அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 17 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
மஞ்சுளா நவநீதன்
அடுத்து கேள்விகள் புறக்கணிக்கப் படும் இஸ்லாமியர்கள் பற்றியது. இந்தியாவில் புறக்கணிக்கப் படுபவர்கள் என்று பார்த்தால் எல்லாக் குழுவினரும் அடங்குவார்கள். இருப்பினும் மார்க்ஸின் கேள்வி பதில்களைப் பார்க்கலாம்.
கேள்வி 27 : இசுலாமியரது நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படு வருவதாக முன்பு ஒரு முறை குறிப்பிட்டார்கள். விளக்க முடியுமா ? என்பது மார்க்ஸ் முன்வைக்கும் கேள்வி.
‘முடியும் ‘ என்று தொடங்கி முதன் முதல் மார்க்ஸ் முன்வைப்பதே காஷ்மீர்ப் பிரசினை பற்றியது தான். ‘காசுமீர் விஷயத்தில் ஐ நா அவைத் தீர்மானத்திற்கு எதிராகவும் கொடுத்த வாக்குறுதியை மீறியும் இந்திய அரசு நடந்து கொள்வதிலிருந்து தொடங்கலாம். ‘ என்று தொடர்கிறார் மார்க்ஸ். இந்தியா ஐ நா தீர்மானத்திலிருந்து மீறியது என்பது எப்படி இஸ்லாமியர்களின் சிறுபான்மையினரின் உரிமை மீறல் என்று தெரியவில்லை. அதில்லாமல், உருது மொழியைப் புறக்கணிப்பது என்ற செயலுக்கு அவர் உதாரணம் தருவது காங்கிரஸாரின் ஆட்சியில் நடைபெற்ற விஷயங்கள். அதற்கு ஏன் பா ஜ க மீது குற்றம் சாட்ட வேண்டும் என்றும் புரியவில்லை. ‘மொழிவாரி மானிலங்கள் என்பது அடிப்படையில் ஜனநாயகக் கோரிக்கை தான் என்றாலும் . அதுவும் அது கூட இசுலாமியருக்குப் பாதிப்பாகவே முடிந்தது என்று எழுதிச் செல்கிறார். இது வேறெப்படி இருக்க முடியும் என்று தெரியவில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் தமிழ் தவிர மற்ற மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள் போலவே அவர்களும் ஓரளவு பாதிக்கப் பட்டவர்கள் தான். இது தவிர்க்கக் கூடிய ஒன்று என்று தோன்றவில்லை. எல்லா மானிலங்களிலும் மொழி வாரியாக, மதம் வாரியாக, சிறுபான்மையினர் இருக்கத் தான் செய்வார்கள். சாதியினை அடிப்படையாய் வைத்துப் பார்த்தால், பெரிதும் எல்லாச்சாதியினருமே சிறுபான்மையினர் தான். சிறுபான்மையினரின் கல்வி நிறுவன உரிமைகள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.
‘வடநாட்டில் பெரும்பாலான இசுலாமியரின் தாய்மொழி உருது. ஆனாலும் உருது மொழிக்கான மானிலம் ஏதுமில்லை ‘ என்பது மார்க்ஸின் அறியாமையைக் குறிக்கிறது. உருது மட்டுமல்ல, செளராஷ்டிரா, கொங்கணி, குடகு மொழி, துளு மொழி, படகர் மொழி போன்ற மலைவாசிகளில் மொழி உட்பட பல மொழிகளுக்குத் தமக்கென மானிலம் இல்லை. அதில்லாமல் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் கூட உருது தாய் மொழியாய் இருந்தது. உருது விசேஷமான இந்திய மொழி. இந்த மொழியை பெர்சியன்., அரபு போன்ற வேற்று நாட்டு மொழி என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். முகலாய அரசின் கீழ் ராணுவமுகாம்களில் உருவான இந்த மொழி ‘இந்துஸ்தானி ‘ என்ற பெயரில் இரு எழுத்துருக்களில் – பெர்சிய எழுத்துரு, தேவநாகரி எழுத்துருக்கள் – வழங்கலாயிற்று. பெர்சிய எழுத்துருவில் எழுதப் பட்டபோது இது உருது என்று வழங்கப் பட்டது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது, இந்துஸ்தானி மொழிகளின் வேறு வேறு வடிவங்கள் வடிகட்டப்படும், கலவை செய்யப்பட்டும் உருவான இந்துஸ்தானி வளரலாயிற்று. வடமொழிகளில் பலவும் தேவநாகரி எழுத்துரு என்பதால் தேவநாகரி எழுத்துரு சுலபமாகப் பரவலாயிற்று.
கேள்வி 28 : அரசியல் வகுப்புவாதமயமாகிறது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ?
வகுப்புவாதம் என்றால் இந்து மதவாதம் என்பது தான் மார்க்ஸின் புரிவு என்பதால், மற்ற மதவாதம் இதில் பேசப்படவில்லை. வகுப்புவாதம் ஒன்றையொன்று வளர்க்கும் சூழல் இது. இந்து மதவாதத்திற்கு இஸ்லாமிய மதவாதம் தீர்வாகாது. பா ஜ க வின் மதவாத அரசியல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் , பிராந்தியக் கட்சிகள் இவற்றின் ஒற்றுமையால் வெற்றி கொள்ளப் படவேண்டும். பா ஜ க எதிர்ப்பை இந்துமத எதிர்ப்பாய் மாற்றுவதன் மூல இதைச் செய்ய முடியாது.
கேள்வி 29 : அரசுப் பணிகளில் இசுலாமியர்க்கு உரிய பங்களிக்கப் படவில்லை என்று சொல்கிறீர்களா ?
கேள்வி 30 : இராணுவம், காவல்துறை ஆகியவற்றில் இசுலாமியருக்கு உரிய பங்களிக்கப் பட்டுள்ளதா ?
இந்த் இரு கேள்விகளுக்கும் புள்ளி விபரங்களுடன் இஸ்லாமியருக்கு எப்படி விகிதாசார முறையில் உரிய இடம் கிடைக்க வில்லை என்று மார்க்ஸ் பட்டியலிடுகிறார். விப்ரோவின் இஸ்லாமியத் தொழிலதிபர் அசிம் ப்ரேம்ஜி இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்றாலும் இஸ்லாமிய மக்களுக்கு அவர்களுக்கு உரிய விகிதாசார முறையில் வேலை வாய்ப்புகளோ அல்லது உயர் கல்வி வாய்ப்புகளோ அளிக்கப் படவில்லை என்பது உண்மை தான்.
கேள்வி 31: மதக் கலவரங்களில் கொல்லப் பட்ட இசுலாமியர் பற்றி ஏதேனும் புள்ளி விவரங்கள் உண்டா ?
கேள்வி 32 : சமீபத்திய மதக் கலவரங்களின் பொதுப்படையான பண்புகள் என ஏதாவ்து சொல்ல முடியுமா ?
மதக் கலவரங்களில் இசுலாமியர் மீதான பாதிப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.
கேள்வி : 33 : இந்தியப் பொருளாதாரத்தில் இசுலாமியர் ஆதிக்கம் பற்றி ஏதும் சொல்ல முடியுமா ?
கேள்வி 34 : அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள் வங்கிக் கடன்கள் முதலியவை எந்த அளவு இசுலாமியரைச் சென்றடைகின்றன ?
கேள்வி 35 : கல்வி நிலையில் இசுலாமியர் எப்படி உள்ளனர் ?
கேள்வி 36 : ஆனால் இசுலாமியருக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமாய்ப் பணம் வருகிரதே ?
கேள்வி 37 : இசுலாமியருக்கு எதிராக தொடர்புச் சாதனங்கள் எப்படி செயல் படுகின்றன ?
இந்தக் கேள்விகள் எல்லாமே திட்டமிட்டு இசுலாமியருக்கு எதிராக எல்லோரும் அணி திரள்கிறார்கள் என்ற கருத்தை உருவாக்க எழுப்பபட்டவை. இசுலாமியர் மீதான பொய்ப்பிரசாரம் ஒரு சில ஊடகங்களில் மேற்கொள்ளப் பட்டால், ‘இந்து ‘ போன்ற ஏடுகளில் அப்பட்டமகவே இந்துக்களுக்கு எதிர்ப்பாகக் கருத்துகள் கட்டப் பட்டு வருகின்றன. இந்தியாவின் ஊடகங்கள் அணி சேரா நிலையில் இல்லை. சுதந்திரமான கருத்துகள் வெளியிடப்படுகிற சூழல் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்திற்கு ஆதரவான முறையில் தான் செயல்படுகின்றன. இசுலாமியருக்குப் பணம் வருகிறது போன்ற பொய்ப்பிரசாரங்கள் போலவே, இந்து அமைப்புகளுக்கு வரும் பணம் வன்முறைக்குப் பயன்படுகிறது என்ற பிரசாரம் நடைபெறுகிறது. ஊடகங்களில் உண்மை என்ற அமைப்பு இப்படிச் சாய்வு கொண்ட செய்திகளையும், குறிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டு பத்திரிகைகளைக் கண்டனம் செய்கின்றன. பொதுவாகவே இந்தியாவின் பெரும் ஊடகங்கள் தொழிலதிபர்களின் கட்சி சார்பிற்குப் பாடுபடுகிறவை என்பதால் இந்தச் சாய்வுகள் ஏற்படுகின்றன.
கேள்வி 38 : தொலைக் காட்சியில் திப்பு சுல்தான் கதையைக் கூடத்தான் தொடராக காட்டினார்கள் ?
இதற்கு மார்க்ஸின் பதில் இது : ஆனால் ஒன்றைக் கவனியுங்கள் ஒவ்வொரு வாரமும் ‘திப்பு சுல்தான் தொடருக்கு முன்பாக ‘இது கற்பனைக் கதையின் அடிப்படையிலானது ‘ என்று அறிவிப்புச் செய்தார்கள். ‘ என்பது மார்க்ஸின் குற்றச்சாட்டு ‘ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாய்ச் சொல்லப்படும் சாணக்கியன் கதைக்கும், இராமாயண , மகாபாரதங்களுக்கு இந்த அறிவிப்புக் கிடையாது ‘ என்பது மார்க்ஸின் புகார். பொதுவாக ஊடக மரபு என்னவென்றால் , சமீபத்திய ஆட்களின் கதையினை வெளியிடும்போது ‘இது கற்பனைக் கதையின் அடிப்படையிலானது ‘ என்று கூறுவது, கதைவடிவத்திற்காக எடுத்துக் கொள்ளும் சில சுதந்திரங்களை யாரும் சரித்திர ரீதியாய்ப் பொய் என்று சொல்லிவிடலாகாது என்பதால் தான். ராமாயணம் , மகாபாரதம் போன்ற புராணிகங்களுக்கு இது தேவையில்லை.
‘திரைப்படங்களில் கூட இசுலாமியர் பற்றி ஒரே விதமான பிம்பங்கள் தான் முன்னிறுத்தப் படுகின்றன. ‘நல்ல ‘ இசுலாமியர் என்றால் இந்துக்களோடு அனுசரித்துப் போகிறவர், உதவி செய்கிறவர். உரிமைகளுக்காகப் போராடினால் அவர் நல்ல இசுலாமியரல்ல. ‘ என்பது மார்க்ஸின் தொடர்ந்த பதில். மார்க்ஸ் மனநிலையைக் கவனிக்க வேண்டும். இந்துக்களோடு அனுசரித்துப் போகாதவர் தான் நல்ல முஸ்லீம்.அவர் உதவி செய்யக் கூடாது. உரிமைகளுக்காகப் போராடினால் அவர் இந்துக்களுடன் அனுசரித்துப் போகக் கூடாது.
‘ ‘ரோஜா ‘ ‘ஜாதிமல்லி ‘ போன்ற சமீபத்திய திரைப்படங்களில் இசுலாமியர் வன்முறையாளர்களாகச் சித்தரிக்கப் பட்டது நினைவிருக்கலாம். ‘ என்று மார்க்ஸ் தொடர்கிறார். ‘ரோஜா ‘வில் கதை காஷ்மீரின் பயங்கரவாதிகளைப் பற்றியது. இதில் இசுலாமியரை வன்முறையாளர்களாய்ச் சித்தரிக்காமல் வேறு எப்படிச் சித்தரிக்க முடியும் ? அதில்லாமல் இது போன்ற படங்களில் இசுலாமிய வன்முறையாளர்களையும்,. சாதாரண இஸ்லாமியரையும் வேறுபடுத்திப் பார்ப்பதைக் காணலாம். சமீபத்தில் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யரில் ‘ இந்துக்கள் வன்முறையாளர்களாய்ச் சித்தரிக்கப் பட்டதால் அபர்ணா சென் இஸ்லாமிய வெறியர் என்று சொல்லமுடியுமா ?
கேள்வி 39 : ‘ரோஜா ‘ திரைப்படம் பற்றிச் சொன்னீர்கள். சரி ‘ஜாதி மல்லி ‘யில் பொதுவாக மதக் கலவரம் கண்டிக்கப் படுகிறதே தவிர எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் விதண்டாவாதம் செய்வது போலத் தோன்றுகிறதே.
‘பாலச்சந்தர் போன்ற பார்ப்பனர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் நம் காதுகளில் ஜாதிமல்லையைச் சுற்றிவிட்டுப் போய் விடுவார்கள், ‘ என்று பூச்சாண்டி காட்டுகிறார். பார்ப்பனர்களைத் தாக்காமல் இரண்டுபக்கம் எழுதமுடியாது இவரால். ‘ஹைதராபாத்தில் கலவரம் நடப்பதாய்ச் சித்தரிப்பதால் அது மறைமுகமாக இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல் என்பது மார்க்ஸின் கூற்று.
தென் இந்தியாவில்,தொடர்ந்து மதக் கலவரங்கள் ஹைதராபாத்தில் நடந்து வருகின்றன. அதன் காரணம் முஸ்லிம் தலைவர்கள் என்ற குற்ற உணர்ச்சியில் மார்க்ஸ் இதைச் சொல்கிறார் என்று கொள்ள வேண்டும்.
***
manjulanavaneedhan@yahoo.com
- சகுனம்
- வீசிவிடு தென்றலே…
- உயிரைத் தேடாதே !
- அதற்காக….
- பெண்ணே!
- தமிழ்நாட்டுப்பாடநூல் கழகம் 1996 இல் வெளியிட்ட சமூக அறிவியல் (ஒன்பதாம் வகுப்பு) பாடநூல்
- நினைத்தேன். சொல்கிறேன். கொடிகளும், கோமாளிகளும்
- போர் நாட்குறிப்பு – 29 மார்ச் 2003
- ஜார்ஜ் டபிள்யூ புஷ் : தீவிரவாத கிரிஸ்தவ மத அடிப்படைவாதி
- ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்
- ரம்ஸ்ஃபீல்ட் உருவாக்கிய போர்முறைக்கு ஒரு பரிசோதனை.
- வளைகுடா போரும் கம்யூனிஸ்டுகளும்
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- கடிதங்கள்
- பாசுவின் தவம்
- ஆத்மசாந்தி
- மடையசாமி மாட்டிகிட்டான்…
- ‘Shock and Awe ‘
- ஆசை முகம் மறந்து போச்சே!!
- விளிம்புகளில் நிற்பவர்கள்
- வானத்தின் மழை
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும்.
- பரதநாட்டியம் – சில குறிப்புகள் – 3
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 17 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- அணு உலைகளுடன் பல் குத்தும் துரும்பையும் குறித்து: 4 – சாண எரி வாயு கலனும் கிராம பொருளாதார மேம்பாடும்
- இயல்பும் இன்பமும் (மா. அரங்கநாதனின் ‘சித்தி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 54)
- சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்
- அணு உலைகளுடன் பல் குத்தும் துரும்பையும் குறித்து: 4 – சாண எரி வாயு கலனும் கிராம பொருளாதார மேம்பாடும்
- பாரதம் தயாரித்து நிறுவும் முதல் 500 MWe பேராற்றல் அணுமின் நிலையங்கள்
- அறிவியல் துளிகள்-20
- உடம்பை வெட்டி எறி – உரைவெண்பா
- அறிவியலுக்கு வெளியே மனது.
- …வும், முடிவும், விடிவும், முடி…