மழை
டி.ஜி.கே. கோவிந்தராஜன்
கடந்த மாதம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நாளில் தான் , நான் பணி நிமித்தம் நியூயார்க நகருக்கு பயணமானேன்..
படப்பிடிப்பு தொடர்ந்து ( வேட்டையாடு விளையாடு படத்தில் உதவியாளராக பணி ) நடந்ததால் தமிழக மழை பற்றிய செய்தி காது வழி விஷயமாச்சு….
23ம் தேதி தமிழகத்தில் மழை தொடரும் ஒரு நாளில் தான் மீண்டும் கால் வைத்தேன்…
சிதிலமடைந்த தார்ச்சாலைகள், செம்மலர் பூத்தாற் போல் வண்ணமுடன் குண்டு குழிகள், தேங்கிய நீர்கள், உடைந்த மரக்கிளைகள் என காட்சிகள்.
நசநசப்பும், சகதியுமாக ஊரில் பல பகுதிகள்.
மழை இந்த மாதிரி பெய்ததில்லை… பலத்த சேதம்… நாசம்… எனப் பேச்சுகள்.
எப்போது முடியும் என்று கட்டியம் கூறும் தின, வார பேப்பர், தொலைக்காட்சி செய்திகள்…
மழை சார் அது தான் கூட்டம் இல்லை… என்பது, ஹோட்டல், திரை மற்றும் அனைத்து வர்த்தக இடங்களின் விஷயமானது…
கண்மாய் உடைந்தால்…. பூண்டி ஏரி திறந்து விட்டதால், காவிரி, வைகை, தாமிரபரணி கரை புரண்டு ஊர் புகுந்தால் , பயிரிகள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்ததால்.. என அழிவைப் பற்றியே பேச்சு…
புதனன்று என் குழந்தையின் பள்ளியில் இயற்கை பேரழிவு பற்றிய குழந்தைகள் பங்கேற்ற கண்காட்சி…
புயல், வெள்ளம், பூகம்பம் பற்றிய மாணவ மணிகள் அழிவு ஏன் .. எப்படி காப்பாற்றிக் கொள்வது என படம் மற்றும் மாதிரி வடிவங்களால் ஒப்பித்து விளக்கினார்கள்..
ஆம், அது தான் வளர்ந்த மனிதன் இயற்கை பற்றிய நம்பிக்கையின்மையின் தனது மனநிலையை குழந்தகளிடம் விதைக்கும் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது….
இதற்கு முந்தி இருபது ஆண்டுகள் என்றும் ஐம்பது ஆண்டுகள் முன் தான் இப்படி மழை நாசம் என்று ஜோதிடம் கூறியது செய்திகள்…
எனக்குத் தோன்றியது… ஐம்பது ஆண்டுகளாய் வறண்ட பூமியில் என்ன செய்தார்கள் மனிதர்கள்.
கண்மாய், ஏரி , குளம், ஆறு இவற்றை தயார் நிலையில் மழை நீர் சேகரிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாமே…
ஆற்றில் முள்செடி வளரவிட்டு கழிப்பிட மறைவாய் கொண்டது மனிதன் தானே..
கண்மாய் அசூர வளர்ச்சி மரம் கண்டு அது நீர் ஆவியாகாமல் காக்க என்று சொல்லி அவை வளர நீர் உறிஞ்ச ஏலம் விட்டது நாம் தானே..
கெண்டையும், கெழுத்தியும் வில் எய்தி பிடித்த மனிதர்கள் சகதி தண்ணியில் தலைப்பிரட்டையை காலால் இடறியது நமது குணம் தானே…. ? ? ?
நாட்டிய நிகழ்ச்சிக்கு மேடையின் வலிவை சரிபார்ப்பவன், கிரிக்கெட் மைதானத்தை கோடிகள் கொட்டி தடவி தடவி தயார் செய்யும் நாம் …. மழை நீர் சேகரிக்க குளம் , ஏரி, ஆற்றை தயார்படுத்த என் செய்தோம்… ?
பின் ஏதோ, மழை நாசம் செய்ய வந்தது போல் செய்திகளை பறிமாறிக் கொள்கிறோம்.. ?
ஊர் புகுந்து குலம் அழித்த சுனாமியை , நிலம் பிளந்து கட்டிடங்கள் முழுங்கிய பூகம்பத்தை திட்டியவன் இதோ, மழையை ‘ இன்று இவ்வளவு நாசம் ‘ எனும் தலைப்புச் செய்தியுடன் வசவுபாடிக்கொண்டு..
என்ன வேண்டும் மனிதா.. ? மழையால் எத்துனை நாசம் செய்ய முடியும் என்ற புள்ளிவிவரம் வேண்டுமா… ?
அட மூடா… ?
இவ்வளவு அள்ளித் தரும் வானத்து வரவை பயன்படா நீராக மாறுவது நம்மால் அன்றோ..
அனைத்து நாசமும் நம்மால் தான்..
மழையே…. இருகரம் நீட்டி அழைக்கிறேன்.. வா…. பெய்யென பெய்வது தாண்டி.. இவர்கள் பொய்யென வாழ்பவர்கள் என உணர்த்தி நடனமாடு…
கணுக்கால் மழை நீரில் காகிதக் கப்பல் விட்ட ரசிகர்கள் தொலைந்து போய் , கழுத்தளவு மழைக்கு குளம், கண்மாய் என வசிப்பிடம் தந்திருந்த சமூகமும் போய், கிடைத்த நிலத்திலெல்லாம் கான்கிரீட் வனம் அமைத்து மழையை தொந்தரவாய் டிவி முன் அமர்ந்து விமர்சிக்கும் மனித குலம் என்னாகும் … ? யோசிப்போம்….
—-
gocha2003@yahoo.com
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)
- கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்
- பழமொழியும் பாட்டியும் அம்மாவும்
- இதே கார்த்திகை
- எச்சம்!
- வயதென்ன ?
- உருமாறும் உறவுகள்
- மழை
- கற்பும், கருத்துச்சுதந்திரமும்
- தியா: முஸ்லிம் மடோனா
- போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 2
- மனித வதை!
- நந்தன் இல்லாமல் நடராஜரா ?
- ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை
- அந்த மலர்க் கூட்டம்
- இது எங்கள் கதை
- சான்றுகள்
- கீதாஞ்சலி (50) எனது இறுதிக் கானம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கண்ணாடிகள்
- பெரியபுராணம் – 66 – 31. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
- உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!
- கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு
- மெல்பேர்ன் தமிழ்ச் சங்கம் – சர்வதேச தமிழ் குறும்பட விழா
- வட்டமேசை
- சோமு தங்கச்சியும் குஷ்புவும்
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII
- தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்
- இலக்கியத்தில் பெண்கள்
- பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – எமே செசேர் (Aime Cesaire)
- புனைவுகளும்,இறையியற் றன்மைகளும்!
- நாடோடி மனம் – பிரம்மராஜன்
- நீரில் மூழ்கிய நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேரும் நெடுநாட் துயர்கள் (3) (New Orleans Aftermath Blues After Katrina Attack)
- கடிதம்