கட்டுகள்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

டானியல் அன்ரனி


வானொலியில் ஏதோ சினிமாப்பாடல் இரைந்து கொண்டிருந்தது. அந்தப்பாட்டோடுகூட தானும் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் தங்கச்சி பத்மா.

“ஏ…. பத்மா…. கொஞ்சம் குறைச்சுவை ரேடியோவை. அது குளறுகிறது பத்தாம இவ வேற பாடுறா.”

சாப்பிட்டுவிட்டு கைகளைத் துடைத்துக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தவன் எாிச்சலுடன் சத்தம் போட்டான்.

அவனுடைய உரத்த சத்தம் கேட்டதும் பாட்டு திடாரென தணிந்தது. மழை அடித்து ஓய்ந்த அமைதி. மறுபடியும் மெல்லிய முணுமுணுப்பு.

“விடிஞ்சா பொழுதுபட்டால் ரேடியோவுக்கு பக்கத்திலேதான் படுத்துக்கிடக்கிறாள். வேல வெட்டிக்குச் சொன்னாத்தான் அதுக்க நோகுது…. இதுக்க பிடிக்குது என்று சாலம் காட்டுகிறாள். ஒருக்கா இவளை கொஞ்சம் உறுக்கி வை மோன.”

அம்மா அடுக்களைக்குள் இருந்தபடியே முறையிட்டாள். இவன் எதுவும் பேசவில்லை. “ஹாங்க”ாில் கொழுவிக்கிடந்த சேட்டை எடுத்துப்போட்டுக் கொண்டான். வாசலில் கிடந்த செருப்பை கால்களில் செருகிக்கொண்டே விறாந்தையை விட்டு இறங்கினான்.

சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கியதும் உதடுகளில் வழமைபோல் ஏற்படும் அாிப்பு. “எப்படியாவது ஒரு சிகரட் வாங்கிப் பற்றவைத்து விட வேண்டும்” என்ற மனத்தவிப்புடன் படலையை நோக்கி நடந்தான்.

“தம்பி! மறுபடியும் மழை வரும்போல இருக்கு. குடையை எடுத்துக்கொண்டு போ மோன….” உரத்துக் கூறிக் கொண்டே அடுக்களைக்குள் இருந்து எழுந்து வெளியே வந்த அம்மா அவனை நெருங்கி வந்து மெதுவாகக் குசுகுசுத்தாள்.

“….தம்பி…. அக்காவிட வி~யமாக ஐயாவாக்கள் பேசப் போயிருக்கினம். இப்ப வந்து விடுவினம். துலைய போகாம சுறுக்கா வந்துவிடு மோன….”

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. மெளனமாகப் படலையைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வீதி முழுவதும் இருண்டு கிடந்தது. சற்று நேரத்துக்கு முன் பெய்து ஓய்ந்த மழையினால் மின்சாரத்தில் எங்கேயோ பழுது ஏற்பட்டிருக்க வேண்டும். வீதி விளக்குகள் முழுவதும் அணைந்திருந்தன. மை இருளில் வெள்ளை இராட்சதா;களாய் விளக்குக்கம்பங்கள் பயமுறுத்தின.

வானத்தை நிமிர்ந்து பார்த்தான். மறுபடியும் மேகங்கள் திரண்டு கொண்டு வந்தன. திடுமென மழை வந்துவிடும்போல பயமுறுத்தின. துமி ஒன்று காதுப்பொருத்தில் விழுந்து ஜில்லிட்டது.

அவன் நடையைத் தூிதப்படுத்தினான். “அம்மா சொன்னதுபோல குடையைக்கொண்டு வந்திருக்கலாம். விசர் வேலை பாத்திற்றன். இப்ப மழை வந்திற்றால் என்ன செய்யிறது….”

ஒரு கணம் மனம் அங்கலாய்த்தது. மறுகணமே அதை நிராகாித்தது. தன்னைத்தானே மறுபாிசீலனை செய்துகொண்டு விட்டதுபோல் வெட்கப்பட்டது.

பொிய மழை பெய்த போதும்கூட விறுமன்களாட்டம் கோவில் வளவில் நின்று நாள் முழுவதும் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்த அவன் இந்தத் துமியைக் கண்டதும் குடையை நினைத்துக் கொண்டதை நினைத்து தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை வியந்தான். அதற்குக் காரணமான அந்த வாழ்வையும் எண்ணிக் கொண்டான்.

அவன் தேகம் புல்லாித்தது. அவன் கொழும்பு பொிய தபாற்கந்தோாில் “ரெலிபோனிஸ்ட்” டாக உத்தியோகம் ஏற்று ஆறு மாதங்கள்தான் கடந்திருந்தன. அந்த ஆறு மாத காலத்துக்குள் அவனுக்குள் ஏதோவொன்று இருந்துகொண்டு அவனை மாற்றுகின்ற அந்தாிப்பு. அதற்கு எதிராக அவன் போராடுவது போன்ற முனைப்பு. அது குடும்பம் முழுவதையும் பரவிப் பாதித்திருந்தது.

இம்முறை ஊருக்கு இரண்டாவது தடவையாக லீவு எடுத்துக்கொண்டு வந்திருந்தான். அதுவும் அவனுடைய அக்காவின் திருமண வி~யமாகப் பேசி முடிவு செய்ய வேண்டியிருப்பதாக உடன் வரச்சொல்லி ஐயா கடிதம் எழுதியிருந்தார்.

இதில் தன்னிடம் கேட்பதற்கு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தொியவில்லை. அக்கா ஏற்கனவே விரும்பிய இடம்தான். ஐயாவும், அம்மாவும் சம்மதப் பட்டால் செய்து கொடுக்க வேண்டியதுதான். முன்னம் இப்படியெல்லாம் அவனுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள அவர்கள் முயன்றதில்லை. முன்னுக்கு நின்று சொன்னாலும் வீட்டில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை.

இப்போது மாத்திரம் ஏன் இந்த நிலைமை ? அவன் இப்போது அரசாங்க உத்தியோகஸ்தனாகி விட்டதில் புதிதாக எந்தக் கொம்பும் முளைத்துவிட வில்லையே ?

அவனுக்கு உடம்பு முழுவதும் பற்றி எாிவது போல் எாிச்சல் எாிச்சலாக இருந்தது.

அந்த வீட்டில் அவனுக்குக் கிடைக்கும் உபசிாிப்பு மாியாதை ஊாில் உள்ளவர்களின் திடார் கவனிப்பு. அடிக்கொருதரம் குசல விசாாிப்பு. ஆறு வரு~ங்களாக அலைந்து வீதிகளில் வேலையில்லாமல் திாிந்த போது….

அந்த வாழ்க்கை. அதில் அனுபவித்த நரகவேதனைகள். சொந்த வீட்டிலேயே அந்நியனாக, புறக்கணிக்கப்பட்ட நிலை. ஓ! அந்த நரகம்….அது வரவே வேண்டாம்.

அவன் தனக்குள்ளே பெருமூச்சு விட்டுக் கொண்டான். அவனுக்குள் யாரையோ எதற்காகவோ பழி வாங்க மூண்டெழும் நெருப்பு.

வீதியில் தண்ணீர் தேங்கி நின்ற குழிக்குள் ஒரு கால் ‘சளக் ‘கென்று இறங்கிவிட்டது. ஒரு கணம் தடுமாறி விழப்போனவன் சமாளித்துக் கொண்டே நீருக்குள் அமிழ்ந்து விட்ட ஒரு காலை ‘அவக் ‘கென்று எடுத்தான்.

ஒற்றைச் செருப்பு அறுந்துவிட்டது. இரண்டு செருப்புக்களையுமே சுழற்றி வேலிக்கு அப்பால் வீசி எறிந்தான். வெறும் கால்களுடனேயே அந்த நனைந்த வீதியில் ‘காயாக ‘ நடந்தான்.

கால்களில் செருப்புகள் அணியாமல்தானே இந்த ஊாிலுள்ள கல் ஒழுங்கைகளிலும்…. முள்ளுப் புதா;களிலும்…. சேற்று நிலங்களிலும் நடந்து திாிந்தவன். இப்போது என்ன வந்துவிட்டது.

சற்று தூரத்தில் அந்த வீதி மிதக்கின்ற சந்தியில் இருக்கும் மணியண்ணாின் கடை திறந்துதான் கிடந்தது. கடைக்கு முன்னால் கொழுவியிருந்த அாிக்கன் லாம்பின் வெளிச்சத்தில் சிலர் சாமான்கள் வாங்கிக் கொண்டு நிற்பது தொிந்தது.

அவன் எதிாில் சைக்கிளில் யாரோ இருவர் வந்து கொண்டிருந்தனர். அதில் பின்னால் ‘காியாில் ‘ குந்தியிருந்தவன் கேட்டான், ‘என்ன நேரம் அண்ணே இருக்கும் ? ‘

இவன் நேரத்தைக் கவனிப்பதாக மணிக்கட்டைப் பார்த்தான். அப்பொழுதுதான் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு வராதது நினைவுக்கு வந்தது. அதனால் என்ன “இப்ப எட்டரை மணி இருக்கும். படம் தொடங்கியிருக்காது. கெதியாப்போனா ாிக்கற் எடுக்கலாம்”.

இவன் அவர்கள் கேட்காத கேள்விக்கும்கூட பதில் அளித்துவிட்டு வெறுமையாகக் கிடந்த மணிக்கட்டில் பதிந்திருந்த கைக்கடிகாரத்தின் வடிவத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டான்.

கடைக்கு முன் அவனைக் கண்டதும் மணியம் அண்ணர் காவிப்பற்கள் தொிய சிாித்தார். சற்று நேரம் வரை சாமான் வாங்க வந்து நின்றவர்களுடன் சள்….சள்….என்று எாிந்து விழுந்து கொண்டிருந்தவர் அவர். “என்ன தம்பி எப்ப கொழும்பால வந்தனி…. அங்கேயும் மழை நல்லாப் பெய்யுதோ…. ?”

அவர் வழமையாகக் கேட்கும் கேள்விதான். அதில் எந்தவித வாஞ்சையும் இல்லை. ஒப்புக்காக ஏதாவது சொல்லி வைக்க வேண்டும் என்று நினைத்தவன் அடுத்த கணம் எதையோ நினைத்துக் கொண்டவனாய் மெளனமாகிவிட்டான்.

சின்ன வயதில் எப்போதோ ஒரு நாள் அரை றாத்தல் பாண் வாங்கச் செல்ல வந்துபோது ஒரு சதம் குறைந்துவிட்டது என்பதற்காக….வீட்டுக்குத் திரும்பி அனுப்பி வீதியில் இருட்டில் கிடந்த நாய்மேல இடறுப்பட்டு, அதன் கூாிய பற்கள் அவன் தொடையில் பதிய…. அம்மா….அம்மா…. என்று குளறிக் கொண்டு வீட்டைத் தேடி ஓடிய ஓட்டம்….

“அக்காவுக்கு கல்யாணப் பேச்சு நடக்குது போல் இருக்கு…. அதுவும் கனகாலமாக வீட்டோட இருக்கு குமர் காரி யத்தை வசதி வரும்போதே செய்து போட வேணும். பொடியனும் நல்ல குணமுள்ளவன். சோலி சுரட்டுக்குப் போகாத குடும்பம்…. தம்பி இந்தச் சம்பந்தத்தை விட்டுடாதீங்க”.

மணி அண்ணன் கதைத்துக்கொண்டே தன் அலுவலில் கண்ணாக இருந்தார். அடிக்கொரு தரம் வெற்றிலையைக் கிள்ளி பாக்குச்சீவலை கொடுப்புக்குள் திணித்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவனுக்கு அருவருப்பாக இருந்தது.

பைக்குள் கிடந்த ஒரு ரூபா குற்றியை எடுத்து மணி அண்ணனிடம் நீட்டிக்கொண்டே “இரண்டு பிறிஸ்டல் தா அண்ணே” என்று கேட்டான்.

மணி அண்ணர் அவனை அதிசயமாகப் பார்த்தார். இவன் சிகரட் பற்ற வைத்ததை அவர் ஒரு போதும் கண்டதில்லை. அவர் என்ன, அந்த ஊாிலேயே ஒருவரும் கண்டிருக்க முடியாது.

மூன்று மாதத்திற்கு முன் ‘நைற் சிவ்ட் ‘ செய்து கொண்டிருந்தபோது நித்திரை விழிக்க உதவும் அந்த மருந்தைப்பற்றி, கூட வேலை செய்துகொண்டிருந்த நண்பன் வற்புறுத்தியதின் போில் அதைத் தொடக்கி வைத்தான்.

‘நாலு பேரோடு…. நாலு இடத்தில பழகிறனீங்க இது எல்லாம் குடிக்கத்தானே வேணும்….இதில் என்ன குறையிருக்கு தம்பி ‘.

மணி அண்ணர் தனக்குள் எழுந்த கேள்விக்குத் தானே வியாக்கியானத்தைக் கூறிக் கொண்டு இரண்டு சிகரற்றுகளையும் மிகுதிச் சில்லறைகளையும் கொடுத்தார்.

அவன் ஒரு சிகரட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான். மேசையில் கிடந்த காகிதத்துண்டை எடுத்துப் பக்கத்தில் எாிந்து கொண்டிருந்த குப்பி விளக்கில் பிடித்து மற்ற சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டே வீட்டை நோக்கித் திரும்பி நடந்தான்.

அவன் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி முன்னுக்கு இருக்கும் அமொிக்கன் பெ~ன் வீடுதான் பொியதம்பியருடையது. அந்த வீட்டுக்கு முன்வரும் போதெல்லாம் நெஞ்சில் ஒரு படபடப்பு. இதயத்தின் அசைவில் இயந்திர வேகம்….அன்று ஒரு நாள் இருட்டில் குதிரை உயரத்துக்கு வளர்ந்த அந்த நாயின்மேல் இடறுப்பட்டு…. அந்த சனியன் கேற்றுக்குள் சுருண்டு கிடந்து அவனையே உற்றுப் பார்ப்பதுபோல்….

அவன் இப்போது பயம் கொள்ளவில்லை. தொடையில் அழுத்தமாகப் பதிந்திருந்த அவற்றின் வடுக்களை மாத்திரம் சாரத்துக்கு மேலால் பார்த்துக் கொண்டான்.

தூரத்தில் குள்ளமான ஒருவன் கைகளை உயர்த்தி வீசி தனக்குள் எதையோ உரத்துப் பேசி பாவனை செய்துகொண்டு வந்தான். கையில் வைத்திருந்த சிரட்டை வாயில் வைத்து ஒரு தடவை தம் பிடித்து இழுத்துவிட்டு விரல் இடுக்கில் ஒளிப்பொட்டு தொியாமல் மறைத்துக்கொள்ள நினைத்தவன், மறுகணம் தன்னுடைய செய்கைக்காக வெட்கப்பட்டான்.

‘எனக்கு நியாயம் என்று படுகிறதை செய்யிறதுக்கு மற்றவர்களுக்காக ஏன் பயப்பிடவேணும், ஒளிக்கவேணும் ? ‘

தூரத்தில் வந்தவனை இனம் கண்டுகொண்டான். அவனுடைய சிநேகிதன் ஆனந்தன், புதிய நாடகம் ஒன்றின் ஒத்திகையை வீதியிலேயே தனிமையில் செய்து கொள்கிறான். அப்படி ஒரு பழக்கம் அவனுக்கு. அந்த வழக்கத்துக்காக அவனை ‘பனியன் ‘ என்று ஏளனமாக முதுகுப்புறம் நின்று பலர் நகைப்பதும் அவனுக்குத் தொியும். அதற்காக அவன் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அது தன்னுடைய கலை ஆர்வம் என்று பெருமைப்பட்டுக் கொள்வான். ஊாிலிருந்த போது இருவரும் சேர்ந்தே பல நாடகங்களை மேடையேற்றி யிருக்கின்றனர்.

‘என்ன மச்சான்….புது நாடகத்துக்கு ஒத்திகை நடக்குதோ ‘ ? ‘ஓம்…. மச்சான்…. இந்த மாதம்…. புது நாடகம் அரங்கேத்திறம், சிலம்பு – புதுமையாக இருக்கும் ‘.

இவன் தனக்குள் சிாித்துக் கொண்டான். சிலம்பில் என்ன புதுமை செய்யப்போகிறான் ?

இருவரும் சில நிமிடங்கள் தங்கள் பழைய வாழ்க்கை களைப் பற்றி நினைவு மீட்டுக் கொண்டனர். பல புதிய தகவல்களைப் பாிமாறிக் கொண்டனர். ஆனந்தன் வேலை கிடைக்காததைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டான். இவன் அலுத்துக் கொண்டான்.

‘அப்ப போறதுக்கு இடையில வீட்ட வந்திற்றுப் போ மச்சான். அம்மா கூட நீ வீட்ட வருவதில்லை என்று குறை நினைக்கிறா…. ‘

அவன் நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடையைத் தூிதப்படுத்தினான்.

அக்கா உள் அறையில் இருந்து பீடி இலை வெட்டிக் கொண்டிருந்தாள். பத்மா வீட்டுக்குள் இருந்து கொண்டு சுற்றி யிருந்த சின்னஞ் சிறுசுகளுக்கு தான் சமீபத்தில் பார்த்த தமிழ் சினிமாப் படத்தின் கதையைப் பாவத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அம்மா திண்ணையில் தூண் அருகில் குந்திக் கொண்டு வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…. அம்மா வாசலில் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் என்பது அங்குள்ள சகலருக்கும் தொியும்.

ஐயா வீட்டை விட்டு அம்மான் வீட்டுக்குப் போய் ஒரு மணித்தியாலம் கடந்திருக்கும். அவ்வளவு நேரமும் அங்கு என்ன பேசுவதற்கு இருக்கு என்று அவனுக்கு விளங்கவில்லை.

அவன் வரும்போது புகையிரதத்துக்குள் படிப்பதற்காக வைத்திருந்த நாவலை மீண்டும் கையில் எடுத்துப் பிாித்துப் படிக்கத் தொடங்கினான். அது அலுப்புத் தட்டுகிற அழுகுண்ணிக் காதல் கதை.

வாழ்க்கையின் சாராம்சத்தை அதன் சிக்கல்களை அவனால் அதில் தாிசிக்க முடியவில்லை.

அவன் எப்போதாவது இப்படிப்பட்ட கதைகளைப் படிக்க நோ;ந்திருக்கிறது. அவற்றையே விழுந்து விழுந்து படிப்பவர்களையும் அவனுக்குத் தொியும்….

ரேடியோ இருந்த மேசைக்குப் பின்னாலும், அவை போல் சில புத்தகங்களும் அவன் கண்ணுக்குத் தட்டுப்பட்டன….

அது தங்கச்சியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் ஏற்கனவே ஊகித்துக் கொண்டான். அவன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெள்ளைத் தாள் ஒன்றைக் கிழித்து எடுத்து அறை நண்பன் ஏரம்பமூர்த்திக்கும், கந்தோாில் வேலை செய்யும் ரஞ்சினிக்கும் காகிதம் எழுத வேண்டும் என்று நினைத்தவனாக பேனாவைத் தேடினான்.

அவன் சேட் பையில் குத்தியிருந்த பேனாவை யாரோ எடுத்துவிட்டமை அப்போதுதான் அவனுக்குத் தொிந்தது.

‘சேட் பொக்கற்றில் இருந்த பேனையை யார் எடுத்தது ? மாியாதையாகச் சொல்லிப் போடுங்க ‘

அவன் குளறியது வீடு முழுவதும் அதிர்ந்தது. அம்மா பதறிப்போய் திரும்பிப் பார்த்தாள்.

சின்னவன் பேனாவைக் கையில் வைத்துக் கொண்டு சுவர் அருகே மசந்திக்கொண்டு நின்றான். செய்யாத குற்றத்திற் காக தண்டனை அனுபவிக்கக் காத்திருக்கும் அப்பாவியின் மிரட்சி. ‘ஆரடா….இது எடுத்தது ? நீயா எடுத்தனி ? ‘

அவன் இல்லை என்பதுபோல் தலை அசைத்தான். வாய் எதையோ முணுமுணுத்தது.

‘அக்காவா எடுத்தவ ? ‘ ‘ஆங்…. அண்ண…. ‘

‘என்னட சாமான்களை ஒருத்தரும் தொடக்கூடாது என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறன் ‘.

அவன் சத்தம் போட்டுவிட்டு முதலில் நண்பன் ஏரம்பமூர்த்திக்குக் கடிதம் எழுதத் தொடங்கினான்…. மழை திடாரெனப் பலத்தது. யாரோ படலையைத் திறந்து கொண்டு மழையில் நனைந்தபடி உள்ளே வருவது தொிந்தது…. அது ஐயா தான். அம்மா ஆவலுடன் குந்தில் இருந்து எழுந்து கொண்டாள்.

கத்தாிக்கோலுக்கு இடையில் நறுக்….நறுக்….கென்று பீடி இலை அறுபடும் ஓசை நின்றுவிட்டது. அக்காவும் வெளித் திண்ணைக்கு வந்துவிட்டாள். பரீட்சை முடிவை எதிர்பார்த்திருக்கும் ஐயா நினைத்துக் கொண்டு போனதற்கு மாறாக அம்மான் வீட்டில் நடந்திருக்கலாம் என்று மட்டும் அவனுக்குப் பூிந்தது. அவன் இன்னும் அமைதியாக எழுதிக் கொண்டுதான் இருந்தான். அங்கு நடக்க இருப்பதைப் பற்றி அவனுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாதவன் போல்….

சில நிமிடங்கள் வரை ஐயாவும் அம்மாவும் என்னவோ குசுகுசுத்தார்கள். எந்தவித வாக்கியங்களும் தெளிவாக அவனுக்குக் கேட்கவில்லை. அவனுடைய பெயர் மாத்திரம் அங்கு அடிக்கடி பாவிப்பதை கிரகித்துக் கொண்டான். ஏரம்பமூர்த்திக்கு கடிதம் எழுதி முடித்துவிட்டு ரஞ்சினிக்கு எழுதத் தொடங்கியபோது தான் அம்மா அருகே வந்து நின்றாள்.

‘தம்பி அக்காவட கல்யாணம் குழம்பிப்போய்விடும் போல இருக்கு ‘. அம்ாவின் குரல் தழதழத்தது. அம்மா சின்ன விசயத்திற்கும் மூக்கைச் சீறி அழுபவள் தான்.

‘ஏன் அக்காவும் அவரும் ஒருத்தரை ஒருத்தா; கன காலமாக விரும்பி இருந்தவங்கதானே….வீட்டிலும் விருப்பம் தானே…. அவையளுக்கு என்ன வந்திற்று, சீதனம் ஏதும் கூட எதிர்பர்க்குவினமோ…. ‘

‘இல்லை மோன, எல்லாத்துக்கும் ஓம் எண்டு தான் இவ்வளவு நாளும் இருந்தவிய. இப்ப….திடாரென பதில் மாப்பிளை தந்தால் தான் செய்வினம் எண்டு நிக்குவினம் ‘.

அவன் அதிர்ச்சியுடன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் கறுத்து இறுகிக் கிடந்தது. அந்தக் கண்களில் தொிவது கோபமா….பாிதாபமா…. இன்னதென இனம் கண்டுகொள்ள முடியாத ஏதோ ஓர் உணர்வு. அம்மாவால் தொிந்து கொள்ள முடியவில்லை.

‘எல்லாம் திட்டம் போட்டுத்தான் என்னைக் கொழும்பில் இருந்து காயிதம் எழுதிக் கூப்பிட்டிருக்குவினம் ‘.

அவன் விறுக்கென்று கதிரையை அரக்கிக் கொண்டு எழுந்தான். வளையைப் பிடித்துக் கொண்டு நின்றபடி இருண்டு கிடந்த சூனியத்தை உற்று நோக்கினான். ஒரு கணம் வெறுமை அவன் இதயத்தை அாித்தது. மறுபடியும் கதிரையில் வந்து குந்திக் கொண்டு மேசையில் முகம் கவிழ்ந்தான். மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவைப் பார்த்தான்.

ஐயா….அக்கா….தம்பி….தங்கைகள். அவன் வாயிலிருந்து விடுதலை பெறப்போகும் வார்த்தைக்காகக் காத்து நிற்கின்றனர்.

;அதுக்கு…. இப்ப…. நீங்க என்ன செய்யப் போறீங்க…. ‘

‘நீ ஒம் எண்டு ஒரு வார்த்தை சொன்னால் சாி தம்பி. உன்னத்தான் பதில் மாப்பிள்ளையாக கேக்குவினம். அந்தப் புள்ளயும் நல்ல குணமானவள் மோன ‘.

அவன் இப்போது அதிர்ச்சியடையவில்லை. அவனுக்கு அம்மா, ஐயா, அக்கா, தங்கச்சிமார்….மாமன், மாமி….மாப்பிள்ளை இந்த சமூகம் எல்லாவற்றிலுமே எாிச்சல் எாிச்சலாக வந்தது.

அக்காவுக்கு அவன் பிணை நிற்கவேண்டும். அவனைத் தொடர்ந்து வருகின்ற தங்கைமாருக்கு இவ்வாறு பிணை நிற்க எத்தனை தம்பிமார்கள் தயாராக இருக்கிறார்கள். அவனுக்கு என்று தனிப்பட்ட ஆசைகள்….விருப்பு வெறுப்புகள் அவன் எதிர்கால வாழ்வு பற்றி ஏன் இருக்கக்கூடாது ? அத்தனையும் குடும்ப….உறவுகள் என்ற கட்டுக்குள் அடங்கவேண்டியவை தானா…. ?

அவன் மெளனமாகத் தலையை மேசையில் கவிழ்த்துப் போட்டுக் கொண்டு கிடந்தான். அம்மாவுக்குப் பொறுமை இல்லை. ‘தம்பி….என்ன முடிவு மோன சொல்லுற…. ? ‘

அவன் மீண்டும் தலையை நிமிர்த்திப் பார்த்தான். அம்மாவைப் பார்க்க அவனுக்கு இப்போது பாிதாபமாகத்தான் இருந்தது. எல்லாத் துயரங்களுமே அவள் முகத்தில் சாசுவதமாகிவிட்ட இறுக்கம்.

அவன் அமைதியாக பதட்டமில்லாமல் சொன்னான். ‘அம்மா….இனிமேல் யாருக்கும் கல்யாணம் பேசப்போறதாக இருந்தால் பதில் மாப்பிள்ளை கேட்காத இடமாகப் போங்க ‘.

அம்மா அவன் பேச்சைக் கேட்டதும் அப்படியே அலமந்து போய் நின்றாள்.

—-

daniel.jeeva@rogers.com (மூலமாக)

Series Navigation

டானியல் அன்ரனி

டானியல் அன்ரனி