பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
ஸ்ரீமங்கை
—-
நாச அலைகளின் கோரத்தாண்டவதின் அழிவை சீரமைக்கும் பணி தீவிரமாகியுள்ளது. உளவியல் ரீதியான சீரமைப்பு குறித்து விவரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இங்கு தன்னார்வக் குழு நண்பர்களைக் கேட்டபோது, அதன் முக்கியத்துவத்தை பல பரிமாணங்களில் சொன்னார்கள்
1. உணவு, உடை, இருப்பிடம் போன்ற இன்றியமையாதவற்றின் சீரமைப்பின் கூடவே, உளவியல் சீரமைப்பு உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வேறுவேறு வகையில் தாக்கப்பட்டிருப்பதால், உளவியல் சீரமைப்பு என்பது தனிமனிதனுக்குப் பொறுத்து அமைவதென்பது இயலாத காரியம். எனினும் பல குழுக்களாக வகுக்கப்பட்டு முயலப்படவேண்டும். சமூகவியல் வல்லுனர்களின் பங்கு இத்தொண்டில் குறைவாகவே காணப்படுகிறது.
முக்கியமாக, பெற்றோர் இழந்த குழந்தைகள் – அரவணைப்பும், ஊக்கமும் மிகத் தேவை. குழந்தைகள் இரவில் அலறுகின்றன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது ( 1 ஜனவரி 2005 மும்பை பதிப்பு ). சில குழந்தைகளை தீவிர சிகிக்சை நடைபெறும் இடங்கள், கடுமையாகப்பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இருக்கும் தலங்களிலிருந்து அப்புறப்படுத்தி, பராமரிக்கவேண்டும் என்கின்றனர்- குஜராத் நிலநடுக்கத்தில் சீரமைப்பில் ஈடுபட்ட தன்னார்வக்குழுவில் இருந்தவர்கள். இது சாத்தியமாகவேண்டுமெனில், தக்க கூட்டமைப்பும், தகவல் தெடர்பும் சீரமைப்புக் குழுக்களிடையே அவசியம்.
2. ‘we need to empathize NOT sympathize with them for long ‘ என்றார் ஒரு நண்பர். இரக்கம் தேவைதான். ஆயின், பாதிக்கப்பட்டவர்களை வலுவேற்ற முயலவேண்டுமே தவிர, இரந்துண்டு வாழும் நிலையில் வைத்துவிடக்கூடாது. முக்கியமாக மீனவ நண்பர்கள் தங்கள் வலுவில் வாழ்ந்து வந்தவர்கள்.அவர்களது உறுதியைக் குலைக்கும் அளவிற்கு நடந்துவிடக்கூடாது . இந்த இலக்குமண எல்லைக்கோட்டை வரைவது யார் ? எங்கு இரக்கம் கரைந்து உற்சாகமூட்டும் பணி தொடங்கவேண்டும் என்பதை யார் நிர்ணயிப்பது ?
3. நெடுங்காலப் பாதிப்பை மனதில் கொண்டு, தன்னல இயக்கங்களை பாதிக்கப்பட்டவர்களைக்கொண்டு நிறுவ வேண்டும். பல தன்னார்வக் குழுக்கள் இதில் சிறப்பாகப் பணியாற்ற இயலும். அரசாங்க உதவிகளை எப்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விதத்தில் எடுத்துச்செல்வது என்பதை இவ்வியக்கங்களுக்கு , தன்னார்வக் குழுக்கள் பயிற்சியளிக்க முடியும். இல்லாவிட்டால், சில ஓநாய்கள் உதவித் தொகையினைச் சுருட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. ஒரிசாவின் கொடுஞ் சூறாவளி ஒரு உன்னத உதாரணம்.
4. வெறும் பயமும் பீதியும் மட்டும் கொண்டு அலறுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். இங்கிலாந்து , இரண்டாம் உலகப்போரில் தாக்குண்ட போதிலும், மக்கள் பொறுமையாக வலுவிழக்காது எதிரியை எதிர்நோக்கியது போல, வலுவோடு உதவிக்கரம் நீட்டுவது அவசியம். வதந்திகளால் பீதியடைந்து ஓடுவதென்பது புழுக்களுக்கும் சாத்தியம்.
5.பெரும்பாலானவர்கள் , உதவி செய்யுங்கள் என்றால் வீட்டிலுள்ள பழைய துணிகளைக் களையும் சந்தர்ப்பமெனக் கருதுகின்றனர். ‘அஞ்சோ பத்தோ கொடுத்துவிடுவோம் ‘ – என்ற பரந்த நோக்கும் அலுவலகத்தில் நிதி திரட்டும் நோட்டுப்புத்தகத்தில் காணப்பெறுகின்றது. எங்கள் அலுவலகத்தில் மனித வள மேம்பாட்டுத்துறையினர் , முதலிலேயே கண்டிப்பாக எல்லோரும் 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு கொடுக்கவேண்டும் என அறிவித்து, பெரிய பெட்டிகளை அலுவலக வளாகத்தில் வைத்துவிட்டனர். முணங்கிக்கொண்டே சிலர் போனாலும், செய்தாகவேண்டும் என்பதால் உதவி உருப்படியாக போய்ச்சேரும் என்பதில் ஐயமில்லை.
6 ஆன்மீகம், மனவியல் ரீதியான சீரமைப்பில் பெரும் பங்காற்ற முடியும். பல மதங்களைசேர்ந்த தொண்டு நிறுவனங்கள் சீரமைக்கச் சென்றிருப்பினும், உளவியல் ரீதியாக அவர்களது மதக் கொள்கைகள் பாதிக்கப்பட்ட மக்களது மனதில் ஆறுதலும், வலுவும் ஏற்ற முடியும்.
அன்புடன்
ஸ்ரீமங்கை (க.சுதாகர்.)
kasturisudhakar@yahoo.com
- கடிதம் ஜனவரி 6,2005
- கடலுக்கு மடல்
- அலைப் போர்
- கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?
- வன்முறை : பாலுறவு : தணிக்கை
- சுனாமி உதவி
- உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு
- சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
- ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- பேரழிவுச் சீரமைப்பு- உளவியல் கண்ணோட்டம்
- மறுபிறவி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 53
- நிழல் அழைத்துச்சென்ற இடங்கள்
- பெரியபுராணம் – 25
- விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்
- உயர்பாவை 3
- ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்
- சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
- முட்டாள்களின் பெட்டகம்
- கோடெலும் ஐன்ஸ்டைனும்
- மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.
- இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்
- பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!
- சுனாமி வேட்கை
- அறிய கவிதைகள்
- கிழித்து வந்த காலமே!
- என் வேள்வி
- ஊழி
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 16. ஆந்திரமுடையார் கதை
- ஒரு கவிதை
- ஆய்வு க்கூடத்தின் இழுப்பறைகள்
- நிலாவிற்கு
- கடிதம் ஜனவரி 6, 2005
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- உயிர்மை அரங்கில் சந்திப்பு
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்
- கடிதம் ஜனவரி 6,2005 – மார்க்ஸிய ஞானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரருக்கு ஒரு சிற்றுடைமைவாதி பணிவன்புடன்
- தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)
- கவிதை
- ‘விளக்கு விருது ‘ விழா
- இஸ்லாம் முன்வைக்கும் இறைவன் – ஹமீது ஜாஃபருக்கு சில கேள்விகள்
- tsunami aid
- விளக்கு விருது : பேரா சே ராமானுஜத்திற்கு விருது வழங்கும் விழா
- கடிதம் ஜனவரி 6,2005
- கடிதம் ஜனவரி 6,2005
- பிதாவே..எங்களை மன்னியும்!
- உலகமே
- கிழித்து வந்த காலமே!
- சுனாமி என்றொரு பினாமி.
- ‘சுனாமி ‘
- கதவைத் தட்டிய கடலலைகள்
- கவிக்கட்டு — 43
- அறிவியல் புனைகதை வரிசை 8 – நாக்கு