உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – பகுதி 3

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

ஒரு மெளன யுத்தம்


பெரும் கடனுக்காளான ஏழை நாடுகளுக்கு உதவி

1996-ல் ஐ எம் எஃப் -உம், உலக வங்கியும் முதன்முறையாக ஏழைநாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிப்பது பற்றி யோசிக்கத் தொடங்கின. பெரும் கடன் தொல்லையிலிருந்து விடுபட வழிமுறைகளும் ஆலோசனைகளாய் வழங்கப்பட்டன. இதன் படி 80 சதவீதக் கடன்கள் ரத்து செய்யப்படும். ஆனால் நாடுகள் உலக வங்கி சொல்வதைக் கேட்க வேண்டும். இதற்காக ஒரு டிரஸ்ட் அமைக்கப் பட்டது.

ஆனால் யதார்த்தத்தில் இது எந்த பலனையும் தரவில்லை. உகாண்டாவும், பொலிவியாவும் ஏப்ரல் 1998-லும், செப்டம்பர் 1998-லும் முறையே கடன் ரத்துத் திட்டத்தை அமல் செய்யத் தொடங்கின – ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே ஆரம்பித்த இடத்திற்கே இந்த நாடுகள் திரும்பி வந்துவிட்டன. விளைபொருள்களின் விலை வீழ்ச்சியாலும், ஏற்றுமதிக்கென உலக வங்கி நியமித்த எல்லைகள் மிக அதிகமாய் இருந்ததாலும், இந்த நாடுகளால் குறியை எட்ட முடியவில்லை. மொஸாம்பிக் நாட்டில் இந்தத் திட்டம் அமல் படுத்தியதில் 1 சதவீதக் கடன் நிவாரணம் தான் பெற முடிந்தது. இதனால் உடல் நலனிற்கோ, கல்விக்கோ இவர்கள் செலவு செய்யமுடியவில்லை.

கடன் நிவாரண இயக்கம் அழுத்தத்தால், ஜனபரி 1999-ல் துணிச்சலான நடவடிக்கை வேண்டும் என்று ஜெர்மன் முதல்வர் ஷ்ரோடர் கோரினார். கோலோன் நகரில் வளர்ந்த நாடுகளின் மாநாட்டின் போது இந்தக் கடன் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும் என்று கோரி 50,000 பேர் மனிதச் சங்கிலி அமைத்துப் போராடினர்.

கோலோன் நகரில் இரண்டாவது திட்டம்.

கோலோன் நகரில் கடன் நிவாரணத்திட்டம் – 2 , பெருத்த விளம்பரத்துடன் தொடங்கப் பட்டது. 100 பில்லியன் கடன் ரத்து செய்யப்படும் என்றும், 25 பில்லியன் இதற்கு மேலும் நிவாரணம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.

ஆனால் 2000 வரையில் 22 நாடுகளையும் சேர்த்து, 12 பில்லியன் டாலர்கள் தான் நிவாரணம் பெற்றன.ஆனால் உகாண்டா மட்டும் தான் எதிர்காலத்திலும் தாக்குப் பிடிக்கக் கூடிய நிலையை அடைந்தது.சில நாடுகளில் கடன் நிவாரணம் நிதர்சனமாய் சில பலன்களை அளித்தது. மொஸாம்பிக் நாட்டில் 60 மில்லியன் டாலர்கள் வளர்ச்சிப் பணிக்குக் கிட்டியது. உடல் நலம், கல்வி, விவசாயம் , வேலைப் பயிற்சி போன்ற துறைகளில் முன்னேற்றம் காண முடிந்தது. ஆனால் மொத்தமாய்ப் பார்க்கும் போது என்ன பலன்கள் எதிர்பார்த்தோமோ அது கிட்டவில்லை. கடன் நிவாரணம் சராசரியாக மூன்றில் ஒரு பகுதி தான் கிட்டியது. இந்த நிவாரணங்களுக்குப் பின்பும், இந்த நாடுகள் உடல் நலத்திற்கான செலவைவிட ஒன்றரை மடங்கு கடனுக்கு அளிக்கிறார்கள். தான்ஸானியாவில் ஆரம்பப் பள்ளியில் சேரக் கூடிய குழந்தைகளில் பாதிப் பேர்தான் பள்ளிக்குப் போக முடிகிறது. மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பட்டினி கிடக்கிறார்கள். ஆனால் கடனுக்கு இப்போது கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாய் வரும் வருடங்களில் தான்ஸானியா தர வேண்டியிருக்கும்.

ந்தத் திட்டத்தில் பல கடன் பட்ட நாடுகள் சேர்க்கப் படவில்லை. உலக வங்கியின் நிபந்தனைகளையும் பல நாடுகள் பின்பற்ற முடியவில்லை. சில நாடுகள் நிவாரணத்திற்குத் தகுதி பெறவில்லை என்று தள்ளப் பட்டுவிட்டன.நைஜீரியா ஜனநாயக நாடானதன் பின்பு 1998-ல் நிவாரணம் பெறும் நாட்டின் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது. கடன் தவணைகள் நீட்டிக்கப் ப்டானவே தவிர நிவாரணம் பெறவில்லை. ஆனால் இந்த நாடும் சரி, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும் சரி கடன் நிவாரணம் பெறவில்லை என்றால் சமூகப் பிரசினைகள் தீரவே தீராது. ஹைடி நாடும் நிவாரணம் பெறத் தகுதி பெறவில்லை. இந்த நாட்டின் பாதிக் கடன் துவாலியே என்ற சர்வாதிகாரியின் கீழ் பெறப்பட்டது. மிக்க ஏழ்மை கொண்ட நாடு இது.50 சதவீதம் படிப்பறிவும், 70 சதவீதம் வேலையின்மையும் கொண்டது இந்த நாடு. லத்தீன் அமெரிக்கா கரீபியன் நாடுகளைப் போல் இரு மடங்கு குழந்தைகள் மரண விகிதம் கொண்டது இந்த நாடு.

இந்த அரசியல் நடவடிக்கையால் விளங்குவது என்னவென்றால், கடன் கொடுத்த நாடுகள் கடன் நிவாரணம் அளிக்காது என்பது தான். கடன் கொடுப்பவர்கள் யாருக்குக் கடன் எவ்வளவு கொடுப்பது, எப்படிக் கொடுப்பது, எப்போது கொடுப்பது என்று தீர்மானிக்கிறார்கள். கடன் நிவாரணம் அளிப்பதைக் காட்டிலும் இதைவைத்து அரசியல் செய்வது தான் இந்த வளர்ந்த நாடுகளின் வேலை. இதை வைத்து தாம் எப்படி செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வது என்பதும் அவர்கள் நோக்கு. இதனால் கிடைத்த பலன் , நிவாரணம் தேவைப்படும் பல நாடுகள் நிவாரணம் பெறவில்லை என்பதே. எல்லாக் கடன்களும் ரத்து செய்யப்படவேண்டும், ஏற்றுமதி வருவாய் ஏழை நாடுகளின் கல்வி மற்றும் உடல் நலத்திற்குச் செலவிடப் படவேண்டும் என்பது ‘ ஜ்ஊபிலி யு எஸ் ஏ ‘ என்ற அமைப்பின் கோரிக்கை.

போதைப் பொருட்கள்

லட்சக்கணக்கான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் சட்ட அங்கீகாரம் இல்லாத போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனர். போதைப் பொருட்களுக்கு எதிராக அரசாங்கங்கள் பெரும் போராட்டம் நடத்த பணத்தைக் கொட்டியுள்ளன. இருந்தும் ஐரோப்பாவில் போதைப் பொருட்கள் அமோகமாய் பரவி வருகின்றன. இதனால் சமூகச் சிதறலும், வன்முறைக் குற்றங்களும் பெருகியுள்ளன.

உண்மை : லத்தீன் அமெரிக்காவில் பொலிவியா மிக்க ஏழ்மையான நாடு. குழந்தைகள் மரணம் விகிதாசாரம் மிக அதிகமாய் உள்ள நாடு.இந்த நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் பாதி கடனுக்க்ப் போய் விடுகிறது. பொலிவியாவின் மக்களில் 40 சதவீத மக்கள் போதைப் பொருள்கள் வியாபாரத்தை நம்பி வாழ்க்கை நடத்த நேர்ந்துள்ளது.

கடனை அடிப்படையாய்க் கொண்ட வங்கிகள்

வணிக வங்கிகள் இந்த திரும்பிவராக் கடன்கள் பெருகியதால் பெரு நட்டம் அடையவில்லை. இதன் காரணம் என்னவென்றால், வளர்ந்த நாடுகளின் வரி செலுத்துவோர் (பலசமயம் அவர்களுகுத் தெரியாமலே) இந்த நட்டத்தைக் குறைக்க உதவியுள்ளனர். பணவீக்கமும், நாணயமாற்று லாபமும் நட்டத்தைக் குறைக்க உதவியுள்ளன.

பல நாடுகளில் இந்தக் கடன்களை வங்கிகள் நட்டமெனக் காண்பித்து விட்டன. இதனால் அவர்கள் செலுத்தும் வரியும் குறைகிறது. இருந்தும் கடன் பெற்ற நாடுகள் திருப்பித் தரக் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள், வங்கிகளின் நட்டம் சரிக்கட்டும் விதத்தில், நாடுகளின் கடன் சரிசெய்யப் படாததால், மக்கள் மீது சுமை அதிகம்.

இந்தக் கடன்களை ‘விற்பதன் ‘ மூலமும் இந்த வங்கிகள் பணம் ஈட்டுகின்றன. வரியும் குறைகிறது.இரண்டாவது பணச்சந்தை என்ற பெயரில், வங்கிகள் இந்தக் கடனை வாங்கி , கடன் வசூல் செய்து லாபம் ஈட்ட முயல்கின்றன.

வங்கிகள் இந்த கடன் விற்பனையால் வரிக் குறைப்புப் பெற்று லாபத்தை அதிகரிக்கின்றன. ஆனால் கடன் சுமையுள்ள நாடுகளுக்கோ எந்தப் பயனும் இல்லை.

நியாயமற்ற போர்

தெற்கு நாடுகளுக்கு ஆயுதவிற்பனை செய்பவர்களுக்கு பிரிட்டன் மானியம் அளிக்கிறது. 1993/94-ல் பிரிட்டன் அளித்த ஏற்றுமதி உதவி மானியத்தில் சரி பாதி ஆயுத விற்பனைக்காக அளிக்கப்பட்டது. இந்த மானியங்கள் காலப்போக்கில் ஏழை நாடுகளின் கடன்சுமைகளாய் மாறின. பிரிட்டனுக்கு ஏழை நாடுகள் தரவேண்டிய கடனில் 96 சதவீதம் ஆயுதங்களுக்கானது. பெரும் ராணுவச் செலவினால் ஏழைநாடுகள் கடனாளியாயின. யுத்த அபாயம் நெருங்க நெருங்க கடன்களைத் திருப்பித் தரமுடியாத நிலைக்கு இவை தள்ளப்படுகின்றன. 1960-லிருந்து 1987 வரையிலேழை நாடுகள் கிட்டத்தட்ட 400 பில்லியன் டாலர்கள் ராணுவதளவாடங்களுக்காகக் கடன் வாங்கியுள்ளன.

1980-ல் உச்சத்தை எட்டிய ராணுவ வணிகம் 1980-களின் பின்பகுதியில் சரியத் தொடங்கியது. பெரும் ராணுவச்செலவுகள் செய்த ராணுவ சர்வாதிகாரிகள் இப்போது அதிகாரத்தில் இல்லை. இன்றைய அரசுகள் ராணுவதளவாடங்கள வாங்காவிடினும், பழைய கடன்சுமைகள் உள்ளன.

கடன்கள் யுத்தத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஏழைநாடுகள் கடன் தொல்லையால் மேலும் ஏழையாகும்போது, மக்கள் போராடத் தொடங்குகிறார்கள். வன்முறை பெருகிப் போராய் உருமாற்றம் பெறுகின்றன. 1980-ல் கடன் பிர்சைனை உச்சமடைந்தபோது மூன்றாவது உலக நாடுகளில் யுத்தங்கள் மூண்டன. போர் அபாயம் பெருகியது.

Series Navigation

ஒரு மெளன யுத்தம்

ஒரு மெளன யுத்தம்

உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

ஒரு மெளன யுத்தம் – கடன்கள் ஏழைகளை எப்படிப் பாதிக்கிறது


— ‘கடன் தொல்லையால் பள்ளிகள். ஆஸ்பத்திரிகள் மூடப்படுகின்றன. போரைவிட மோசமாய் உயிரழிவு நிகழ்கிறது. ‘ என்கிறார் டாக்டர் அதாபயோ அடெட்ஜி . இவர் வளர்ச்சி உத்திகளின் ஆப்பிரிக்க மையத்தைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளராய் இருந்தவர்.

இங்கிலாந்து நாட்டில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி 200 மில்லியன் டாலர் திரட்டி 1997-ல் ஆப்பிரிக்காவிற்கு அளித்தார்கள். ஆனால் ஒரே வாரத்தில் கடன் வட்டிக்கு இது போய்விட்டது.

— மிக மோசமான கடன் தொல்லையால் அவதிபடும் 32 நாடுகளில் 25 சஹாராவிற்குக் கீழ் உள்ள ஆப்பிரிக்க நாடுகள்.

— ஆப்பிரிக்கா உடல்நலத்திற்குச் செலவிடும் தொகையைப் போல நான்கு மடங்கு கடன் வட்டிக்குப் போய் விடுகிறது.

— 1960-ல் உலகின் பணக்கார நாடுகளின் 20 சதவீத நாடுகளின் வருமானம், மிக அடிமட்டத்தில் உள்ள 20 சதவீத ஏழை நாடுகளைப் போல 30 மடங்காய் இருந்தது. இப்போது இது 60 மடங்காகி விட்டது.

— ஆஃப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போராட ஏழரை பில்லியன் டாலர்களிலிருந்து 15 பில்லியன் வரை தேவைப்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால் கடன் வட்டிக்காக மட்டும் ஆப்பிரிக்க நாடுகள் வருடந்தோறும் 13 பில்லியன் டாலர்கள் செலவு செய்கின்றன.

— கடன் அடிமைத் தனம் என்பது வெளிநாட்டு உதவியைத் தலைகீழ் ஆக்கினதாகும். அதாவது ஏழை நாடுகளுக்கு ஒரு டாலர் உதவி கிடைத்தால் 1.30 டாலர் கடன் வட்டிக்குச் செலவாகிவிடுகிறது.

மூன்றாவது உலகின் கடன் தொல்லையால் தான் கோடிக்கணக்கான மக்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள்.

உடல் நலம்

உடல் நலத்திற்குச் செலவிடுவது 1980-லிருந்து மூன்றாவது உலக நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் செலவிடமுடியாதவர்கள் மருந்து ஏதும் வாங்க வசதியில்லாமல் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார்கள். ஜிம்பாவேயில் 1990-ல் ஐ எம் எஃப் திட்டம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து மக்கள் உடல் நலனுக்கான செலவு மூன்றில் ஒரு பகுதியாய்க் குறைந்துவிட்டது.

1960-களிலும், 70-களிலும் கொஞ்சநஞ்சம் உடல்நலத்திற்காகச் செலவு செய்திருந்த நிலை மாறி இப்போது கடன் தொல்லையால் குறைந்து வருகிறது. ஐந்து வயதிற்குள் இறந்து போகும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. ஜிம்பாவே, ஜாம்பியா, நிகாரகுவா, சிலி, ஜமைக்கா போன்ற நாடுகளில் இது அப்பட்டமாய்த் தெரிகிறது. அழிக்கப்பட்ட நோய்கள் பட்டியலில் இருந்த டி பி, மஞ்சள் சுரம் போன்ற நோய்கள் மீண்டும் உலா வர ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு பரிகாரமோ, தடுப்பூசியோ கிடைப்பது அரிதாகி இருக்கிறது.

கல்வி

கல்விக்கு பண வசூல் நடப்பதால், குழந்தைகளை மக்கள் பள்ளிக்கு அனுப்பமுடிவதில்லை. ஏழைகளுக்குக் கல்வி மறுக்கப் படுகிறது.

சஹாராவிற்குக் கீழ் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இது தெரியவருகிறது. 6-11 வயதான குழந்தைகள் பள்ளியில் சேர்வது 1980-ல் 60 சதவீதம் . 1990-ல் ஐம்பதுக்கும் கீழே வந்துவிட்டது. தான்ஸானியாவில் ஐ எம் எஃ திட்டத்தால் பள்ளிக்கு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டவுடன் ஆரம்பப் பள்ளிகளிலும், நடுத்தரப் பள்ளிகளிலும் குழந்தைகள் சேர்வது குறைந்துவிட்டது.

Employment

வேலை வாய்ப்பு

அரசாங்க வேலைவாய்ப்புகளைக் குறைக்கச் சொல்லி ஐ எம் எஃப் வலியுறுத்துகிறது. இதனால் வேலையிழப்பும், சம்பளக் குறைப்பும் நிகழ்கிரது.

1980-களிலிருந்து உண்மையான சம்பள வருமானம் 50-60 சதவீதமாய்க் குறைந்துவிட்டது.மெக்சிகோ, கோஸ்டா ரிகா, பொலிவியா போன்ற நாடுகளில் சராசரி வருமானம் மூன்றில் ஒரு பகுதியாய்க் குறைந்து விட்டது. 1980-லிருந்து வேலையில்லாத் திநாட்டம் வெகுவாக அதிகரித்துவிட்டது. – ஜாம்பியா, தான்சானியா, கானா போன்ற நாடுகளில் 20 சதவீத மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதனால் அரசாங்க வரிவசூலும் பாதிக்கப் படுகிறது.

வர்த்தகம்

SAP திட்டத்தின் கீழ் நாடுகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவல்ல பயிர்களை உற்பத்தி செய்தால் தான் டாலரில் சம்பாதித்து கடனை அடைக்க முடியும். எல்லா ஏழை நாடுகளும் ஒரே மாதிரி பயிரிடுவதால், உலகச் சந்தையில் இவற்றின் விலை குறைகிறது. இதனால் ஏழை நாடுகளில் உள்ள பண்ணை விவசாயத் தொழிலாளர்களின் சம்பளம் குறைகிறது. கூலி வீழ்ச்சியடைகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்கள் மெக்ஸிகோ மக்காச் சோளத்தை விளைவித்து வந்திருக்கிறது. ஆனால் ஐ எம் எஃப் திட்டத்தால் இப்போது தன் தேவையில் 20 சதவீதம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

ஐ எம் எஃப் மெக்சிகோ மீது அழுத்தம் தந்து, உணவுப்பயிர்களுக்குப் பதில் ஸ்ட்ராபெரி, பழவகைகள் போன்ற பணப்பயிர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. விவசாயப் பயிருக்கு வர்த்தகக் கட்டுப்பாட்டையும் நீக்க வேண்டும் என்று ஐ எம் எஃப் வலியுறுத்தியது. இதனால் அமெரிக்கா உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பண்டங்களுடன் மெக்சிகோ போட்டி போட வேண்டியதாய் உள்ளது. ஆனால் அமெரிக்காவோ பெரும் மான்யங்கள் அளித்து தன் உற்பத்தியை நிலைப் படுத்திக் கொள்கிறது. உற்பத்தியைப் பெருக்குகிறது.

இதனால் மெக்சிகோவிற்குத் தான் தோல்வி. ஏழைகள் துயருறுகிறார்கள். மெக்சிகோவின் மக்களில் 20 சதவீதம் பேருக்கு பணமாய்ச் சம்பளம் கிடைப்பதில்லை. 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மூன்று டாலர்களில் தான் உயிர் வாழவேண்டும்.

தாமதமான, நிறைவு தராத தீர்வுகள்

கடன் பிரசினைக்கு அரசியல் தீர்வுகள்

1970-களின் பிற்பகுதியிலிருந்து மூன்றாவது உலக நாடுகள் கடன்களைத் திருப்பித் தரமுடியாத நிலை ஏற்படலாம் என்று உணர்வு ஏற்படத் தொடங்கியது. இதை எப்படி வசூல் செய்வது என்று பல நாடுகளும் பலவாறாய்த் திட்டம் தீட்டத் தொடங்கின.

கடன் பிரசினையை முழுமையாய் இந்தத் திட்டங்கள் எதிர்கொள்ளவில்லை.தென் அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் சீரடையத் தொடங்கியுள்ளது என்றாலும், பிரசினை மற்ற நாடுகள் எதிலும் தீரவில்லை.

ப்ராடி திட்டம்

1989 வாக்கில் வணிக வங்கிகள் பெருமளவு திரும்பிவராக்கடனை நட்டக் கணக்கில் காட்டிவிட்டன. ப்ராடி சொன்னது என்னவென்றால், இந்தக்கடன்களை மொத்தமாக வங்கிகள் நட்டக் கணக்கில் எழுதிவிட வேண்டும். பெருமளவு கடன் வாங்கியுள்ள தேசங்களுக்கு திருப்பித் தரவேண்டிய தொகைஅயைக் கணிசமாய்க் குறைக்க வேண்டும்.

வங்கிகள் இதை இரு விதமாய்ச் செய்யும்

— சில கடன்களை ஐ எம் எஃப் நிதி கொண்டு அடைத்துவிடவேண்டும்.

–சில கடன்களை நீண்டகாலக் கடன்களாய் மாற்ற வேண்டும். இது கடன் பத்திரங்களாய் மாற்றப்பட்டு சந்தையில் விற்கப் படலாம்.

ஆனால் கடன் பட்ட நாடுகளுக்கு, மொத்தக் கடனைக் குறைப்பதற்கு, இந்தத்திட்டம் உதவவில்லை. வர்த்தகக் கடன்கள் அடைபட்ட போதே வேறு கடன்கள் பெருகலாயின. ப்ராடி கடன் பத்திரங்கள் மீது வட்டி செலுத்த வேண்டி மீண்டும் ஏழை நாடுகளின் செல்வம் வெளியே செல்ல ஆரம்பித்தது. ஏற்கனவே கடன் வட்டி எந்த அளவு செலுத்தி வந்தார்களோ அதே நிலையில் அவர்கள் கடன் செலுத்த நேர்ந்ததால் ஏதும் பயன் அவர்களுக்குக் கிட்டவில்லை.

ட்ரினிடாட்/ நேபிள்ஸ் ஷரத்துகள்

ஜான் மேஜர் கடன்களில் பாதிக் கடனை நீக்கிவிட்டு மீதிக் கடனை வேறு தவணை முறையை நிர்ணயிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் சமர்ப்பித்தார். 18 பில்லியன் டாலர் அளவு இந்தத் திட்டம் கடன் நாடுகளின் கடனை இது குறைத்திருக்கும்.

மேலே சென்று மூன்றில் இரண்டு பகுதிக் கடன்களை நீக்கிவிடலாம் என்று அவர் சொன்னார். 1994-ல் G-7 வளர்ந்த ஏழு நாடுகளின் உச்சகட்டக் கூட்டத்தில் இந்தத் திட்டம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால் நடைமுறையில் இந்தக் குறைப்பு மிகச் சொற்பமான கடனுக்குத் தான் கிட்டியுள்ளது.கடன் கொடுத்தவர்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த தயக்கம் காட்டியிருக்கிறார்கள். ஐ எம் எஃப் கடன்களுக்கும், உலக வங்கிக் கடன்களுக்கும் இந்தத் திட்டம் இல்லை என்பது ஒன்று. SAP-யின் கீழ் உள்ள கண்டிப்பான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தாக வேண்டிய நெருக்கடி இன்னொரு புறம்.

(தொடரும்…)

Series Navigation

உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை -1

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue


தனிப்பட்டவர்கள் அதிகமாக கடன் பட்டால், எந்த அளவுக்கு ஒருவர் கடன் பட முடியும் என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதன் பெயர் திவால். அந்த எல்லைக்குக் கீழ் கடன் கொடுப்பவர் ஒரு நபரை விழ விடமாட்டார். அதற்கு மேல் அவருக்கு கடன் கொடுக்க மாட்டார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு எல்லைக்கோடு நாடுகளுக்கு இல்லை. ஆகவே, ஏழை நாடுகள் வெகுவாக கடன் பட்டால், அவர்கள் தொடர்ந்து ஆழத்துக்குச் சென்று கொண்டே இருப்பது நடக்கிறது. இந்த ஏழை நாடுகளின் அரசாங்கங்கள் ஏராளமான அளவு பணம், மேற்கத்திய நாடுகளுக்க்கும், இந்த மேற்கத்திய நாடுகள் கட்டுப்படுத்தும் பலநாட்டு நிதி நிறுவனங்களுக்கும் கடன் பட்டிருக்கின்றன. இதே நிறுவனங்கள் தான், இந்த ஏழை நாடுகள் பட்டிருக்கும் கடனை எந்த அளவுக்கு விலக்கிக் கொள்ளலாம் என்பதையும் நிர்ணயிக்க அதிகாரம் பெற்றிருக்கின்றன.

இது நியாயமற்றது.

சரி ஆரம்பத்துக்கு வருவோம்.

எப்படி இந்த பெரும் அளவு கடன் சேர்க்கப்பட்டது ? ஏன் இந்தக் கடனை திரும்பச் செலுத்துவது இந்த நாடுகளுக்குச் சிரமமாக இருக்கிறது ?

பிறப்பு அமெரிக்காவில்

1960இல், அமெரிக்க அரசாங்கம் பற்றாக்குறை பட்ஜட் போட ஆர ஆரம்பித்தது. ஆகவே, வரும் வருமானத்தைவிட செலவு அதிகமாக இருந்ததால், அது அதிகமாக டாலர்களை அச்சடிக்க ஆரம்பித்தது. ஆகவே, உலக டாலர் மதிப்பு விழ ஆரம்பித்தது.

இது பெரும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு கெட்ட செய்தி. ஏனெனில், பெட்ரோல் டாலரில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, அவர்கள் உற்பத்தி செய்த பெட்ரோலுக்கு குறைவான அளவே பணம் பெற்றார்கள். ஆகவே, 1973இல் அவர்கள் பெட்ரோல் விலையைக் கூட்டினார்கள். இந்தப் பணம் ஏராளமாக வந்தது. இந்தப்பணத்தை மேற்கத்திய நாடுகளில் இருக்கும் வங்கிகளில் முடக்கினார்கள்.

எதிர்காலத்தை நம்பிய வங்கிகள்.

இதன் பிறகு பிரச்னை ஆரம்பித்தது. ஏராளமாக பணம் குவிந்ததால், வட்டி விகிதம் குறைய ஆரம்பித்தது. வங்கிகள் பலநாட்டு நிதிப் பிரச்னையை எதிர்நோக்கின. வட்டி குறையக்கூடாது என்பதற்காக மிக அதிகமாக பணத்தை வெளியே கடன் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்காக அவர்கள் மூன்றாம் உலக நாடுகளை அணுகினார்கள். இந்த மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் அப்போது நன்றாகவே முன்னேறி வந்துகொண்டிருந்தது. அப்போது, அவர்கள் தங்களது முன்னேற்றத்தை தொடர்ந்து நடத்துவதற்கும், விலையேறிய பெட்ரோலை வாங்குவதற்கும் அவர்களுக்கு பணம் வேண்டியிருந்தது.

வங்கிகள் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை கடன் கொடுக்க ஆரம்பித்தன. வாங்குபவர்களுக்கு திருப்பித்தரும் வலு இருக்கிறதா என்று பார்ப்பதுதான் எந்த கடன் கொடுப்பவரும் செய்வது. அதையெல்லாம் பார்க்காமல் இந்த மேல்நாட்டு வங்கிகள் கடன் கொடுக்க ஆரம்பித்தன. மூன்றாம் உலக நாடுகளும் சந்தோஷமாக கடன் வாங்க ஆரம்பித்தன. ஏனெனில், இதன் வட்டி விகிதம், தங்கள் நாட்டு பணவீக்கத்தை விட குறைவாக இருந்தது.

சர்வாதிகாரிகளின் வளர்ச்சி

மெக்ஸிகோ, வெனிசூவெலா போன்ற சில நாடுகள் தாங்கள் முன்னால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக அதே வங்கிகளிடம் கடன் வாங்க ஆரம்பித்தன. ஆனால், மற்ற நாடுகளைப் பொறுத்த மட்டில், இதுதான் முதல் முறையாக வியாபார வங்கிகளிடம் கடன் வாங்குவது. அவைகளில் பல, தங்கள் நாட்டு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகத்தான் வாங்கின.

இறுதியில், வாங்கிய கடனில் மிகச்சிறிய அளவே ஏழை மக்களுக்கு உதவியது. இந்தக் கடனில் சுமார் ஐந்தில் ஒரு பாகம் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கும், கொடுங்கோல் அரசுகளைத் தக்கவைப்பதற்கும் சென்றது. பல அரசாங்கங்கள் பெரும் முன்னேற்றத்திட்டங்களை ஆரம்பித்தன. இவைகளில் பல பிரயோசனமற்றவை. தனிப்பட்டவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு பல சென்றன. ஏழைகள்தான் ஏமாளிகளானார்கள்.

பேரழிவை நோக்கி

1970இல், மேற்கத்திய நாடுகளால் பணப்பயிர்களை பயிரிட வற்புறுத்தப்பட்டதால், மூன்றாம் உலக நாடுகள் திடாரென்று தாங்கள் உற்பத்தி செய்யும் கச்சாப்பொருட்களுக்கு கிடைத்துவந்த விலை கிடைக்காமல் போனதைக் கண்டு கோபம் அடைந்தன. செம்பு, காபி, டா, பருத்தி, கோக்கோ ஆகியவை வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் எல்லா நாடுகளிடமும் சொல்லியதால், அவை எல்லாம் இவைகளை உற்பத்தி செய்ததால், ஏராளமான பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டதால், இவைகளின் விலை குறைந்தது.

பிறகு வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்தது. இது அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்ததால் இன்னமும் அதிகரித்தது. இதற்கிடையில் பெட்ரோல் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. எலிப்பொறி தயார். மூன்றாம் உலக நாடுகள் ஏற்றுமதிக்கு தாங்கள் பெற்றுவந்த பணத்தைவிட குறைவாக இப்போது பெறுகின்றன. தாங்கள் வாங்கிய கடனுக்கு அதிகமாக வட்டி தர வேண்டிய கட்டாயம். தாங்கள் இறக்குமதி செய்யவேண்டிய பொருட்களுக்குப் பணம் வேண்டும். இதைவிட கொடுமை, தாங்கள் கொடுக்க வேண்டிய வட்டிக்கு வேண்டிய பணத்துக்காக அதே நிறுவனங்களிடம் கடன் கேட்க வேண்டும்.

எலிப்பொறியில்

1982இல் மெக்ஸிகோ தன்னால் கடனை திருப்பித்தர இயலாது என்று தனக்கு கடன் கொடுத்தவர்களிடன் கூறியது. International Monetary Fund (IMF)உம், World Bankஉம் உள்ளே நுழைந்து, இன்னும் கடினமான சட்டதிட்டங்களுடன், வட்டியைச் செலுத்தப் பணம் தான் கொடுப்பதாக கூறியது. ஐஎம்எஃப் மேற்கத்திய நாடுகள் கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனம். பெறுபவராக இருந்தாலும், பெறுபவர் போல நடந்து கொள்ளாமல் மற்ற கடன்களைக் கொடுத்து தீர்க்க , குறுகிய கால கடன் கொடுக்கும் நிறுவனம்.

இந்த முறைமை தொடர்ந்து தொடர்ந்து, மெக்ஸிகோ நிலையில் தன்னைக்கண்ட மற்ற நாடுகளிலும் பிரயோகம் செய்யப்பட்டது. கடன் அதிகரிக்க அதிகரிக்க, இன்னும் புதிய கடன்கள் அதன் தலைகள் மேல் ஏற்றப்பட்டன.

அடிப்படையில் சொல்லப்போனால், ஏழை நாடுகள் திவாலாக்கப்பட்டன.

பிரச்னையை தீர்க்கவந்தவர்கள்

1982இல் மெக்ஸிகோ தான் பெற்ற கடனை திருப்பிக்கொடுக்க இயலவில்லை என்று சொன்னபோது, அகில உலகக் கடன் அமைப்பே பிரச்னைக்குள்ளானது. மெக்ஸிகோ ஏராளமான பணத்தை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் திருப்பித்தர வேண்டும். அவை இந்தப் பணத்தை இழந்துவிடத் தயாரில்லை. ஆகவே அவை எல்லாம் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஐஎம்எஃப் நிறுவனத்திடம் ஒரு திட்டத்தை அளித்து, கடன் பளுவை பல வருடங்களுக்கு பரப்பி விட ஆலோசனை தந்தன.

அதில் தொடங்கி ஐ எம் எஃப் பும் , உலக வங்கியும் – உலகின் முதன்மையான இரு நிதி நிறுவனங்கள் — வட்டி கொடுக்க முடியாத நாடுகளுக்கெல்லாம் மேல்ம் கடன் அளித்து, கடன் திருப்பித் தரும் தவணையை அதிகரித்து வந்திருக்கின்றன.

ஆனால் இந்தப் புதிய கடன்கள் மேலும் கடன் சுமையையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. தம் நாட்டில் மிக கடுமையான பொருளாதாரச் சீரமைப்பை இந்த நாடுகள் கடைப்பிடிக்கவேண்டும். இவை Structural Adjustment Programs (SAPs) அடிப்படைச் சீரமைப்புத் திட்டம் என்று அறியப் படுகிறது. SAPping the Poor

ஏழைகளைச் சுரண்டுதல்

அதாவது இந்தத் திட்டங்களின் படி நாடுகள் பணம் ஈட்ட வேண்டும்- எப்படி- ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இறக்குமதியைக் குறைக்கவேண்டும். ஒரு சில நாடுகளில் இந்தத் திட்டம் உதவி செய்துள்ளது . ஆனால் பெரும்பாலான நாடுகளில் இது பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்தத் திட்டம் செயல்பட்ட நாடுகளிலெல்லாம் ஏழைகள் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

நிறைய வெளிநாட்டுச் செலாவணி கிடைக்கவேணி இந்த நாடுகள் கீழ்க்கண்ட நடைமுறைகளை மேற்கொள்கின்றன.

– ஆரோக்கியம், கல்வி, சமூக நலத்திட்டங்கள் இவற்றில் செலவு குறைக்கப் படுகிறது.

– நாணய மதிப்புக் குறைப்புச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்றுமதி வருவாய் குறைகிறது. இறக்குமதி செலவு அதிகரிக்கிறது.

– உணவுக்குச் செலுத்தி வந்த மானியங்கள் குறைக்கப் படுகின்றன. இதனால் அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏறிவிடுகிறது.

– அரசு தொழிற்சாலைகளில் ஊழியர்களின் வருமானம் குறைக்கப்படுகிறது. அவர்கள் கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

– தனியார்மயமாதல் நிஅக்ழ்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் நுழைகின்றன.

– சிறிய அளவில் நடந்து வந்தளுணவுப்பண்ட விவசாயம் அருகி, ஏற்றுமதியை முன்னிறுத்திய விவசாயத்தால் பெரும்பண்ணைகள் தோன்றுகின்றன. விவசாயிகள் தம் நிலத்தை இழக்க நேரிடுகிறது. பெரும் பண்ணைகளில் இவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

(அடுத்து: ஒரு மெளன யுத்தம்- கடன்கள் ஏழைகளை எபப்டிப் பாதிக்கிறது )

Series Navigation

செய்தி

செய்தி