆகிறார்கள். உலகத்தில் எந்த நாடும் இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்புப் பிரச்னையை பொறுப்பற்று அணுகாது. இருப்பினும் பங்களாதேஷிலிருந்து பல்லாயிரக்கணக்கான அந்நியர்கள் இந்தியாவுக்குள் புகுந்த பின்னாலும், அஸ்ஸாம் மற்றும் இதர மாநில மக்கள் உரத்த குரலில் எதிர்த்த பின்னாலும், இதனைத் தடுக்க ஒரு செயலும் செய்யப்படவில்லை. பூடான், பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாட்டுப்பகுதிகள் இது போல வன்முறை குழுக்களாலும் பயங்கரவாதிகளாலும் மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பூட்டான் அரசாங்கம் மட்டுமே தன் நிலத்திலிருந்து எல்லா பயங்கரவாதிகளையும் துரத்தவும் எல்லா பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழிக்கவும் உறுதியான செயல்பாடுகளை எடுத்தது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது ஒரு உதாரணம் மட்டுமே, ஐக்கிய நாடுகள் சபையில் தீவிரவாத எதிர்ப்பு தீர்மானங்களின் படி ஒரு சுதந்திர அரசாங்கம் தன்னிலத்தினுள் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்த சிறந்த உதாரணம். இந்த சிறிய நாடு, தனது அருகே இருக்கும் பெரிய நாடுகளும் வெட்கி தலை குனியும்படி அருமையான உதாரண செயலைச் செய்து காட்டியிருக்கிறது.

உதாரணமாக இன்னொரு பயங்கரவாத அமைப்பு ஏப்ரல் 7, 1979இல் உருவாக்கபட்ட உல்பா எனப்படும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA -United Liberation Front of Assam). இது பரேஷ் பருவா எனப்படுபவரின் தலைமையின் கீழ் உருவானது. அன்றைய அஸ்ஸாம் மக்களின் உள்ளக்கிடக்கையாக இருந்த பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய அன்னியர்களுக்கு எதிர்ப்புணர்வு என்ற பதாகையின் கீழ் இவர்கள் அந்நியர்கள் எதிர்ப்பு என்பதோடு இந்தியாவிலிருந்து பிரிவினை என்ற கோரிக்கையையும் கைக்கொண்டார்கள். அஸ்ஸாம் போராட்டத்துக்குப் பின்னர், பல முறை போராட்டத் தலைவர்களும் இந்திய அரசாங்கமும் பேசிய பின்னால், அஸ்ஸாம் ஒப்பந்தம் 1985ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்பின்னால், நடந்த தேர்தலில், அஸ்ஸாம் கன பரிஷத் ஆட்சிக்கு வந்தது. இந்த நிலைமையில் உல்பா தனது அடிப்படை கோரிக்கையை வலியுறுத்தி வன்முறை மூலம், “அஸ்ஸாமை இந்திய காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை அடையச்செய்வது” என்பதையும் “இறையாண்மை கொண்ட சோசலிஸ்ட் அஸ்ஸாம்” என்பதனை குறிக்கோளாகவும் வைத்துக்கொண்டது. அஸ்ஸாம் ஒப்பந்தமும், பிறகு நடந்த அரசியல் ஒப்பந்தங்களும் , அரசியல் நிலவரமும் இதற்கு ஒவ்வாததாக இருந்தமையால், தனது வன்முறை வழிகளை தொடர்ந்து உல்பா செய்துவந்தது. 1986இல் உல்பா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு கொண்டது. நேஷனல் சோசலிஸ்ட் கவுன்ஸில் ஆ·ப் நாகாலாந்து என்னும் NSCN அமைப்புடனும் உறவு கொண்டது. இவர்களோடு இணைந்து பங்களாதேஷில் பல பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றது. அத்தோடு பல வருமானம் வரும் தொழில்களையும் மேற்கொண்டது. குளிர்பானம் தயாரிப்பு, ஹோட்டல்கள், தனியார் மருத்துவ விடுதிகள், கார் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை. மேலும் மயன்மாரிலிருந்து தாய்லாந்து வரைக்கும் போதைப்பொருள் கடத்தலிலும் உல்பா ஈடுபட்டு வருகிறது.

இடது சாரி தீவிரவாதம்

ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கார்க்,பிகார், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பல பகுதிகள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2001இலிருந்து செயல் ரீதியாகவும் எண்ணிக்கை ரீதியாகவும் இடதுசாரி தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது. 2003இல் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் 575 வன்முறை நிகழ்வுகள் நடந்தன. இவர்களது முக்கிய குறி போலீஸ், ஆளும் அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் ரயில்வே , தபால் தந்தித்துறை ஆகிய மென் இலக்குகள். கையால் செய்யப்படும் குண்டுகள், மற்றும் நிலக்கண்ணிவெடிகள் ஆகியவைகளில் இவர்கள் திறமைசாலியாக இருக்கிறார்கள். 2003இல் கையால் செய்யப்பட்ட குண்டுகள் மூலம் ஆந்திர பிரதேச முதலமைச்சரைத் தாக்க முனைந்தார்கள். சிபிஐ.எம்.எல் (பி.டபிள்யூ) குழுவும் எம்.சி.சி குழுவும் இணைந்து செயல்பட்டிருந்தன. கிடைத்த தடயங்கள் மூலம், இவர்களுக்கு உல்பா,சிபி.என் (மாவோயிஸ்டு) , சிமி ஆகிய குழுக்களுடன் தொடர்பு உண்டு என்று தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் கோராபுத் மாவட்டத்தில் இவர்கள் போலீஸ் நிலையங்களை தாக்கியதன் மூலம் எங்கும் சென்று தாக்கும் சக்தி கொண்டவர்களாய் அடையாளம் காட்டிக் கொண்டார்கள்.

இந்த இடதுசாரி தீவிரவாதம் வெளிநாடுகளுடன் கொண்டிருக்கும் தொடர்புகள் கவலைதரும் விஷயமாகும். சீனாவிலிருந்து நேபாளம் வழியே பிகார், ஜார்க்கண்ட், சட்டிஸ்கார், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிராவில் சில பகுதிகள், ஆந்திர பிரதேஷ் வரைக்கும் இவர்கள் பரவியுள்ளார்கள். இந்த பகுதிகளில் நக்ஸலைட்டுகளின் இரக்கமற்றதன்மை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் பயனளிப்பதில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பதிலாக, இது நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பலவீனப்படுத்துவதும், நீதித்துறையை பலவீனப்படுத்துவதும்தான் பலன் என்று தெரிகிறது. இந்தப் பின்னணியில், ஆந்திரபிரதேச அரசாங்கம் இந்த தீவிரவாதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது எல்லோராலும் கண்டனம் செய்யப்பட வேண்டிய ஒன்று.

1960இல் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் “கிரீன் காரிடார்” (பச்சை பிரதேசம் ) என்ற சதியைப்பற்றிஎழுதப்பட்டிருந்தது. இது லக்னோவிலிருந்து வடக்கே இருக்கும் மக்கள் எண்ணிக்கையை மாற்றுவதன் மூலம் இந்தியாவை துண்டாடச் செய்ய ஒரு முயற்சியை விவரித்திருந்தது. அந்தக் காலத்தில் மதச்சார்பின்மைகென்ற பெயரில் இது போன்ற விஷயங்கள் குறித்து மௌனம் காப்பது வழக்கமாய் இருந்தது. ஆனால், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி அந்த விஷயத்தை மேலும் துல்லியமாக தைரியமாக எழுதியிருந்தது. நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடங்களில் உள்ள மக்கள்தொகையை ஒரு திசையில் மாற்றுவதன் மூலம் நாட்டை துண்டாட முயலும் ஒரு திட்டத்தை பற்றி எழுதியது. இப்போது “ரெட் காரிடார்” என்ற பிரச்னை இருக்கிறது. நாட்டின் வடக்குப்பகுதியை துண்டாட “கிரீன் காரிடார்” திட்டம் உருவானது போல, நாட்டின் கிழக்குப் பகுதியை துண்டாட “ரெட் காரிடார்” திட்டம் உருவாகியிருக்கிறது. நேபாள மாவோயிஸ்டுகள், பிகார், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசத்தில் இன்று நக்ஸலைட்டுகள். வரைபடத்தில் இவற்றை ஒரு பார்வை பார்த்தால், இதன் தீவிரம் புரிந்துவிடும். (நேபாளம்) பசுபதியிலிருந்து திருப்பதி வரைக்கும், நக்ஸல் வேலைகளால் ரெட் காரிடார் உருவாகிறது. சாலைகள் போடப்பட்டால், இவர்கள் சாலைகளைப் போட விடுவதில்லை. சாலைகள் போடவில்லை என்றால், சாலைகள் போடவில்லை என்று போராட்டம் நடத்துகிறார்கள். இவ்வாறு உணர்ச்சிப்பூர்வமான மக்களைத் தூண்டிவிட்டு தீவிரவாதத்தை வளர்க்கிறார்கள்.


Series Navigation

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

நரேந்திர மோடி


பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

பயங்கரவாத காலங்களில் அரசும், சமூகமும்

பயங்கரவாதம் என்பது அரசாங்கங்களையும் சமூகங்களையும் , வன்முறை மூலம் பயமுறுத்தி அரசியல் மதம் மற்றும் கொள்கை ரீதியான குறிக்கோள்களை அடைவதற்கு உபயோகப்படும் திட்டமிட்ட வழிமுறை. பன்னாட்டு பயங்கரவாதம் பல நாட்டுமக்களை குறி வைக்கிறது.

பாகிஸ்தான் உருவாவதற்கு எப்படிப்பட்ட மனநிலை இருந்ததோ அது இன்றும் இருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் இந்தியாவை மையம் கொண்டது. அது உயிர்வாழ்வதே “இந்தியாவை வெறுக்கிறோம்” என்ற உணர்வின் அடிப்படையில்தான். இந்தியாவுடனான பதட்டத்தை பயன்படுத்திக்கொண்டு உலகம் முழுவதிலிருந்தும் பண உதவியைப் பெறுகிறது. ஏன் பாகிஸ்தான் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்கிறது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

உலக அமைப்புகள் இன்று யார் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்றும், யார் பயங்கரவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றும் பிரிந்து கிடக்கிறது. உலகம் இரண்டு முகாம்களாக அமைகிறது. முன்பு இரண்டு மாபெரும் வல்லரசுகள் இருந்தன. வரப்போகும் காலத்தில், யார் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்றும் யார் மனிதநேயத்தை ஆதரிக்கிறார்கள் என்ற அடிப்படையில் பிரிவு அமையும்..

இந்துஸ்தானம் அப்படிப்பட்ட, பயங்கரவாத எதிர்ப்புக் குழு அமைய தனது நல்லுள்ளத்தையும் வலிமையையும் கொடுக்க வேண்டும் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் இணைந்து இதற்காக போராட வேண்டும்.

இதே விஷயம்தான் குஜராத்திலும் இஷாரத் வழக்கில் நடந்தது. பத்திரிக்கைகளில் “மோடி இஷாரத்தை கொன்றார்” என்று எழுதப்பட்டன. மூன்றாம் நாள், பாகிஸ்தானிலிருந்து இஷாரத் அவர்களது இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும், அவள் தன்னாட்டுக்காக உயிரைக்கொடுத்தாள் என்றும் அறிவிக்கப்பட்டதும், பத்திரிக்கையாளர்கள் தங்கள் சிவந்து போன முகத்தை எங்கே வைத்துக்கொள்வது என்று ஓடினார்கள்.

செம்டம்பர் 11க்குப் பிறகு, அமெரிக்காவில் பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தது. நாட்டினுள் பிற நாட்டினர் நுழையத் தேவையான சட்டங்களைக் கடுமையாக்கியது மட்டுமல்ல, உள்நாட்டுப் பாதுகாப்பு (“ஹோம்லேண்ட் செக்யூரிட்டி”) என்ற புதிய அமைப்பை உருவாக்கி பயங்கரவாதங்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உறுதி பூண்டார்கள். அதே போல ஒன்று இந்தியாவில் உருவாக்கப்பட்டாலொழிய பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான செயலை இந்தியா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது.

1950இலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டங்களுக்கு பாகிஸ்தான் உதவி வந்திருக்கிறது. 1981இலிருந்து பஞ்சாபின் பயங்கரவாதிகளுக்கு உதவி வந்திருக்கிறது. 1989இலிருந்து ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு உதவி வருகிறது. உலகளாவிய பயங்கரவாதத்துக்கு, பின்லாடன் ஆதரவு குழுக்களுக்கு 1993இலிருந்து உதவி வருகிறது. தாவூத் இப்ராஹிம் போன்ற பன்னாட்டு மா·பியா கும்பல்களுக்கு பொருளாதார பயங்கரவாதத்தைச் செய்ய 1993இலிருந்து உதவி வருகிறது.

பயங்கரவாதம் என்பது மேற்கு எல்லையில் மட்டும் நடப்பதல்ல. முழு வடகிழக்கும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இன, மொழி, மதவாத குழுக்கள் தங்களது எல்லைகளை பாதுகாக்கவும், தங்கள் அடையாளத்தை பாதுகாப்பதற்கும் பலவிதமான வன்முறை வழிகளைக் கையில் எடுத்துள்ளார்கள்.

குற்றவாளி என்பவன் ஒரு குற்றவாளிதான். ஒரு பயங்கரவாதி பயங்கரவாதிதான். பயங்கரவாதிக்கும் குற்றவாளிக்கும் மதமில்லை. மதச்சார்பின்மை கண்ணாடிகளை போட்டுக்கொண்டோ, மதவாத அணுகுமுறையிலோ அணுகக்கூடாது. ஐ.எஸ்.ஐ (பாகிஸ்தான் உளவு ஸ்தாபனம்) எல்லா இடங்களிலும் தங்களுக்கு ஆட்களை வைத்திருக்கிறது. பாவ்நகரில் ஒரு ஐ.எஸ்.ஐ குழுவை உடைத்தோம். ஒரு பிராம்மண பையனை கைது செய்தோம். அவன் இப்போது சிறையில் காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறான். ஐ.எஸ்.ஐ வலைகளை மதத்தோடு இணைத்து பேசக்கூடாது. இந்த ஐ.எஸ்.ஐ குழுக்கள் பல மாவட்டங்களிலும், சமூகப்பிரச்னை மிகுந்த இடங்களிலும் தோன்றுகின்றன. அங்கிருக்கும் சமூக பிரச்னைகளை எவ்வாறு உபயோகப்படுத்திக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் கலவரங்களை உருவாக்குவது என்று முயற்சிக்கின்றன. இப்படிப்பட்ட வரைபடம் அவர்களிடம் தயாராகவே இருக்கிறது. ஐ.எஸ்.ஐ குழுக்கள் நாடெங்கும் வேலை செய்துகொண்டிருக்கின்றன. குஜராத்தில் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை அரசு தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு எதிராக சில வெற்றியை உருவாக்கியிருக்கிறோம்.

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐயின் ஆதரவுடனேயே பலவிதமான பயங்கரவாத செயல்கள் இந்தியாவில் நடத்தப்படுகின்றன. துப்பு துலக்கியபோது, 1993 பம்பாய் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐதான் காரணம் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்னமும் முக்கியமான குற்றவாளிகள் . டைகர் மேமோன் உட்பட, பாதுகாப்புடன் இருக்கிறார்கள். 1996இல் நடந்த டெல்லி குண்டுவெடிப்புகள், மும்பையில் 1997இல் நடந்த குண்டுவெடிப்புகள், 1998இல் நடந்த குண்டுவெடிப்புகள் எல்லாமே ஐ.எஸ்.ஐயின் வேலைகள்தாம். கொல்கொத்தாவில் அமெரிக்க தூதராலயத்தில் நடந்த குண்டுவெடிப்புகளும் அக்ஷர்தாம் ஆலயத்தில் நடந்த நிகழ்வும்(2002) ஐ.எஸ்.ஐயின் வேலைத்திட்டத்தை காட்டிக்கொடுத்தது.

வெளிநாடுகளின் உறவோடு இடதுசாரி தீவிரவாதம் நிலைபெற்று வருவதும் முக்கிய ஆபத்தான நிகழ்வே. சீனாவிலிருந்து நேபாள் வழியாக பீகார், ஜார்க்கெண்ட், சட்டிஸ்கார்க், ஒரிஸ்ஸா மஹாராஷ்ட்ரா ஆந்திர பிரதேஷ் ஆகிய பிரதேசங்களை தீவிரவாதத்தின் மூலம் இணைக்க முயல்கிறார்கள்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் மாபெரும் சாதனைகளையும், ஆராய்ச்சிகளையும், சந்திரனில் கால்பதித்ததையும், விண்வெளி கலங்களையும் கொண்டு இருபதாம் நூற்றாண்டை அடையாளப்படுத்துகிறோம். இதற்கு முன்னால், அது போன்ற சாதனைகள் எந்த நூற்றாண்டிலும் நடத்தப்படவில்லை. அந்த நூற்றாண்டில் மாபெரும் சாம்ராஜ்யங்கள் தோன்றியதும் வீழ்ந்ததும் நிகழ்ந்தது. காலனியாதிக்கத்தின் முடிவும், கொள்கைரீதியான போராட்டங்களும், லீக் ஆ·ப் நேஷன்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் தோன்றின.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தோன்றிய ஆயுதப்போட்டியின் விளைவாக, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் மேலும் மேலும் அழிவு ஆயுதங்களின் உற்பத்தியிலும், அந்த ஆயுதங்களை முறியடிக்கிற எதிர்ப்பு ஆயுதங்களிலும் வளர்ந்து செழித்தது. அவ்வாறு மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய ஆயுதங்களும் கருவிகளும் மூன்றாம் உலக நாடுகளுக்கு வர ஆரம்பித்தன. முக்கியமாக ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு வந்து சேர்ந்தன. மேற்குலகின் ஆயுதத் தொழிற்சாலைகள் மூன்றாம் உலக நாடுகளை ஆயுதங்களால் மூழ்கடித்தன. அளவுக்கதிகமான ஆயுதங்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளை பாதுகாப்பற்றவையாக ஆக்கின. இது ஆயுதங்களுக்கும் இன்னும் அதிகமான தேவையை உருவாக்கியது. இது இன்னமும் அதிகமாக மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்ய தூண்டின. இவ்வாறு, பயத்தை உருவாக்குவதும், ஆயுதங்களை வாங்குவதும், ஆயுதங்களை உபயோகிப்பதும், அதன் மூலம் மேலும் அதிகமான பயத்தை உருவாக்குவதும் ஒரு சாதாரண வியாபாரமாகி விட்டது.

Now how do we define terrorism?

இந்தச்சூழலில் எவ்வாறு பயங்கரவாதத்தை வரையறுக்கிறோம்?

பயங்கரவாதம் என்பது அரசாங்கங்களையும் சமூகங்களையும் திட்டமிட்ட வன்முறை மூலம் பயமுறுத்தி அரசியல் மத மற்றும் கொள்கை ரீதியான குறிக்கோள்களை அடைவதற்கு உபயோகப்படும் வழிமுறை. பன்னாட்டு பயங்கரவாதம் பல நாட்டுமக்களை குறி வைத்தது.

பயங்கரவாதத்தை நியாயப்படுத்த பலவேறு காரணங்கள், கொள்கை உட்பட, முன்னுக்கு வைக்கப்படுகின்றன. ஆனால், பயங்கரவாதத்தின் பின்னால், அரசியல் அதிகாரத்துக்கான வெறிதான் இருக்கிறது என்பது உண்மை. அவர்களது உண்மையான காரணத்தை கொள்கை என்ற முகமூடி போட்டு மறைத்துவிடுவது எளிதானது.

பய உணர்வைத்தூண்டி அதன் வழியாக தம் ஒரு சக்தியைப் பெருக்கிக்கொள்ள பயன்படுத்திக்கொள்வதே பயங்கரவாதத்தின் ஆதார சுதி. சன் சூ என்ற சீன ராஜதந்திரவாதி கூறினார், “உங்களது எல்லா போர்களிலும் சண்டையிட்டு வெற்றிபெறுவது சிறப்பல்ல. எதிரியின் எதிர்ப்பை சண்டையிடாமலேயே உடைப்பதுதான் சிறப்பு”. இதுதான் பயங்கரவாதத்தின் ஆதார சுதி. எதிரியின் உள்ள உறுதியை பய உணர்வு மூலம் உடைப்பதுதான் பயங்கரவாதத்தின் மூலம் அடைய விரும்புவது. கடந்த காலங்களில், பயங்கரவாதிகள் விளம்பரத்துக்கும் பிரச்சாரத்துக்கும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டது. உலகம் முழுவதும் நடக்கும் அதிகரித்துவரும் தாக்குதல்களைப் பார்க்கும்போது, (அவை நான் தான் செய்தேன் என்று கோரப்படுவதுமில்லை, அவற்றை செய்தவர்கள் அந்த செய்கைகளை அறிவிப்பதுமில்லை), பயங்கரவாதம் செய்பவர்களின் குறிக்கோள் மாறிவருகிறது என்பதையே முடிவுசெய்யவேண்டும். இப்போது மக்கள் இறக்கவேண்டும், பயம் பரவ வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் விருப்பம். குறைவான இழப்பின் மூலம் மிகவும் அதிகமான லாபத்தை அடைவதும், முன்னெப்போதையும் விட அதிகமான வலிமையுடன் தாக்குவதுமே அவர்கள் விரும்புவது.

சில வேளைகளில், வெறும் பொருளாதாரத்தையும் ஒவ்வொருநாள் உயிர்வாழ்வதையும் தாண்டி பார்க்கத்தெரியாத சில மேற்குலகு ஆராய்ச்சியாளர்கள் பயங்கரவாதத்துக்கு வறுமையை காரணமாகச் சொல்கிறார்கள். சில நாடுகளில் அது சரிப்படலாம். ஆனால், பஞ்சாபில் பயங்கரவாதம் தோன்றியபோது, அது நாட்டிலேயே மிகவும் வளமை மிகுந்த மாநிலமாக இருந்தது. பஞ்சாபில் வறுமையே இல்லை. அங்கு பசியும் இல்லை. இருப்பினும் 12 நீண்ட வருடங்களில் 14000 மக்களின் உயிரை பயங்கரவாதம் பலி வாங்கியது. எடுத்தது. என்ன காரணம்? சிலர் படிப்பறிவின்மை பயங்கரவாதத்திற்கு காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். வடகிழக்கில் மிகவும் படிப்பறிவு மிக்க மக்கள் இருக்கிறார்கள். ஏன் மேற்குலகில் பயங்கரவாதம் தோன்றியிருக்கிறது? அது மிகவும் செல்வச்செழிப்பில் இருக்கிறது. வெறும் சாப்பாடுதான் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் என்று கூறுபவர்கள் குறைப்பார்வை கொண்டவர்கள், உண்மையை பார்க்காமல் கண்களை திருப்பிக்கொள்பவர்கள்.

பயங்கரவாதத்துக்கு தேச, பௌதீக, சமூக, உணர்வு எல்லைகள் ஏதும் இல்லை. அது நோய்வடைந்த மனத்தின் குரூர வெளிப்பாடு. அதன் ஒரே தாகம் தன்னிச்சையான அரசியல் அதிகாரம். பின் லாடனுக்கு என்ன கொள்கை இருக்கிறது? எந்த ஒரு நாட்டுக்கும் அவன் எதிரி அல்ல. இருப்பினும், உலக பயங்கரவாதத்தின் முக்கியமான அடையாளமாக இருக்கிறான். பயங்கரவாதக் கொள்கை என்ன செய்கின்றதென்றால், அது மக்களின் உணர்வுப்பூர்வமான ஒரு முகத்தை சுயநலத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்கிறது. ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளத்தில் ஒரு பண்பாடு இருக்கிறது. அந்த உள்ளத்தில் ஒரு நீதிக்கான குரலும் இருக்கிறது. ஒரு குழு மக்களிடம் இருக்கும் நேர்மை உணர்வை உபயோகப்படுத்திக்கொள்ளும் ஒரு குரலை ஒரு பயங்கரவாதி எழுப்புகிறான். நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரு பொய்யான உணர்வை மனத்தில் ஏற்றுகிறான். அந்த சமூகத்தில் உள்ள உணர்வுப்பூர்வமான காயங்களை தனக்காக உபயோகப்படுத்திக்கொள்கிறான். முன்பே விளக்கியது போல, கொள்கை என்னும் முகமூடி பூண்டு உண்மையான குறிக்கோளை மறைத்துக்கொள்கிறான். வழமையாக, கொள்கையை உருவாக்குவது எளிதானது அல்ல என்பதால், மதம் வெகு எளிதில் உபயோகப்படுத்திக்கொள்ள சுலபமாகக் கிடைக்கிறது. ஏனெனில் அது குழு மனப்பான்மையைக் கொண்டுவந்து சமூக அடையாளத்தை பயன்படுத்திக்கொள்ள எளிய உத்தி.

முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் செய்த முயற்சிகளுக்காக அவருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். முன்பு பன்னாட்டு விவாதக்களங்களில் காஷ்மீர் பற்றிய பேச்சு இருக்கும். அவரது வெளிநாட்டு கொள்கை காரணமாக இன்று பயங்கரவாதம் மைய இடத்தில் இருக்கிறது. இன்று பன்னாட்டு விவாதக்களங்களில் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று இரண்டாகப் பிளவு பட்டு இருக்கிறது.இந்துஸ்தானம் அப்படிப்பட்ட எதிர்ப்புக் குழு அமைய தனது நல்லுள்ளத்தையும் வலிமையையும் கொடுக்க வேண்டும் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் இணைந்து இதற்காகப் போராட வேண்டும். பயங்கரவாதம் தானாகப் போய்விடாது. நாம் அதனை எதிர்த்து போராட வேண்டும்.

சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்திருக்கும் பயங்கரவாத வன்முறைக்கும், பயங்கரவாதம் தொடர்பான நிகழ்வுகளுக்கும் ஆப்கான் போர் முடிந்ததால் வந்திருக்கும் “எச்சமே” காரணம். இந்த எச்ச சொச்சத்தில் காலாட்படைகளும் ஆயுதங்களும் கருவிகளும் அடக்கம். இந்தப் போர்வீரர்களில் பெரும்பாலோனோர், தங்களை முஜாஹிதீன்கள் என்றும் சுதந்திரப் போராளிகள் என்றும் அழைத்துக்கொள்பவர்கள், கூலிப்படைகளாக மாறியிருக்கிறார்கள். கலாஷ்னிகோவ் துப்பாக்கி ஏந்துவது தவிர வேறெதும் தொழில் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானத்திலிருந்து கம்யூனிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டதும், அங்கிருக்கும் இஸ்லாமிய ஒற்றுமையைக் குலைக்கும் உள்நாட்டுப் போரினால், இந்த வேலையற்ற கெரில்லாக்கள் புதிய போர்க்களங்களையும் புதிய எதிரிகளையும் தேடி அலைகிறார்கள். இந்த கூலிப்படைகளை முன்பு தங்களது வெளியுறவுக்கொள்கைகளுக்காக பயன்படுத்திக்கொண்டிருந்த நாடுகள் இன்று வேறு வெளியுறவுக்கொள்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். வெளியில் பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பல நாடுகள் இவர்களை தம் நாட்டில் ஆதரிக்கின்றன. இவர்கள் தங்கள் நாடுகளில் வாழ்வதை சகித்துக்கொள்ளவும் செய்கின்றன. பாகிஸ்தான், சூடான், ஈரான், இன்னும் சில நாடுகளை இப்படி குறிப்பிடலாம். 1994 தொடங்கி 2003 வழியே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான் ஆகியவை ஒரு அரக்கனை உருவாக்கியிருக்கின்றன என்பதும், இந்த அரக்கன் உலகத்தை வெகுகாலம் பயமுறுத்திக்கொண்டிருக்கப் போகிறான் என்பதும் எல்லா நாடுகளும் சந்தேகமின்றி தெளிவாய் உணரத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா கலாச்சாரமும், பாரம்பரியமும் காந்தியின் தாக்கமும் நிறைந்துள்ள நாடு. இது பயங்கரவாதத்துக்கு விளைநிலத்தை கொடுப்பதில்லை. சொல்லப்போனால், இதிலிருந்து பயங்கரவாதம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. இது மதம், கலாச்சாரம், ஒருவரோடு ஒருவர் பண்பாடுள்ள முறையில் பழகுவதும் கொண்ட நாடு. சாதாரண இந்திய மனம் ஆக்கிரமிப்பு மனமல்ல. அதனாலேயே இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளைத் திணிக்க வேண்டி உள்ளது. உதாரணமாக, காஷ்மீரில் கொல்லப்பட்ட 10 தீவிரவாதிகளில் 8 பேர் வெளிநாட்டினர். பயங்கரவாதம் கோட்பாட்டை அடிப்படையாய்க் கொண்டது என்ற வாதம் பொய்யென இந்தத் தகவல் நிரூபிக்கிறது. ஒரு ஈரானியனுக்கும், ஆப்கானிய கூலிப்படை ஆளுக்கும், காஷ்மீரின் அரசியல் நிலையைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்?

(தொடரும்)

Series Navigation

நரேந்திர மோடி

நரேந்திர மோடி