தவிப்பு

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

எஸ் ஜெயலட்சுமி



சிவகாமி ஆச்சிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அன்று காலை ரயிலில் தான் திருநெல்வேலி வந்தாள். நவம்பர் மாதம் பிறந்துவிட்டால் டில்லி குளிர் தாங்க முடியாது என்ப தால் தீபாவளிக்கே ஊருக்கு வந்து விட்டாள். ஆச்சி குளித்து விட்டு காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மருமகள் மீனாக்ஷி, “அத்தே! ஒங்க பேத்திப் பொண்ணு பேறு கால சமயத்தில நீங்க வந்திடமேன்னு நெனச் சேன். நீங்க வந்தது எனக்கு ரொம்பத் தெம்பா இருக்கு” என்றாள்.
”எம் பேத்திப் பொண்ண எங்க காணூம்?” கேட்டுக் கொண்டிருக்கும் போதே வாக்கிங் போயிருந்த ராஜி உள்ளே வந்தாள். எட்டுமாதச் சூலியான அவளைப் பார்த்த ஆச்சி வாஞ்சையுடன், “என்னம்மா, ராஜி நல்லாயிருக்கியா? என்றாள். ஆச்சி நான் கும்புடறேன். எனக்குத் திருநீறு பூசுங்க” என்று வணங்கினாள்
ஆச்சி குளித்து விட்டு வந்த பின் சங்கரலிங்கமும் குளித்து விட்டு நேரக பூஜை அறைக்குள் சென்றான். மீனாக்ஷி போய் விளக்கை ஏற்றி விட்டு குக்கரில் இட்டிலிக்கு மாவை ஊற்றப் போன நேரம் மீனாக்ஷி இங்கவாயேன் என்று பூஜை அறையி லிருந்து சங்கரலிங்கம் கத்தும் சத்தம் கேட்டது. ”என்னங்க? என்று பதறி ஓடினாள் மீனாக்ஷி. சங்கர லிங்கம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்தான். நெற்றி யெல்லாம் வியர்த்திருந்த்து. “அத்தை, ராஜி இங்க வாருங்களேன். அப்பாவுக்கு உடம்பு முடியல” என்று உரக்கக் கூவினாள். காலைல ஸ்டேஷனுக்கு வந்த போது கூட நல்லாத்தானே யிருந்தான்! அதுக்குள்ள என்ன ஆச்சு?” என்று உள்ளே வந்தவள் மகன் படும் பாட்
டைக் கண்டு என்னையா என்ன செய்யறது?” என்றாள். எதுவானாலும் நாம டாக்டர் கிட்ட காட்டுவோம் என்ற மீனாக்ஷி டாக்டருக்கு போன் செய்தாள். அப்படியே ஆட்டோவையும் வரச்சொன்னாள். “ராஜி நாம இன் னிக்கு செக்கப்புக்குப் போகவேண்டாம். நீ ஆச்சி கூட வீட்ல இரு. இன்னிக்கு அண்ணன்கிட்ட இருந்து கட்டா யம் போன் வரும். நான் அப்பா கூட டாக்டர்கிட்ட போறேன்” என்றாள்.
இதற்குள் ராஜி பீரோவிலிருந்து பணத்தை எடுத்து மீனாக்ஷியின் கைப்பையில் வைத் தாள். மீனாக்ஷி கொடுத்த ஹார்லிக்ஸைக் குடித்த சங்கரலிங்கம் மீனாக்ஷியின் உதவியோடு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோவில் ஏறும் போதே, ” ராஜி உங்க அத்தைக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லு” என்றாள் மீனாக்ஷி. ஆட்டோ போனதும் உள்ளே வந்த ராஜியிடம், ”ஒங்கண்ணிக்கு இது தான் மாசமா?” என்றாள்
“ஆமா ஆச்சி அமெரிக்காவில இருக்கற அண்ணிக்கு இன்னிக்குத்தான் நாள்குறிச்சுக் குடுத்திருக்காங்க. அதான் நல்ல படியா அகணுமேன்னு அம்மா கவலைப் பட்டுக்கிட்டேயிருக்காங்க. ஆச்சிக்குக் கவலை அதி கரித்தது.
எடுத்து வைத்திருந்த மாவை இட்டிலிக்கு ஊற்றும் போதே ஆச்சியின் மனம் அலை பாய்ந்தது.”சங்கரலிங்கம் ஏற்கெனவே பிரஷர் சுகருன்னு மாத்திரைகளை முழுங்கிக்கிட்டே யிருக்கான். இந்தப் பொண்ணு நல்லபடியா பெத்துப் பொழைக்கணுமே!
கோமதியம்மா! நீதான் நல்லபடியா ரெண்டு பாத்திரமா ஆக்கித் தரணும்” என்று வேண்டிக் கொண்டாள் ஆச்சி யின் மனம் அடுத்த வினாடியே அமெரிக்காவில் இருக்கும் பேரனிடம் சென்றது. பேரன் வேறு ஜாதியில் பொண்ணெடுத்து விட்டானே என்ற ஆதங்கம் ஆச்சிக்கு
ரொம்பவே யிருந்தது. ஆனால் இப்பொழுது அதெல்லாம் மறந்தே போய்விட்டது. எங்கோ கண்காணாத தூரத்தில் இருக்கும் பேரன் பெண்டாட்டியிடம் பரிவு மிகுந்தது. தாயுமானவரே! நீதான் அந்தப் பொண்ணுக்குத் தாயாரா இருந்து காப்பாத்தணும் என்று வேண்டினாள்.
”ஆச்சி இட்லி ரெடியாயிடுத்தா?” என்று ராஜி கேட்ட பிறகே சுய உணர்வு வந்தது ஆச்சிக்கு. ராஜி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது போன் ஒலித்தது.”ஆச்சி அத்தைதான் கூப்பிடறாங்க” மகளிடமிருந்து போன் என்றதும் ஆச்சி காஸ் அடுப்பை அணைத்தாள். “என்னம்மா? அண்ணனுக்கு என்ன ஒடம் புக்கு? எந்த டாக்டர்கிட்ட போயிருக்காங்க?” என்று கேட் டதும் தான் போனவர்கள் இதுவரை போன் பண்ண வில்லையே என்று மனம் தவிக்க ஆரம்பித்தது.
”முருகா! எம்புள்ளைக்கு ஒண்ணும் ஆகாம இருக்கணுமே! ரெண்டு சூலிப் பிள்ளைங்க இருக்கே! எம்பேரப்புள்ளைக்கு நல்ல படியா பிள்ளை பொறக்கட்டும். ஒங்கோவில்ல வந்து முடி எறக்கச் சொல்லறேன்” என்று மஞ்சள் துணியில் காசை முடிந்து வைத்தாள். மீண்டும் போன்!
அமெரிக்காவில் இருக்கும் பேரப் புள்ளைதான் கூப்பிட்டான். ஆச்சிதான் போனை எடுத்தாள். பேரனின் குரலைக் கேட்டதும் ஆச்சியின் குரல் தழுதழுத்தது. சரவணா1 இப்பத்தான் நம்ம திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கிட்டேன். அவ எப்படியிருக்கா?” என்றாள். “ஆச்சி இப்பத்தான் மாலாவை உள்ளே கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க”
“கடவுளே தாயும் புள்ளையும் நல்லபடியா இருக்கட்டும், என்று வாய் முணுமுணுத்தாலும் மனம் ஆட்டோவில் போன மகனையே சுற்றி வந்தது. “அம்மா! கோமதித் தாயே! உங்க ஊரு சாமி பேரைத்தான் எம்மகனுக்கு வெச்சிருக்கேன். அவனுக்கு நல்ல வழி விடு என்று சொல்லிக் கொண்டே விளக்குமுன் சென்று கும்பிட் டாள். அதற்குள் போன் ஒலிக்கவே ராஜி எடுத்தாள். அவள் முகத்தில் கவலை தெரிந்தது. அவள் பேசிய தொன்றும் புரியவில்லை என்றாலும் ஐ.சி.யு. என்ற வார்த்தை மட்டும் புரிந்தது.
“கடவுளே! இது என்ன சோதனை மேல் சோதனையா இருக்கே! இந்தப் பொண் ணுக்கு வேற வளைகாப்பு அடுக்கணும் பிரசவச் செலவு வேற. அந்தப் பொண்ணு நல்ல படியா பெத்துப்
பொழைக்கணும். அமெரிக்கா என்ன மெட்ராஸா, பம்பாயா? நெனச்சவுடனே ஓடி வர முடியுமா? இப்ப இருக்கற நெலமைல அவளை விட்டுட்டு வர முடியுமா?
இதுக்குத்தான் தூர தொலவுக்குப் போகாதீங்கன்னு சொன்னா இந்தக் காலத்துப் பிள்ளைங்க கேக்கவா செய்யறாங்க?” என்று அலுத்துக் கொண்டாள்.
வாசலில் ஆட்டோ வந்து நிற்கவே ஆவலுடன் பார்த்தார்கள். ராஜியின் அத்தை
பார்வதியும் அவள் கனவரும் இறங்குவதைக் கண்ட ஆச்சிக்கும் ராஜிக்கும் கொஞ்சம் தெம்பு வந்தது. ”சரி, நீங்க போயிட்டு வாங்க, அண்ணி கிட்ட கவலைப் படாதே, நான் பணம் கொண்டு வந்திருக்கேன்னு சொல் லுங்க. நீங்க அங்க போய் அண்ணன் இருக்கற நெல மைக்கு போன் பண்ணுங்க” என்றாள் பார்வதி. அதே ஆட்டோவிலேயே பார்வதியின் கணவர் ஆஸ்பத்திரி சென்றார்.
மூவரும் உள்ளே வரும் போதே போன் மணி கூப்பிட்ட்து. கடவுளே நல்ல சேதியாக இருக்க வேண்டுமே என்று மூவரும் மன சுக்குள் வேண்டிக் கொண்டனர். ஆச்சிக்கு அடி வயிற்றை என்னவோ செய்தது. ரொம்ப சந்தோஷம். கங்க்ராட்ஸ்! என்ற வார்த்தைகளைக் கேட்டதும் வயிற்றில் பால்வார்த்தது போல் இருந்தது. ”என்ன புள்ளை?” ஆச்சிக்கு ஓரளவு விஷயம் விளங்கி விட்டது.
”அம்மா ஒனக்குப் பூட்டன் பொறந்திருக்கான்”. அதன் பிறகு பார்வதி சொன்னதொன்றும் ஆச்சியின் காதில் விழவேயில்லை. “முருகா! எங்க வமிசம் விளங்க ஒரு புள்ளை வந்தாச்சு. எம்புள்ளையும் காப்பாத்தப்பா!” என்று
இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டாள்.
மீண்டும் போன்! பார்வதியின்
கணவர் தான் பேசினார். ”பார்வதி! ஒண்ணும் கவலைப் பட வேண்டாம். நல்ல சமயத்தில கூட்டிக் கிட்டு வந்து அட்மிட் பண்ணினதால தப்பிச்சோம். பெரிய டாக்டர் கிட்ட கேட்டேன். இந்தத் தடவை பரவாயில்லை. கொஞ் சம் மைல்டாகப் போச்சு. ஹார்ட் அட்டாக் தான். ஆனா ரொம்ப சிவியரா இல்லாததால கவலையில்லை.

இனிமே பிரஷர், சுகர், டயட் எல்லாமே கண்ட்ரோல்ல இருக்கும் படியா பாத்துக்க ணும். இன்னிக்கு நைட் நான் இங்க இருக்கேன். நீயும் அங்கேயே இரு. ஆச்சியையும் ராஜியையும் தைரியமா இருக்கச் சொல்லு. அவங்க பாவம் வந்ததும் வராததுமா
இப்படி ஆனதால ரொம்பவே தவிச்சுப் போயிருப்பாங்க. என்றார். ”ஆமாங்க. அம்மா ரொம்பவே தவிச்சுப் போயிட்டாங்க.
”அண்ணிகிட்ட சொல்லுங்க. அவங்களும் ரொம்பவே தவிச்சிருப்பாங்க. சரவணன் கொஞ்ச முன்னாடிதான் போன் பண்ணினான். அண்ண னுக்குப் பேரன் பொறந்திருக்கறதாச் சொல்லுங்க”. என்றள்

*********************************************************

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி

தவிப்பு

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

நாவாந்துறை டானியல் ஐீவா


என்னெண்டு தொியல நாாி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற தசை இறுகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ… கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது. குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்காாி கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் சாியாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும், இப்புடி வெக்கையாய் இருக்கு…. உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்ல, ஊாில இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டு, உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்…சீ… அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இருக்குது என்று என் மனம் சொல்லியது.

தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே துாக்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன். ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டு, ”தம்பி ஏதும் குடியுமென் ?” என்று கேட்டாள்.

”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்ாீல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.

”நேற்று நீங்க வேலை தேடப் போய்ற்றேங்க எண்டுதான் சொன்னனான். அதுக்கு அவள் என்னைத் தீண்டு போட்டாள். நீங்க வேலை தேடப் போறதில்லையாம், ஊர் சுற்றிப் போட்டு சாப்பாட்டு நேரம் பார்த்து வாறியளாம் எண்டு கவிதா சொல்லுறாள். கல்யாண றெஐிஸ்ரேசன் வருகிற திங்கக்கிழமை ஸ்காபரோ ரவுண் சென்ரலில பதிவு செய்கிறதாம். கல்யாணம் மாியகொறற்றி சேச்சிலை ஒழுங்கு பண்ணியிருக்கிறாளாம். கல்யாணக்காட்டு அடிக்கிறதுக்கு பரடைஸ் அச்சகத்தில குடுத்திட்டாளாம். என்னமோ எனக்கு பயமாக இருக்குது. தம்பி உன்ர போக்குக்கும் அவளின்ர போக்குக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள், நான் குறுக்கிட்டு,

”இதெல்லாத்தையும் என்னோடு கதைச் சிருக்கலாம்தானே…. அவ ஏன் என்னோட முகம்விட்டு கதைக்கிறாவில்ல நான் என்ன அவவ திண்டா போடுவன்… ?”

”தொண்ணுாறு நாட்களில்ல ஏதாவது செய்தே ஆகனும். இல்லையென்றால் அது பொிய சிக்கலில வந்து முடியும்.” மாமி சொல்லும் போதே கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.

அச்சம் படர்ந்த பார்வையோடு மாமியின் முகத்தைப் பார்த்தேன். பாவம் மனிசி. ஒரேயொரு பிள்ளை. நல்ல அழகான பெயர் கவிதா. நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகுது. ஒரு நாள் கூட குண்டி குத்தி இருந்து, என்கூட கதைச்சது கிடையாது. எங்கட வீட்டாரும், மாமியும் விரும்பித் தான் இந்தக் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணினவிய, என்ன மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வருடம்தான் இந்த உறவு தொடங்கி, எனக்கு நல்லாய் நினைவுகூட இருக்கு. மன்னாாிலே பனங்கட்டிக் கொட்டிலில் அகதியாய் அம்மமாக்களோடு இருக்கக்கேல ஒரு நாள் இரவு ஒன்பது மணியிருக்கும் எண்டு நினைக்கிறேன். மாமி ரெலிபோன் எடுத்து அம்மாக்கிட்ட கல்யாணம் சம்மந்தமாக கேட்டா. அம்மா என்னட்ட கேக்காமலே ஓமெண்டு சொல்லிப்போட்டா…. வெளிநாட்டுச் சம்மந்த மல்ல! அதுமட்டுமல்ல அம்மா சொல்லுத் தட்டாத பிள்ளையல்ல. நான், எப்படியோஇங்க வந்து சேர்ந்துட்டன். வாழ்வுதான் திசை தொியாமல்இருக்கிறது. கவிதாவை கல்யாணம் செய்வதா…. ? நினைக்கவே மனசு எாிச்சல அடைகிறது. வாழ்வின் நெளிவு சுழிவு தொியாத எனக்கு, வாழ்க்கைத் துணைவியாய் வருபவள்.. ? எந்தக கோணத்தில் பார்த்தாலும், அவளின் அந்நிய கலாச்சாரத்துக்குள் என் மனம் அடங்க மறுக்கிறது. நெஞ்சு நொந்து சுருங்குகிறது.

”தம்பி என்ன மோன கடுமையாய் யோசிக்கிறியள் ?” மாமி கேட்டதும் நினைவிலிருந்து சுயத்திற்கு வந்தேன்.

”என்ன தம்பி எத்தனை நாளாய் போய்ச்சு….ஒருநாள் கூட மனம் திறந்து கதைச்சது கிடையாது. வேலைக்கு போறாள், வாறாள், சாப்பிறாள், தன்ர பாட்டில போய் நெத்திர கொள்ளுறாள். விடிய எழும்பினா வேலைக்கு போறாள். இதென்னெண்டு ஒண்டுமா புாியல…. ? இங்க என்ன தம்பி….பொிய மனுசங்க எண்டு யாரையும் மதிப்பதில்லை. எத்தனை தாய் தேப்பன்மார் பெத்துப்போட்ட பிள்ளைகளை நினைச்சு கண்ணீர் வடிக்கிறாங்க….நான் என்னால ஆனமட்டும் அவளுக்கு புத்திமதி கூறிப்போட்டேன் அவளும் கிறுங்கிற மாதிாி தொியல….”

சற்று மெளனித்து விட்டு மீண்டும் தொடங்கினா…

”கல்யாணம் பேசும் போதே இவள் விருப்பமில்லையெண்டு சொல்லிந்தால் இந்தளவுக்கு வந்திருக்காது. இப்ப என்னண்டால் நீங்க வந்த பின்ன மூஞ்சியைக் காட்டிக் கொண்டு திாியிறாள். என்ர இவர் இருந்திருந்தாலும் ஏதாவது சொல்லிக்கில்லி சாிக்கட்டிப் போடுவார். அவரை கோதாாியில வீழந்து போன, பிரண்டு போன, ஆமிக்காரன் கடலுக்கு போய்விட்டு வரக்கில சுட்டுப் போட்டானுங்க. அதிலயிருந்து ஊரக்குள்ள இருக்கவே பிடிப்பில்லாமல் போய்ச்சுது. எனக்கு அப்பதான் கவிதா ஸ்பொன்சர் பண்ணி எடுத்தவள். வந்ததிலிருந்து ஒருதாய் எண்டு என்ன மதிச்சு நடந்தது கிடையாது. என்ன செய்யிறது. “..தென்னையைப் பெற்றால்இளநீரு, பிள்ளையப் பெற்றால் கண்ணீரு என்று தொியாமல்தானா பாடினாங்க…” மாமியின் கண்கள் கலங்கியது. நான் கண் வெட்டாது, மாமியின் பேச்சையே உன்னித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தால மாமி விம்மி….விம்மி அழத்தொடங்கினா. அழுது கொண்டே…

”என்ர இவர் தங்கப்பவுண். நான் கல்யாணம் செய்யிறத்து முதல் அவர்கூட பேசியதே கிடையாது. ஒரு முறையில் பார்த்தால் அவர் சொந்தம் தான். எங்கட வீட்டுக்காரரும், அவங்கட வீட்டுக்காரரும் பேசித்தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க நான் கூட பொிசாப் படிச்சது கிடையாது. இவர் களங்கண்ணி வலைத் தொழில் சாகிற வரையும் செய்தவர். சிகரட் குடிப்பழக்கம் கிடையாது. வெத்திலை பாக்குக்கூட போடுறது கிடையாது. சாியாய் உங்களைப் போல தான் அவற்ற குணம். வலைஇழுக்க சாமத்தில போகக்கில என்ன எழுப்புங்கோ. நான் தேத்தண்ணீ போட்டுத் தாறன் எண்டு சொன்னா அவர் சொல்லுவார், “நீ ஏன்ாி அந்தச் சாமத்தில எழும்பி உன்ர நித்திரையை குழப்பிறாய். நான் போகக்கில சந்தியில காக்கவட கடையில ஒரு தேத்தண்ணீ குடிச்சிட்டு போறனடி” எண்டு சொல்லுவார். நல்ல மனுசன். வீட்டில சும்மா எண்டு இருக்க மாட்டார். விறகு கொத்தித் தருவார். மிளகாய்த்துாள் இடிச்சுத் தருவார், வலை பொத்துவார். நான் கொஞ்ச நேரம் கூட அவர விட்டிட்டு இருக்க மாட்டன். எங்கயும் வெளியால அவர் போனவரென்டால் எப்ப வருவார்…. எப்ப வருவார் எண்டு வாசலிலேயே பார்த்துக் கொண்டிருப்பேன். அவரும் அப்படித்தான் எங்கயும் போனால் நேரத்தமினக் கெடுத்தாமல் சுறுக்கென்று வந்துடுவார்.இதென்ன இந்தக் காலத்து புள்ளயல நினைச்சாலே கவலையாய் இருக்குது. இவள் கவிதாவிக்குப் புறகு எங்களுக்கு ஒரு புள்ளயும் பிறக்கேல அதால அவளை கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்திட்டோம். மாமியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வந்தது. கனத்த அழுகுரல் அடங்கிப் போகவும். தொலைபேசி கிணுகிணுக்கவும் சாியாய் இருந்தது. மாமி தொலைபேசி இருக்கும் இடம் தேடிப் போய் தொலைபேசியை எடுத்து “கலோ” என்று மாமி சொல்ல….மறுமுனையிலிருந்து ஏதோ குரல் வர….

“ஆரு கவிதாவ ?” என்று மாமி கேட்டா.

இனியும் இந்தக் கதிரையில் தொங்கிக் கொண்டிருக்க மனம் இடம் கொடுக்கல. சடக்கென எழும்பி படுக்கை அறைக்குள் வந்தேன். இனம்புாியாத சந்தேகம் இதயத்துள் குடிகொண்டது. குந்திதேவி கர்ணனைப் பெற்றதும் தன்மான உணர்ச்சி காரணமாய் தான் பெற்ற மகனேயே கங்கையில் விட்டது போல் கவிதாவையும் பிறந்தவுடன் அவள் குணத்தை மாமி அறிந்திருந்தால் கட்டையடி முனங்கால எறிந்திருப்பாளோ கவிதாவை….

என்னுள் தேங்கிக் கிடந்த தேக அலுப்பும், வேதனையும் கண்ணீர் வழி கசிந்தது. உடலுழைப்பில் உரமேறிய உடலில் சந்தேக வலை மாயமாய் வந்து மடிந்து கொண்டது. கவிதாவின் வாழ்வின் மேல் இருந்த என் மதிப்பீடுகள் மங்கிப்போய் மாமியின் மீது சந்தேகம் படர்ந்தது.

மாமி வேணு மெண்டு திட்டமிட்டு இந்தக் கதை கதைக்கிறவ… ? அச்சம், அருவருப்புத் தன்மையோடு என்னுள் அாியாசனம் ஏறியது.இவகாட்டும் பாிவும் பாசமும் என்மீது எதற்காக…. ? ஆர்வத்தை நாசுக்காக புலப்படுத்தி தன்மனதில் இடம் பிடிக்கிற முயற்சியா ?

அறுபதோ, அறுபத்தெட்டோ தொியல.இந்தக் கிழட்டு வயதுக்கு ஒரு பொடியன் தேவையாக்கும். தன்ர புருசன்ர குணம் மாதிாி எண்டு என்னைப் பார்த்து எந்தத் துணிவில சொல்லுவா ? கனடாவில பொம்பிளையல் சாியில்ல எண்டு ஊாில இருக்கேக்க சொன்னவிய அது சாியாய்ப் போச்சு. நேற்று தலையிடிக்குது எண்டு சொன்னவுடன் பாஞ்சு விழுந்து ஓடிவந்து நெத்தியில விக்ஸ் தடவி விட்ட வடிவை பார்த்தாலே அவ வேற பிளான்னில என்ன மடக்கப் பாக்கிற போல. எனக்குள் இருந்த கோபம் ஐயமற்று மாமியில் முடங்கியது. இன்டைக்கு இரண்டில் ஒண்டு பார்க்கத்தான் வேணும் எண்டு நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியால் வருவதற்கும், திடாரென வந்த ஒப்பாாிச் சத்தத்துடன் நான் திறக்க வந்த கதவை மாமி தட்டவும் சாியாய் இருந்தது.

”தம்பி….தம்பி….” என்று தலையில அடிச்சபடி நின்ற மாமியின் கோலத்தைக் கண்டதும், கொப்பளித்துக் கொண்டு வந்த கோபம் பெட்டிப் பாம்பாய் அடங்கியது. என்னங்க….என்னங்க…. என்னங்க நடந்துட்டெண்டு சொல்லிப் போட்டுத் தான் அழுங்களன் ?

அது ஏன் கேப்பான்.. ? அந்த தலையால தெறிச்சுப் போவாள், கவிதா யாரோ கயனாக் காரனோடு வேலை செய்யிற இடத்தில பழக்கமாம். அவனோடயே தான் இருக்கப் போறன் எண்டு சொல்லிப் போட்டுப் போறாள். குறுக்கால விழுந்து போவாள். பெத்து வளத்துவிட்ட நன்றியையும் மறந்துட்டு எளியன்தனமான வேலை செய்து போட்டாள். “..அவள் செத்துப் போய்ற்றாள்…அவள் செத்துப் போய்ற்றாள்….” என்று சொல்லி நெஞ்சில அடிச்சு அழுது கொண்டிருந்தா மாமி. நான் மலைத்துப் போனேன்….எதுவும் பேசாமல் ஊமையாய் நின்றேன். பிள்ளையைப் பிாிந்த பிாிவு ரேகை முகத்தில் இழையோடியது .விழிகள் சிவந்து வீங்கியது . அழுகை நின்ற பாடில்லை, அவ அவமானப்பட்டது போல் துடித்து அழுதுகொண்டே பார்வை என்னில் நிலை நிறுத்திக் கொண்டு, “நான் செத்துப் போனால்.., கொள்ளி வைக்கிறது நீங்க தான். என்னுடைய பிள்ளை நீங்கதான். நான் லோயரோட கதைச்சு இங்கேயே இருக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுறேன். நான் தனிக்கட்டையில்ல எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில வாழந்து செத்துப் போவேன்.மாமி சொல்லும்போது என் மனக் கண்கள் என்னையறியாமல் அழுதது. என் தவறான கணிப்பு தகர்ந்து, கோபங்களெல்லாம் சிதிலமாகி.., கழிவிரக்கம் கொண்டது. நான் இழந்த தாயே என் முன்னால் நிற்பது போல் தோன்றியது. ஜயமும், அச்சமும் அகன்று அகல் விளக்கொளியொன்று என்னுள் படர்ந்தது.

daniel.jeeva@rogers.com

Series Navigation

நாவாந்துறைடானியல்ஐீவா

நாவாந்துறைடானியல்ஐீவா