கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்



அரசியல் சட்டமும், மத சுதந்திரமும் – ஒரு அறிமுகக் குறிப்பு

போன பகுதியில் சில கேள்விகளை எழுப்பினோம். இனி வரும் பகுதிகளில் மேலும் சில கேள்விகளை
எழுப்பி, சில சர்ச்சைகளை அலசுவோம். அதை செய்யும் போது அரசியல் சட்டம் தரும் மத உரிமைகள்
குறித்தும் குறிப்பிட விருப்பதால் இந்த அறிமுகக் குறிப்பு இங்கு தரப்படுகிறது. (இது போன்ற ஒரு
குறிப்பு இணையத்தில் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்திருந்தால் நான் இதை எழுதத்
தேவையிராது).

இந்திய அரசியல் சட்டம் மத,வழிபாட்டு உரிமைகளை உறுதி செய்துள்ளது. இந்த உரிமை குறித்த
புரிதல் தேவை. ஏனெனில் இவ்வுரிமை இந்திய குடிமக்களுக்கு தரும் சில உத்தரவாதங்களை அரசால்
நீக்க முடியாது, அரசியல் சட்டத்தினையே மாற்றாமல். எனவே எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இவ்வுரிமை குறித்த விஷயங்களில் நினைத்த படி அரசு செயல்பட முடியாது. என்ன செய்யலாம் என்பதை அரசியல் சட்டமும், அதற்கு தரப்பட்டுள்ள விளக்கங்களும் சுட்டிக் காட்டுகின்றன. அரசியல் சட்டப் பிரிவுகளை அர்த்தப்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் விளக்கங்களை அளித்துள்ளது. இவ்விளக்கங்களின் அடிப்படையில் இப்பிரிவுகளை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த பிரிவுகளையும் மத சுதந்திரம் குறித்த பிரிவுகளையும் சேர்த்து படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.அப்போதுதான் சிறுபான்மையினர் உரிமைகள் எத்தகையவை என்பதை அறிய முடியும்.

அரசியல் சட்டத்தின் 25,26,27,28 பிரிவுகள் மத சுதந்திரம் குறித்தவை. அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்கள் மத சுதந்திரம் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். மத சுதந்திரம் என்ற கருத்து இப்போது
மிகவும் சாதாரணமான ஒன்றாக தோன்றலாம்.ஆனால் அது எல்லாக் காலங்களில் ஒரு உரிமையாக
அங்கீகரிக்கப்பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் மதன் சுட்டிக்காட்டுவது போல் நவீன கருத்தான
மத சுதந்திரம் சுமார் முன்னூறு ஆண்டுகளாகத்தான் இருக்கிறது.(1)
http://www.epw.org.in/showArticles.php?root=2003&leaf=03&filename=5609&filetype=html

இந்திய அரசியல் சட்டத்தினை வகுத்தவர்கள் நவீன இந்தியாவை உருவாக்க விழைந்தவர்கள். தேசப்
பிரிவினை, யூத இனப்படுகொலை, இரண்டாம் உலகப் போர் போன்றவற்றின் பிண்ணனியில் அவர்களின்
கருத்துக்களை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்திய தத்துவ மரபுகளையும், மேற்கத்திய
கருத்தாங்கள், பிற நாடுகளில் உள்ள சட்டங்கள் போன்றவற்றையும் ஆய்ந்து, விவாதித்தே இப்பிரிவுகளை
வகுத்தனர். அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்கள் நடத்திய விவாதங்கள் அவர்களது அறிவிற்கும்,
வருங்கால இந்தியா குறித்த அக்கறைகளுக்கும் சான்றாக உள்ளன. சமத்துவம் அரசியல் சட்டத்தின் மையக் கருத்துக்களில் ஒன்று. மேலும் இந்திய அரசியல் சட்டத்தினை வகுத்தவர்கள் இந்திய அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், மதங்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டே அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இதைக் வகுத்தனர். அவர்களின் தீர்க்கதரிசனத்தினை நாம் பாராட்ட வேண்டும். மத சுதந்திரம் மனித உரிமைகள் குறித்த பிரகடனம் உட்பட பல்வேறு மனித உரிமை சாசனங்கள், உடன்படிக்கைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுமாகும். மதன் மத சுதந்திரம் என்ற கருத்தின் வரலாற்றையும், இந்தியச் சூழலில் அது குறித்த சர்சைக்களையும் விளக்குகிறார். அவற்றை நான் மீண்டும் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு கூறுகிறது
Freedom of conscience and free profession, practice and propagation of religion.-(1) Subject to public order, morality and
health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to
profess, practise and propagate religion. (2) Nothing in this article shall affect the operation of any existing
law or prevent the State from making any law-
(a) regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious
practice;
(b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and
sections of Hindus.
Explanation I.- The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion.
Explanation II.- In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons
professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.

அரசியல் சட்டத்தின் 26வது பிரிவு கூறுகிறது

Freedom to manage religious affairs.- Subject to public order, morality and health, every religious denomination or any section
thereof shall have the right-
(a) to establish and maintain institutions for religious and charitable purposes;
(b) to manage its own affairs in matters of religion;
(c) to own and acquire movable and immovable property; and
(d) to administer such property in accordance with law.

மதம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள நீதிபதி முகர்ஜியா ஒரு வழக்கில் தந்த தீர்ப்பில் குறிப்பிட்டதைப் பார்க்கலாம். இது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வேறு பல தீர்ப்புகளில் மேற்கோளிடப்படுவதால் இது முக்கியமானது.
“Religion is certainly a matter of faith with individuals or communities and it is not necessarily theistic. There are well-known religions in India like Buddhism and Jainism which do not believe in God or in any intelligent first cause. A religion undoubtedly has its basis in a system of beliefs or doctrines which are regarded by those who profess that religion as conducive to their spiritual well-being, but it would not be correct to say that religion is nothing else but a doctrine or belief. A religion may not only lay down a code of ethical rules for its followers to accept, it might prescribe rituals and observances, ceremonies and modes of worship which are regarded as integral parts of religion, and these forms and observances might extend even to matters of food and dress.” (Commr. HRE v. Sri Lakshmindra Thirtha Swamiar of Sri Shirur Mutt)
மத சுதந்திரம் என்பது தடைகளற்ற சுதந்திரமல்ல. இப்பிரிவின் கீழ் அது பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் உட்பட வேறு காரணங்களுக்காக, கட்டுப்பாடுகளுக்குட்பட்டது. அரசு இப்பிரிவின் கீழ் மத சுதந்திரம் என்ற பெயரில் கோயில்களில் இந்துக்களில் அனைத்து தரப்பினருக்கும் வழிபாட்டு உரிமையை தர மறுப்பதை தடுக்க முடியும்.வேறுவார்த்தைகளில் சொன்னால் இந்துக்களில் இந்தப் பிரிவினர் இந்த இந்துக் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று தடை விதிக்க முடியாது. மேலும் எவை மதம் தொடர்புடையவை, எவை மதம் தொடர்பில்லாத அல்லது மதம் சாராதவை என்பதையும் கருத்தில் கொண்டு அரசு மதம் சாராத விஷயங்களில் தலையிட அரசியல்
சட்டம் உரிமை தருகிறது. அரசின் முடிவு நீதிமன்ற ஆய்விற்குட்டப்பட்டது. உதாரணமாக கோயிலை நிர்வகிக்கும்
அறக்கட்டளை கோயில் நிதியை முறை கேடாக பயன்படுத்தினால் அரசு தலையிட முடியும். கோயில் பூசாரி/ அரச்சகர் நியமனம் மதச்சார்பற்ற நடவடிக்கை என்று நீதிமன்றம் கூறியுள்ளது (Bhuri Nath Vs State of J&K).
அரசின் நடவடிக்கை/ ஒழுங்குமுறை மதம்சாராத நடவடிக்கைள் குறித்து இருக்க வேண்டும், மதத்தினைப் பின்பற்றுவது குறித்த நடவடிக்கைகள் குறித்ததாக இருக்கக் கூடாது என்று தீர்பளிக்கப்படிருக்கிறது. (Ratillal Vs.
State of Bombay). ஆனால் நடைமுறையில் இந்த எல்லைக்கோட்டினை வகுப்பது எளிதாக இல்லை. இருப்பினும்
இக்கோட்பாடு இதற்கு பின் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மதப்பிரிவிற்கு சடங்குகள், பின்பற்றப் பட வேண்டிய விதிகள் குறித்து தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதில் அரசு தலையிட்டு மாற்ற முடியாது. ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோயில்களில் ஆகமங்கள் கூறும் விதிகளின் படி விக்கிரகங்களை
யார் தொடுவது, பூஜை செய்வது என்பதை பின்பற்றும் உரிமை மதப்பிரிவினருக்கு உண்டு. (Seshammal Vs. State of Tamil Nadu). [இவ்வழக்கு அனைத்து ஜாதியினரும் அரச்சகர் ஆவது குறித்த வழக்கு. யார் அர்ச்சகராக இருக்கலாம் என்பதை அரசு தீர்மானிக்கலாம்.ஆகம விதிகள் பின்பற்றபட வேண்டும் என்ற கோரிக்கை மத சுதந்திரத்தின் பகுதி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இங்கு விக்கிர வழிப்பாட்டில், பூஜைகள் செய்வதில் ஆகம
விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வரும் போது அது மதவழிப்பாட்டின் பகுதி என்பதால் அதில் அரசு தலையிட முடியாது].
மதப்பிரிவு என்று கூறும் போது அரசியல் சட்டம் ஒரு மதத்தில் பல பிரிவுகள் இருப்பதை அங்கீகரிக்கிறது. இப்பிரிவுகள் மாறுபட்ட வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலும், சடங்குகள், நம்பிக்கைகள் வேறாக இருந்தாலும் உரிமை உண்டு. கிறித்துவ மதத்தின் ஒரு பிரிவு தாங்கள் மட்டுமே உண்மையான கிறித்துவப் பிரிவு, பிற பிரிவுகளை அங்கீகரிக்கக் கூடாது என்றெல்லாம் கோரினால் அதை சட்டம் ஏற்காது. மேலும் ஒரு மதத்தின் முக்கிய அம்சங்கள் எவை, எவையில்லை என்பதையும் நீதிமன்றம் ஆராய முடியும் (Ramanuja Vs. State of Tamil Nadu).அதாவது இது நீதிமன்ற ஆய்விற்க்கப்பாற்பட்டது என்று யாரும் கூற முடியாது. மேலும் மதப்பிரிவுகள் அறக்கட்டளைகள் துவங்க, சொத்துக்களை வாங்க,விற்க உரிமை உடையவை. தனி நபர் சொத்துரிமைகள் அவற்றிற்கும் பொருந்தும். அத்தகைய சொத்தினை அரசு கையக்கப்படுத்த நினைத்தால் அதை செய்ய தேவையான காரணம் இருக்க வேண்டும், அக்காரணம் நியாயமானது என்று நீதிமன்றம் ஏற்க வேண்டும். அதாவது அரசின் முடிவுகள் நீதிமன்ற ஆய்விற்குட்பட்டவை. அரசு தனியார் கோயில்களை தன்னிசையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மதப்பிரிவு கோயிலை நிர்வகிக்க விதிமுறைகளை ஏற்படுத்தி, அவ்விதிமுறைகளை நீதிமன்றம் ஏற்றிருந்தால் அங்கு நிர்வாகத்தில் தலையிட, கோயிலை எடுத்துக் கொள்ள அரசுக்கு அதிக உரிமைகள் இல்லை. தகுந்த காரணங்கள் இன்றி அரசு அத்தகைய கோயில்களை எடுத்துக் கொள்ள முடியாது. அப்படியே எடுத்துக் கொள்ள முயன்றாலும் அதுவும் நீதிமன்ற ஆய்விற்குட்பட்டதே. இங்கு கோயில் என்பது அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும்.
மதம் என்று ஒன்றிருந்தால் அம்மதம் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்றில்லை. மேலும் மதம் வேறு, தத்துவம் வேறு.மதம் நியமங்களை, விதிகளை, நம்பிக்கைகளை கொண்டிருப்பது. அவற்றை நடைமுறைப்படுத்த சில ஒழுங்குகளையும், கட்டுப்பாடுகளையும் அது விதிக்கலாம். இவை பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் போன்றவற்றிற்கு எதிராக இருக்க முடியாது.மத சுதந்திரம் குறித்த பிரிவு சட்ட விரோதச் செயல்களை மத ஒழுங்கு என்ற போர்வையில் அனுமதிக்கவில்லை. இந்தியாவில் தீண்டாமை சட்ட விரோதம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. தீண்டாமை மதத்தின் கோட்பாடு/விதி என்ற பெயரில் கோயில்களில் நுழைய விடாமல் செய்ய முயன்றால் அதை மத சுதந்திரம் என்ற வகையில் சட்டம் அனுமதிக்காது. ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கான கோயிலில் பிற பிரிவினரை அனுமதிக்க மறுக்கும் உரிமை உண்டா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தரப்பட்ட தீர்ப்பு மிகவும் முக்கியமானது. மத சுதந்திரம் எது வரை செல்லுபடியாகும் என்பதற்கு இது ஒரு உரைகல்.
தீண்டாமையை நீக்கி, இந்துக் கோயில்களுக்குள் தலித்கள் செல்ல உரிமையளிக்கும் சட்டம் ஒரு தனிப்பட்ட
பிரிவினரின் கோயிலுக்கு பொருந்துமா என்று கேள்வி எழுந்தது. கெளட சரஸ்வத் பிரமணர்களுக்கு சொந்தமான
கோயிலிற்கு தலித்களுக்கு நுழைய உரிமை தரும் சட்டம் செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம்
தந்த பதிலில் அரசியல் சட்டம் 25ம் பிரிவின் கீழ் அரசுக்கு தரப்படும் அதிகாரம், மதப்பிரிவுகளுக்கு அரசியல் சட்டம் 26வது பிரிவின் கீழ் தரப்படும் உரிமைகளுக்கு முரணானதா என்பது ஆராயப்பட்டது. அரசியல்சட்டத்தினை ஒத்திசைவாக பொருள் கொள்வது என்பதன் அடிப்படையில் நீதிபதி வெங்கட்ராம ஐயர் தந்த தீர்ப்பில் 26(பி) பிரிவின் கீழ் மதப்பிரிவினருக்கு மத நிறுவனங்களை நிறுவ,நிர்வாகிக்க உரிமை உண்டு, பிரிவு 25(2)ன் கீழ் அரசுக்கு விரிவான அதிகாரம் தரப்பட்டுள்ளது, இந்த அதிகாரம் 26(பி) பிரிவின் உரிமையை கட்டுப்படுத்தக் கூடியது என்று குறிப்பிட்டார். அதாவது 26(பி) பிரிவின் உள்ள உரிமைக்கும் 25ம் பிரிவின் கீழ் உள்ளவற்றிற்கும் முரண்பாடு ஏற்படும் போது பொது நலன் கருதி அரசு எடுக்கும் முடிவு 26(பி) பிரிவு தரும் உரிமைகளை கட்டுபடுத்த முடியும். (இந்த முடிவும் நீதிமன்ற ஆய்விற்குட்டப்பட்டதே). இவ்வழக்கில் அக்கோயிலில் சில சடங்களில் கெளட சரஸ்வத்களை மட்டும் அனுமதிக்க அப்பிரிவினருக்கு உரிமை உண்டு, கோயிலில் நுழையக் கூடாது என்று பிற இந்துக்களை தடுக்கும் உரிமை கிடையாது என்று தீர்ப்பானது. முன்னது 26(பி) பிரிவின் கீழ் தரப்படும் உரிமை, பின்னது 25ம் பிரிவு 2ம் உப பிரிவின் அடிப்படையிலானது. எனவே கோயிலிற்கு அந்த சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்குமாறு கோர உரிமை இல்லை என்று தீர்ப்பானது. (Venkataramana Devaru v. State of Mysore).
மத நடைமுறைகள் குறித்து இன்னொரு வழக்கில் கஜேந்திரகட்கர் தன் தீர்ப்பில் கூறியதும் மிக முக்கியமானது. ஏனெனில் எல்லாவற்றையும் மத நடைமுறைகள் என்ற பெயரில் கொண்டு வர முடியுமா என்ற கேள்விக்கு இது பதில் தருகிறது. ஒரு மதம் அந்த நடைமுறை(யை/களை)
“as its essential and integral part; otherwise even purely secular practices which are not an essential or an integral part of religion are apt to be clothed with a religious form and may make a claim for being treated as religious practices within the meaning of Article 26…. in other words, the protection must be confined to such religious practices as they are an essential and an integral part of it and no other.” (Durgah Committee v. Syed Hussain Ali).
இதிலிருந்து மத நடைமுறை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்ய உரிமையை அரசியல் சட்டம் தரவில்லை. அந்த நடைமுறை இந்த உரிமையின் கீழ் வருமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியும். அதாவது அந்த நடைமுறை அம்மதத்தின் மிகமுக்கியமான ஒன்றாக இல்லாத போது அந்த நடைமுறையை வழிபாட்டு உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது.

(தொடரும்)

Series Navigation

கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -1

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


சமீபத்தில் எழுந்துள்ள சில சர்ச்சைகள் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆனால்
விவாதிக்கும்/எழுதும் பலர் அடிப்படைகளைக் கூடப் புரிந்துகொள்வதில்லை. மேலும் இப்பிரச்சினைகளை
பெண்ணியம்,சமத்துவம் போன்றவற்றைக் கொண்டு அலசி ஆராயும் போது வேறு பரிமாணங்கள் இருப்பதை
அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.அவர்களது பெண்ணிய,சமத்துவ பார்வைகள் எந்த அளவு சரியானவை
என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதானல் உடனடி தீர்வுகள், தடலாடித் தீர்வுகள் முன் வைக்கப்படுகின்றன.
அரசு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வேறு.

உதாரணமாக பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கோயில்களுக்கு செல்லுதல்/செல்லாமல் இருத்தல்.
இதை பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்று பார்க்கலாம்.ஆனால் ஆண்களுக்கும் சில சந்தர்ப்பங்களில்
கோயில்களுக்கு அல்லது வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லத் தடை இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பிராமண அர்ச்சகர்கள் சில சந்தர்ப்பங்களில் பூஜை செய்ய முடியாது, கோயில்களுக்குள் நுழையக் கூடாது
என்று விதிகள் இருக்கின்றன.பல்வேறு குழுக்களில்/ஜாதிகளில்/மதப்பிரிவுகளில் ஏற்பு/விலக்கு என்பது
எதோ ஒரு வகையில் நடைமுறையில் இருக்கிறது. சுத்தம்/அசுத்தம், ஏற்பு/விலக்கு, இவை குறித்த
நம்பிக்கைகள், சடங்குகள் பல்வேறு சமூகங்களில், இனக்குழுக்களில் இருப்பதை மானுடவியலாளர்கள்,
சமூகவியலாளர்கள் விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர். இவை மத நம்பிக்கை, சடங்குகள் ஆகியவற்றுடனும்,
உறவு முறைகளுடனும் தொடர்புடையவை. மாமா செத்தால் இத்தனை நாள் தீட்டு, தாய் வழி உறவுகளில்
எத்தனை தலைமுறை வரை எத்தனை நாள் தீட்டு/விலக்கு என்பது போன்ற நம்பிக்கைகள், விதிகள்
உள்ளன. இவை எந்த அளவு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது வேறு விஷயம். எனவே பெண்களின்
மாதவிலக்கு குறித்த விலக்கு/தீட்டு என்பதை பெண்களுக்கு எதிரானது என்ற அளவில் புரிந்து கொள்வதை
விட அதை ஒரு ஒட்டுமொத்த ஏற்பு/விலக்கு, புனிதம்/அசுத்தம் அல்லது தீட்டு என்ற நம்பிக்கைக்
தொகுப்பின் பகுதியாகப் புரிந்து கொள்ளவது பொருத்தம். பெண் மாதவிலக்கு இல்லாத போதும்
கூட சில சமயங்களில் தீட்டு என்பதால் சிலவற்றைச் செய்யக்கூடாது என்ற தடைகள் இருப்பதையும்
இங்கு கவனிக்க வேண்டும். இவையெல்லாம் பல்வேறு வேறுபாடுகளுடன் இருப்பதால் இந்த மதம்
மட்டும் பெண்ணுக்கு விரோதி அல்லது இதை தீட்டு என்று பார்க்கிறது என்ற அரைகுறை/அரைவேக்காடு
பகுத்தறிவு பார்வைக்கு அப்பாற் சென்று புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் ஞாநிக்கு இந்தப் புரிதல் இல்லாததால் அவர் ஆதிகாலத்து சமூகம் என்று ஆரம்பித்து
மானுடவியலாளர்கள் கேள்விக்குட்படுத்தி தேறாது என்று கைவிட்ட கோட்பாட்டினை முன்னிறுத்துகிறார்.
அத்துடன் நிற்கவில்லை. அரசு தலையிட வேண்டும் என்கிறார். மதசார்பற்ற அரசு மத விவாகாரங்களில்
எந்த அளவு தலையிட முடியும் என்பதை அவர் யோசிக்கவில்லை. மேலும் கோயில் நிர்வாகம் என்பது
வேறு, தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கை/பக்தி என்பது வேறு. அரசு ஆணை போட்டாலும் நாங்கள் வர
மாட்டோம் என்று பெண்கள் சொன்னால் இல்லை, மாதவிலக்கு காலத்தில் கட்டாயம் வர வேண்டும்
என்று அரசு சொல்ல முடியுமா. இல்லை இதை அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என்று
ஆணைதான் இட முடியுமா. கோயில்களைப் பொறுத்தவரையிலும் கூட அரசுக்கு உள்ள அதிகாரம்
குறைவுதான். எனக்கு தீட்டு, காரணம் குடும்பத்தில் சாவு/குழந்தைப் பிறப்பு என்று சொல்லும் அர்ச்சகரை
அதற்காக விடுப்பு தரமுடியாது, பூஜை செய்துவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. மேலும்
அப்படிச் செய்வது அரசியல் சட்டம் தந்துள்ள மத வழிப்பாட்டு உரிமை, மத நம்பிக்கை உரிமைகளில்
தலையிடுவதாகும்.

அதிகபட்சம் பெண்களிடம் மாதவிலக்கு என்பதை தீட்டு என்று கருத வேண்டாம், அது ஒரு உடல்
சம்பந்தப்பட்ட நிகழ்வு என்று பிரச்சாரம் செய்யலாம்.ஆனால் அதை மறுக்கும் உரிமை பெண்களுக்கு
உண்டு. அது ஒரு உடல் நிகழ்வு என்று தெரிந்தாலும் அப்போது கோயில்லுக்கு/வழிபாட்டுத்தலத்திற்கு
நான் செல்ல விரும்பவில்லை, அதன் மூலம் பிறர் நம்பிக்கையை புண்படுத்த விரும்பவில்லை என்று கூட
பெண்(கள்) நிலைப்பாடு எடுக்கலாம். விதியை மீறிச் சென்றுதான் என் பெண்ணுரிமையை நிலைநாட்ட
விரும்பவில்லை என்றும் கூறலாம். மாத விலக்கான பெண் கோயிலுக்கு வரமாட்டாள் என்று ஒரு நம்பிக்கையில்தான் பெண்(களை) அனுமதிக்கும் போது மாதவிலக்கின் போதும் போய் அவர்கள் முகத்தில் கரியைப் பூச விரும்பவில்லை, எந்தக் கோயிலில் அதற்கு அனுமதி இருக்கிறதோ அங்கு போகிறேன் என்றும் நிலைப்பாடு எடுக்க முடியும்.இப்படி ஒரு விஷயத்தில் பல நிலைப்பாடுகள் எடுக்க முடியும். ஏன் பெண்கள் சேர்ந்து ஒரு கோயிலை எழுப்பி இங்கு அந்த விதி இல்லை, பெண்கள் எந்த நிலையிலும் வரலாம் என்று அறிவித்தால் அவர்களை இந்து மதத்தினை விட்டு யாரும் நீக்க முடியாது.

இந்து மதத்தில் பல்வேறு வழிப்பாட்டு முறைகள், வழிபாடு குறித்த நம்பிக்கைகள் இருக்கின்றன. உனது
சிவன் என்னை அனுமதிக்காவிட்டால் எனக்கான சிவன் கோயிலை நான் கட்டிக்கொள்கிறேன் என்று
கோயில் கட்டினால் அங்கு இருப்பது சிவன் இல்லை என்று யாரும் உத்தரவு போட முடியாது.கர்நாடகாவில் ஒரு தலித் பெண் அதிகாரி தன் கணவருடன் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டியுள்ளார். இது அவரதுச்
சொந்தக் கோயில், அவர் அங்கு பூஜைகளும் செய்கிறார். ஐயப்பனை தன் குழந்தைகளில் ஒருவன் என்கிறார். நாளடைவில் அவர் காலத்திற்குப் பின்னும் அங்கு பெண்கள் பூஜை செய்வது சாத்தியமாகலாம். இது போல் வேறு பல கோயில்கள் உருவாகலாம். ராமகிருஷ்ண மடங்களில் பெண் துறவிகள் இருக்கிறார்கள். ஆனால் பல மடங்களில் பெண்கள் அதிகபட்சம் சிஷ்யைகளாகத்தான் இருக்க முடியும், துறவியாக முடியாது, மடாதியாக முடியாது. கிறித்துவத்திலும் பெண்கள் கன்னியா ஸ்தீரிகளாக இருந்து, மதர் சுப்பீரியர் போன்ற நிலைகளை எட்ட முடியும். பிஷப்பாகவோ அல்லது போப்பகவோ ஆக முடியாது. பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாம் என்றார் சுவாமி சித்பவானந்தர். இதை எல்லாத் துறவிகளும், மடாதிபதிகளும் ஏற்காவிட்டாலும் அதை தடுக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளி மாணவி முற்காலங்களில் பெண்களும் முப்புரி நூல் அணிந்திருந்தனர், காயத்ரி மந்திரம் சொல்லி மூன்று வேளையும் ஜெபித்தனர். அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார். இது சாத்தியமாகது என்று சொல்ல முடியாது.

இந்து மதத்தில் உள்ள பன்வகைத்தன்மை சிலவற்றை சாத்தியமாக்குகிறது. . இந்தப் பன்வகைத்தன்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, மதம் ஒற்றைப்படுத்தப்படக் கூடாது. பன்வகைத்தன்மை இருப்பதால் பிரச்சினைகள் இல்லை என்று சொல்லவரவில்லை. மாறாக இந்தப் பன்வகைத்தன்மையை எப்படி சாதமாக, சமூக,மத சீர்த்திருத்ததிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும், படைப்பாற்றலுடம் செயல்பட வெளிகளை, களங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டும்.

பெரியாருக்கு இந்தப் புரிதல் சுத்தமாக இல்லை, அவர்களது சீடர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு பல சமயங்களில் இந்த்துவா வேறு, இந்து மதம் வேறு என்பது கூட புரிவதில்லை. அல்லது புரியாதது போல் இந்து மதத்தினை அழிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். அரசு இதைச் செய்ய வேண்டும், இந்து மதத்தில் தலையிட வேண்டும், சமத்துவத்தினை நிலை நாட்ட வேண்டும் என்று சொல்பவர்கள் அனைத்து மதத்திலும் அரசு தலையிடாது, இந்து மதத்தில் மட்டும் தலையிடும் என்பதைத் தெரிந்து கொண்டே சொல்வதால் அவர்களின் நோக்கம் கேள்விக்குறியாகிறது.

பிற மதங்களில் அரசு தலையிடும் போது அது வழிபாட்டு உரிமை, மத நம்பிக்கை உரிமை ஆகியவற்றில்
அரசு அத்துமீறுவது என்பது மட்டுமின்றி சிறுபான்மையினர் உரிமைகளிலும் அத்துமீறுவதாக ஆகி விடுவதால்
அரசு தலையிட வாய்ப்புகள் மிகமிகக் குறைவு, கிட்டதட்ட இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்து
மதத்தில் பல கோயில்கள் அரசின் நிர்வாகத்தில் இருப்பது அரசுக்கு தலையிட அதிக இடமளிக்கிறது.
ஆட்சியாளர்களுக்கு உதவும் மடாதிபதிகளும் இருப்பது நம்பகத்தன்மை உருவாக உதவுகிறது.

அதே சமயம் அரசு கோயில்களின் மீது முழு பாத்தியதையையும், சடங்குகளை நினைத்தபடி மாற்றும்
உரிமையும் கொண்டதல்ல. அது நிர்வாகி, அறங்காவலர் என்ற முறையிலும், அரசியல் சட்டம் தரும்
உரிமைகளின் அடிப்படையிலும் சிலவற்றைச் செய்ய முடியும். உதாரணமாக கோயில்களில் இந்துக்கள்
யார் வேண்டுமானாலும் நுழையலாம் , திருவிழாக்களில் எந்த இந்துவும் பங்கேற்கலாம், கோயில்களில்
வழிபாட்டில் ஜாதி ரீதியான பாகுபாடு கிடையாது என்பதை உறுதி செய்யலாம். (இதை முழுமையாக
அரசு செய்திருக்கிறதா, கண்டதேவி பிரச்சினை போன்றவற்றை இங்கு அலசவில்லை). ஆனால் இதைப்
பயன்படுத்திக் கொண்டு மதமரபுகளை முற்றாக மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை. உதாரணமாக
திருப்பதியில் சில மரபுகளை அரசு மாற்ற முயன்ற போது, அவை காலங்காலமாக நடைபெறுவதையும்,
கோயில் வழிப்பாட்டுமுறைகளை வகுத்த சான்றோர்கள்தான் இவற்றை ஏற்படுத்தினர் என்பதையும் முன்
வைத்து அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டது. எனவே அரசின் நடவடிக்கைகள் அரசியல் சட்டம்
25ம் விதியின் கீழ் வழங்கும் மத வழிப்பாட்டு உரிமைக்கு இயைவாக இருக்காத போது, அவ்வுரிமைக்கு
எதிராகவோ அல்லது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளத் தடையாக இருக்கும் போது அதை
எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியும். நீதிமன்றம் தரும் தீர்ப்பு அரசினைக் கட்டுப்படுத்தும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் பொருள் அரசு கோயில் விதிகளை நினைத்தபடி மாற்றியமைக்க முடியும் என்பதல்ல. மேலும் சிலர் நினைப்பது போல் கோயில் வழிப்பாட்டில் சம்ஸ்கிருத்ததினை துடைத்து எறிவதல்ல. அரசாணைக்கு ஆதாரமான உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட கேள்வியைப் பற்றியதே,
தீர்ப்பும் அதைப்பற்றியதே. அந்த தீர்ப்பு கூறாதவற்றை அதை ஆதாரமாகக் கொண்ட ஆணை மூலம்
நிறைவேற்ற முடியாது. ஆனால் இந்த அடிப்படை உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் எழுதுபவர்கள் இருக்கிறார்கள், இயக்கங்கள் இருக்கின்றன.

ஆண்-பெண் சமத்துவம், சமத்துவம், வழிபாட்டுரிமை, மத நம்பிக்கை இவற்றிற்கிடையே முரண்பாடு
ஏற்படும் போது அரசு முரட்டுத்தனமாக சமத்துவத்தினை திணிக்க முடியாது.உதாரணமாக அனைத்து
மத வழிப்பாட்டு இடங்களிலும் பெண்களை வழிப்பாட்டினை நடத்துபவர்களாக நியமிக்க வேண்டும்
என்று அரசு ஆணையிட்டாலும் அதை நீதிமன்றங்கள் ஏற்பதற்கான வாய்ப்பு குறைவு. அப்படி நியமிப்பது
மதத்தின் அடிப்படைகளுக்கு விரோதமானது, மத வழிப்பாட்டு சுதந்திரத்தினையும், உரிமையையும்
பாதிக்கிறது என்று வாதிட முடியும். ஒரு மதத்தில் ஒரு பிரிவினர் அரசின் தலையீடு இன்றி இதைச்
செய்தால் அதை நீதிமன்றங்கள் நிராகரிக்கும் என்று சொல்ல முடியாது. அப்பிரிவினரிடையே
கருத்தொற்றுமை ஏற்பட்டு இது போன்ற மாற்றங்களை அவர்கள் கொண்டு வரலாம். அவை
சட்டவிரோதமாக இல்லாத வரை அரசு ஒன்றும் செய்ய முடியாது.

தொடரும்

http://ravisrinivas.blogspot.com

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்