திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

எச். பீர்முஹம்மது


முரண்பாடுகளின் உலகமாக நடப்பு உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது அதன் ஓட்டத்தில் இருந்து தனிமைப்படுதல் மேலும் உராய்வுகளையே உருவாக்ககூடிய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்கும் பயங்கரவாதம் என்ற சொல்லால் உலகமயமாக்கப்பட்டு வரும் சூழலில் இஸ்லாம் அதன் போக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியது காசலச்சூழலின் நிர்பந்தம் எந்தவொரு கோட்பாடுமே அல்லது மதமே அதன் காலத்தை தாண்டியதில்லை என்பதே வரலாறு. மேற்கத்திய உலகமானது இஸ்லாத்தை வன்முறைவாதத்தின் பிரதிபலிப்பு என்கிறது. எர்னஸ்ட் ரேனன் என்ற பிரான்சு கல்லூாி பேராசிாியர் இஸ்லாத்தை பின்வருமாறு மதிப்பிடுகிறார்.

இஸ்லாம் என்பது ஐரோப்பாவுக்கு முற்றிலும் எதிரானது. இஸ்லாம் விஞ்ஞூானம் மற்றும் சிவில் சமூகத்திற்கு எதிரானது. இது செமிடிக் ஆன்மாவின் பயங்கரவாத எளிமைத்தன்மை கொண்டது. இது எல்லாவிதமான நுட்பமான/ அறிவுபூர்வமான உணர்வுகளையும்/ சிந்தனைகளையும் மூடச் செய்கிறது.

இம்மாதிாியான கருத்தாக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் தற்காலத்தில் அவற்றின் மீதான சுய-பாிசோதனை அவசியமான ஒன்றாகும்.

சில வருடங்களுக்கு முன்பு கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிாியர் சார்லஸ் குர்ஸ்மான் தொகுத்த லிபெறல் இஸ்லாம் என்ற புத்தகம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கிறது.

இந்த புத்தகத்தை சமீபகால கட்டங்களில் வெளியான புதிய முயற்சி எனலாம். இதில் எகிப்தின் பிரபல சிந்தனையாளர்கள் அப்துல் ராசிக்/ முகமது தாஹா/ முகம்மது நட்சிர்/ இக்பால்/ சபீர் அக்தர்/ பஸ்லுர் ரஹ்மான்/பெண்ணிய வாதிகளான பாத்திமா மொனிஸி/ நாஸிரா சென் முதலானவர்கள் உட்பட மொத்தம் முப்பத்தி இரண்டு பேர்களின் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதில் முதலாவது பகுதி அதிகாரவர்க்கத்திற்கு எதிரான குரலாக அமைந்திருக்கிறது. நபியின் வழிகாட்டும் நெறி முறைகள் மற்றும் குர்ஆன் இவற்றிலிருந்து பெறக்கூடிய சாரமானது வடிவத்தை எப்பொழுதும் பாதிக்கக்கூடாது என்பதுதான். இங்கு நபியின் போதனையானது வெறும் மத போதனை மட்டுமே. அரசமைப்புக்கு உகந்தது அல்ல. அரசமைப்பையும்/ மத நடவடிக்கையையும் பிாித்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். நபிகள் நாயகம் கூட ஒரு தடவை நீ;ங்கள்உங்களின் உலக விவகாரங்களில் அதிக அறிவுடையவராக விளங்குகின்றீர்கள் என்றார். அரசு என்பது வர்க்க சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் சமயத்தில் மதாீதியான அரசு என்பது வர்க்க மோதல்களையே உண்டு பண்ணும். இஸ்லாமின் தொடக்க காலம் முதல் இன்றுவரை இது தான் நடந்து வருகிறது. கலீபாக்களின் ஆட்சியில் தொடங்கிய இது அப்பாஸிட்/ உமய்யத் கலீபாக்களின் காலத்தில் தீவிரமடைந்தது.

ஜனநாயகமான நெறிமுறைக்கு மதம் ஒத்துவராவிட்டால் அரசானது பாசிச வடிவம் பெறும். இஸ்லாமிய நாடுகளுக்கு இன்று தேவை சட்டபூர்வமான ஜனநாயக அரசாங்கங்கள். இது மட்டுமே மரபான மற்றும் ஆன்மீக அடிப்படையிலான நவீன அரசமைப்பின் வடிவமைப்புக்கு உதவும். மக்களே தேர்ந்தெடுக்கும் அரசமைப்பில் கருத்து சுதந்திரத்துக்கு இடமுண்டு. எழுத்து சுதந்திரமுண்டு. ஆனால் இஸ்லாமிய உலக அனுபவம் இதற்கு மாறாகவே அமைந்துள்ளது. அடிப்படை வாதத்தின் தாயகமான சவூதி அரேபியாவில் நிலைமை கொடுரமானதாக இருக்கிறது. அல் ராசிக் தொடங்கி பலரை மரணிக்க செய்த பெருமை அதற்கே சாரும். நவ ஏகாதிபத்தியத்தின் எதிரொளிப்பாளராக இருந்து கொண்டு தூய்மை வாதத்தை போதிக்கும் அதன் நிலைப்பாடானது சுய முரண் பாடாக இருக்கிறது. நவ ஏகாதிபத்தியத்திற்கு ஜனநாயகம் என்பது சறுக்கலான விஷயம். ஆகவே தான் அது இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயக அரசாங்கங்கள் அமைந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது.

இஸ்லாமிய சட்ட நடைமுறை (ஷாீஆ) நவீன போக்குக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கிறது. குர்ஆனின் மொத்தமுள்ள ஆறாயிரம் வசனங்களில் இருநூறு வசனங்கள் மட்டுமே சட்டாீதியான கண்ணோட்டம் உடையவை. குர்ஆனின் முதன்மை நோக்கமே ஒழுக்கவியல் இயல்புதான். சட்டாீதியானது அல்ல. சட்டம் என்கிற போது குற்றவியல்/ சிவில் இரண்டும் கலந்ததாகும். அதில் குற்றவியல் சட்ட நெறிமுறைகள் சுமோிய/ அசாிய/ பாபிலோனிய சமூகத்தின் எச்சங்களின் வெளிப்பாடாகும். பல நாடுகளில் இவை பொடா சட்டம் மாதிாியே பயன்படுத்தப்படுகின்றன. இதில் அங்ககீனம்/ மரண தண்டனை ஆகியவை முக்கியமானவை. மரண தண்டனை என்பது அநாகாீக காலகட்டத்தின் பழிவாங்கலின் நாகாீக வடிவம் சமூகம் குழுக்களாக பிளவுறும் போது ஏற்படும் உழைப்பு பிாிவினையில் மோதல்கள் தவிர்க்க இயலாதவாறு எழுகின்றன. இவை காலச்சூழலின் நிர்பந்தமாக கூட இருக்கலாம். குற்றச்சூழலின் காரணியை ஆராயாமல் காாியத்தை தேடுவது அபத்தமானதாகும். நபியின் காலகட்டத்தில் அரேபிய மண்டலத்தில் இனக்குழுக்களிடையே இத்தகைய மோதல்கள் அதிகம் நடந்தேறின. அன்று கொள்ளையடிப்பது சட்டபூர்வமான தொழிலாக இருந்தது. ஒரு அர்த்தத்தில் புனிதப் போர்கள் அனைத்தும் (கொள்ளை போர்களே அப்படிப்பட்ட போாினால் கிடைத்த வருவாயில் ஐந்தில் ஒரு பகுதி அரசாங்க கஜனாவுக்கு செலுத்த வேண்டும் மற்றதை போர் வீரர்களுக்கிடையே சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட செல்வத்தை தம்மிடையே சமமாக பங்கிட்டு கொள்ளும் ஏற்பாட்டினாலும் இயல்பாகவே அரேபிய இனக்குழுக்களிடையே நிலவிய சகோதரத்துவத்தாலும் அவர்களிடையே சமத்துவ கோட்பாடு பரவியது. நபிகள் நாயகம் அரசாட்சி முறைக்கு எதிரானவர் அல்ல. அதனால்தான் அவர் முதலில் தமது பக்கத்து அரசர்களான ஈரானின் ஜர்துஷ்த்தி/ ஷாபுக்கும்/ ரோமின் கைசருக்கும் இஸ்லாமில் சேர அழைப்பு விடுத்தார். ஆனாலும் அவர் அரேபியர் முன்பும் இஸ்லாமிய உலகின் முன்பு வைக்க விரும்பிய அரசாட்சி முறையில் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை.

ஆட்சி முறை என்பதை காட்டிலும் நபிகள் சிறிய சிறிய இனங்களாக சிதறி கிடந்த பல்வேறு மக்களையும்/ குழுக்களையும் போினமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். இதன் விளைவு தான் உலகளாவிய பேரரசு கோட்பாடு. இதுவே முகமது கோாிக்கும்/ துக்களக்கிற்கும்/ கஜினி முகமதுவுக்கும் கோட்பாடாக இருந்தது. பொதுவாக மன்னர்கள் என்பவர்களின் நிலைபாடானது சார்பியல் ாீதியானது. அது அளவு மாறுதலை உடையது.

நவீன உலகில் இஸ்லாத்தின் மீதான சவால்களில் ஒன்று பெண்களைப்பற்றியதாகும். இஸ்லாமின் காலம் அநாகாீக கட்டத்திலிருந்து நாகாீக காலகட்டத்துக்கு மாறிக் கொண்டிருந்த காலகட்டம். புராதன உழைப்பு பிாிவினைக்கு பின் பெண் வீடு என்ற நிறுவனத்துடன் அடையாளப்படுத்தப்பட்டாள். இதன் தொடர்ச்சியாக குடும்பம் என்ற முதன்மை நிறுவனம் அவளை உள் அமர்த்த செய்தது. அரேபிய இனக்குழுக்களிடையே பெண் இரண்டாம் தர வகையினமாக கருதப்பட்டாள். தடையற்ற தாராள பாலுறவு நடவடிக்கை அச்சமூகங்களில் நிலவியது. இனக்குழுக்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர் (அன்று சண்டையிடுதல்/ அதிகாரபூர்வமானதாக இருந்தது)சண்டையிடுதல்/மோதலில் முதல் பலிகடாவாக பெண் ஆக்கப்பட்டாள். சண்டையிடுபவர்கள் தங்கள் எதிாிகளை வஞ்சம் தீர்ப்பதற்கு அவர்களின் வீட்டு பெண்களை பலி கடாவாக்கப்பட்டனர். (தற்காலத்தில் கலவரங்களில் பெண் அதிகமாக பாதிக்கப்படுவது மாதிாி) விருப்பு வெறுப்பற்ற தாராள ஒழுக்கவியல் நடைமுறையிலிருந்தது. இம்மாதிாியான நிலைமையை மாற்றி மாற்று சமூக ஒழுக்கவியலை கட்டமைப்பதே நபியின் நோக்கமாக இருந்தது. அதனால் தான் ஆண் – பெண்களுக்கான பல்வேறு நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன. உடை அமைப்பானது மேலும் தீவிரமாக்கப்பட்டது (அதற்கு அன்றைய பாலைவனச்சூழலும் காரணமாக இருந்திருக்கலாம்) உடை என்பதே வித்தியாசப்படுத்தும் நடவடிக்கை வித்தியாசப்படுத்தலே மனித இருப்புக்கு காரணமாக இருக்கிறது. இங்கு வித்தியாசப்படுத்தல் ஒத்திவைத்தலையும் சேர்த்தே உருவாக்கி விடுகிறது. வித்தியாசப்படுத்தல் வெளி சார்ந்ததாகவும் ஒத்திவைத்தல் காலம் சார்ந்ததாகவும் இருக்கிறது. இந்த வித்தியாசப்படுத்தலின் கூறாக இருக்கும் உடையானது காலத்தை தாண்டி விடுவதில்லை. உடையின் அமைப்பு முறை பிரவாகமாக இருக்கிறது. பல்வேறு காலங்களில் பல்வேறு சமூகங்களில் பல்வேறு விதமான உடைகள் வெளிப்பட்டிருக்கின்றன. உடையின் உாிமைக்காக வேண்டி போராட்டம் நடைபெற்ற காலங்கள் உண்டு. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள்சீலை போராட்டம் இதற்கு உதாரணம். இன்றைய உலகமயமாக்கல் ஆடை குறைப்பை முன்வைக்கிறது. அதிலும் பெண்ணை முன்னிலைப்படுத்திதான் அதை முன் வைக்கிறது. இன்றைய சூழலில் பெண்ணை அவளின் உடையிலிருந்து பிாித்து பார்க்க முடிவதில்லை. அவளை விட உடை முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாதிாியான சிக்கலான சூழலில் இஸ்லாமிய பெண்ணின் உடை கவனம் பெறுகிறது. முகத்தை மறைத்தல் ஒரு பாதுகாப்பு அணுகுமுறை என்பதிலிருந்து ஓர் அடையாளம் பெறும் தனிமைப்படுத்தலாக இன்று மாறி விட்டது. இன்று பர்தா முறை எளிமை மற்றும் பாவனை ஆகி வரும் சூழலில் அதன் பின்னால் ஒழுக்க மற்றும் அறவியல் உள்ளடக்கங்கள் போர்த்தப்படுகின்றன. ஒரு மூடிய பனிமூட்டத்தின் உதாரணத்திற்கு இதனை ஒப்பிட முடியும். பெண்ணுக்கான நடத்தை விதிகள் இஸ்லாமின் ஆரம்ப சூழலில் ஏற்படுத்தப்பட்டு அதுவே ஞூகாலத்தை தாண்டி நிற்பது என்பதாக வடிவமைக்கப்பட்டதன் விளைவு தான் இஸ்லாமிய பெண்ணுக்கான இன்றைய அவலநிலை. உலகம் முழுவதும் பெண்களில் குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் சமூக/ பொருளாதார/ கலாச்சார சூழலில் மிகவும் பின்தங்கி உள்ளனர். இன ாீதியான வன்முறைகளில் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நிவாரணம் தேடிக் கொள்ள அவர்களுக்கு போதிய நிவாரணிகள் இல்லை. மாறாக போின்ப மருந்துகள் தான் அதிகம் தடவப்படுகின்றன. சில இஸ்லாமிய நாடுகளில் பெண் பற்றிய வறட்டு பார்வையே நிலவி வருகின்றன. சமீபத்தில் சவூதி அரேபியாவில் பெண் குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளி கூடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்ட போது அவர்களை காப்பாற்ற ஆண்கள் யாரும் முன்வரவில்லை. காரணம் அந்நிய ஆண்கள் பெண்களை தொடக்கூடாது என்ற நிரந்தரமான நடத்தை விதி விளைவு சம்மந்தப்பட்டவர்கள் வருவதற்கு முன்பு உயிர் அவர்களை விட்டு முந்திச் சென்று விட்டது. இயல்பாகவே ஆணாதிக்க சமூகத்தின் சொல்லாடல்கள் இஸ்லாமிய பெண்கள் மீது அதிகம் திணிக்கப்படுகின்றன. இம்மாதிாியான கருத்தாக்கங்களை பற்றியும்/ பெண்ணின் அரசியல் தலைமை பற்றியும் இப்பு[த்தகத்தில் விாிவாகவே பெண்ணியவாதிகள் விவாதிக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்ற பிறகு யூதர்களுடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமை நிறுவுவதற்காக யூதர்களுடன் ஏற்பட்ட மோதல் இறுதியில் உடன் படிக்கை மூலம் சமரசம் செய்யப்பட்டது. இதுதான் இஸ்லாமிய வரலாற்றில் முதல் அரசியல் ஒப்பந்தம். அது மொத்தம் நாற்பத்தி ஏழு ஷரத்துக்களை கொண்டது இது மதீனா ஆவணம் என்றழைக்கப்படுகிறது.

1. இந்த ஆவணம் நபி மற்றும் குரைஷ்/ (மக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்) அன்சார்கள் (மதீனாபாசிகள்) அவர்களுடன் இணைந்து போாிட்டவர்களால் தயாாிக்கப்பட்டது.

2. இது புதிய மனித சமூகத்தை உருவாக்கும்.

3. பனூ அவ்ப் (இனக்குழுக்களில் ஒன்று) தாங்கள் இரத்தம் சிந்தியதற்கான விலையை பெறுவார்கள். மேலும் அவர்கள் தாங்கள் பிடித்து வைத்துள்ள போர்கைதிகளை அதற்கான ஈட்டு தொகை கொடுத்து விடுதலை செய்ய வேண்டும்.

4. ஒரு முஸ்லீம் மற்ற முஸ்லீமை கொல்லக் கூடாது. மேலும் நம்பிக்கையற்றோர்களுக்கு உதவக்கூடாது.

5. எந்தவொரு யூதரும் அடைக்கலம் தேடி வரும் போது அவர்களுக்கு அடைக்கலமும்/ நிதி உதவியும் அளிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை கொல்லக்கூடாது.

இப்படியான ஷரத்துகளோடு இந்த ஒப்பந்தம் நீள்கிறது. ஆனால் நபியின் காலத்திற்கு பிறகு பல ஷரத்துக்கள் மீறப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கலகங்கள் கிளர்ச்சிகள் குழப்பங்கள் ஏற்பட்டன. அதிகார போட்டியும்/ ஆதிக்க மனோபாவமும் ஏற்பட்டது. உமய்யத் மற்றும் அப்பாஸிட் கலீபாக்களின் காலத்தில் இது மேலும் அதிகமானது. ஒவ்வொரு கலகமும் இன்னொரு கலகத்தை உமிழும். காரண- காிய விதிப்படி கலகங்களின் காரணங்கள் முடிவற்றவை. தொடர்ச்சியற்றவை. இவைகளின் நீட்சிதான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான்/ ஈரான்/ ஈராக்/ இந்தோனேஷியா/ எகிப்து மற்றும் ஆப்பிாிக்க நாடுகளே இதற்கு உதாரணங்கள். யூதம்/ கிறிஸ்தவம்/ இஸ்லாம் இவை மூன்றும் செமிட்டிக் மதங்கள். செமிட்டிக் மதங்களின் கருது கோள்களின் ஒருமை ஏக இறைவழிபாட்டில் அடங்கியிருக்கின்றது. எந்தவொரு கோட்பாடும் வெளியை தாண்டி பிரதிபலிக்கும் போது அவ்வெளியின் கலாச்சாரத்தை உள்வாங்கி கொள்ளுவது தவிர்க்க இயலாததாகும். கிறிஸ்தவத்தின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் இஸ்லாம் இந்த இடத்தில் தவறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதன் சாதகமான அம்சம் அது பரவிய இடத்தில் கோட்பாடு சமத்துவத்தை உருவாக்கியது தான். இந்திய சூழலில் சாதிய கட்டுமானத்தையும்/ ஆப்பிாிக்காவின் நிற வெறியையும் போக்கியது குறிப்பிட தகுந்த அம்சம்.

இன்று இஸ்லாமிய உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் ஜிசாத் (புனித போர்) குறித்து அதிகம் இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. புனிதபோர் அன்றைய காலச் சூழலில் தவிர்க்க இயலாத வகையில் எழுந்த நிர்பந்தம் இனக்குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காலிக யுக்தியே அது. அது காலத்தை தாண்டி தற்போது பிரதிபலிக்க செய்யப்படுவதால் எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகிறது. பல பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக குர்ஆனின் வசனங்களை வெட்டி எடுத்து தங்களின் நடவடிக்கைகளுக்கு இணையாக ஒட்டிக் கொள்கின்றன. 1992 இல் இருந்து 1/50/000 மக்களை அல்ஜீாியாவில் கொன்று குவித்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் அமொிக்க வெளியுறவு கொள்கைக்கும் தொடர்பு இருக்க முடியாது. இந்தியாவில் சங்-பாிவார் பயங்கரவாதம்/ பாகிஸ்தான்/ ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்/ இஸ்ரேலில் யூத பயங்கரவாதம்/ செர்பியா மற்றும் அமொிக்காவில் கிறிஸ்தவ பயங்கரவாதம் இப்படியாக அதன் எல்லை சுழன்று வருகிறது.

ஐநா சபையின் அறிக்கை பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

இந்த மத பயங்கரவாதங்கள் அவற்றை வளர்க்கும் சமூக பொருளாதார காரணிகளின் முழுமைத்தன்மையுடன் பார்க்கப்பட வேண்டும்.

இஸ்லாமின் சமூக பொருளாதார காரணிகள் தங்களுக்கான காாியங்களை தேடிக் கொள்ள வேண்டும். பொருளாதார கோட்பாடுகள் அதன் அடிப்படையிலான சமூக வளர்ச்சி திட்டங்களின் வடிவமைப்பு மாறிக் கொண்டு வரும் சூழலில் அதுவும் மாறுதலுக்கு உட்பட வேண்டும். நான்காம் தலைமுறை தகவல் தொடர்பு வளர்ச்சியை நோக்கியதாக பிரபஞ்சம் இயங்கி கொண்டிருக்கும் சூழலில் காலத்தை பின்னுக்கு தள்ளல் பின்னடைவையே ஏற்படுத்தும் நிலவுக்கு மனிதன் சென்றுவிட்ட போதும்/ நிலவை பற்றி தீர்மானமான முடிவிற்கு இஸ்லாமிய உலகத்தால் வர முடியவில்லை. எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலுமே புதிய விஞ்ஞூான கண்டுபிடிப்புகளோ அல்லது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளோ இல்லை. ஸ்பெயினின் இஸ்லாமிய ஆட்சியில் நிறைய சிந்தனையாளர்கள் உருவானார்கள். அல்பராபி/ இப்னு துபைல்/ பூவலி மஸ்கவியா/அபூயாகூப் கீந்தி ஆகியோர் குறிப்பிட தகுந்தவர்கள். பல இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மதத்துரோக குற்றச்சாட்டின் போில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய ஷாீஅத் சட்டத்தின்படி யூதர்களும் கிறிஸ்தவர்களும் திம்மிகள் தான். ஆக கோட்பாட்டின் நிரந்தர தன்மை பொருந்தா சூழலையே உருவாக்கும் வெளியை தாண்டுவது என்பது இயலாதது. தாண்டியதால் ஏற்பட்ட விளைவுகளே பக்கங்களின் வரலாறாக இருக்கின்றது. இஸ்லாமிய உலகிற்கு இன்றைய தேவையாக புதிய ஜனநாயகம்/ வலுவான அரசமைப்பு/ விஞ்ஞூான/ கலாச்சார வளர்ச்சி நிலை/ சமூக பொருளாதார காரணிகளின் மறு உருவாக்கம்/ ஆகியவை இருக்கின்றது. யூதமும்/ கிறிஸ்தவமும் ஏற்கெனவே இதனை செய்து விட்டன. சுய-விமர்சனம் என்பது ஓர் இயங்கியல் அணுகுமுறை இதுவே அவசியமானதாகும். இம்மாதிாியான புதிய சிந்தனைகளின் தொடக்கமாக இந்த புத்தகத்தை குறிப்பிடலாம். லிபரல் இஸ்லாம் என்ற இந்த தொகுப்பு இஸ்லாமில் நவ ஐனநாயகத்தை உருவாக்கும் முயற்சி எனலாம்.

1. ‘Liberal Islam ‘

A Source book

edited by – Charles Kurzman

Oxford University Press 1998

2. ‘Modernist Islam ‘

(1840 – 1940)

A Source book

edited by – Charles Kurzman

Oxford University Press 2000

peer8@rediffmail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது