அன்பாலே தேடிய என்…

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

பாரதிதேவராஜ்



“திங்கட் கிழமை பாக்கலாம்; சீ..” பஸ்ஸைவிட்டு இறங்;கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய்விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந் தார் சட்டென்று,
“என்ன தாரணி மேடம்.”
“அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?”
“:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பாக்க முடியாதே தவிர மத்த எல்லா பாகங்களும் உங்களவிட டபுளாவேலை செய்யும் ஒரு குரலெ ஒருதடவை கேட்டாலே ஆழமா பதிவாயிடும் அடுத்தமுறை அந்தக் குரலை கேட்டவுடனே இன்னார் தான்னு தெரிஞ்சுடும்.”
“சூப்பர்!” தாரணி கலகலவென்று சிரித்தாள்.
“சரி இன்னிக்கு சனிக்கிழமை. ஆபிஸ்லெ வேலையிருக்கோ?”
“இல்லே கண்ணுசாமி பேங்க வரைக்கும் போகணும்.”
“அப்ப சவுகர்யமா போச்சு. நானும் அங்கதான் போகணும். கூட்டிட்டு போறீங்களா?”
“ஓயெஸ் போலாமே.”
“என்ன பேங்கலே பணம் எடுக்கணுமா?”
“இல்லே கண்ணுசாமி. ஒரு லோன் விசயமா மானேஜரப் பாக்கணும்.”
“சாரி மேடம்.உங்களுக்கெதுக்கு லோன்?”
“அட.நா என்ன அவ்வளவு பெரிய ஆளா. வீட்லே வரன் பாத்துட்டிருக்காங்க. திடீர்னுமுடிவாயிட்டா பணம் தேவைப்படுமே. அதுக்கோசரம்தான் அட்வான்சா கேட்டு
வைப்போமேன்னு.”
“வாழ்த்துகள் மேடம். மணி என்னாச்சு?.”
“ஒம்பதரை ஆறது.”
“இன்னும் அரைமணி நேரமிருக்கே பேங்க் தெரக்கறதுக்கு.”
“ஆமா கண்ணுசாமி. ஆபிஸ் பக்கந்தானே அங்கே போய் கொஞ்சநேரம் இருந்துட்டுபோனா சரியாயிடும்.”
“அதுவும் சரிதான். ஆபிஸ் இன்னிக்கி தொறந்திருக்குமில்லே?”
“ஜி.எம் வருவாரு ப்யுன்நடராஜன்கூட வந்திருப்பார்.”
2
“அப்ப நடராஜ் கையாலே காப்பி சாப்பிட்டு போலங்கறீங்க.சாpபோயிடலாம்.”
தாரணிக்கு இந்த வைகாசியோடு இருபத்தைந்து முடிகிறது. நல்லசிவந்த உடல்.கட்டான தேகம். எவரையும் வசிகரிக்கும் தன்மை.
ஆபிஸ் வந்துவிட்டது.
“அடடே கண்ணுசாமி. வாங்க இந்தப் பொண்ண எங்க புடுச்சீங்க”
“என்ன நடராஜன் சார் பேங்க் போலாம்னு புறப்பட்டேன். ஊர்லேருந்து பஸ்ஸப்புடுச்சு காலேஜ் பஸ் ஸ்டாப்பில வந்து இறங்கிட்டேன்.ரோட கிராஸ் பண்ணலாம்னு நின்னுட்டிருந்தப்ப தாரணி மேடம் வந்தாங்க. அவங்களும் பேங்குக்குத்தான் போறேன் னாங்க அது சாpன்னு வந்தேன். மணி ஒம்பதரைதான் ஆச்சு.கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு ரெண்டுபேரும் வந்தோம்.”
“பாரப்பா அவனவன் ஆபிஸ்லே வேலை செய்யறதுக்கு வந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க வர்றீங்க. காபி சாப்பிடறிங்களா?”
“அப்புறம் அதுக்குத்தான் வந்திருக்கோம். போயிட்டு சீக்கரமா வாங்க.”
காசை பர்சிலிருந்துஎடுக்கப்போனார்கண்ணுசாமி.அதற்குள் தாரணியே கொடுத்தனுப்பினாள்
“கண்ணுசாமி உங்களுக்கு பொறந்ததிலிருந்தே கண் தொpயாதா?”
“பொறந்தப்பல்லாம் கண்ணு நல்லாதான் தெரிஞ்சது. மூணாவது படிக்கற வரைக்கும் கண்ணு தொpஞசுட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கப்புறம் விஷக்காய்ச் சல் மாதிhp வந்துச்சு. கண்ணு அப்ப நீலநிறமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்திலே புளியங்கா அடிக்க எவனே வீசின கல்லு என் கண்ணுலேபட்டு காயமாயிடுச்சு. ஆஸ்பத்திரிககு போகாம எண்ணெயக்காய்ச்சி கண்ணுலே விட்டாங்க. அப்புறம் கொஞ்சமா தெரிஞ்ச பார்வையும் சுத்தமா போயிடுச்சு. அப்புறம் நா பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.நா இருக்கிறது கிராமந்தானே கக்கூஸ் வசதியெல்லாம் கிடையாது. ஊருக்குவெளியே காட்டுக்குள்ளதான் போகணும். கண்ணுதொpயாத நா தனியா போகமுடியாது. தம்பிதான் கூட்டிட்டு போகணும்.. அவம்பண்ற அட்டூழியம் சொல்லித்தீராது.சோறுபோடற அம்மா ஒருபக்கம் செத்துப்போற மாதிhp பேசுவா. தம்பிஒருபக்கம் இதனால சாப்பிடறதயே நிறுத்திட்டு தண்ணியக்குடிச்சுடே காலத்த ஓட்னே. வாரத்துக்கொருதாட்டி அப்பா டவுன்லேந்து வருவாரு. அவருதான் எனக்கு அனுசரணையா நடந்துப்பாரு. கொஞ்சநாள் அவரால சகிக்க முடியாம கிருஸ்டியன் ஹாஸ் டல்ல சேத்தாரு.
அங்கதான் பத்தாவது வரைக்கு படிச்சேன் சேர் பின்ற தொழிலகத்துக்கொடுத் தாங்க. பொpய பொpய ஆபிஸ்லே வேலைகிடைச்சது என்னமாதிரி இருக்கறவங்களவச்சு காண்டராக்ட் எடுத்து செய்யறேன் ஏதோ ஒரளவுக்கு வசதியா இருக்கேன். இப்ப வீட்லே

3
தாங்குதாங்குன்னு தாங்கறாங்க. ஆனா அது எனக்கு இஷ்டமில்லை. உங்களமாதிரி நாலு நல்ல சனங்ககூட பழகறதே மனசுக்கு நிம்மதி தருது. அதுசரி என்றகத பெரிசு அது இன்னக்கி தீராது.நடராசண்ணே வந்தாச்சுபோலிருக்கு காபி மணக்குதுங்க தாரணி மேடம்”
“ஆமா சாப்பிடுங்க.மணி பத்தரையாச்சு புறப்படலாம்.”
00000
பாங்கில் ஏகப்பட்ட கூட்டம். தாரணி,
“கண்ணுசாமி உங்களுக்கென்ன பணமெடுக்கணுமா?”
“இல்ல மேடம்.பாஸ்புக் என்ட்ரி போடணும். நா பாத்துக்கிறேன். நீங்க மானேஜரப் பாத்துட்டுவாங்க.”
தாரணி மானேஜர் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். கண்ணுசாமி பாஸ்புக் என்ட்ரியை போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்திருந்தார்.
“கண்ணுசாமி போகலாமா?”
“என்ன மேடம் அதுக்குள்ள வேலைமுடிஞ்சிடுச்சா?”
“இல்லே கண்ணுசாமி. மானேஜர் ரொம்ப பிஸியாம்.அடுத்தவாரம் வரச்சொன்னார்” அதே சமயம் தாரணி ஹேண்ட் பேக்கில் செல்போன் அழைத்தது.
“ஹலோ”
“நா அம்மா பேசறேன். அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிக்குதுன்னார். சரவணா ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம.; நீ உடனே புறப்பட்டுவா.”
“கண்ணுசாமி அப்பாவுக்கு உடம்பு முடியல்லே.ஆஸ்பத்திரிலே சேத்திருக்கா” நா புறப்படட்டுமா?”
“ மேடம் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா,நானும்கூட வரட்டுமா ஒரு ஆட்டோ புடுச்சு போயிரலாமா?”-என்று கண்ணுசாமி கேட்கவும்,தாரணிக்கு என்ன செய்வ தென்று தொpயவில்லை. ஆஸ்பத்திரி பக்கம்தான் இருந்தாலும் இவர் எதற்கு. இவரைபாக்கவே ஒரு ஆள் வேணும். இவர் வந்து என்ன செய்யப் போகிறார். இருந்தாலும் அவளது உள் மனசு அவரை அழைத்துப் போக அனுமதிக்கவே,
“சரி வாங்க.” என்று ஒருஆட்டோவைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.
வாசலில் தாரணியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தனர்.
“அக்கா அப்பாவ ஐசியுலே அட்மிட் பண்ணியிருக்கா உடனே இருவத்தையாயிரம் கட்டணும்றா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல்லே. நம்மகிட்டே காசே கிடையாது. உன்னட நகை ஏதாச்சு வச்சு பணம் ஏற்பாடு பண்ணலாமாக்கா.”
4
“என்னோட நகைய வச்சாக்கூட அவ்வளவு தேறாதே. உள்ளே அப்பாவ பாக்கமுடியுமா?”
“இல்லக்கா யாரையும் பாக்க அலவ் பண்ணமாட்டா.”
“கண்ணுசாமி அப்பாவ ஐசியுலே வச்சிருக்கங்களாம். யாரையும் உள்ள அனுமதிக்கமாட்டாங்களாம் நீங்க எப்படி. இங்கிருந்து ஏழுலே போய் காந்திபுரத்திலே இறங்கிஅங்கிருந்து செம்மேட்டு பஸ் புடுச்சு ஊருக்குப் போயிடுவீங்களா?”
“மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க பணம் ஏதோ வேணும்னு சொன்னமாதிhp கேட்டுச்சு. எவ்வளவு வேணும்னு தெரிஞ்சா நா ஏதாவது உதவி பண்ணலாம் இல்லையா?”
“அவ்வளவு பணம் உங்க கிட்ட இருக்குமா? இருபத்தஞ்சாயிரம் வேணுமா. இன்னும் எவ்வளவு தேவைப்படுமோ தெரியல்லே. பேசாம ஜி.எச் சுக்குப் போயிர்லாமான்னு யோசனை பண்றேன்.”
“மேடம் இந்த ஹேண்ட் பேக்க வாங்கிக்கங்க. அதிலே அம்பதாயிரம் இருக்கு. என் தம்பி கல்யாணத்துக்காக எடுத்தேன் அதவிட இதுதான் முக்கியம். இன்னும்
வேணாலும் பாங்க்லே இருக்கு எடுத்துக்கலாம் நீங்க ஆஸ்பத்திhpக்கு எவ்வளவு பணம் கட்டணும்னு பாத்து கட்டுங்க.”
தாரணிக்கு பொட்டில் அறைந்த மாதிரி கிருகிருத்துப் போனது. எதை நம்பி எதற்காக கொடுக்கிறார்.
“ மேடம் நீங்க எந்த யோசனையும் பண்ணவேண்டாம் நா எந்த எதிர்பார்ப்பு லேயும் இதைகொடுக்கலே. மனிதாபிமானம்தான் உங்களுக்கு உதவரதுக்கு இப்ப எங்கிட்ட இருக்கே அதுக்காக கடவுளுக்குதான் நன்றி சொல்லணும். எடுத்துக்கங்க.”
00000
பத்து நாட்களில் அப்பா தேறி வீடு வந்து சேர்ந்தார். தாரணியை பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் அப்பா நிலையால் ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகிட்டால் அப்புறம் சீர்செனத்தியெல்லாம் யார் செய்வார்கள். அதற்காக ஒருலட்ச ரூபாய் முதலில் கொடுத்துவிட வேண்டும் என்று கண்டிசன் போட்டார்கள் இப்போதை நிலையில் கல்யாணம் செய்யவே முடியாத நிலை. அப்பாவின் உடல் தேறவே அங்கே இங்கே என்று கடனை வாங்கி இருக்கிற நகையெல்லாம் பாங்கில் வைத்து அப்பாவை பிழைக்க வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் எங்களால் இப்போதைக்கு முடியாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டாள்.
மாலைமணி நான்கிருக்கும். பத்துநாள் அலைந்த களைப்பில் எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.கதவை தட்டும் ஓசை கேட்டது,

5
தாரணிதான் கதவைத் திறந்தாள். கண்ணுசாமியும் அவர் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர். தாரணியின் மனசுக்கு இதமாயிருந்தது.
“வாங்க கண்ணுசாமி .அப்பாவா?”
“ஆமாம்மா.”
அப்பாவைப் பார்த்து ஒரு கூடை பழங்களை எடுத்து வைத்தார்கள்.
கண்ணுசாமிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை. அன்றுமட்டும் அவர் பணம் கொடுத்துதவவில்லை என்றால் அப்பா பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. அதுமட்டுமா அன்றுமுழுக்க ஆஸ்பத்திரி வாசலிலே காத்திருந்து விசாரித்துக்கொண்டே யிருந்தார். இந்த பத்துநாளும் தினமும் ஒருமுறையேனும் வந்து விசாரித்துவிட்டு செல்வார். அவருடைய அப்பா தன் அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
“எம் பையனுக்கு கண்ணுதா குருடா போச்சு. வேறே எல்லாம் சம்பாரிச்சுட்டான். ஒருகல்யாணத்தையும் பண்ணவேண்டியது என்கடமை. ஆனா பார்வையில் லாதவனுக்கு யார் பொண்ணு தருவா. எந்தப்பொண் கட்டிக்க வருவா?”
-தாரணியின் மனசு சட்டென்று முடிவெடுத்தது,
“அப்பா அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நான் அவரை ஏத்துக்கறேன். உங்களுக்கு பணஉதவி செஞ்சதுக்குமட்டுமில்லே அவரை முன்னாடியே மனசுலே விரும்பிட்டுதான் இருந்தேன்.சரியா கண்ணு. ..சாரி சரிங்களா?
“சரிதான்.” என்பதுபோல கண்ணுசாமியும் ஆமோதித்தான் மனதுள் அவள்மேல் ஒருதலைக் காதலாயிருந்தது இவ்வளவு விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
-00000-

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

பாரதிதேவராஜ்

பாரதிதேவராஜ்