நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue


நைஜீரியா நகரான கானோ நகரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக முஸ்லீம்கள் நடத்திவரும் கலவரத்தில் 500 இலிருந்து 600 பெரும்பான்மை கிரிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கிரிஸ்துவ சமூகத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ரெவரண்ட் ஆண்ட்ரூ யுபா அவர்கள் நைஜீரிய கிரிஸ்துவ சங்கத்தின் தலைவராக கானோ நகரத்தில் இருக்கிறார். இவர் ராய்ட்டருக்கு அளித்த செய்தியில் மத்திய நைஜீரியாவில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வேண்டி முஸ்லீம்கள் நடத்திய கலவரத்தில் சுமார் 600 கிரிஸ்தவர்கள் கானோ நகரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

‘ஏறத்தாழ 600 மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் 12 சர்சுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன ‘ என்று யுபே கூறினார்.

போலீஸ் 30 பேரே இறந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறது. இவர்உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகம் என்கிறார்.

டேவிட் எம்மானுவல் என்ற தொழிற்சாலை ஊழியர் இரண்டு லாரிகள் நிறைய சடலங்கள் எடுத்துச்செல்லப்பட்டதாகவும், தெருவில் மட்டுமே 30 சடலங்களை தான் எண்ணியதாகவும் கூறுகிறார்.

இரண்டு ராய்ட்டர் நிருபர்கள் இன்னும் 35 சடலங்களை பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்கள்.

காடுனா மாநிலத்தைச் சார்ந்த சிறுபான்மை கிரிஸ்துவர்களின் தலைவரான மார்க் ஆமானி அவர்கள் ‘ நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ‘ என்று கூறினார்.

‘சில சடலங்கள் கிணற்றில் போடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் கூட கொல்லப்பட்டிருக்கிறார்கள். கர்ப்பிணிப்பெண்கள் கூட கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார்கள் ‘ என்று இந்த கிரிஸ்துவத் தலைவர் கூறினார்.

***

நன்றி ராய்ட்டர்ஸ்

(குறிப்பு : இந்தச் செய்தி பரவலாக கிறுஸ்துவ ஏடுகளிலும், மேனாட்டு செய்திப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. ஆனால் கிறுஸ்துவர்கள் முஸ்லீம்கள் மீது நடத்திய தாக்குதல் பற்றி பரவலாய் இவர்கள் வெளியிடவில்லை.)

Series Navigation

செய்தி

செய்தி