உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
உன்னத மனிதன் நீடித்து வாழ்வான் என்று சொல்வோம் நாம். உன்னத மனிதனுக்குக் கல்வி புகட்டுவேன் நான். மனிதன் இருப்பதை விட மிஞ்சி மேலுயர, உன்னதம் பெற வேண்டும். மனிதன் மனிதனை மிஞ்சி உன்னதம் அடைய நீவீர் என்ன செய்துள்ளீர் ?
மனிதனிடம் உள்ள உன்னதம் என்ன ? அவன் கடக்கும் ஒரு பாலம். அடையும் ஒரு குறிக்கோள் அல்ல ! மனிதன் ஒருவனிடம் காதல் உண்டாக்குவது, மாற்றமும், அழிவும் அடைந்த அவனுடைய ஒரு நிலையைக் காட்டுகிறது !
மரணத்துக்கு அஞ்சாமல் சாதிக்கப் போவதைத் தவிர வேறு பாதையில் வாழத் தெரியாத தீவிர மனிதரை நான் நேசிக்கிறேன் ! ஏனெனில் அவரே தம்மை மீறி அப்பால் முன்னேறுபவர்.
(உன்னத மனிதர் சிலர் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோர்)
·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)
அடிமைத் தளைகளை உடைத்த, முடிவில்லா முதல்வனைத் தொட்ட பனிரெண்டு சிங்க ஆத்மாக்கள் இருந்தால் ஒரு தேசத்திற்குப் போதுமானது. யாருடைய ஆத்மா ஆதி முதல்வனை நோக்கிச் செல்கிறதோ, எந்த ஆத்மா செல்வத்துக்கும், அதிகாரத்துக்கும், புகழுக்கும் இச்சைப்பட வில்லையோ அதுதான் உலகத்தை ஆட்டிப் படைக்கும் உன்னத ஆத்மா.
திரும்பிப் பாராது முன்னோக்கிச் செல் ! வரையில்லா வலிமை, எல்லையற்ற உள்ளக் கிளர்ச்சி, மன ஊக்கம், பொறுமைப் பண்பாடு ஆகியவை மட்டுமே ஒருவர் மகத்தான சாதனைகளைச் சாதிக்க உதவி செய்பவை. தெய்வத் திருவருளால் உரிய இடத்தில், உகந்த சமயத்தில் ஓர் உன்னத மனிதன் தோன்றுவான்.
மகத்தான வினைகள் புரிய மாபெரும் போராட்டத்தை நீண்ட காலம் நடத்த வேண்டியுள்ளது. அவற்றில் ஒரு சில வினைகள் தவறிப் போனால் மனமுடையத் தேவையில்லை. இயற்கை விதி முறையே அநேக வினைகளைத் தவறிப் போக வைக்கிறது. இன்னல்களை இடை இடையே எதிர்க்குமாறு விடுகிறது. பேரளவுச் சிக்கல்கள் நேரிடச் செய்கிறது. ஆன்மீகத் தீ உந்தித் தள்ள (உன்னத) மனிதரைக் கடிதுழைக்கத் தனித்து விடுகிறது.
கர்மயோகி விவேகானந்தா (1863-1902)
+++++++++++++++++++
உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 8
(சுருக்கப் பட்டது)
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ¦க்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
(அங்கம் : 4 பாகம் : 8)
(சுருக்கப் பட்டது)
கதா பாத்திரங்கள்: அக்டேவியஸ், மிஸிஸ் வொயிட்·பீல்டு, ஜான் டான்னர்.
காலம்: பகல் வேளை
இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.
(காட்சி அமைப்பு: ஆக்டேவியஸ் கவலையுடன் தனியாகப் பூங்காவில் உட்கார்ந்திருக்கிறான்.)அப்போது ஆன்னியின் அன்னை மிஸிஸ் வொயிட்·பீல்டு வருகிறாள். பிறகு ஜான் டான்னர் உரையாடலில் கலந்து கொள்கிறான்.)
மிஸிஸ் வொயிட்·பீல்டு: (கவனமோடு கனிவுடன்) என்ன அக்டேவியஸ் ? இப்படிக் கவலையோடு கண்ணீருடன் தனியாக அமர்ந்திருக்கிறாய் ? சகோதரி வயலட்டுக்கு ஏதாவது உடல்நலக் கேடா ? கர்ப்பவதிக்கு ஏதாவது நேர்ந்து விட்டதா ? அல்லது அவளது திருமணமத்தில் தகராறு உண்டாகி விட்டதா ?
அக்டேவியஸ்: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) அப்படி ஒன்றுமில்லை மேடம். வயலட் வாழ்க்கையில் பிரச்சனை எதுவும் இல்லை ! மகிழ்ச்சியாக இருக்கிறாள் தங்கை.
மிஸிஸ் வொயிட்·பீல்டு: அப்படியானால் நீ ஏன் மகிழ்ச்சியோடில்லை. கண்கள் கலங்கும்படி என்ன நேர்ந்தது உனக்கு ?
அக்டேவியஸ்: எனக்கொன்றும் ஏற்படவில்லை ! இது அழுகைக் கண்ணீர் இல்லை ! ஆனந்தக் கண்ணீர் மேடம் !
மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஓ அப்படியா ? யாருக்காக இந்த ஆனந்தக் கண்ணீர் இப்படிக் கரை புரண்டு ஓடுகிறது ?
அக்டேவியஸ்: (கேலியாக) ஜான் டான்னருக்காக ! ஆன்னி டான்னரைத் திருமணம் புரியப் போவதாக அறிவித்து விட்டாள் ! அந்த ஆனந்தம் கரை புரண்டு ஓடி என் இதயத்தை உடைத்து விட்டது !
மிஸிஸ் வொயிட்·பீல்டு: (வருத்தமுடன்) உன் இதயம் உடைந்து போனதால் கண்ணீர் வந்ததா ? அல்லது டான்னர் இதயம் களித்து விட்டதால் நீர் வழிந்ததா ?
அக்டேவியஸ்: ஆன்னியின் மகிழ்ச்சிக்காக என் விழிகள் கண்ணீர் விடுகின்றன. அவள் விழிகளில் கண்ணீர் வரக் கூடாது. அதற்காக என் விழிகள் கண்ணீர் விடுகின்றன.
மிஸிஸ் வொயிட்·பீல்டு: நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரிய வில்லை. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது ! என்னருமை மகள் உன் நெஞ்சில் ஒரு பெருங் காயத்தை உண்டாக்கி விட்டாள். உன்னைப் புறக்கணித்து விட்டாள் என்று சொல்கிறாய் !
அக்டேவியஸ்: அதற்காக நான் உங்கள் மீது பழிசுமத்த மாட்டேன் ! அது ஆன்னியின் தவறும் இல்லை ! தவறு என் மீதுதான் ! அதனால் நான் வருந்துகிறேன். என்னால் வரும் கண்ணீரையும் தடுக்க முடிய வில்லை !
மிஸிஸ் வொயிட்·பீல்டு: என் மீது ஏன் பழி சுமத்த வில்லை என்று சொல்கிறாய் ? நான் என்ன செய்தேன் அவள் திருமணத் தீர்மானத்தில் ?
அக்டேவியஸ்: உங்களுக்கு முழு உரிமை உள்ளது. என்னைத் தவிர்த்து டான்னரை ஆன்னிக்குக் கணவனாய்த் தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை. நான் யார் அதில் குறுக்கிட ? ஆனால் நான் ஆன்னியை நேசிக்கிறேன் ! மனதார நேசிக்கிறேன் ! மனைவியாக்கக் கனவு காண்கிறேன் ! அந்தக் கனவைக் கலைப்பவர் ஜான் டான்னர் ! ஆனால் டான்னர் ஆன்னியை நேசிக்க வில்லை ! ஆன்னியும் டான்னரை நேசிக்க வில்லை ! அதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது.
மிஸிஸ் வொயிட்·பீல்டு: அப்படி யார் உனக்குச் சொன்னது ?
அக்டேவியஸ்: வேறு யாருமில்லை ! ஆன்னியே என்னிடம் சொன்னாள் ! நீங்கள் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் என்னிடம் ஆன்னி பேசிக் கொண்டிருந்தாள். வேடிக்கையாக இருக்கிறது அந்தத் திருமணம். தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை ! ஆனால் அவர் இருவரும் திருமணம் செய்ய விரும்புகிறார் ! அது என் நெஞ்சைப் பிளக்கிறது !
மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஏன் அப்படி விரும்பாத தம்பதிகள் திருமணம் செய்கிறார் ?
அக்டேவியஸ்: எனக்கு ஒன்றும் புரிய வில்லை ! ஆன்னி உன்னத குழந்தைகளை அத்தகைய தம்பதிகள் உறவில் பெற்று உருவாக்குவாளாம் ! உன்னத மனிதரை எப்படி உருவாக்குவது என்று உலக சிந்தனையாளர் நியட்ஸே எழுதிருப்பது நினைவுக்கு வருகிறது !
ஆனால் என்னறிவுக்கு எட்ட வில்லை !
மிஸிஸ் வொயிட்·பீல்டு: அக்டேவியஸ் ! ஆனால் ஆன்னியிடம் நான் உன்னை வேண்டாம் என்றும் தடுக்க வில்லை ! டான்னரை மணந்து கொள் என்றும் முடுக்க வில்லை !
அக்டேவியஸ்: நீங்கள்தான் டான்னரை மணந்துகொள் என்று ஆன்னியிடம் கூறினீராம் !
மிஸிஸ் வொயிட்·பீல்டு: ஆன்னி அப்படித்தான் பேசுவாள் ! அது அவள் பேசும் முறை ! தான் விரும்புவதை நான் விரும்புவதாகச் சொல்வாள் ! உனக்கு ஆன்னியைத் தெரியவில்லை ! நான் சொல்வதை அவள் கேட்பதுமில்லை. நான் விழைவதை அவள் செய்வதுமில்லை ! அவளொரு சுதந்திரப் பறவை ! அவளை யாரும் கூண்டுக்குள் பிடித்து அடைக்க முடியாது !
அக்டெவியஸ்: சரி மேடம் ! இப்போது நீங்கள் சொல்லுங்கள் : யார் ஆன்னிக்கு உகந்த கணவன் ? காதலிக்கும் நானா ? அல்லது நேசிக்காத டான்னரா ?
மிஸிஸ் வொயிட்·பீல்டு: எனக்குத் தெரியாது அக்டேவியஸ் ! இது கடிமான கேள்வி ! வாலிப ஆடவரைப் பற்றி நான் நியாயம் கூற முடியாது. எது ஆடவனுக்குத் தேவை என்பது இந்தத் தலைமறைக்கு நான் சொல்ல முடியாது ! உன்னைப் போல் ஓரளவு அறிவு பெற்றவனா ? அல்லது டான்னரைப் போல் பேரளவு ஞானம் பெற்றவனா ? யார் ஆன்னிக்கு ஏற்ற கணவன் என்பதை நான் தீர்மானிக்க இயலாது !
அக்டேவியஸ்: மேடம் ! நீங்கள் ஒரே வரியில் சொல்லாமல் சொல்லி விட்டீர் ! டான்னர் என்னை விடப் பேரளவு ஞானம் பெற்றவர். புரிந்து கொண்டேன் மேடம் ! புரிந்து கொண்டேன் ! மிக்க நன்றி ! கொந்தளித்த என் மனதில் இப்போது அமைதி நிலவி விட்டது !
(அப்போது ஜான் டான்னர் வருகிறான். அக்டேவியஸ் அவனைப் பார்த்ததும் பேச விரும்பாமல் உடனே போக முயல்கிறான்)
அக்டேவியஸ்: மேடம் ! நான் முகத்தைக் கழுவ மாளிகைக்கு நழுவ வேண்டும். ஆன்னி எடுத்த முடிவை டான்னரிடம் நீங்களே சொல்லி விடுங்கள். ஆன்னி எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறாள்.
(டான்னருக்கு ஹலோ சொல்லாமல் அக்டேவியஸ் நழுவுகிறான்)
ஜான் டான்னர்: ஆன்னி என்ன முடிவு செய்திருக்கிறாள் ? ஆன்னி என்ன அனுமதி கொடுத்திருக்கிறாள் ? அக்டேவியஸ் ! என்னைக் கண்டதும் ஏன் இப்படி ஓடுகிறாய் ? ஆன்னி உன்னை மணந்து கொள்ளச் சம்மதம் அளித்து விட்டாளா ?
அக்டேவியஸ்: ஆமாம் ! சம்மதம் அளித்து விட்டாள் ஆன்னி ! உன்னை மணந்து கொள்ள ! என் வாழ்த்துக்கள் உங்களுக்கு ! நான் வருகிறேன் ! சந்திக்கிறேன் உங்களைத் திருமணத் தினத்தன்று !
ஜான் டான்னர்: ஓடாதே அக்டேவியஸ் ! நான் திருமணம் புரிவதாக இல்லை ! ஆன்னியை நீ மணந்து கொள் !
அக்டேவியஸ்: (திரும்பிப் பார்த்து) இந்தப் பிறப்பில் ஆன்னி எனக்கு மனைவியாகப் போவதில்லை ! நான் திருமணம் புரிய விரும்ப வில்லை ! ஆன்னியை நீதான் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் ஜான் ! . . . போய் வருகிறேன் ஜான் !
(அக்டேவியஸ் மாளிகை நோக்கிப் போகிறான்)
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy – A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 9, 2008)]
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]
- பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
- அவஸ்த்தை
- வேத வனம் விருட்சம் 3 கவிதை
- இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்
- “கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா
- மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு
- வீட்டுக்குப் போகணும்
- “தோற்றுப்போய்…..”
- பயணம்
- பங்குருப்பூவின் தேன்.
- சாமி கண்ண குத்திடுச்சு
- காற்றுக்காலம்.
- “காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”
- வேப்பமரம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3
- நகைப்பாக்கள்-சென்ரியூ
- தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !
- அப்பனாத்தா நீதான்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியீடு
- விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்
- கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
- கவிதைகள்
- “தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
- இரண்டு கவிதைகள்
- Venkat Swaminathan’s praise for the Tamil Dictionary brought out by Crea
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- மகாகவி பாரதி நினைவரங்கம்
- நூல் விமர்சன அரங்கு
- மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு