ஆகு பெயர்
உஷாதீபன்
அ “ ந்தப் பையன் வந்திட்டுப் போனாங்க… ”
-உள்ளே நுழைந்ததுமே சுமதி முதல் தகவலாகச் சொன்னாள்.
என் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்பது அறிந்து சொல்வது போலிருந்தது.
வந்துட்டானா? பரவாயில்லையே! எங்கே ரெஸ்பான்ஸ் இருக்காதோன்னு நினைச்சேன்… “ ”
நீங்க கிளம்பிப்போய், அஞ்சு நிமிஷத்துல வந்துட்டாங்க… “ ”
அப்டியா? ஆச்சரியமாயிருக்கே! அவன் வீடு எங்கேயோ தூரமா இருக்குன்னுல்ல சொன்னான். “
வீ;ட்டு வாசல்ல கடைன்னான். ஒரு முறைகூடப் போனதில்லை. அதுக்குள்ளே எப்படி வந்தான்? ”
எப்படியோ, பால் வந்திடுச்சு நமக்கு. அது போதும்… “ ”
அதுக்கில்லே சுமதி….தூரமா அவன் வீடு இருக்கிறதாலே, கொண்டு வர முடியாது…வேறே “
எங்கேயாவது வாங்கிக்குங்கன்னு சொல்லிடுவானோன்னு பார்த்தேன்…”
அது ஏன் சொல்றான்? நாம அவன்ட் ட கடந்த ஒரு வருஷமாப் பால் வாங்கிட்டிருக்கோம்…இந்த “
உதவி கூடப் பண்ண மாட்டானா?”
அது எப்படி? திடீர்னு ரெண்டு பாக்கெட் கொண்டு வான்னு சொன்னா, அவன்ட்டப் பால் இருக்க “
வேண்டாமா? சாயங்கால வேளை வேறே? ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேலதான் புதுப்பால் வரும்.
அதனாலதான் சந்தேகம் எனக்கு…. ”
பால் வியாபாரம் பண்றவங்ககிட்டே எப்பவும் பால் பாக்கெட் கைவசம் இருக்கத்தான் செய்யும். “
ஆகையினால நம்பிச் சொல்லலாம்…சொன்னவுடனே அந்தப் பையன்ட்டக் கொடுத்து விட்டுட்டான்ல?”
பையன்ட்டயா? அவனே வரல்லியா? “ ”
அவனே எப்படி வருவான்? கடை முதலாளியே எல்லாத்துக்கும் அலைவாரா? அப்புறம் வேலைக்கு “
எதுக்குப் பையன்களை வைக்கிறதாம்? ”
வேலைக்கா? வேலைக்குமில்லே, சேலைக்குமில்லே…! ஆள் போட்டு இந்த வியாபாரத்துல லாபம் “
பார்க்க முடியுமா? இல்ல கட்டுபடிதான் ஆகுமா? எல்லாம் சொந்தக்காரப் பசங்கதான்…”
அப்டியா? “ ”
சொந்தக்காரப் பசங்கன்னா, சொந்தத் தம்பிங்கன்னு சொல்ல வந்தேன்… “ ”
அதானே பார்த்தேன்… “ ”
என்ன பார்த்தே? உனக்கு எப்படித் தெரியும்? “ ”
முக ஜாடை அந்தப் பெரியவன் மாதிரியே இருந்திச்சேன்னு நினைச்சேன்… “ ”
ரெண்டு பேர் இருக்காங்க…ஒருத்தன் காலைல பேப்பர் போடப் போயிடுவான்…இன்னொருத்தன் வீடு “
வீடாப் பால் போடுவான்…”
பாருங்க! குடும்பமே “ எவ்வளவு பொறுப்பா இயங்குதுன்னு…”
……….2………….
-2-
அந்தப் பெரிய பையன் காலைல ரெண்டு மணிக்கு எழுந்து பால் வண்டியை வரவேத்து, பால் “
பாக்கெட்டுகளை இறக்கி, பிறகு நாலு மணிக்கு வந்த நிய+ஸ் பேப்பர்களைப் பிரிச்சு அடுக்கி,
எல்லாத்தையும் விநியோகத்துக்கு அனுப்பிட்டு, காலேஜ் வேறே போறான் தெரியுமா? ”
காலேஜா? படிக்கிறானா அந்தப் பையன்? “ ”
ஆம்மா….பி.இ., ஐ.டி., செக்ன்ட் இயராம்…காலைல நம்ம ஏரியாவுலதான் காலேஜ் பஸ் “
ஏறுவான்..நான் பார்த்திருக்கேன்….”
பரவாயில்லையே….அவனப்பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க…? குடும்பத்துக்கு மூத்த “
பையன் போலிருக்கு…? எவ்வளவு பொறுப்பா இருக்கான்…”
உண்மைதான்…ஆனா இந்த ரெண்டு பசங்களும் சரியில்லையே… “ ”
ஏன்? “ ”
அவுங்க படிக்கலை….இந்த வேலையைத்தான் செய்யுறாங்க….. “ ”
பாவங்க…..பார்த்தாலே படு பாவமா இருக்கு… “ ”
யார்தான் பாவமில்லே சொல்லு? எல்லாரும் ஒவ்வொரு விதத்துலே பாவந்தான்…நான்கூட அப்படிப் “
பார்த்தா பாவந்தான்…. ”
என்ன சொல்றீங்க? “ ”
ஆமா, உண்மையத்தான் சொல்றேன்…லஞ்ச லாவண்யம் தலைவிரிச்சாடுற இந்த உலகத்துலே “
எந்த பலவீனத்துக்கும் ஆட்படாமே, மாசா மாசம் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிட்டு வந்திட்டிருக்கேன்
பாரு…அதனாலதான் சொல்றேன்..நானும் பாவம்தான்னு… ”
உங்களை யார் தடுத்தா? நீங்களா வேண்டாம்னு இருந்தா அதுக்கு மத்தவங்க என்ன “
பண்ணுவாங்க? ”
சீ! அது ஒரு பொழப்பா? நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு…அந்த ஈனச் செயலை என்னால “
செய்ய முடியாது… ”
அப்போ ஏன் புலம்புறீங்க? நமக்கும் கிடைக்கலியேன்னு நீங்க மனசுக்குள்ளே ஏங்குறமாதிரி “
இருக்கு…”
விடு, எதுக்கு இந்த அபத்தப் பேச்சு.?..அப்புறம் உனக்கும் எனக்குமே சண்டை வரும்…! “
தேவையா? அது கிடக்கட்டும்…வந்த பையன் யாரு? அதைச் சொல்லு… ”
அதாங்க…அசடு மாதிரி இருப்பானே ஒருத்தன்…கடைசித் தம்பி போலிருக்கு…அவன்தான்…. “ ”
யாரு? இந்த தத்த….தத்த…தத்தன்னு புரியாமப் பேசுவானே…அவனா? “ ”
அவனேதான்…நீங்ககூட இப்போ போன தீபாவளிக்குக் காசு கேட்டு இல்லைன்னு “
சொன்னீங்களே…அந்தப் பயதான்…”
பார்த்தியா, நீயே கிண்டலடிக்கிறே? அவன் கேட்ட முறை சரியில்லை சுமதி…அதனாலதான் “
இல்லைன்னேன்…”
முறை என்ன முறை இதுலே? போஸ்ட்மேன், சிலிண்டர் போடுறவன்…அயர்ன் பண்றவன்…இப்டி “
எல்லாருக்கும் கொடுக்கலையா? இவனுக்கு மட்டும் ஏன் இல்லைன்னு சொல்லணும்?…..
…….3………
-3-
ஒரு முப்பதோ, ஐம்பதோ கொடுத்துத் தீர்த்திருக்கலாம்…அதப்போய் இல்லைன்னு சொல்லி
அவனை விரட் டிட்டீங்க…”
நீ அந்தப் பய பேச்சைக் கேட்டிருந்தேன்னா இப்படிச் சொல்ல மாட்டே!.வருஷத்துக்கொருதரம் “
கொடுக்கிறீங்க…கொடுத்தா என்ன சார்…..குறைஞ்சா போறீங்க? ன்னு சொல்றான்…பார்த்தா அசடு மாதிரி ”
இருக்கான்.!..பேச்சைப் பாரு…வாய் எப்படிக் கிழியுதுன்னு….? ”
அதான் நீங்களே சொல்றீங்களே…அசடுன்னு…பிறகென்ன…? தெரியாமப் பேசிட்டான்னு விட “
வேண்டிதான்…”
அப்படிச் சங்கடப்பட்டுட்டுக் கொடுக்கணுமா? என்ன அவசியம்? போடான்னு விரட்டிட்டேன்… “ ”
விரட்டிட்டீங்க சரி…அந்த அம்பது ரூபாயை மிச்சப்ப:டுத்தி கோட்டை கட்டிட்டீங்களா? “
கெட்டபேர்தான் மிச்சம்…”
இதிலென்ன கெட்ட பேர் இருக்கு? அவன் யாரோ…நாம யாரோ? நாளைக்கே பால் வேண்டாம்னு “
நிறுத்திட்டு வேறே யார்ட்டயாவது வாங்கிட்டுப் போறோம்…அவனே சதமா என்ன? தீபாவளிக் காசு,
தீபாவளிக்; காசுன்னு இனி ரோட்டோட போறவங்க கூடக் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு…கடந்த
ஒரு வருஷமா இந்தத் தெருவுல நான் போய் வந்திட்டிருக்கேன்…எனக்கு தீபாவளிக் காசு கொடுங்கன்னு
வந்து நின்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே…ஜனங்க எதுக்கும் வெட்கப்படுற மாதிரித் தெரியல்லே…”
ஆரம்பிச்சிட்டீங்களா…? கொடுக்கிறதோ கொடுக்கிறீங்க…ஒன்பது பேருக்குக் கொடுத்தாச்சு…இந்தப் “
பத்தாவது ஆளுக்கும் கொடுத்திருக்கலாமேன்னுதான் சொல்ல வந்தேன்…”
சரி, விடு…என்னைக்கோ நடந்தது….அதுக்கு இப்போ எதுக்கு விவாதம்? தேவையில்லாம… “ ”
உங்களுக்குத் தேவையில்லாததாத் தோணுது…ஆனா எனக்கு அப்படித் தோணலையே? “
அவமானமால்ல இருக்கு?”
இவன் ஒரு கணம் தயங்கினான். பிறகு கேட்டான்.
அவமானமா? உனக்கென்ன அவமானம்? “ ”
ஆமா, பின்னே? அந்தப் பால் போட்ட அசட்டுப் பையன்ட்ட, அந்தச் சமத்து அண்ணன்காரன் “
என்ன சொல்லி விட்டிருக்கான் தெரியுமா?”
என்னவாம்? “ ”
தீபாவளிக்காசு தரமாட்டேன்னாருல்லடா, அவுரு வீடுதாண்டா…போய்ப் போட்டுட்டுவான்னு “
அடையாளம் சொல்லி அனுப்பிச்சானாம்….அத வச்சுத்தான் வந்தேங்கிறான் இவன்…”
சொல்லிவிட்டு சங்கடத்தோடு இவன் முகத்தையே தயக்கத்தோடு பார்த்தாள் சுமதி.
முகத்தில் ஈயாடவில்லை இவனுக்கு!!
——————
உஷாதீபன்,
8-10-6 ஸ்ருதி இல்லம், “ ”
சிந்து நதித் தெரு,
மகாத்மாகாந்தி நகர்,
மதுரை-625014.
———————————-
செல்: 94426 84188.
.
- பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)
- மனக்குப்பை
- நேற்றிருந்தோம்
- சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.
- இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்
- வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்
- அக்கக்காக் குஞ்சு !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6
- புவியீர்ப்பு கட்டணம்
- ஆகு பெயர்
- தரிசனம்
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்
- கவிதைகள்
- வலி உணரும் தோல்கள்
- தாரா கணேசன் கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- ஏழு கவிதைகள்
- எனது மூன்று வயது மகள்
- அடுப்பிலே போடப்பட்ட அமைதி
- காட்டாற்றங்கரை – 2
- மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்
- மாதா வெளியேற மறுத்தாள்
- நம்ப முடியாத விசித்திரம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !
- எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்
- சுஜாதா என்கிற ஆளுமை
- சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!
- எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.
- சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்
- மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? (கட்டுரை: 24)
- “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி
- கவிதா நிகழ்வு
- கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை
- சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா?!!
- யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்
- புரியவில்லையே…?
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
- கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?
- புத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்
- சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை
- கருப்பாயி மகனுடைய பெட்டி