(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
சி. ஜெயபாரதன், கனடா

பூரிப்போடு அளிக்கிறாய் உன் பொன் ஆரங்களை !
ஆயினும், அக்டேவியஸ் வாணிபன் அல்லன் !
விற்கிறாய் உன் உடமைகளை விருப்போடு !
அருமை ராணி ! உண்பாய் ! உறங்குவாய் !
சிந்தனையில் நீ உனைச் சிறைப் படுத்தாதே !
உந்தன் விருப்பப் படியே நடப்போம் எமது,
கண்காணிப்பு, கவலை மிகுதி உன்மேல் !
நண்பராய் வாழ்வோம் ! வந்தனம் ! செல்கிறேன் ! .. (அக்டேவியஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
என்ன நினைக்கிறாய் ஈராஸ் இப்போது ?
உன்னை, என்னை எகிப்த் பொம்மையாய்
ரோமாபுரி வீதிகளில் காட்டிச் செல்லவா ?
பொதுநபர், ஊழியர் அழுக்கு உடையில்
கம்பு, சுத்தியலுடன் கைகளை உயர்த்தி
ஆரவாரம் செய்ய, அவரது அருவருப்பு
வேர்வை ஆவியை சுவாசிக்கவா ? அதோ
“வேசி போகிறாள்” என்றவர் ஒன்றாய்த்
தூசிப்பதை நம் காதில் கேட்பதா ? (கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
+++++++++++++++
Fig. 1
Am I Prisoner ?
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்
ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)
Fig. 1A
Cleo, Iras, Charmian
Last day
கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3
ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.
எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவைக் காண தூதனை அனுப்புகிறான். சாமர்த்தியமாகப் பேசி கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறார் ரோமானியப் படையினர். இறுதியாக அக்டேவியஸ் கிளியோபாத்ராவைச் சந்திக்கிறான்.
++++++++++++++++++
கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3
நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான், புரோகியூலியஸ், அக்டேவியஸ், தொலபெல்லா, மற்றும் ரோமானியப் படையினர்.
காட்சி அமைப்பு: அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் சிறைப்படுத்திய கிளியோபாத்ராவை இறுதியாகக் கண்டுபேசி அக்டேவியஸ் அவளை ரோமாபுரிக்கு வருமாறு அழைக்கிறான்.
Fig. 1B
Cleo’s Killer
கிளியோபாத்ரா: [ஆழ்ந்து சிந்தித்து] நானிதை எப்படி நம்புவது ? சிஸேரியனை ரோம் செனட்டார் எவருக்குமே பிடிக்காது ! சீஸருக்கு நேர்ந்த அதே கதிதான் அவரது மகனுக்கும் கிடைக்கும். ஓநாயிடம் எப்படி முயல் குட்டியை ஒப்படைப்பது ? சிஸேரியனுக்கு ரோமில் யார் பாதுகாப்பு அளிப்பது என்று கூறுவீரா ? என்னருமைச் சிறுவனை உங்கள் கையில் ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை !
அக்டேவியஸ்: சிஸேரியன் சிறுவன் ! அவனை எகிப்துக்கு அரசனாக ஆக்குவதில் அவனுக்கும் ஆபத்து விளையலாம் ! எகிப்துக்கும் அபாயம் நேரலாம் ! பெரியவனாக ஆகும்வரை அவனை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் போர்ப் பயிற்சி அளிப்போம். பிறகு அவனை யாரும் மிஞ்ச முடியாது.
கிளியோபாத்ரா: (ஆங்காரமாக) உங்கள் கையில் அவன் சிக்கிக் கொண்டால் அவன் கதி என்னவாகும் என்று சொல்ல முடியாது ! சிஸேரியன் தாய் நாடான எகிப்திலேதான் வளர்வான் ! எகிப்தையேதான் ஆளுவான் ! எகிப்திலேதான் மாளுவான் !
அக்டேவியஸ்: ஆனால் சிஸேரியனின் தந்தை நாடு ரோமாபுரி சாம்ராஜியம் ! ரோமானிய கலாச்சாரத்திலும் அவன் மூழ்க வேண்டும். சிறுவனுக்கு ஒன்றும் நேராது. மகாராணியின் கடின எதிர்ப்பு எமக்குப் புரியவில்லை.
(அப்போது கிளிபோபாத்ராவின் நகைப் பெட்டியை அடிமைகள் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.)
கிளியோபாத்ரா: [பெட்டியைத் திறந்து காட்டி] ஈதோ எகிப்த் அரச பரம்பரையின் தங்க ஆபரணங்கள் ! இந்த வைர ஆரத்தை உங்கள் அருமை மனைவி லிவியாவுக்கு என் அன்பளிப்பாகத் தருகிறேன்.. இந்த நீலக்கல் ஆரம் உங்கள் தங்கை அக்டேவியாவுக்கு ! ஈதோ பரம்பரையாக ·பாரோ மன்னர் பயன்படுத்திய பொன் உடைவாள் ! இது உங்களுக்கு என் அன்பளிப்பு !
Fig. 2
Cleo’s Last Moments
அக்டேவியஸ்: [கையில் அவற்றை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன்] நன்றி மகாராணி ! லிவியா இத்தனை அழகான ஆபரணத்தைக் கண்டிருக்க மாட்டாள் ! நிச்சயம் பூரித்துப் போவாள் !
நன்றி. ஆண்டனி மரித்த செய்தி கேட்டு மயங்கிக் கிடக்கும் அக்டேவியா கூட இந்த நீலக்கல் கழுத்தணியைக் கண்டதும் உயிர்த்து எழுந்து விடுவாள் ! வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த பொன்வாள் ரோமாபுரியின் கண்காட்சியை அலங்கரிக்கும். [சற்று கடுமையாக] ஆனால் கிளியோபாட்ரா ! நான் விரும்புவது இவை அல்ல ! விலை மதிப்பில்லா இரண்டு எகிப்த் வைரங்கள் !
கிளியோபாத்ரா: (வியப்புடன்) என்ன ? எகிப்த் வைரங்களா ? பேழையில் இல்லாத பெரு வைரங்களா ?
அக்டேவியஸ்: (புன்னகையுடன்) சிஸேரியனை அழைத்துக் கொண்டு மகாராணி ரோமாபுரிக்கு வரவேண்டும் ! அதுதான் என் இச்சை ! செனட்டாருக்குப் பிடிக்கா விட்டாலும், ரோமானியப் பொது மக்கள் உங்கள் இருவரையும் காண ஆவலாய் இருக்கிறார் ! என் பெரியப்பா சீஸரைக் காண ரோமுக்குக் கோலாகலமாய் நீங்கள் இருவரும் வந்ததுபோல், என்னைக் காண மகாராணி மகனுடன் வருகை தர வேண்டும் ! அதுதான் நீங்கள் எனக்களிக்கும் வெகுமதி ! ஆங்கே உம்மைப் பாதுகாப்பது எம்முடைய பணி !
கிளியோபாத்ரா: (சற்று சிந்தித்து) பொறுப்பை ஏற்றுக் கொண்டால் ரோமுக்கு வருவது பற்றி நான் சிந்திக்கலாம் ! ஆனால் நான் மட்டுமே வருகிறேன் ! என் மகனை அழைத்து வர விருப்பமில்லை எனக்கு ! எனது பட்டத்து ஆடை ஆரங்கள் அணிந்து மகாராணியாக வருகிறேன் ! படாடோபமாக, கோலாகலமாக ·பாரோ அரசியாகப் பள்ளக்கில் வருகிறேன் !
அக்டேவியஸ்: (பூரிப்புடன்) மகாராணி ! அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் ! எகிப்துக்கு நான் வருகை அளித்ததின் குறிக்கோள் நிறைவேறியது ! உங்களை அரசாங்க விருந்தினராய் அழைத்துச் செல்ல வந்தேன் ! வெற்றி எனக்கு ! வெற்றி உமக்கு ! அரண்மனைக்கு வெளியே படையுடன் காத்திருக்கிறேன் ! பட்டத்து ஆடை அணிகள் அணிந்து பள்ளக்கில் நீங்கள் வரும் பாங்கை நாங்கள் பார்த்துப் பரவசப் பட வேண்டும் ! தொலபெல்லா ! வாசலில் காத்திருந்து மகாராணியின் பள்ளக்கை வழிநடத்தி வா !
(அக்டேவியஸ் தன் படைகளுடன் வெளியேறுகிறான்)
கிளியோபாத்ரா: (தொலபெல்லாவைப் பார்த்து) தொலபெல்லா ! உண்மையைச் சொல் ! அக்டேவியஸ் எங்கே அவசரமாகப் போகிறார் ?
Fig. 3
Cleo Talking to the Snake
தொலபெல்லா: (மெதுவாக) மகாராணி ! உங்கள் மீதுள்ள அன்பால், பரிவால், மதிப்பால் இதைச் சொல்கிறேன். யாருக்கும் தெரியக் கூடாது ! அக்டேவியஸ் சிரியாவுக்கு மூன்று நாள் செல்கிறார் ! இதுதான் தக்க தருணம் ! நீங்களும் உங்கள் சகாக்களும் குழந்தைகளுடன் எங்காவது தப்பிச் செல்லுங்கள் ! தெய்வமே இப்படி ஒரு வழியைக் காட்டுகிறது ! எங்காவது கண்காணா பாலைவனக் குடிசையில் பதுங்கிக் கொள்வீர் ! ஆண்டனிக்குப் பணிபுரிந்து உங்கள் அரண்மை மதுவைப் பருகிய எனது நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்கிறேன். ஆண்டனியைக் காக்க முடியாவிட்டாலும், இறுதிக் காலத்தில் உங்களைக் காப்பாற்றினேன் என்று மனச்சாந்தி அடைவேன்.
கிளியோபாத்ரா: (கண்ணீர் பொங்க) பரிவு உள்ளம் படைத்த ரோமானியனும் இருக்கிறான் என்று பரவசப் படுகிறேன், தொலபெல்லா ! மறக்க முடியாது இந்த உதவியை, நன்றி, வந்தனம்.
தொலபெல்லா: உங்களுக்கு எந்த விபத்தும் நேராதபடி வெளியே நின்று வாசலில் காவல் புரிகிறேன் ! வேறு வழியாகச் சென்று எங்காவது தப்பியோடிப் பிழைத்துக் கொள்வீர் மகாராணி !
(தொலபெல்லா வெளியேறுகிறான்)
கிளியோபாத்ரா: தொலபெல்லா ! எங்கள் உயிரைக் காப்பாற்ற நீ செய்யும் உதவி மகத்தானது ! வெளியே காத்திருங்கள். (தொலபெல்லா தலை மறைந்ததும், அவசரமாக) ஈராஸ் ! அக்டேவியஸ் தேன் மொழிகளை நம்பக்கூடாது ! கொஞ்சு தெல்லாம் வஞ்சகப் பேச்சுகள் ! நாமென்ன செய்யலாம் ? நீ என்ன நினைக்கிறாய் ? நாமிங்கு தாமதிக்கக் கூடாது. ரோமுக்கு நம்மைப் பிடித்துக் கொண்டு போய் தெருவிலே கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் நடத்தப் போகிறார் ! கூலிக்கார ஊழியர் வேசியென்று கேலி செய்து நம்மீது கல்லெடுத்து வீசுவார் ! குருதி சிந்தச் சிந்த விலங்குகளாய் நடத்தி
வீதிகளில் அவமானமாய்ப் பேசுவார்.
ஈராஸ்: நாம் பாலைவனத்தில் தப்பி ஓடி உயிர் வாழலாம் ! உங்கள் தம்பி டாலமி ஆண்ட போது நீங்கள் பாலையில் தப்பி வாழவில்லையா ?
கிளியோபாத்ரா: (சற்றுக் கவலையோடு) அது அந்தக் காலம் ! டாலமி என்னைத் துரத்தி விட்டான். ஆனால் பாலைவனத்தில் என்னைத் தேடி வரவில்லை ! அக்டேவியஸ் அப்படிப் பட்டவர் அல்லர். நாமெங்கு ஒளிந்தாலும் ரோமானியப் படை நம்மைக் கண்டுபிடித்துக் கழுத்தைத் துண்டித்து விடும். (அப்போது சார்மியான் வருகிறாள்) சார்மியான் ! போ எனது கிரீடத்தை எடுத்து வா ! பட்டம் சூடிய போது அணிந்த ஆடைகளைக் கொண்டு வா ! பொன் ஆபரணப் பேழையைத் தூக்கி வா ! தப்பி ஓடும் முன்பாக ஈராஸ், சார்மியான் இருவரும் எனக்கு இறுதி அலங்காரம் செய்ய வேண்டும் ! என் ஒப்பனையில் அக்டேவியஸ் மயங்கி விழ §ண்டும் ! சீக்கிரம் போ !
(சார்மியான் உள்ளே போகிறாள்)
Fig. 4
Death of Cleo, Iras & Charmian
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]
10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]
11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (Aug 8, 2007)]
சி. ஜெயபாரதன், கனடா
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- அழகிய சிங்கரின் கவிதைகள்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- போதி
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- மௌனம்
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- பெண்கள்
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- அக்காவின் சங்கீத சிட்சை
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- வாசிப்பின் எல்லைகள்
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- பொதுவாய் சில கேள்விகள்
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- கடிதம்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2