இந்திரா காந்தி
(அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. பங்களா தேசம் விடுதலைக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் இந்திரா காந்தி பேசியது பற்றி அமெரிக்க அலுவலர்கள் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி இது. )
மிக ரகசியமான முறையில் இந்திரா காந்தி பத்திரிகையாளர்களிடம் டிசம்பர் 22ம் தேதி பேசியதன் சாராம்சம் இது.
1. அமெரிக்க விரும்பினால் இன்றே இந்திய- அமெரிக்க உறவு சீரடையலாம். என்னைப் பொறுத்தவரையில் உறவு சுமுகமாகத்தான் இருக்கிறது. எனக்கு அமெரிக்காவிற்கு எதிரான எந்த எண்ணமும் இல்லை. அமெரிக்க மக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவள். அமெரிக்காவிலிருந்து பல துறையில் உள்ள புகழ்பெற்ற நபர்கள் எனக்கு நூற்றுக் கணக்கில் கடிதம் எழுதியிருக்கிறார்கள். சிறு குழந்தைகள் கூட , மூன்றாவது, நான்காவது வகுப்பில் உள்ள குழந்தைகள் கூட எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகள் என் மனதைத் தொடுவதாய் உள்ளது.
2. நிக்ஸன் இந்தியா பற்றிக் கொண்டுள்ள தவறான அபிப்பிரயம் பற்றி : இந்தத் தவறான அபிப்பிராயம் வங்க தேசத்தைப் பொறுத்தது மட்டுமல்ல. இந்தியா என்பது என்னவகையான நாடு, எந்தக் கொள்கைகளுக்காக இந்தியா முன்னிற்கிறது, என்பதை அங்கீகரிப்பது பற்றிய அபிப்பிராயம் அது. தேசங்களின் பலத்தை சமன்படுத்துவது (bealance of power) என்ற கோட்பாட்டை நாங்கள் எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை, இப்போதும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.
3. சோவியத் யூனியன் ( அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படைக்கு எதிராகவும், சீனாவிற்கு எதிராகவும் களமிறங்கும் என்று ) எங்களுக்கு வாக்குறுதி அளித்தது எனப்பல அர்த்தமில்லா உளறல்கள் பேசப்படுகின்றன. அப்படி எதுவும் சோவியத் யூனியனுடன் பேசப்படவில்லை என்று என்னால் உறுதியாய்ச் சொல்லமுடியும். இதற்குப் பின்பும் அமெரிக்கா நான் எப்படிப்பட்டவள் என்பதையோ, இந்தியா எப்படிப்பட்ட நாடு என்பதையோ புரிந்து கொள்ள மறுத்தால் , இதன் பின்விளைவு என்னவென்றும், அமெரிக்காவுடன் என்னவிதமான உறவு பூணுவோம் என்பதும் என்னால் சொல்லமுடியாது. ஒரு நபர் எப்படிப்பட்டவர் என்று நீங்கள் புரிந்து கொள்ளும் திறமை கொண்டிருக்கவேண்டும்.
4. போரின் பொருளாதாரப் பின்விளைவுகள் மேலும் சிரமமாய் இருக்குமென்றால், நாங்கள் அதைச் சகித்துக் கொள்வோம். கஷ்டங்கள் எங்களுக்குப் புதிதல்ல. எல்லா வெளிநாட்டு உதவிகளையும், இயன்றவரையில், நாங்கள் தவிர்க்கவே விரும்புகிறோம்.
****
- அவனது கவிதைகள்
- நீள்கிறது கவலை
- பருவகாலம்
- வாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005
- நினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.
- International Thirukkural Conference, July 8-10, 2005, Smith Auditorium, Howard Community College, 10901 Little Patuxent Parkway
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- விடிகின்ற பொழுதாய் கவிதை
- விண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை! (Earth ‘s Deep Impact Space Probe Hits the Comet)
- கீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- குடை வாசிக்கும் கவிதை
- எது காதல் ?
- நான் மரணித்து விட்டேன்
- தாயின் உயிர்க்கொடிகள்
- பிரிவோம்…சந்திப்போம்!
- உயிர்த்திருத்தல்
- பச்சை மிருகம்
- பெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்
- இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்
- புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்
- வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)
- அதீதப் புள்ளி
- தீவுகள்..
- வளைந்து போன வீரவாள்