நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.
இனி வரப்போகும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு பரபரப்புச் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இன்று வரை தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய செயல் ஆகும். அகில இந்திய அளவில், குறிப்பாக நமது தமிழகத்தில், தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் முனைப்புடன் தொடங்கி விட்டன.
தனித்தே ஆட்சி அமைப்பது என்ற நிலையில் இருந்து, கூட்டணி தத்துவத்திற்கு காங்கிரஸ் கட்சி மாறியுள்ளது. மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் அணிக்குள் கொண்டு வருவதில் சோனியா காந்தி விரைவாகச் செயல்பட்டு வலுவான அணி ஒன்றை அமைத்துள்ளார். இருப்பினும், உத்திரப் பிரதேசத்தில் முலாயமையோ அல்லது மாயாவதியையோ தனது அணிக்கு கொண்டு வருவதின் மூலம் தான் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில், பிரதமர் வாஜ்பாயியைத் தான் அந்த அணி பெரிதும் நம்பி உள்ளது.
தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப் பட்ட அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். வரிச் சலுகைகள் நிறைந்த 2003-2004-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான யுக்திகள் என்றாலும், வரவேற்கத் தக்கவையே! ஆனாலும், அரசு ஊழியர்கள் பிரச்னையில், அவர்கள் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும், அங்கெல்லாம் குறுக்கிட்டு, பணி நீக்கம் செய்தது சரியே என்றும், அதனால் தமிழகத்திற்கு நன்மையே என்று வாதாடிய தமிழக அரசு, இன்று என்ன சொல்லப் போகிறது ? அரசு ஊழியர்கள் பிரச்னையினால், மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள் தாமதமானது. நீதிமன்றத்தின் நேரமும், உழைப்பும் பெரிய அளவில் விரயமாகி உள்ளது. நீதிமன்றம் ஆலோசனை கூறிய போது கூட செவிமடுக்காமல் உறுதி காட்டிய முதல்வர், தேர்தலுக்காக ஒரே நாளில் பணி நீக்க உத்தரவை ரத்து செய்துள்ளார். இதை ஒருசில மாதங்களுக்கு முன்னால் செய்திருந்தால், அரசு மற்றும் நீதிமன்றத்தின் நேரமும், உழைப்பும் வீணாகி இருக்காது. உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக இது போன்ற செயல்களில் இனியும் ஈடுபடாதீர்கள். நீதிமன்றம் தமிழக அரசின் இந்த திடார் மனமாற்றத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி செய்யும் அமைச்சரவை மாற்றமே, மிகவும் கேலிக்கூத்தான செயலாக இருக்கிறது.
தன்மானம், கொள்கைப் பிடிப்பு என்றெல்லாம் திராவிடக் கட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் முழங்கும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக (எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று ஜெ. கூறிய போதும்…), இடைவிடாமல் கொடுத்த பேட்டிகளும், விடுத்த அறிக்கைகளும், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது. இவர்களை விட பிரதமர் ஒரு படி மேலே போய்விட்டார். ‘தமிழகத்திற்காக தன்னையே ஜெ. அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் ‘ என்று கூறி புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
‘காற்றுப் போன பலூன் ‘, ‘இளைஞர்களை புகைபிடிக்கத் தூண்டும் மோசமான நடிப்பு ‘ என்றெல்லாம் ரஜினியைப் பற்றி முழங்கிய அரசியல் ‘தொழிலதிபர் ‘ (வியாபாரி என்ற சொல்லை விட சற்று கெளரவமாக இருக்கும், இருப்பினும் பொருள் ஒன்றே!) ராமதாஸ் இன்று என்ன சொல்கிறார் ? ‘ரஜினி ஒரு நல்ல நடிகர்!, ரஜினி ரசிகர்கள் நல்லவர்கள்! ‘. உங்கள் கொள்கைகளை எல்லாம் விடுங்கள், உங்கள் தொழில் திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தி.மு.க. அணியில், லாபகரமான கட்சி உங்களுடையது தான். புதுவையில் சாதிக் கணக்கு போட்டு, எந்தக் கட்சியிடம் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தீர்களோ, அவர்கள் ஆதரவுடன் இப்போது வெற்றி பெற முனைகிறீர்கள். தமிழகத்திலும் நினைத்த தொகுதிகள் கிடைத்து விட்டது. பிறகென்ன ?
புதுவை, நாகர்கோவில் போன்ற தனது வலுவான தொகுதிகளை இழந்திருப்பது காங்கிரஸ’ன் பலவீனமே. ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கொள்கை ரீதியாக வேறுபட்ட கட்சிகளுடன் அமைத்திருக்கும் கூட்டணியும் பலவீனமே. இருப்பினும், வாக்காளர்கள் எதை முன்னிறுத்தி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் இது போன்ற முடிவுகளின் முடிவை அறிய முடியும். வைகோவும் வந்து விட்டார். அண்ணன் – தம்பி பாசம், பரம வைரியான காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் என அவரது நெகிழ்ச்சியான ( ? ? ?), ஆவேசமான ( ? ?) கொள்கை முழக்கங்களுடல் தன் பங்குக்கு வைகோவும் நமக்கெல்லாம் திகைப்பூட்டுவார்!!
தி.மு.க. அணியை விட்டு வெளியேறியதும், அவர்கள் மூலம் வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்காகவும், புதிய ‘அண்ணன் ‘ கிருஷ்ண சாமி அ.தி.மு.க. பக்கம் போனாலும், அ.தி.மு.க. அணிக்கு செல்ல மாட்டேன் என்ற கொள்கை முடிவிற்காகவும், தொல். திருமாவளவனை வெகுவாகப் பாராட்டலாம். சுப்ரமண்ய சுவாமி, (சசிகலா) நடராஜன் எனத் தேர்தலுக்குச் சுவை கூட்டும் மனிதர்கள் தமிழகத்திலும், இந்திய அளவிலும் நிறைய பேர் உள்ளதால், இனி வரும் நாட்களில் பரபரப்பிற்கும், சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமிருக்காது.
—- கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.
kannan_vnp@yahoo.com
***
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- தேடல்
- துகில்
- இரு கதைகள்
- விடியும் -நாவல்- (35)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- புதிய சாதிகள்
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- ஒரு கவிதை
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- முதலா முடிவா ?
- கண்ணா நீ எங்கே
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- குறியும் குறியீடும்
- உண்மை ஆன்மீகம்
- கவிதை
- அங்கீகாரம்
- பின் விளைவு
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- தேசபக்தியின் தேவை
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- பூமத்திய ரேகை
- சாத்திரமேதுக்கடி ?
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- உடலில் மாற்றம்.
- ஆனந்த ‘வாசன் ‘
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- ஈடன் முதல் மனிதம்
- நான் கேட்ட வரம்
- கவிதைகள்
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- காதலர் தினக்கும்மி
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- உன்பெயர் உச்சரித்து
- காதலுக்கோர் தினமாம்
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?